Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

பறை 4வது இதழ்



பறை 4வது இதழினை இங்கு பார்வையிடலாம்.

பெரியார் உரை ஒலி வடிவத்தில்


பெரியாரின் பேருரைகள் இங்கு ஒலிவடிவில் தொகுத்திருக்கிறோம். மிகவும் சுவாரஸ்யம் வாய்ந்ததும், எளிமை மிகுந்ததும், சிந்திக்கச் செய்வதும், சமூகக் கொடுமைகளின் மீதான ஆத்திரத்தை ஏற்படுத்துவதுமான இந்த உரைகள் அவரின் குரலில் கேட்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்களும் கேளுங்கள்.

"...சமுதாயத் தொண்டு செய்றவனுக்கு கடவுள் பக்தி இருக்கக்கூடாது, மதபக்தி இருக்கக்கூடாது, மற்றும் தேச பக்தி இருக்கக்கூடாது, மொழி பக்தி இருக்கக்கூடாது. சமுதாய பக்தி ஒன்னுதான் இருக்கனும். அவனால தான் சமுதாயத் தொண்டு செய்யமுடியும்.எந்தப்பய கடவுளையோ மதத்தையோ, சாத்திரத்தையோ மொழியையோ வச்சுகிட்டு சமுதாய தொண்டு செய்யனுமுன்னு நினைக்கிறானோ அவன் சோத்தையும் பீயையும் கரைச்சு குடிக்கிறதா தான் அர்த்தம்..."

காரைக்குடி உரை-2 இல் 5வது நிமிடத்தில் இது வருகிறது. அதிலேயே

"...நம் கடவுள் - சாதி காப்பாற்றும் கடவுள்; நம் மதம் - சாதி காப்பாற்றும் மதம்; நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்; நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி.இதை உயர்ந்த மொழி என்கின்றனர். என்ன வெங்காய மொழி? இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் தமிழ் மொழி - சாதியை ஒழிக்க என்ன செய்தது? மொழி மீது என்ன இருக்கின்றது? ஏதோ மொழி மீது நம்முடைய பற்று; விவரம் தெரியாமல் சிலருக்குப் பற்று..."


"...கடவுள் இல்லை...கடவுள் இல்லை... கடவுள் இல்லவே இல்லை... கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்புனவன் அயோக்கியன்! கடவுளை கும்பிடுறவன் காட்டுமிராண்டிப்பயல்! இதை நம்புகிறவன் மடையன்! இதனால் பலன் அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன்..."

(காரைக்குடி உரை-2 இல் 15வது நிமிடத்தில் இது வருகிறது.)


இதைச்சொல்லும் துணிச்சல் நம் பெரியார் ஒருவருக்குத் தான் இருந்தது. அவருக்குப் முன்னும் ஏன் பின்னும் கூட அந்தத்துணிச்சல் வேறு யாருக்கும் வரவில்லை. நம்மீது சுமத்தப்பட்டிருக்கிற ஆதிக்க சித்தாந்தங்களில் மதத்தின் பாத்திரத்தை பெரியார் பல இடங்களில் தோலுரித்துக் காட்டுகிறார்.

இந்தத் ஒலித் தொகுப்பில் இன்னமும் இணைக்கப்படும்...


மார்க்சியமும் தேசியப் பிரச்சினையும்


தமிழில் -வளர்மதி


சர்வதேசியம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சாத்தியம்தானா, விரும்பத்தக்கது தானா? சோஷலிச அரசியலில் அதற்குரிய உண்மையான இடம் என்ன?



லட்ச ரூபாய் மதிப்புள்ள கேள்வியைக் கேட்டீர்கள்! இதற்கு மட்டும் ஒரு பதில் இருக்கிறதென்றால் கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதைத்தான் நாம் எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் - சர்வதேசியம் இன்று எங்கே இருக்கிறது? நம்முடைய ஆசைகளை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைததுவிட்டு வரலாற்று உண்மைகளிலிருந்து தொடங்குவோம்.

முதலில் (நான் ஏற்கனவே சொன்னது போல) புரட்சிகர சோஷலிச வெற்றிகள் எப்போதுமே ஏதாவதொரு வகையில் தேசிய விடுதலை இயக்கங்களோடு -அவை காலனிய எதிர்ப்பாக இருந்தனவோ இல்லையோ, தொடர்புடையவையாக இருந்தன. இரண்டாவதாக, ஒரு முதலாளிய நாட்டில் ஏற்படுகிற ஒவ்வொரு நெருக்கடியின் போதும் வர்க்க அடையாளத்தைவிட- வெகுமக்களின் மிகப் பெருந்திரளினரான பாட்டாளி வர்க்கத்தின் மத்தியிலும் கூட - தேசிய அடையாளமே வலுவாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. 1914-ல் சமூக-ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி ஏதோ விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலான தலைவர்களின் துரோகத்தால் விளைந்தது அல்ல - லெனின் இந்தக் கருத்தைக் கடுமையாக எதிர்த்தால் ஏகாதிபத்திய வல்லரசுகள், அவற்றில் சலுகை பெற்ற பாட்டாளி வர்க்கம், இவற்றின் எழுச்சியான, ஒரு மொத்த சமூக வரலாற்று சகாப்தத்தின் விளைவும் அல்ல. அதைவிடவும் ஆழமான ஒரு காரணி சொல்லப்பட்டது என்று நினைக்கிறேன். (இந்த வகையிலான மற்ற பிரச்சினைகளிலும் கூட இவற்றையொத்த மாற்றுகளில் இதே போன்ற தேர்வுகள் (Choices) முன்வைக்கப்படுகின்றன.) அதாவது, தனித்தனியான பண்பாட்டுப் பிரிவுகளான இனங்கள், தேசங்கள், மக்கட்கூட்டங்கள் போலல்லாமல், குறுக்குவெட்டு வர்க்கப் பிரிவினைகள் சமூக வரலாற்றில் மிகவும் பிற்பட்டே தோன்றின என்று சொல்கிறேன். இங்கு, ஒரு தேசிய உருவாக்கத்தின் அல்லது ஒரு தனிநபருடைய ஆளுமை உருவாக்கத்தின் ஆழமான அடுக்குகளே மற்ற எல்லாவற்றையும்விட நீண்ட காலம் நீடித்திருப்பவை என்கிற ஒரு மானுடவியல் விதி இருக்கிறது. உளவியலிலும் சரி, சமூக அமைவிலும் சரி தனி உயிரியின் தோற்ற வளர்ச்சியிலும் சரி (ontorg....) இவைவகையின் தோற்ற வளர்ச்சியிலும் எப்போதுமே தொன்மையானவையே (philogeticaly) உறுதியே இருப்பவை. மிகத் தொன்மையான அடுக்குத்தான் மிக செயலுhக்கமானது 'அடிப்படையான உளவியல், வரலாற்று ஆய்வுண்மை இது.

மன்னியுங்கள், ஒரு சிறிய கேள்வி - 1914 ம் ஆகஸ்டில் தொழிலாளர் இயக்கங்களின் தலைவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இதற்குப் பதில் சொல்வது கஸ்டம்! மிகவும் ஒருபக்கச் சார்பான கேள்வி இது. ஒரு ஸ்டாலினிஸ்டு விசாரணகை; கமிசனுக்கு முன்னால் நிறுத்தப்பட்டதைப் போல என்னை உணரச் செய்கிறது. மேலும், இந்தக் கேள்வியில் உண்மையில் ஒரு பொறி இருக்கிறது. ஏனென்றால், சரியான பதில் எதுவென்று எல்லோருக்கும் தெரியும்: 'சமூக ஜனநாயகவாதிகளின் துரோகத்திற்கு எதிராகப் போராடுங்கள், சுவிட்ஸ்லாந்துக்கு ரயிலைப் பிடியுங்கள் என்று போகும். ஆனால், நான் கேட்க விரும்புகிற கேள்வி இது அல்ல் பின்னோக்கிப் பார்த்து ஒருவருடைய நிலைப்பாடு என்னவாக இருந்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு அக்கறையில்லை. அதற்குப் பதில், அந்தக் காலத்தில், அந்த இடத்தில், வெகுமக்களும் சமூக ஜனநாயகவாத முன்னணிப் படையினரும் என்ன புரிந்திருந்தார்கள், என்ன செய்தார்கள் என்பதை உள்ளது உள்ளபடியே பார்ப்பதும் புரிந்து கொள்ள முயற்சிப்பதுமே எனக்கு முக்கியம்.

னால், உங்களுடைய புரிதல் சரியானதாக இருக்குமானால், எல்லோருக்குமே அது சரியானதாக இருக்க வேண்டும். இது ஒன்றும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக - உதாரணத்திற்கு, ரசியாவிலோ இத்தாலியிலோ நடைபெறவில்லை இல்லையா. ஜெர்மனியில், - பிரான்சில், ப்ரிட்டனில் நிகழ்ந்த போல இன்னொரு இடத்திலும் நடக்க வேண்டும் என்று எதுவும் விதிக்கப்பட்டிருக்கவில்லையே. தொழிலாளர் இயக்கங்களின் பார்வைகளில் வெளிப்படையாகவே உணரத்தக்க வித்தியாசங்கள் இருந்தன. மேலும், ரசிய வெகுமக்கள் முதலிலேயே விழுந்துவிட்டதைப் போல இல்லாமல் மென்ஷ்விக்குகள் பெருந்தேசிய வெறிக்குள் அவ்வளவு வேகமாக எழுந்துவிடவில்லை, இல்லையா.

இதைச் சுலபமாக விளக்கிவிட முடியும். நீங்கள் எழுப்பும் கேள்விகளை எனது வரலாற்றுப் பிரச்சினைப்பாட்டுக்குள்ளேயே பொருத்திவிட முடியும். இத்தாலி அப்போதுதான் உருவான ஒரு இளம் தேசம். பலவீனமான ஒரு தேசம். ஜெர்மனியிடம் அதற்கும் பகையுணர்ச்சி எதுவும் இருக்கவில்லை. ஆனால் ரசியா, ஒரு உண்மையான அர்த்தத்தில், ஒரு தேசிய அரசாக இருக்கவில்லை. மிகவும் பலவீனமா. விரிந்த ஒரு தேசிய அடையாளத்தோடு, நிறைய கலப்புக்கு உள்ளாகியிருந்த ஒரு மக்கள் கூட்டமாகவே அது இருந்தது. அதனால், தேசிய நலன்கள் மிகவும் குறைவான செல்வாக்கே செலுத்தியிருக்க முடியும் என்பது அங்கு இயல்பான ஒரு விஷயம்.

ஒரு பொருள்முதல்வாதி என்ற முறையில் உணர்வுபூர்வமான (consious) நிலையை விட, உள்ளுணர்வே (instinct) தீர்மானகரமான ஒரு காரணியாக - ஒரு விரிந்த அர்த்தத்தில் - இருக்கிறது என்று சொல்வேன். அதாவது, என்ன சொல்ல வருகிறேன் என்றால், இங்கு, ஒரு சர்வதேச உள்ளுணர்வைவிட, ஒரு சர்வதேச உணர்­வுநிலை இருக்கிறது. இந்த உண்மையி­லிருந்து, சர்வதேச உணர்வுநிலையோடு தேசிய உள்ளுணர்வு மோத நேர்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரக்ஞையே மிகவும் வலுவானதாக வெளிப்படுகிறது என்று ஊகிக்கிறேன். இந்த விடயத்தில், யதார்த்தம் என்னோடு இருக்கிறது. அவ்வளவுதான். இந்த நிலைகளுக்காக நான் வருந்தவேயில்லையா? ஆமாம், வெறுக்கத்­தான் செய்கிறேன். என்றாவது ஒரு நான் இறக்க வேண்டும் என்ற உண்மையை எவ்வளவு வெறுக்கிறேனோ அதேயளவு இதையும் வெறுக்கிறேன். ஆனால் என்ன செய்வது, இது என் தலையில் எழுதியிருக்கிறது.

இது எல்லாம் என் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த கொடுரமான, சமகாலச் சம்பவங்களின் வரலாற்றோடு நேரடியாகவும் சம்பந்தப்பட்டிருக்கிறது. பொலிவியாவில் சே-வுக்கு நேர்ந்த கதியை எடுத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி பெரிதாகக் கதையளந்து கொண்டிருக்காமல் நேரடியாக ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். 1971 ல் பொலிவிய அரசு எதிர்ப்பாளர்களின் குழு ஒன்று 'வானவிற்கு வந்தது. அவர்களில் ஒருவர் (பொலிவிய சுரங்கத் தொழிலாளர் சம்மேளனத்திலிருந்து வந்த ஒரு சுரங்கத் தொழிலாளி) ஜுலை 26 கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். சமீபகாலங்களில் பொலிவியாவில் நிகழ்ந்த வெகுமக்கள் கிளர்ச்சிகளைப் பற்றி ஒரு உரை ஆற்றினார். புரியாத புதிரான ஒரு மறதியில் சே- வுடைய கெரில்லாப் போரைத் தன்னுடைய பேச்சில் ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிட­வேயில்லை. 'சே” வின் கெரில்லாப் போர் நமது சமகாலத்திய நிகழ்வுகளில் மிகத் தூய சர்வதேசியப் பார்வை கொண்டிருந்த ஒரு போராட்டம். ஆனால், பொலிவிய தேசிய யதார்த்ததிற்குள்ளாக அது செரித்துக் கொள்ளப்படவே இல்லை. வெகுமக்களின் நினைவில் அது இன்னும் ஏதோ ஒரு அந்நி­யமான நிகழ்வு போலவே படிந்திருக்கிறது. இது ரொம்பவும் சோகமானது. ஆனால் நாம் இதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கத்­தான் வேண்டும். முழுக்க முழுக்க ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று. ஆனால், மறுக்கமுடியாத ஒரு யதார்த்தம். ஒரு மார்க்சியவாதி என்கிற முறையில் யதார்த்தத்தின் விதிகளை மதித்துபப் புரிந்துகொள்ளவே நான் முயற்சிக்கிறேன். என்னுடைய விதிகளை அதன் மீது திணிப்பதில்லை.

காவுட்ஸ்கி தொடங்கி கய் மோஸ்- வரைக்கும் இரண்டாம் அகிலத்தின் மிக மோசமான பிழை ஏகாதிபத்தியத்தின் சேவையில் இருந்து ஐரோப்பிய-மையவாதம் தான் என்று உங்கள் கட்டுரையில் எழுதியிருந்தீர்கள். ப்ரெஞ்ச் சோஷலிஸ்டு கட்சி (PSF) இந்தத் தவறிலிருந்து விலகிவிட்டதா?

இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். PSF இன்னும் அதிலிருந்து விலகிவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. எந்த மாற்றமோ முன்னேற்றமோ இல்லை என்று இதற்கு அர்த்தம் இல்லை. ஆனால், மொத்தத்தில் அதன் பொதுப்போக்கு ஐரோப்பிய மையவாதமாகவே இன்னமும் இருக்கிறது. சோசலிச அகிலத்திற்குள் அது உறுப்­பினராக சேர்ந்திருப்பது இதற்கு அமைப்பு ரீதியான வடிவம் கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். சமூக ஜனநாயகம் மூன்றாம் உலக நாடுகளில் தன்னை அறிமுகம் செய்து கொள்வதில் எப்போதுமே அக்கறையாக இருந்து வந்திருக்கிறது என்பதையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். வர்க்கப் போராட்ட நலன்கள் என்ற நோக்கில் இதைப் புரிந்துகொள்ள முடியும் இந்த நாடுகளின் எதிர்ப்புரட்சியின் ஒரே சாத்தியமான வடிவம் சீர்திருத்தம்தான். அதனால்தான் லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, போர்டுகல் நாடுகளில் சோஷலிச அகிலத்தில்தான் தீவிரமான செயற்பாடுகள், அதிலும் குறிப்பாக, ருளுயு வின் ஏஜென்டாக ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் செயல்பாடுகள் இருக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை.

1919-ல் பல்வேறு தேசிய அங்கங்களை உள்ளடக்கிய கட்டுப்பாடு மிகுந்த ஒரு சர்வதேசக் கட்சியாக லெனின் அமைத்த மூன்றாம் அகிலம், தேசியம் என்ற மறுக்கமுடியாத யதார்த்தத்தின் வலுவைக் குறைத்து மதிப்பிட்ட ஒரு வரலாற்றுத் தவறு என்று நினைக்கிறீர்களா?

அது ஒரு பிழை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வரலாறு தவிர்க்க முடியாதாக்கிய ஒன்று. அப்போதைய நிலைமைகளில் சரி என்று பட்டதையொட்டி அந்தப் பரிசோதனை முயற்சித்துப் பார்க்க வேண்டியதொன்றாக இருந்தது. ஏனென்றால், வரலாறு அதைத் தவறு என்று அதுவரையிலும் நிரூபித்தி­ருக்கவில்லை. ஆனால் தவறு உலகப் பாட்டாளி வர்க்கத்தை தேசிய, பண்பாட்டுத் தனித்துவங்கள், வித்தியாசங்களற்ற ஒரு ஒற்றை முழுமையாகப் பார்த்ததில்தான் இருக்கிறது. ஜினோவாவின் இராணுவ மாதிரியில், அந்தச் சகாப்பதத்தில் நிலவிய மற்ற இராணுவாத உருவகங்களின் அடி­ப்படையில் அமைந்த, ஒரு ஊழியர் அணி­யின் தலைமையில் நடைபோடக்கூடிய சர்வதேச பாட்டாளி வர்க்க இராணுவம் ஒன்று சாத்தியம் என்று அப்போது நம்பப்­பட்டது. இது முழுக்க முழுக்க ஒரு கருத்­துமுதல்வாத அடிப்படையிலமைந்த தவறு. அதனால், ஒரு வகையான தன்முனைப்­புவாத அமைப்புமுறை சார்ந்த வடிவம்.

இதை இன்னும் கொஞ்சம் பின்னுக்கு கொண்டு போக முடியும். பொதுவாகச் சொல்வதென்றால், அகிலங்கள் அவை தோன்றியதற்கு சொல்லப்பட்ட காரணங்­களை எப்போதுமே நிறைவு செய்ததில்லை. 1864-ல் தோன்றிய முதல் அகிலத்திலிருந்து (சர்வதேச உழைப்பாளர்கள் சங்கம்) நான்காம் அகிலம் (இதைப் பற்றி என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்) வரைக்கும் அவற்றின் இலக்கு சோசலிசப் புரட்சி. ஆனபோதிலும், இடைப்பட்ட நுhற்றாண்டின் யதார்த்தமான வரலாற்றில் நிகழ்ந்த ஒவ்வொரு சோசலிசப் புரட்சியும், சோஷலிசத்தை நோக்கிய ஒவ்வொரு முயற்சியும், ஒவ்வொரு முன்னோக்கிய அடிவைப்பும் அவற்றைச் சார்ந்திராமல் சுதந்திரமான முயற்சியில் நடந்தவை பாரீஸ் கம்யூனிலிருந்து 1959-ல் நிகழ்ந்த க்யூபப் புரட்சி வரை. உங்களுக்கே தெரியும், அந்த நிகழ்வைப் பதிவு செய்து என்பதைத் தவிர முதலாம் அகிலத்திற்குக் கம்யூனோடு எந்தச் சம்பந்தமும் இருக்கவில்லை. தற்செயலாக, அந்த நிகழ்வு, அது நிகழ்ந்த பிறகு அகிலத்தை இழுத்து மூடுவதற்கு ஒரு வகையில், ஒரு காரணமாக அமைந்து விட்டது. இரண்டாவது அகிலம், தோல்விகளைத் தவிர வேறு எதையும் தரவில்லை. அந்தக் காலத்தின் ஒரே வெற்றி ரசியப் புரட்சி, அதற்கு எதிராக நிகழ்த்தப்பட்டது. அதேபோல மூன்றாம் அகிலமும் - ஜெர்மனி, இத்தாலி, ஹங்கேரி, ஸ்பெயின் - அதனுடைய உதவியே இல்லாமல், சொல்லப் போனால் அதற்கு எதிராகவே சீனப் புரட்சி வெற்றி பெற்றது. (இரண்டு வாதங்களும் சாத்தியமே. ஒன்றை ஒன்று விலகியலை அல்ல என்றும் சொல்லலாம்) 1944-ல் கிழக்கு அய்ரோப்பாவில் தோன்றிய சோஷலிச நாடுகளைப் பொருத்த வரையில் மூன்றாம் அகிலம் கலைக்கப்பட்டதற்கு அடுத்த ஆண்டில், நீங்கள் ரசியப் பெருந்தேசிய வெறி என்று சொல்லக்கூடிய அதன் பாங்குகளுக்கு எதிராகத் தோன்றியவை.

க்யூப, வியட்நாமியப் புரட்சிகள் மற்றும் பொதுவில் காலனிய எதிர்ப்பும் புரட்சிகள் என்று சொல்லப்படுபவற்றை எடுத்துக் கொண்டால், இத்தகைய எழுச்சிகளை உருவாக்கியதற்கான சட்டகமாக சொல்லிக் கொண்ட எந்த ஒரு அமைப்போடும் இவற்­றுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. எல்லா அகிலங்களுமே ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் மழலையர் பள்ளிகளாகவும் கடைசியில் அவற்றுக்கு எதிராகவே திரும்பிய தேசியக் கட்சிகளைக் கட்டுவதற்கு உதவும் பணியையுமே செய்தன. அடிநிலையில் பார்த்தால் ஒரு அகிலத்தின் வெற்றி என்பது அதன் முடிவைக் குவிப்பதாகவே இருந்தது. இதைச் சரியாகப் புரிந்திருந்தாலேயே மார்க்ஸ் மிக உவப்போடு முதல் அகிலத்தைக் கலைக்க முன்வந்தார். இயக்கம் வளர்ந்துவிட்டது என்றும் அதன் வலுவிற்கு ஆதாரம் - அதற்கு இனிமேலும் ஒரு மையப்படுத்தப்­பட்ட அமைப்பு தேவையாக இல்லை என்றும் சொன்னார். அகிலத்தின் நோக்கம் நிறைவேறுவது என்பது அகிலத்தைக் கலைப்பதாக இருந்தது. நோரெஸ், டோக்லியாட்டி, சாண்டியாகோ கரில்லோ போன்ற ஏனையவர்களைப் பயிற்றுவிக்கும் சர்வதேசியத்தையும் அகிலத்தையும் காலப்போக்கில் சவக்குழிக்கு அனுப்பிய தேசிய வெகுமக்கள் கட்சிகளைக் கட்டுவதற்கு உதவியதற்கும் மேலாக மூன்றாம் அகிலம் வேறு என்ன செய்துவிட்டது. இது ஒரு சோகமயமான இயங்கியல் உண்மை. ஆனால், சில இழப்பீடுகளையும் தரவே செய்திருக்கிறது.

இப்போதெல்லாம், நாம் மையத்திலி­ருந்து விலகிச் செல்லும் ஒரு பொதுவான போக்கையே பார்க்கிறோம். எப்படியிருந்­தாலும், வரலாற்று வளர்ச்சிப் போக்கே அப்படி இருக்கிறது. மூன்றாம் அகிலத்தை நிறுவி, சோவியத்துகளின் சர்வதேச் குடியரசை நிறுவ லெனின் அறைகூவல் விடுத்தபோது, உலகில் ஒரு சோவியத் அரசு கூட இருக்கவில்லை. இலக்கின் பிரம்மாண்டமே வழிகளின் வறட்சியைக் குறிப்பதாக இருந்தது. பிறகு, வழிகள் வளர வளர இலக்கு மெல்ல மறைந்து போனது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், சர்வதேசியவாதியாக இருப்பதற்கான ஒரே வழி சொந்த நாட்டில் புரட்சியை நடத்துவது என்பதாகிவிட்டது. இந்த அடக்கமான முடிவு ஒரு வாய்வீச்சாகக்கூடத் தோன்றலாம். ஆனால், நிகழ்வுகளைப் பார்க்கும் போது யாரும் மறுக்கமுடியாத ஒரு உண்மை.

உங்கள் கடைசிக் கேள்விக்கான பதில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மையில் வரலாற்றை நிகழ்த்துபவர்கள் வெகுமக்களே, என்கிற முரணான ஒரு கருத்தில் இருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை விடாமல் பின்பற்றுங்கள்; உணர்ச்சி ஊக்கம் தருகிற அல்லது சோர்வடையச் செய்கிற முடிவுகளுக்கு நீங்கள் வந்து சேர்வீர்கள் - எப்படியிருந்தாலும் நீங்கள் நம்பிக்கை வைத்துத் தொடங்கிய, வெகுமக்கள்தான் வரலாற்றை நிகழ்த்துபவர்கள் என்பது உண்மையென்றால், நிலவுகிற பண்பாடுக­ளுக்கும் மொழிகளுக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட, அவற்றோடு தொடர்பில்­லாமல் மேலே அந்தரத்தில் சுற்றிக் கொண்டி­ருக்கிற ஒரு அருவம் அல்ல அவர்கள் என்பது உண்மையானால் - வரையறுக்­கப்பட்ட இயற்கையான பண்பாட்டுக் குழுமங்களாக மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள் என்றால் - அப்போது அவர்கள் அவர்களாலேயே, அவர்களது நிலைமைகளிலிருந்தே, விண்ணிலிருந்து அல்ல மண்ணிலிருந்தே, உலகுதழுவி அல்ல உள்ளுர் அளவிலேயே வரலாற்றைப் படைப்பார்கள். எல்லோருக்கும் ஒன்றேயான வரலாறு என்று எதுவும் இல்லை; வரலாற்றின் காலம் டோக்கியோவிலும், பாரீசிலும், பீக்கிங்கிலும், வெனீசுவலாவிலும் ஒன்றாக இல்லை. ஒரு உலகப் புரட்சித் திட்டம் பன்முகத் தன்மைகளை எல்லாம் ஒருமுகப்படுத்தி, மொத்த இயக்கத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முயற்சிக்கும் போது அது வரலாற்று இயக்கத்திற்கு எதிராகப் போய் முடிகிறது ஏனென்றால், அந்த இயக்கம் எப்போதும் ஒருமுகத்தன்மையிலிருந்து பன்முகத் தன்மையை நோக்கி நகர்வதாகவே இருக்கிறது. நிகழ்வுகள் எப்போதும் கீழிருந்தே தொடங்குகின்றன் பன்முகத் தன்மையே எப்போதும் வெற்றி பெறுகிறது. மேலிருந்து வடிக்கப்பட்ட எந்தவொரு திட்டமும் ஒரு உள்ளார்ந்த கருத்துமுதல்­வாதக் கருவைக் கொண்டிருக்கிறது. அதன் காகித ஆரவாரத்திற்கும், வரலாற்றில் அதற்கு இடமில்லாமல் போவதற்கும் காரணம் இதுதான். புரட்சி என்பது ஆணைகள் பிறப்பிக்கும் அறைகளிலிருந்து ஒருபோதும் நிகழ்த்தப் போவதில்லை. பராகுவே-யின் எல்லைக்கு அருகில் இருக்கிற ஒரு தடம் விலகிய கிராமத்தில் இருந்து புரட்சி தொடங்குகிறது என்றால், அதற்கு ஏதோ 19, 000 கி.மீ. தொலைவில் இருக்கிற ஒரு மூளை காரணமல்ல அந்தக் கிராமத்து தெருமுனை பெட்டிக் கடைக்காரன் நிகழ்த்த வேண்டும் என்று முடிவு செய்ததாலேயே நிகழ்கிறது. அந்த மூளை செய்யக்கூடிய தெல்லாம், தெருமுனையைக் கூட தாண்டிப் போயிருக்காத, ஆனால் கிராமத்தின் போது அபிப்பிராயத்தின் மீது செல்வாக்கு செலுத்துபவனாக இருக்கிற அந்தப் பெட்டிக் கடைக்காரன் அதை நிகழ்த்துவதற்கு, அவனுக்கு துhண்டுகோலாக இருந்தது எது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது, கிராமத்து விவசாயிகளின் தேவைகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது, அவ்வளவுதான். அவர்க­ளுக்கு உலகப் புரட்சி அவசியமில்லை ஏனென்றால், அதுபற்றி அவர்களுக்குத் தெரியாது கிராமத்தையே தாண்டியிராத­வர்களுக்கு உலகம் என்பதே தெரியாது. 1967-ல் முயோபாம்பா-வின் மக்களிடம் பொலிவிய கெரில்லாக்கள் வியட்நாமை ஆதரிக்க வேண்டும் என்று விளக்கிப் பேசியபோது, அவர்கள் வியட்நாமை ஏதோ அவர்கள் கேள்விப்பட்டிராத, பக்கத்திலி­ருந்து ஒரு கிராமம் என்று நினைத்திருந்­தார்கள். வாழ்நாளில் ஒரு அமெரிக்­கனைக் கூடப் பார்த்திராத அவர்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று சுத்தமாகத் தெரியவில்லை. ஆனால், அதற்கு மாறாக, அருகில் ஒடிய ஆற்றின் மீதிருந்த பாலத்தை பழுது செய்யாமல் இருந்த உள்ளுர் ஆட்சியின் மீது அவர்கள் கடும் கோபத்திலிருந்தார்கள்.

ஆகையால், அங்கு புரட்சியை ஆரம்பிப்பது என்பது அவர்களுக்கு அந்த பாலத்தில் பிரச்சினையில் உதவுவது, ஏன் அந்த அதிகாரி அந்தப் பாலத்தை சரி செய்யாமல், அக்கறையற்று இருக்கிறான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள உதவியது. அது எப்போதுமே கீழிருந்து, தன்னடக்கமாக, பெரிய எழுத்துக்கள் இல்லாமல் தொடங்குவது. ஆனால், அகிலம் என்பது அதன் வரையறுப்பிலேயே பெரிய எழுத்துக்கள் தேவைப்படுவது - ஆனால், செயலற்ற ஒரு மேல்கட்டுமான­மாகவே இருக்கச் சபிக்கப்பட்டது. ஆனால், தேசம் ஒரு மேல்கட்டுமாணம் இல்லை; மாறாக (மொழியைப் போல, பண்பாட்டைப் போல்) ஒரு உண்மையான உள்கட்டு­மாணம் (infra – structure). அகிலங்கள் வெறுமனே மேல்கட்டுமாணங்களாகவே இருக்கின்றன் அந்தக் காரணத்தாலேயே வரலாற்று ஓட்டத்தில் அடித்துச் செல்லக்கூடியவையாக இருக்கின்றன.

வியட்நாம் போருக்கும் உள்ளுர் ஆற்றுப் பாலத்திற்கும் இடையிலான இந்த முரணைத் தாண்டிச் செல்வதுதான் இயங்கியல் முறையியலின் நோக்கம். பொலிவியாவில் ஒரு இரண்டாவது போர் முனையைத் துவக்கி, வியட்நாம் புரட்சிக்கு உதவவேண்டும் என்று நினைக்கிற ஒரு சர்வதேசப் புரட்சியாளர், தன்னுடைய இலக்கு உள்ளுர் பாலம் குறித்த விவாதத்தைத் துவக்கி வைப்பதைச் சார்ந்திருக்கிறது எனவும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வழியில், பொதுவானதற்கும் குறிப்பானதற்கும் இடையிலான முரண்பாட்டை ஒருவர் இயங்கியல் ரீதியாக கடந்து செல்ல முடியும். பொதுமைக்கும் குறிப்பானதற்கும் இடையிலான, தலைகீழ் விகிதத்திலான ஒரு இயங்கியலின் ஊடாக - நீங்கள் பிரச்சினையை வைக்கும் முறையில் சுத்தமாக மறைந்துவிடுகிற ஒரு இயங்கியல் - பருண்மையான உள்ளுர் யதார்த்தங்களிலிருந்து தொடங்கி சர்வதேச இயக்கத்திற்கு நகர்த்தல், மார்க்சிய சர்வதேசியவாதத்தின அணுகுமுறை இதுதான்.

ஒப்புக்கொள்கிறேன். எனது அணுகு­முறை விவாத நோக்கில் இருந்ததால் சற்று ஒருதலைச் சார்பானதாக இருந்தது; ஒரு மிகைப்படுத்தலுக்கு எதிராக இன்னொரு திசையிலான மிகைப்படுத்தலாக இருந்தது. உண்மையைச் சொல்வதென்றால், நீங்கள் சொல்வது சரிதான் நாம் ஒரு இயங்கி­யலைக் கட்டமைக்க வேண்டும். ஆனால், இதில் நாம் ஒன்றுபட்டாலும்கூட, அதன் தன்மைக்கு வரும்போது, நாம் முரண்பட்டுக் கொள்வோம். தேசியப் போராட்டங்களில் புரிந்துகொள்வதற்கான தீர்மானகரமான கோட்பாட்டுச் சட்டகம், உலக அளவில் நடைபெறும் வர்க்கப் போராட்டம் குறித்த ஒரு சர்வதேசிய கோட்பாட்டுச் சட்டகம்தான் என்று நம்புகிறேன். உலகப் போராட்டம் குறித்த கோட்பாட்டின் முக்கிய சரடுகளை முன்கூட்டியே கற்றுத் தேறாமல் பொலிவியாவில் நடைபெறும் நிகழ்வுக்களை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது. என்றாலும், நடைமுறையில் துவக்கப் புள்ளியாக இருப்பது, நடைமுறை தீர்மானகர காரணியாக இருப்பது, தேசம்தான். பொலிவியாவின் தேசிய வர்க்கப் போராட்ட நிலைமைகள் குறித்த ஆய்வே துவக்கப் புள்ளியாக இருக்க வேண்டும்; இல்லையென்றால், உலக நிலைமை பற்றிய விரிந்த கோட்பாட்டுக்கு ஆய்வு பயனுள்ளதாக இருக்காது; உண்மையான வரலாற்று மாற்றங்களைக் கொண்டுவர அதனால் முடியாது. இங்கு, ஒரு பரஸ்பர வினையாக்கம் இருக்கிறது. கோட்பாட்டளவில் முதன்மையாக இருப்பது எப்போதும் செயலளவில் முதன்மையா­னதாக இருக்க முடியாது. ஒருவேளை இதில் சர்வதேசியத்தை எப்போதும் மனதில் வைத்துக் கொண்டே தேசிய நிலை­மைகளைக் கையாள்வது, ஆனால் சர்வதேசியத்தை அங்கே வைக்காமலி­ருப்பது என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது போல. தப்பித்தவறி அதை வைத்துவிடுவது, எல்லாம் கெட்டுவிடுவதற்கான அறிகுறியா­கி­­விடக்கூடும்.

இறுதியாக, நாம் எப்போதும் சர்வதேச அளவில் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அதைப் பற்றிப் பேசக்­கூடாது என்று வேண்டுமானால் சொல்ல­லாம். அதைப் பேசுவதை நிறுத்தும்போது­தானே ஒரு கட்சி வலுவானதாக அதாவது தேசியமானதாக ஆகிறது. அந்தப் புள்ளியில் தானே ஒரு குழுவாக இருப்பதி­லிருந்து மாறி, ஒரு வெகுமக்கள் கட்சியாக 'பின்னடைவுக்கு” சபிக்கப்பட்டதாக மாறுகிறது. இதுபோன்ற திருப்பங்கள் சர்வதேச பொதுவுடமை இயக்க வரலாற்றில் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. 1935-36 காலகட்டத்தில் Pடுகு ஒரே மூச்சில் உள்ளுரளவிலான ஒரு மூடிய பாட்டாளி வர்க்க முன்னணிப்படை என்ற நிலையிலி­ருந்து ஒரு வெகுமக்கள் கட்சியாக மாறிய அந்த நிகழ்;வு ப்ரெஞ்சு கம்யூனிச இயக்க வரலாற்றில் முக்கியமான ஒன்று. இது பிறகு திரும்பிப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு. 1943-ல் இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இதே நிகழ்ந்தது.

ஆக, சர்வதேசியத்திற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால், அதை வெகுமக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதால் அதைப் பற்றி ஒருவர் பேசக்கூடாது என்று சொல்ல வருகிறீர்கள். முன்னணிப் படை புரிந்து கொண்டதை உதராணத்திற்கு, சர்வதேசப் பரிமாணம், இன்ன பிற - கிரகித்துக் கொள்ளவே முடியாத, திருத்த முடியாத மந்தைக் கூட்டம் என்கிற, வெகுமக்கள் குறித்த ஒரு இயங்காவியல் கண்ணோட்டம் இல்லையா இது?

இல்லை. இது தேர்தல் பாதைக்கு மாறிவிடுவதோ வெகுமக்களின் நிலைக்குத் தாழ்ந்துவிடுகிற சந்தர்ப்பவாதமோ இல்லை. எந்த ஒரு சமூகச் சூழலிலும் செயல்படுகிற சக்திகளின் படிநிலை வரிசைகளில் உள்ளுர் காரணிகளின் அமைப்பே தீர்மானகரமா­னதாக இருக்கிறது என்பதே இங்கு முக்கி­யமான புள்ளி. இது ஒரு செயல் அளவி­லான பிரச்சினை. இப்போது, 1976-ல், ப்ரான்சில் நாம் செய்யவேண்டியது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கான பதில் ப்ரெஞ்சு சமூக அமைவிற்கு இருக்கிறதே ஒழிய அதற்கு வெளியில் எங்கும் இல்லை. சர்வதேச அல்லது ஐரோப்பிய போராட்டங்கள் பற்றிய இருப்புநிலை அறிக்கையிலேயே (Balance-sheet), ஆய்விலோ அதைத் தேட முடியாது. பகுதியே (local) எப்போதும் தீர்மானகரமான காரணியாக இருக்கிறது. நாம் ஒரு மிகச் சாதாரணமான உண்மையை சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருக்­கிறோம். 'அகக் காரணியின் ஊடாகவே புறக்காரணி செயல்பட முடியும்” என்று மாவோ இதை அழகாகச் சொல்லியிருக்­கிறார். அகக்காரணி அவசியம் உள்ளுக்­குள்தான் இருக்கும். செயலில் இருக்கும் எந்த ஒரு சக்தியிலும் அதிகபட்ச வினாவைக் குறிக்கும் புள்ளியாக இருப்பதால் இந்த அகக்காரணிக்கே எப்­போதும் அதிக அழுத்தம் தரப்பட வேண்டும். மிக எளிமையான, இயக்க நுட்பம் குறித்த கேள்வி என்று ஒருவர் இதைச் சொல்லலாம். காரணத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அதன் பிறகு, நிலைமையை மாற்றியமைக்­கும் சாத்தியங்களை உள்ளடக்கிய இந்தப் புள்ளியின் மீது முழுச் சக்தியையும் ஒருவர் பிரயோகிக்க வேண்டும். செயலுhக்கமான காரணிகள் எப்போதுமே நுண்ணிய பொருண்மையானவை; பிரம்மாண்டமான கற்பனைத் திட்டங்களோ, ஆதாரப் புள்ளிக்கு வெளியே இருக்கிற அலங்காரங்களோ அல்ல. ஆக, மிகச் சாதாரண, இயக்க நுட்பம் குறித்து கேள்வி இது. வெகுமக்க­ளுக்குப் புரியாத ஒரு மொழியில் அவர்களி­டமிருந்து விலகி நின்றுப் பேசுவதைத் தவிர்ப்பது பற்றியது அல்ல. வியட்நாமைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது என்றால், அந்தப் பிரச்சினை அவர்களுக்கு நேரடியாக தொடர்பில்லாத 'ஆனால் மறைமுகமாகத் தொடர்புள்ள” ஒன்று என்று யதார்த்தத்­திலிருந்து எழுகிற ஒரு உபவிளைவு என்பதுதான் விடயம். நேரடியான காரணங்கள், அக்கறைகள் மீது ஒருவர் நேரடியாகத்தான் வினையாற்ற வேண்டும்.

ஆகஸ்டு 1914 -ஜெர்மனி பற்றிய உதாரணத்திற்கு திரும்பவும் போக விரும்புகிறேன். புரட்சிகர நடவடிக்கையை விரும்பிய அன்றைய புரட்சியாளர்கள், அந்தக் காலத்திய ஜெர்மானிய சமூக அமைப்பு, சமூக வர்க்கங்கள், அரசியல் சக்திகள், வெகுமக்களின் உணர்வுநிலை, ஜெர்மன் தேசியப் பாரம்பரியம் இன்ன பிறவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையெல்லாம் சொல்லத் தேவையில்லை. ஆனால், வெகுமக்களால் சர்வதேசியத்தை என்றுமே புரிந்துகொள்ள முடியாது என்று ஒருவர் எடுத்துக் கொள்ள முடியாதவரை, இந்தப் பருண்மையான நிலைமைகள் குறித்த ஆய்வு, ஒருவரை வெகுமக்களை அப்போதைய அவர்களது உணர்வுநிலைக்கு மேலாக கொண்டுவர - அதாவது தேசிய வெறியிலிருந்து, கெய்சரை ஆதரிப்பதிலிருந்து - உதவக்கூடிய ஒரு யுத்த தந்திரத்தையும் போர்த் தந்திரத்தையும் வகுப்பதற்கு இட்டுச் செல்ல வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நிலவுகிற சமூக அமைவை பருண்மையான துவக்கப் புள்ளியாகக் கொள்வதற்கும் சர்வதேச யுத்த தந்திரம் ஒன்றை வகுத்துக் கொள்வதற்கும் இடையில் எந்த முரணும் இல்லை. ப்ரான்சில் இன்றைக்கு புரட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தற்போது அவர்கள், மூவர்ணக் கொடியையும் தேசிய கீதத்தையும் நிராகரிக்கவும், 'எல்லா எல்லைகளும் தகரட்டும்” என்று முழங்குவதையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதேநேரத்தில் இன்னொரு பக்கம் பிரிட்டானியர்கள் (Bretons) மற்றும் கார்ஸிக்கர்களுடையழூ உரிமைகளுக்காகப் போராடவும் செய்கிறார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தேசியச் சின்னங்கள், அடையாளங்கள், மன அமைவுகளைப் பொருத்தவரையில், புரட்சிகர மதிப்புகள் என்று சொல்லப்படுகிற­வற்­றுக்கு எனது நிலை முற்றிலும் எதிரானது. தேசிய பாரம்பரியத்தை மீட்டெடுக்காத வரைக்கும் ப்ரான்சில் புரட்சி சாத்தியமே­யில்லை என்பது என் நம்பிக்கை. தேசியப் பாராம்பரியம் என்கிற இந்தச் சரியான பாதைக்கு திரும்புவதன் வழியாகத்தான் அதிலிருந்து விடுபடுவது பற்றி நாம் யோசிக்கவே முடியும். தொடர்ச்சியும் புதுமை புனைதலும் என்கிற உயர்வான இயங்கியல் என்பதற்கு மேலாக இதில் எதுவும் இல்லை: பழையவற்றின் தொடர்ச்சியை அங்கீகரிக்­கும்போதே புதுமை புனைதல் சாத்தியம். எனக்குத் தெரிந்த புரட்சியாளர்கள் எல்லோருமே தனிப்பட்ட முறையில் மிகத் தீவிரமான தேசபக்தர்களாக இருந்தவர்கள் - ஆச்சரியம்! ஆச்சரியம்!” அவர்களுடைய 'சர்வதேசியம்” பொதுவில் ஒரு தேசிய மீட்;புவாதமாகவே (messianism) இருந்தது. மேலும், கியூபாவிலும் வியட்நாமிலும் ஒரு புரட்சியாளராக இருப்பது என்பது - இப்போது தொழிலாளர் அரசுகள் இருக்கும்போது மட்டுமல்ல, அதற்கும் முன்னும் கூட - தேசியவாதியாக இருப்பதுதான். ஒரு ஆதிக்க தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிற நாம், நம்முடைய தேசியப் பாரம்பரியம் அனைத்தையும் நிராகரித்துவிட வேண்டுமா அல்லது அந்தப் பாரம்பரியத்தில் ஆதிக்கக் கறை படிந்ததை அதன் ஏகாதிபத்திய வேர்களை மட்டும் விலக்கிவிட வேண்டுமா என்பது நம் முன் உள்ள கேள்வி. மோசமான பக்கங்களை விலத்திவிட வேண்டுமா என்பது நம் முன் உள்ள கேள்வி. மோசமான பக்கங்களை விலத்தவிட்டு, சாதகமான அம்சங்களை விதைக்க வேண்டும் என்பது என் கருத்து; அதுவும் பிந்தையவற்றுக்கு ஃப்ரான்சில் ஒரு வலிமையான வரலாறு இருக்கும் போது.

இந்த நாட்டில், இதன் வரலாற்றில் மிகச் சிறந்ததாக இருக்கிற அத்தனையையும் உருவாக்கிய உரு புரட்சி, தற்போது வெறுமனே ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சி என்று இகழ்ந்து பேசப்படுகிற - இங்கு நிகழ்ந்திருப்பது நமது அதிர்ஸ்டமே. வேல்மி, புனித ஜஸ்ட், பாரீஸ் கம்யூன், ஆக்கிரமிப்பு எதிர்ப்பு முன்னணி (resistance), என்று நமது புரட்சிகரப் பாரம்பரியம் செறிவானது. மேலும், அதன் இயற்கையிலேயே மிகப் பிற்போக்கானதாக இருக்கிற, வெகுமக்கள் முன்னணியை விட ஹிட்லரை விரும்புகிற, வெளிநாட்டுச் சக்திகளின் உதவியை நாடுகிற ஒரு ஆளும் வர்க்கம் நமக்குக் கிடைத்திருக்கிற போது இவற்றை நாம் இன்னும் முழுமையாக பயன்படு;த்திக் கொள்ள வேண்டும். புரட்சியின் நலன்க­ளோடு தேசிய நலன்களும் கலந்திருப்பதால் நாம் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையின்மையோ சந்தர்ப்பவாதமோ இங்கு உதவாது. பாருங்கள், மார்செய்ல்ஸ் (சர்வதேசிய கீதம்) 'சபியுங்கள் அதை, ஒரு புரட்சிப் பாடல் இல்லையா;” எங்கோ பொலிவியத் தொழிலாளர்கள் அதைக் பாடக் கேட்டிருக்கிறேன். ஈக்லின் போட்டியர் (Eugene Pottia) என்ற கைவினைஞன் 1871- ல் இயற்றிய இந்த ப்ரெஞ்சுப் பாடலை மாஸ்கோவின் செஞ்சதுக்கத்திலும் பீகிங்கின் டியன் -மென் சதுக்கத்திலும் கோடிக்கணக்­கானவர்கள் பாடக் கேட்கும் போது, ஒரு ப்ரெஞ்சுக்காரன் என்ற முறையில் நான் புல்ல­ரித்துப் போகிறேன். நமது சொந்த மக்களுடைய தேசிய வேர்களை அங்கீ­கரிக்க மறுத்தவிட்டு, மற்ற தேசத்து மக்களு­டைய உணர்ச்சிகளை அக்கறையோடு பார்ப்பதை, சீன தேசியத்தை ('மாவோயிசம்” என்ற போர்வையில் மறைந்து கொண்டி தேசியவாதம்), அல்ஜீரிய தேசியத்தை, கியூப, வியட்நாமிய தேசியங்களை மதிப்பதையே சர்வதேசியம் என்று நமது புரட்சிக்காரர்கள் சொல்லும்போது, எனக்கு எரிச்சலும் குழப்பமுமாகவே இருக்கிறது.

கோட்பாட்டளவிலும் சரி, நடைமுறையி­லும் சரி, செங்கொடிக்கும் மூவர்ணக் கொடிக்கும் எந்த முரண்பாடு தெரியவில்லை. தேசியப் பொதுவுடமைப் பாதையை நான் முழு மனதோடு ஏற்றுக் கொள்­கிறேன். எங்கெல்லாம் பொதுவுடமை கொஞ்­சமாவது அர்த்தமுள்ளதாக இருக்­கிறதோ அங்கெல்­லாம் அது யுகோஸ்லோ­வியாவைப் போல, சீனா, கியுபாவைப் போல, தேசியப் பொதுவுட­மையாக இருக்கிறது. தெய்பிங்குகளை முன்னோர்க­ளாக வரித்துக் கொண்ட சன்யாட்சென்-னின் வழி வந்தவராக சொல்லிக் கொண்டே மாவோ ஜப்பானியர்களை எதிர்த்து நின்றார். கியுபாவில் ஃபிடல் உருவானது ஜோஸ் மார்ட்டியின் வழித்தோன்றலாகவே. இன்றைய ஃபிரான்சில் ஒரு புரட்சியாளனாக இருப்பதன் அர்த்தம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், புரட்சிகரமான ஒரு மாபெரும் தலைவன் இங்கு உருவானால் நிச்சயம் அவன் கடந்தகால ப்ரெஞ்சு தேசிய நாயகர்க­ளின் மிகச் சிறந்த பண்­புகளையும் பாரம்பரியங்­களையும் உட்கிரகித்துக் கொண்டவனாக இருப்­பான் என்று உணர்கிறேன். வெட்டவெளிச்சமான உண்மை இது. ஆனால், பிரான்சில், தேசிய உணர்வுகள் மழுங்கிக் கொண்டிருக்கிற தந்போ­தைய சூழலில் - இந்த மேலோட்­டமான தோற்றத்­தைக் கண்டு நாம் மயங்கிவிடக் கூடாது என்றாலும் கூட 'மிகவும் அழுத்தமாக சொல்லப்பட வேண்டிய ஒரு உண்மை. ஒடுக்கும் தேசத்திற்கும் ஒடுக்கப்படும் தேசத்திற்குமி­டையிலான பண்பளவிலான வித்தியாசம் மட்டுமே இங்கு நம்மை வழிநடாத்துவதாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஒடுக்கும் தேசத்தின் தேசியப் பாரம்பரியத்திற்குள்ளேயே நமது கவனத்தைக் கோருகிற மறைக்கப்பட்ட கூறுகள், பழைய அடக்குமுறைகளின் நினைவுச் சின்னங்கள் நிறைய இருக்­கின்றன. பேட்சின் (Petsin) இங்கு நமக்குத் தேவையில்லை; ஆனால் ஜீன் மொலினின் - ஒரு உதாரணத்திற்கு, பாரம்பரியம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.



அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு புரட்சிகர கட்சி பாரம்பரியத்தையும் வரலாற்றுத் தொடர்ச்சியையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லும்போது நான் அதோடு உடன்படவே செய்கிறேன். ஆனால், எல்லாவிதமான வர்க்க சமரசங்களுக்கும் தேசப்பற்று அல்லது, தேசியக் கருத்தியலே (ideology) வசதியான ஒரு கருவியாக, எல்லா சமூக முரண்பாடுகளையும் பூசிமெழுகி விடுவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு புனிதக் கூட்டாக அதனால் ஆதிக்கக் கருத்தியலின் மிக இயல்பான ஒரு ஊடகமாக இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். தொடர்ச்சியை சுவீகரித்துக் கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை; குறைந்தபட்சம் ஒருவர் அதை விமர்சிக்க வேண்டும்; அடித்து வளைக்க வேண்டும். சீனா, கியுபா போன்ற ஒடுக்கப்பட்ட தேசங்களில் பிரச்சினை இது போல இல்லை. ஆனால் பிரான்சில் மூவர்ணக் கொடி கம்யூனை நசுக்கிய வெர்செய்ல்சின் - முதலாளிகளின், பேரரசின் கொடியாகவும் இருந்தது. விஷயங்கள் அவ்வளவு நேராக இருப்பதில்லை. தேசப்பற்று ப்ரெஞ்சு மக்களின் அபினாகவும் இருந்திருக்கிறது; 1914-ல், 19139-ல் நிகழ்ந்தது போன்ற எல்லாவிதமான அட்டூழியங்களும் அதன் பெயராலேயே நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால், ஒருவர் என்னதான் முயற்சித்தாலும் கூட முயற்சிக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன் - இந்தத் தொடர்ச்சியை எந்தப் புரட்சிகர நோக்கத்திற்காகவும் சுவீகரித்துக் கொள்ளும் முயற்சி மிகவும் சிரமத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது. பிரான்சுக்கு பல பாரம்பரியங்கள் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்; இதில் எதை எடுத்துக் கொள்வது, எந்தப் பருண்மையான வழியில் இதைச் செய்வது என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும்.

நீங்கள் சொல்லும் விமர்சனப்பூர்மவான தேர்வு என்பது மிகவும் அவசியமானதுதான். அதில் சந்தேகமில்லை. வரலாற்று ரீதியாக ஒரு ஒடுக்கும் தேசத்தைக் சேர்ந்தவர்கள் என்கிற நிலைமை எழுப்பும் சிக்கலோடு இது பிணைந்திருக்கிறது. என்றாலும், தேசியத்தை அதற்குள் ஒடுக்கப்பட்டு, மறைக்கப்பட்டிருக்­கிற கூறுகளோடு சேர்த்து, ஒட்டுமொத்தமா­கவே நிராகரித்துவ விடுவது என்பது மோசமான விளைவுகளை விலைகொடுத்து வாங்கிவிடுவது போலா­கிவிடும். ஜாகோபி­யன் மீட்புவாதத்தின் (Jacobian Messianism) பால் எனக்குள்ள தனிப்பட்ட விருப்பை, சாய்வை இந்தச் சந்தர்ப்பத்தில் வெளிப்­படையாக அறிவித்துக் கொள்கிறேன். 1792இ 1848-களின் ஜாக்கோபியன்வாதம் எனக்குப் பிடித்தமானது மட்டுமல்ல, ஒரு அர்த்தத்தில் எனது இயல்பும் கூட. ஐரோப்பாவின் விடுதலைக்கு ப்ரான்ஸ் மறுபடியும் புரட்சிச் சுடரை ஏந்தும் என்று எப்போதுமே நான் நம்பி வந்திருக்கிறேன். விடுதலைப் பாதையை உறுதியாகப் பிடித்து புரட்சிகரமான ப்ரான்சின் மேலாண்மையில் கீழில்லாமல் ஐரோப்பாவிற்கு வேறு எந்த நம்பிக்கையும் எனக்குத் தோன்றவில்லை. 'போக்ருக்கு எதிரான” (anti-Boche) அந்த மொத்த புராணக் கற்பனையும் ஜெர்மனிக்­கெதிரான மத அடிப்படையில்லாத நமது பகையும் என்றாவது ஒருநாள் புரட்சியை ஏன் நமது தேசிய ஜனநாயகப் பாரம்பரியத்­தைக்கூட காப்பதற்கு நமக்கு உதவாமலா போய்விடும் என்று சிலநேரங்களில் நான் வியப்பதுண்டு. ஆனால், தயவுசெய்து மன்னியுங்கள். இதோடு ஒரு அரசியல், கோட்பாடு விவாதத்தைச் தூண்டச் செய்வதற்கான எனது இந்த முயற்சியை முடித்துக் கொள்ள அனுமதியுங்கள். எதிர்முனைகளில் நின்று கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க, பரிச்சியமானவற்றுக்கு அப்பால் போகத் துணியத் தூண்ட, செய்த முயற்சி இது. அதன் மூலம் நாம் எல்லோரும் வாழவும் சிந்திக்கவும் பழகிக் கொண்ட ஒரு அமைப்பின் உறுதியை சோதித்­துப் பார்க்க உதவுவது மார்க்சியத்தை ஒழித்துக்கட்­டுவதற்கு அல்ல, அதை உலுக்கி மீண்டு உறுதியாக்கவே இந்த முயற்சி.


New Left Review, Number : 105

இன்னுமொரு யோனி செய்வோம்

தில்லை
14-12-2008


அர்த்தம் அள்ளி
வரிகளை விழுங்கினேன்
வானமும் பூமியும்
வயிறு நிரம்பிற்று
காற்றை உள்ளங்கையில் நக்கி

கடலை குடித்தேன் சிரட்டையில்
ஓங்காளம் வந்து
சுருங்கிற்று கண்கள்
நிமிர்ந்து யானையின் தும்பிக்கை விறைத்து
உருமாறிற்று


தெரிந்தவன்
சிட்டுக்குவி

மலவாசல்
இது கனவு
வயிறு வலித்தது
வரிகளைத் துப்பினேன்
சிட்டுக் குருவியின் மலவாசலில் தும்பிக்கை
இறுகி இது நினைவு
கண்கள் திறந்து
கழிவறையில் கிடந்தேன்
மலவாசலில்

இரத்தம் வழிய






























சிதைதல்

நிவேதா
நெஞ்சுக்குள் நெருடும் என்னமோவொன்று சமயங்களில் நீ உடைத்தெறிய முயலும் நெடும் மௌனங்களினூடு தகர்ந்து போவது என் முள்ளென்புகளும்தான நெருக்கமான உரையாடல்கள் அதன்பின்னரான விடைபெறுதல்கள் உணர்வுகளை அசுரபசியுடன் பிடுங்கித் தின்னும் இந்தக் காதலுடன் தொலைபேசி கைநழுவ கால்களினிடையே முகம்புதைத்து விம்மி விம்மியழும் பொழுதுக்கள் இனிமேலும் வேண்டாமெனக்கு.. எதுவும் பேசிக்கொள்ளாத கணங்களின் வலி தெறிக்கும் குரலில் நினைப்பதனைத்தையும் சொல்லிவிட முடிந்திடுமாயின் சிதைதல் சிலகாலங்களுக்கேனும் தள்ளிப்போகக்கூடும் காத்திருத்தல்களில் வந்துமுடியும் கனவுகளின் கனத்த முடிச்சுகளுடன் தன் வழி ஏகுதலும் பிரியம் கூற விழைதலும் பழம் பஞ்சாங்கங்களாய்க் கசக்க வெறும் வார்த்தைகள் உன்னில் சலனங்களை ஏற்படுத்தக் கூடுமோவென்ற சந்தேகங்களோடு முன்புபோல் எதுவும் ஆறுதலளிப்பதாயில்லை விழிநீரை வீணாக்குவது மட்டுமே அழுகையாகின் அழத்தோன்றினால் அழுவதில் ஒன்றுமேயில்லைதான் நீயற்ற வெறுமைகளின் இறுக்கந்தளர்த்த வழியற்று இரத்தங் கசியக் கசியப் பாடலுறுவதே எனக்கான அழுகையாகிப் போனமை நீயறிவாயா எனதன்பே.

தலைகீழாய்த் தொங்கும் முலைகள்

தில்லை 14-12-2008 உண்ணும் முலைகளையும் இன்னும் பல நூறு யோனிகளையும் எனது உடம்பில் ஆணியில் கொழுவினர் கண்களில் வாழ்வு வழிந்தோட என் தேச பெண்கள் மூக்கை பொத்தி மூன்று தல முறை தாண்டு கடலில் மூச்சு வாங்கினர்; இரத்தம் காய்ந்த உடைகளையும் உடலையும் அலசிக் கழுவினர் எல்லாவயதினருமாக எல்லையிடப்பட்ட பணிமனையில் கணவர்களின் பெயர் சொல்லி வௌ¢ளையுடை வாங்கினர் இன்று பகலும் இன்னும் முப்பத்தி மூன்று ஆயிரம் பெண்கள் முலைகளையும் யோனிகளையும் என்னில் கொழுவிர் எங்கு போகிறீர்கள் என்றேன் எல்லைக் கிராம தடுப்பு முகாமில் வௌ¢ளையுடை வாங்க என்றனர்.

நினைவில்...... தோழர் பொன். கந்தையா

கரவைதாசன்
கந்தையாஅன்று சிறுபான்மைத்தமிழர் மகாசபை என்று சொல்லப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் ஸ்தாபனத்தோடு சேர்ந்து இருபத்தொன்பது பாடசாலைளை உருவாக்கியிருந்தார்.

இந்த இருபத்திஒன்பது பாடசாலைகளில் கிட்டத்தட்ட பதினாறு பதினேழு பாடசாலைகள் சிறுபான்மைதமிழர் மகாசபையின் நேரடி முயற்சில் உருவானவை என்ற வரலாற்றுப் பதிவினை ஈழத்து இடதுசாரிகளின் வரலாறெங்கும் காணலாம். அதனோடு அவரது பருத்தித்துறைத் தொகுதில் உள்ள எல்லாப் பாடசாலைகளுக்கும் வேண்டிய தளபாடங்கள் ஆய்வுகூட உபகரணங்கள் வேண்டிய ஆசிரியர்கள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்ததோடு நின்றுவிடவில்லை. ஒரு அரசினர் மத்திய மகாவித்தியாலயத்தையும் ஏற்படுத்தினார்.


இந்த அரசினர் மத்திய மகாவித்தியாலயத்தை பருத்தித்துறைத் தொகுதியின் மத்தியில் ஏற்படுத்தி எல்லா மக்களுக்கும் பிரயோசனப்படும் வகையில் ஏற்படுத்த முயற்சி எடுத்தார். அதை வல்வெட்டி, பொலிகண்டி, நெல்லியடி, உடுப்பிட்டி போன்ற இடங்களின் மத்தியில், எள்ளங்குளச் சுடலைக்கு மேற்கேயிருந்த தரிசு நிலத்தில் அமைப்பதற்கு அத்தொகுதியிலுள்ள சமூகஅக்கறையாளர்களேடும் கட்சித்தோழர்களோடும் தீர்மானித்து அந்தக் காணியை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு விண்ணப்பித்து அதைச் செயற்படுத்த முயன்று கொண்­டிருந்தார். மத்தியமகாவித்தியாலயத்தை மாத்திரமல்ல அதற்குப் பக்கத்தில் ஓர் அரசினர் தள வைத்தியசாலையையும் ஏற்படுத்த இருந்தார்.

இதைக் கேள்விப்பட்ட வல்வெட்டியைச் சேர்ந்த நிலக்கிளார்கள் அந்தத் தரிசு நிலத்தில் துரிதகதியில் ஒரு கட்டிடத்தைக் கட்டி அதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பேரால் பொன்னம்பல சைவவித்திய­சாலையென்று பெயர்வைத்து திரு.ஜீ.ஜீ. பொன்­னம்பலத்தின் துணையோடு அதை

அங்கீகரிக்கவும் செய்துவிட்டனர். அந்தப்பள்ளிக்கூடத்தை அரசினர் பாடசாலையாக்குவதை தடுக்க அவர் முயற்சிக்கவில்லை. எனில் இந்துக்களின் உணர்வுகளைப் அது புண்படுத்துவ­தாகிவிடும் என்பதால் கந்தையா அம்முயற்சியை வேறுவழியிற்செய்ய யோசித்தார்.

ஈற்றில் உடுப்பிட்டி இமையாணன் பொலிகண்டிப் பிரதேசத்திலுள்ள நிலக்கிளார்களிடம் இப்படி ஒரு அரசாங்க மத்தியமகாவித்தியாலயத்தினை உருவாக்குவதற்கு காணிகளை வழங்கும்படி கேட்டிருந்தார்.

ஒருவரும் நிலத்தினை வழங்க முன்வராததால் மாற்றுவழியேதுமின்றி நெல்லியடியில் இருந்த தனது சொந்தத் தோட்டக்காணி முழுவதையும் இனாமாக வழங்கி நெல்லியடியில் அரசாங்க மத்திய மகாவித்தியாலயம் உருவாகுவதற்கு வழிசமைத்தார்.


அதுவே வடமாகாணத்திற் தோன்றிய முதலாவது அரசினர் மத்திய மகாவித்தியாலயமாகும். அது விடுதியில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதியோடு கட்டப்பட்டது. அவ்வழியில் அந்நாட்களில் வெளிமாவட்டங்ளிலிருந்து வந்து பல சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தார். இச்செயற்திட்டங்களில் தேசியஒற்றுமையினை பேணலாம் என அவர் தீர்க்கமாக நம்பிச்செயற்பட்டார்.


அந்த விடுதிகளில் வடமாகாணத்தி­லேயுள்ள பின்தங்கிய பிரதேசத்திலேயுள்ள மாணவர்களும் புலமைப்பரிசில்கள் மூலம் விடுதியில் தங்கிப்படிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தார். அந்த நெல்லியடி அரசினர் மத்தியமகாவித்தியாலயத்தில் தீவுப்பகுதிகளிலிருந்து புலமைப்பரிசில்கள் பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து தங்கியிருந்து கல்வி கற்றனர். இவையெல்லாம் பாடசாலை தேசியமய­மாக்கலுக்கு முன்பு நடந்தவையாகும். கந்தையா போட்ட அத்திவாரத்தின் பலாபலனாலேயே வடமராட்சிப் பிரதேசம் கல்வியில் முன்னேறியது.

உடுப்பிட்டியில் கட்டப்படவிருந்த தளவைத்தியாசாலை காணிகிடைக்காத காரணத்தினால் ஈற்றில் மந்திகையில் கட்டப்பட்டது. அதுவே இன்று மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார­வைத்தியசாலை ஆகும். இவ்வாதார வைத்தியசாலை இன்று வடமராட்சியில் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வைத்தியசாலையாகும். இங்கே அமைந்துள்ள மனநோயாளர் பிரிவு கூட அவர் வகுத்து வைத்த திட்டத்தின் தொடர்ச்சியினால் பின்பு உருவானதாகும்.

கந்தையா நாளாந்த வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அரசியலையும் இணைக்கத்தெரிந்த மனிதராகும். அதற்கோர் உதாரணம். ஐம்பதுகளில் சீவல்தொழிலாளர்கள் கள் இறக்கக் கூடாது. கள் இறக்குவது சட்டவிரோதமாகும். கருப்பணியே இறக்கவேண்டும்.

கள்ளை முட்டிகளிலும் போத்தல்களிலும் கொண்டுபோன சீவல் தொழிலாளர்கள் பொலிசாலும் எக்சசை இன்ஸ்பெக்டர் என்று சொல்லப்படும் பாழை வெட்டுபவர்களாலும் பிடிக்கப்பட்டு கோட்டில் வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். கோட்டுத் தண்டத்தினைக் கட்ட இயலாமல் சிறை சென்றவர்கள் அனேகம். கள்ளைக் காவிச்சென்ற சின்னஞ் சிறார்கள்கூட பொலிஸ் நிலையங்களிலுள்ள கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கள்ளைக் காவிச் செல்லும்பொழுது தற்செயலாகப் பொலிஸ் வந்தாலோ கள்ளுமுட்டியைப் போட்டு உடைத்துவிட்டு சீவல்தொழிலா­ளர்கள் ஓடுவார்கள். ஆனால் சாராயக் குதங்களோ அனுமதி வழங்கப்பட்டு சட்டபூர்வமாக மதுக்கடை வியாபாரத்தினை நடத்திக் கொண்டிருந்தன. கருப்பநீர்தயாரிப்­புக்காக சீவுவது மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. கருப்பனீர் சீவினால் ஒன்றைவிட்ட ஒருநாள் கருப்பனீரை பனைச் சொந்தக்காரான நிலக்கிழார்களுக்குக் கொடுக்கவேண்டும்.. கருப்பனீர் சீவுவதானது கருப்பனீரைக் கொண்டு வந்து காய்ச்சிப் பாணியாக்கிப் பனங்கட்டியாக்கி பனங்கட்­டியை சந்தையில் விற்றபின்னரே அவர்க­ளின் கையில் காசுவரும். அன்றுழைத்து அன்று வாயில்போடும் வறுமையில் வாடும் அந்த மக்களுக்கு கள்ளுச்சீவி விற்பதானது நாளாந்த உணவுக்கான ஜீவனமாகும்.
இந்தத் துன்பத்தை விளங்கிக் கொண்ட கந்யைh அவர்கள். அவர் பாராளுமன்றத்­தில் இந்தப் பிரச்சனையையும் அந்த மக்கள் படும் துயரத்தையும் எடுத்துச் சொல்லி நாலுபோத்தில் கள்ளினை வீட்டில் வைத்திருக்கலாம் என்பதனைச் சட்டபூர்வமாக்கினார்.

கந்தையா பாராளுமன்றத்தில் கொண்டு வந்த இந்தப் பிரச்சினை அடுத்த நாள் பத்திரிகைகளில் செய்தியாக வந்திருந்தது. அன்றிரவே உடுப்பிட்டிச் சந்தியிலுள்ள பிள்ளையார் கோவில் மதிலில் நளக்கந்தையாவே வருக! என்று சிவத்தபெயிண்டால் எழுதி அதற்குப் பக்கத்தில் அரிவாளும் சுத்தியலும் சின்னத்தைக் கீறியிருந்தார்கள் சாதிவெறித் தமிழர்கள். கந்தையா அவற்றைச் சட்டைசெய்பவரல்லர்.

ஒருநாளும் மற்றவர்களை ஓடுக்காத, ஒருநாளும் மற்றவர்களைச் சுரண்டாத, ஒருநாளும் மற்ற மக்களைக் கீழாகப் பார்க்காத அந்த மக்களின் பெயரால் அழைப்பதை அவர் ஒரு பெரிய கௌரமாகவே ஏற்றுக்கொண்டார்.

அதனோடு கந்தையா நிற்கவில்லை. அவர் பொலிகண்டியென்­னுமிடத்தில் கருபனீரிலிருந்து சீனிசெய்யும் தொழிற்சாலையை உருவாக்கினார். அதற்கான இயந்திரமானது அந்நாள் சோவியத்நாட்டிலிருந்து இறக்கப்பட்டதாகும். இது கந்தளாய் சீனித்தொழிற்சாலை ஏற்படமுன்னரே ஏற்படுத்தப்பட்­டதாகும்.

கந்தையா பாராளுமன்றம் சென்றவுடன் வடமராட்சிப் பகுதிக்கு ஒரு கிராமிய விவசாய ஆலோசகரை நியமித்தார். அவர் விவசாயிகளுக்கு உரம் பாவிப்பதையும் கிருமிநாசினிகளைப் பாவிப்பதையும் அறிமுகப்படுத்தினார். காண்டாவனம் போல் வெய்யில் கொழுத்தியெறியும் கெந்தக பூமியான யாழ்குடாநாட்டில் விவசாயிகள் பட்டை துலா மூலம் நீர் இறைத்தே விவசாயம் செய்தனர். நீர் இறைக்கும் இயந்திரங்களின் பிரயோகத்தையும் அதானல் கிணத்துநீருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்பதனையும் பெருத்த சிரமங்களுக்கு மத்தியில் வடபுலத்து விவசாயிகளுக்கு விளங்கப் படுத்தினார். முதன் முதலில் அந்நாளில் கொம்யூனிஸ்டாக இருந்து தன் பிள்ளைகளுக்கு லெனின் என்றும் ஸ்டாலின் என்றும் பெயர் வைத்த ஈஸ்வரலிங்கப் பெருமாள் என்பவரே முதலில் நீர் இறைக்கும் இயந்திரத்தை வாங்கிப் பாவித்தார். இரண்டொரு வருடங்களில் அனேக விவசாயிகள் நீர் இறைக்கும் இயந்திரங்களை வாங்கி உபயோகப்­படுத்தினர். அதனோடு அவர் நிற்கவில்லை. சந்தைப் படுத்துவதற்காக ஒரு வெங்காயச் சங்கத்தை ஏற்படுத்தினார். இந்த வெங்காயச் சங்கம் வெங்காயத்தைக் கொள்வனவு செய்து கொழும்புக்கு ஏற்றுமதி செய்தது. வடமராட்சி விவசாயிகள் பயிர்ச்செய்கைக் காலத்தில் செல்வந்தர்களிடம் வட்டிக்குக் காசைக் கடனாகப் பெற்று அறுவடைகாலத்தில் கடனை இறுப்பதானது விவசாயத்தின் மூலம் புதுக்காசைப் பழங்காசாக்குவ­தாகவே இருந்தது. இந்தச் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதற்காக வெங்காயச் சங்கத்தை பலநோக்குக் கூட்டுறவுச்சங்கமாக மாற்றி இந்தப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பயிர்ச்செய்கைக் காலங்களில் விவசாயி­களுக்கு விவசாய சிறுதெiகைக்கடனை வழங்கி அக்கடனை அறுவடைக்காலங்க­ளில் வெங்காயம், நெல் போன்ற அறுவ­டைப் பொருட்களை கொள்வனசெய்து கடனை மீளப் பெற்றுக்கொண்டது. கந்தையா பொருளாதாரத்தை இலண்டனில் படித்தது மாத்திரமல்ல தனது முதுமாண்­பரீட்சையின் ஆய்வுக் கட்டுரையாக கூட்டுறவு முறை பற்றி சமர்ப்பித்ததோடு பலமுறை சோவியத் நாட்டிற்குச் சென்று அந்நாள் சோவியத்நாட்டில் அங்கே நடைமுறையிலிருந்த கூட்டுறவு முறைகளைக் கற்று வந்து அதை வடமராட்சியில் பரீட்சித்தர்ர்.

கந்தையா கொழும்பில் இருக்கும் நாட்களெல்லாம் கொம்யூனிஸ்ட் கட்சியின் தோட்டத்தொழிலாளர்களின் தொழிற்சங்கமான யூபி.டபிளியூ வின் காரியாலயக் கட்டிடத்திலே தங்கிநின்று தொழிற்சங்கக் கணக்குவழக்குகளைக் கவனிப்பதோடு தொழிற்சங்கங்களைக் கட்டிவளர்ப்பதிலும் பெரும் பங்கு வகுத்தார். அவர் சோவியத்நாட்டுக்கு அழைத்துச்சென்ற பதின்னாங்கு தமிழர்களில் தோட்டத்தொழிலாளர் தொழிற்சங்கவாதியான நாவலப் பிட்டியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரும் ஒருவராவர்.

இந்தியக் கொம்யூனிஸ்டான ப.ஜீவனந்தம்,மலேசியாவிலிருந்து வந்திருந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த மலேசியக்கனகசிங்கம் போன்ற தோழர்கள் இலங்கைக்கு வந்து தலமறைவு வாழ்வு வாழ்ந்த காலங்களில் அவர்களை தொட்டத் தொழிலாளர்களின் இல்லங்களுக்கு அழைத்துச்சென்று தொழிற்சங்கங்களை மேலும் அணிவகுத்தார். பாராளுமன்றத்­திலே நெற்காணிச்சட்டம் வந்தபோது மிகுந்த குதூகலிப்போடு பேசி அதை ஆதரித்து வாக்களித்த ஒரேயொரு தமிழ் பாராளுமன்ற அங்கத்தவராவார். பாடசாலைகளைத் தேசியமயமாக்கும் விவாதத்தின் போது மேலும் உற்சாகத்தோடு ஆதரித்துப்பேசினார். அதை ஆதரித்து வாக்களித்த ஓரே தமிழர் அவராகும். அதை எதிர்த்து வாக்கழித்த திரு செல்வநாயகம் அடங்காலான குறுந்தமிழ்தேசிய பாராளுமன்றவாதிக­ளுக்கு எதிராக வடமாகாணம் முழுவதிலும் எண்ணற்ற கூட்டங்களை அணிவகுத்துப் பேசி அவர்களின் பிற்போக்குத்தனங்களை அம்பலப்படுத்தினார். பாடசாலைகள் தேசியமயமாவதால் திரு செல்வநாயகத்­திற்கோ தமிழ்மக்களுக்கோ என்ன நட்டம் ஏற்பட்டது என்ற கேள்வியை ஒவ்வொரு கூட்டங்களிலும் கேட்டார்.

மீண்டும் பஸ் கொம்பனிகளின் தேசியமயமாக்கல் போன்ற எல்லா முற்போக்கு நடவடிக்கைகளையும் ஆதரித்து வாக்களித்தார்.

கந்தையா மிகவும் துணிந்த மனிதர். அவர்பேசும் கூட்டங்களை எண்ணற்ற தடவை குறுந்தமிழ்த்தேசியவாதிகள் கல்லெறிந்து குழப்பியிருக்கிறார்கள். அவர் அணுவளவும் பின்வாங்கியது கிடையாது.

அவரை எவராலும் ஆத்திரமூட்ட முடியாது. கல்லெறி விழவிழ எந்தவித விகாரமும் இல்லாமல் நா தளதளக்காமல் தொடர்ந்து மேடையில் பேசிக்கொண்டேயி­ருப்­பார். அவர் பயிற்றியெடுத்த தோழர்களும் கூட்டத்திலே எந்த வித சலனமும் இல்லாமல் அமைதியாக இருப்பர். அவர் அடிவாங்கவும் திட்டல்வாங்கவும் தன்னை இழக்கவும் தயாரான மனிதர். அவர் ஏழைமக்களோடு சேர்ந்து ஒன்றாகக் கூழ்காய்ச்சி குடித்த சம்பவங்கள் அனேகம்.

அவர்கூலித்தொழலாளர்களோடு சேர்ந்து கைப்பந்து விளையாடின சம்பவங்கள் அனேகம். அவர் மக்களோடு மக்களாக தானும் வாழ்ந்த சம்பவங்கள் அதிகம். கந்தையா கிராமங்களுக்கு வரப்போகிறார் என்று ஒரு தடவை கன்பொல்லை கிராம கரப்பந்தாட்டக் குழுவுக்கும் தென்இலங்கையிலுள்ள கம்பகா கிராமத்து சிங்கள கரப்பந்தாட்டக் குழுவுக்கும் சிநேகபு+ர்வமான கரப்பந்தாட்டப் போட்டியினை ஏற்பாடு செய்து சிங்களத்தோழர்களை கன்பொல்லைக் கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தாராம். சிங்களத்தோழர்கள் தங்களது வேகமான சேவிஸால் முதல் சுற்றில் வென்றுவிட்­டார்களாம். அடுத்த சுற்றில் கன்பொல்லைக் கிராம கரப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த லிங்கம், சதாசிவம் என்ற இரண்டு வீரர்கள் அவர்களைப்போலவே வேகமான கம்பகா சேவிஸினைப்போட்டு வென்றார்களாம். இந்த கரப்பந்தாட்ட வீரர் சதாசிவம் அவர்கள் வாழும் காலத்தில் நானும் அவரைக் கண்டு கதைத்து பழகியிருக்­கின்றேன். அவாpன் வயதினை ஒத்தவர்கள் அவரை கம்பகா என்று அழைப்பதையும் என் செவி வழி கேட்டிருக்கின்றேன். ஆனால் அவரை கம்பகா என்று அழைப்பதற்கான காரணத்தினை இக்கட்டுரை எழுதுவதற்­கான தகவல்களை சேகரிக்கும்போதுதான் கேட்டறிந்துகொண்டேன்.

அக்காலத்தில் கந்தையா அவர்கள் பெயர் மாற்றும் இயக்கம் ஒன்றினை நடத்தி வந்தார். அதன் வழியில் முதலில் ஒடுக்கப்பட்ட கிராமங்களின் பெயர்களையும் இக்கிராமங்களில் அமைந்துள்ள கீழ்ப்படுத்தப்பட்ட தொனியில் அமைந்திருந்த வீதிகளின் பெயர்களையும் மாற்றினார் என்பதனை இக்கட்டுரையின் தொடக்கத்­திலேயே குறித்திருந்தேன். இதன் தொடர்ச்சியாகத்தான் கன்பொல்லைக் கிராமத்தில் மூத்தண்ண என இக்கிராமத்து மக்களால் அழைக்கப்படும் க.இராசரத்தினம் அதிபர் (யா.கரவெட்டி ஸ்ரீநாரதவித்தியாலய ஸ்தாபகர்) அவர்கள். கல்லோடை என்னும் இயற்பெயரை கனுவில் என்ற அரசபதிவுப்பெயரையும் கொண்ட சிறுபான்மைத்தமிழர்கள் வாழும் கிராமத்தினை சாதிவெறியர்கள் கல்லோலை என அழைத்து வந்தபோது 1966ம் தீண்டாமைக் கெதிரான போராட்டகாலத்தில் கன்பொல்லையென உத்தியோகபூர்வமாக மாற்றினார். க.இராசரத்தினம் அவர்கள் கந்தையாவின் பாசறையில் வளர்ந்து வந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏலவே கந்தையா அவர்கள் இக்கிராமத்தில் கந்தன்,பூதன் போன்ற பெயர்களையும் நாகன் என்ற பெயரைக் கொண்டவரை சிவபாதமெனவும் ஆழ்வான் என்ற பெயரைக் கொண்டவரை தவராசா எனவும் இப்படியாக சாதிய அடையாளத்தினைக் கொண்ட பலரின் பெயரை உத்தியோகபூர்­வமாக மாற்றிக் கொடுத்தார்.

கந்தைய அவர்கள் வந்து இறங்கிய­துதான் தாமதம் திடீரென்று தன்னிச்சையாக மக்கள் அவரைச் சூழ்ந்து விடுவார்கள். சன நெரிசலில் அவரால் நடக்க முடியாது போகவே அவரைத் தோழில்தூக்கிக்­கொண்டு போவார்கள். அவருக்காக மக்கள் தினைக்கொழுக்கட்டை பனங்காய்பணியாரம் குரக்கன்கழி போன்ற எண்ணற்ற உணவு வகைகளைச் சமைத்துக்கொணடு வருவார்கள். அவரது கலந்துரையாடல் கூட்டங்களுக்கு மனைவி மக்களையும் கூட்டிக்கொண்டுவருவார்கள். கந்தையா அவர்கள் சிதறி உதிரியாக இருந்த தொழிலாளர்களை ஒரு பெரிய காந்தம் கவர்வதுபோலக் கவர்ந்து கொம்யூனிசத்­தைச் சூழ அணிவகுத்தார். அவர் மேடைகளிலே மணிக்;கணக்காகப் பேசுவார்: அவர் ஒரே விடயத்தைப்பற்றி வெவ்வேறு மேடைகளிலே பேசும்போழுது ஒவ்வொன்றும் புதுமையான பேச்சு நடையாக இருக்கும். அந்தப் பேச்சானது நாளாந்த வாழ்வுப் பிரச்சனைகளுக்கும் அரசியலுக்கும் பாலம்போடுவதாக இருக்கும். அவர் தனிச்சிங்களச் சட்டம் வந்தபிறகும் அச்சட்டத்தினை எதிர்த்த போதும் சிங்களமக்களோடு ஐக்கியப் படவேண்டும் என்ற அரசியல் தேவையை உரக்கக் கத்திக் கூறிய மனிதராவார்.

அவர் காலனித்துவ நாடான இலங்­கையில் ஜனனாயகப் புரட்சியின் கடமைகளை சீர்திருத்தவாதம் மூலம் செய்யலாம் என்ற கொள்கையை உடையவர். இ;துவே அவரது பலவீன­மாகும். அவர் வெகுசன ஆதரவோடு கொம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினால் சோஷலிசநாடுகளின் உதவியோடு தொழிற்துறைகளைப்போட்டு முன்னேறிவிடலாம் என்ற எண்ணங்­கொண்டவர். உலகம் பரந்த கொள்கையான கொம்யூனிசத்தை மக்கள் கட்டாயம் பின்பற்றுவர்ர்கள் என்ற நம்பிக்கையில் அசையாத நம்பிக்கை கொண்டவர். அவர் மரணமான சிலநாட்களுக்குப் பிறகு அவரோடு கொம்யு+னிஸ்டாக இ;ருந்த வைத்திலிங்கம் என்ற தோழர்,

இவர் தொடர்ந்து கிராமசபைத்தேர்தலில் கொம்யூனிச வேட்பாளாரகத் தொடர்ந்து போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர். தானும் தற்கொலைசெய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யமுன்பு அரிவாழும் சுத்தியலும் நட்சத்திரச் சின்னத்தை சேட்டில் குத்தி போட்டோ எடுத்து விட்டு தான் மறுபிறவியில் சோவியத்நாட்டில் பிறப்பேன் என்ற மரணசாசனம் எழுதி வைத்துவிட்டு பொலிடோல் குடித்து இறந்துவிட்டார். அந்தப்போட்டோவும் அந்தப் படத்தையும் இப்பொழுதும் நாம் பார்வையிடலாம். காந்தையாவின் ஆளுமையையும் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் இதைப்போன்ற பல உதாரணங்களால் காட்ட முடியம். கந்தையா ஒரு உதாரணம். கந்தையா ஒரு சகாப்தம். அவர் உரைத்துப்பார்க்க முடியாத பொன்.

தொழிற்சாலைகளோ தொழிற்துறைப் பாட்டாளிகளோ தொழிற்சங்களோ இல்லாத பிரதேசத்தில் கொம்யூனிசத்திற்காகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டவர். காலனித்துவ நாடாக இலங்கை இருந்ததால் அங்கே தேச உருவாக்கம் நடைபெற­வில்லை. தொழிற்துறைப் புரட்சி தீர்க்க வேண்டிய எந்தக் கடமைகளும் நிறைவேறவில்லை. முதலாளித்துவமே வரலாற்றால் தேசிய எல்லைகளையும் தேசிய எல்லைகளால் கட்டுப்படுத்த முடியாத உற்பத்திச் சக்திகளையும் படைத்தது. தேசப் பற்றையும் தேசிய எல்லைகளையும் சிதறப்பண்ணுமளவுக்கு உற்பத்திச் சக்திகள் வளர்வதாலேயே கொம்யூனிசம் வரவிருந்தது. தேசம் கடந்த தேசிய எல்லைக்குள் கட்டுப்படாத கொம்யூனிசத்­திற்காக முன்முயற்சிசெய்த ஓர் உதாரணத் தலைவன் பொன் கந்தையா ஆகும். அவர் விட்டுச் சென்ற சம்பிரதாயங்கள் இன்னும் வெளிக்கொணரப் படவில்லை. வாழ்வின் ஈற்றின் கொடிய புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது இறுதிக் கணத்தில் தன் துணையாக வாழந்தவரையும் தனது கடசித்தோழர் சண்முகதாசன் அவர்களையும் சேர்ந்து வாழவேண்டுமென்று கேட்டுக்கொண்டவர். பொதுவுடமைக் கூறுகளில் குடும்பம் உதிரும் என்பதினை தன் இயல்பான வாழ்வில் எமக்கெல்லாம் காட்டிச்சென்றவர். அவரோடு போராட்டத்தில் வாழ்ந்த இன்னும் சிந்தனைத் திறன் பலவீனப்பட்டுப் போகாத டொமினிக் ஜீவா போன்றோரிடம் கந்தையாபற்றிய நினைவுகளை எழுதும்படி நாம் கேட்டுக்கொண்டால் நாம் எமது வரலாற்றுக் கடமையைச் செய்தவராவோம்.

இலங்கை அரசியல் பிரச்சினையில் கிழக்கு நிலையும், அதன் முக்கியத்துவமும்

பெளசர் இலங்கையுடன் தொடர்புபட்ட பல்வேறு விடயங்களைப்பற்றி கலந்துரையாடுவதற்கு நாம் கூடியுள்ளோம். இங்கு நான் கிழக்கு மாகாண விவகாரத்தை முக்கியத்துவப்படுத்தி எனது கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். கிழக்கு பிராந்திய விவகாரத்திற்கு இந்த அரங்கில் ஏன் அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன் என்பதை உரையின் ஊடாக தெளிவுபடுத்துவதே நோக்கமாகும். கிழக்கு மாகாணத்தை எப்படி பார்க்க வேண்டும், நீண்ட தொடர்ச்சியான இலங்கை தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் கிழக்கின் முக்கியத்துவம் என்ன, கிழக்குப் பிராந்தியத்தை முன்மாதிhpயாகக் கட்டியெழுப்புவதன் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வில் எந்த வகையில் முன்மாதிரியாக விளங்கலாம், கிழக்கில் உள்ள சமூக, பொருளாதார அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள், மூவினங்களுக்கிடையிலான உறவும் பரஸ்பர உரையாடலுக்குமான தளம் என்பன இங்கு முக்கியத்துவமாகிறது. இந்த விடயங்களில் உள்ள நம்பிக்கைகள், நம்பிக்கையீனங்கள், எதிர்காலத்தில் உடனடியாக செய்யப்பட வேண்டியவைகள் பற்றிய எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கிழக்குப் பிராந்தியத்தின் கடந்தகால, நிகழ்கால நிலைமைகள் உங்களில் கணிசமானோருக்கு நன்கு தெரிந்ததுதான் - ஆகவே அதுபற்றி நான் விபரிக்க விரும்பவில்லை. கிழக்கின் எதிர்காலம் தொடர்பானதும் அதன் அரசியல், சமூக நிலைகளின் இருப்பும் தொடர்பாக உள்ளூர் மட்டத்திலும், சர்வதேச ரிதியாகவும் பல்வேறு எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு, வடக்கிலிருந்து சுயாதீனமாக இருப்பது குறித்த சாதகமான பாதகமான அபிப்பிராயங்களும் கருத்துக் கூறல்களம் தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கிறது. தமிழர் அரசியலில் இதுவொரு முக்கியமான விவாதப் பொருளாகவும் உள்ளது. அத்துடன் இந்த விவாதத்திற்கு வெளியே, கிழக்கில் இன்று நடைபெறுகின்ற சம்பவங்கள் எழுப்புகின்ற சாதக, பாதக அம்சங்களும் நமக்கு முக்கியமாகி உள்ளன. கிழக்குப் பிராந்தியத்தில் அக ரீதியாக நிகழ்கின்ற பாதகமான அம்சங்கள் அதன் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடியதாக இருப்பின், அச்சூழ்நிலைகளை, அதற்கான காரணிகளை இனங்கண்டு மாற்றியமைப்­பதில் அதிக அக்கறை செலுத்தப்படல் வேண்டும். இவைபற்றி நியாயமான விமர்சனங்கள், மாற்றுக்குரல்கள் எழுப்பப்படல் வேண்டும். இதில் அரசாங்­கமோ, அங்குள்ள ஆயுதக்குழுக்களோ, தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளோ விதிவிலக்கானவர்கள் அல்ல. கடந்த 30 வருடத்திற்கு மேற்பட்ட இலங்கையின் சமூக அரசியல் நிலவரங்கள் இன முரண்பாடுகளாகவும், மேலாதிக்க அதிகாரத்துவமாகவும் அசமத்துவங்­களாகவும் உருவெடுத்து நிற்கிறது. தேசிய வாதத்தின் இனத்துவ மேலாதிக்கத்தின் அடியாக மேற் கிளம்பி நிற்கும் அரசியல் போக்கும் அதிகாரத்துவ செயற்பாடும் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையையோ சமாதானத்­தையோ வழங்கவில்லை. மாறாக அனுபவித்து நின்ற நிம்மதியையும் தொலைத்தவர்களாக, உயிரழிவு, உடமையழிவு, இடப்பெயர்வு, ஜனநாயக மறுப்பு, மனித குலம் வெட்கித் தலைகுனிய வேண்டிய மனித உhpமை மீறல்களையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஆகவே நாம் புதிய வழிமுறையில் புதிய அணுகுமுறையின் ஊடாக இந்தப் பிரச்சினையை அணுகுவதற்கு முயற்சிக்க வேண்டும். சிங்களத் தேசியவாத கருத்து நிலையின் ஊடாகவோ, தமிழ்த் தேசியவாத கருத்து நிலையின் ஊடாகவோ இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வும் காணமுடியாது, அமைதி சமாதானத்தையும் கொண்டுவர முடியாது என்பதே இலங்கையின் இதுவரையான அனுபவம். புதிய வழிமுறையில் முன்செல்ல பரிட்சார்த்தமான பிராந்தியமாக கிழக்கைக் கொள்ள முடியும் என்பதே எனது கருத்தாகும். இலங்கையின் இனச்சிக்கல், ஆயுதமோதல் முரண்பாடுகளுக்கு மத்தியில் தனியாக இயங்கத் தொடங்கியுள்ள கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் தொடர்பாகவும் அதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் புதிய பார்வைகளையும், ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் ஆரோக்கியமாக முன்வைப்பது முதலில் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். இதனை இராணுவ ரிதியாக எத்தரப்பும் எதிர்கொள்ள முயற்சிக்கக் கூடாது. கிழக்கு மாகாணம் பன்மைத்துவமான பிராந்தியம், மூவின மக்களும் அங்கு வாழ்வதோடு பல்கட்சி ஜனநாயகம் நிலவும் பிரதேசம். இனப்படுகொலைகளும் உள் இயக்கப் படுகொலைகளும் மோசமாக நடந்த, நடந்துகொண்டிருக்கும் மண், தமிழ் தேசிய வாத்தின் அடியாக மேற்கிழம்பிய தமிழ் முஸ்லிம் பிரச்சினையின் நிலக்களமாகவும் கிழக்குப் பிராந்தியம் உள்ளது. 2007 ஜனவரி 1ம் திகதி கிழக்கு மாகா­ணம் தனிப் பிராந்தியமாக பிரிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்­களை எட்டப் போகிறது. இக்காலத்திற்குள் அங்கு பல்வேறு மாற்றங்கள், புதிய நிலைமைகள், ஆரோக்கியமான போக்­குகள், ஆரோக்­கியமற்ற செயற்பாடுகள் நடந்துள்ளன. கிழக்குப் பிராந்தியம் தற்போது அரசியலமைப்பு ரிதியாக தனியான பிராந்தியம், யாழ் அதிகாரத்து மேன்நிலைக்குள் அது இல்லை. அண்மைய நிகழ்வுகளை மதிப்பிடுகின்ற போது எதிர்காலத்தில் வடமாகாணத்துடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றுதான் நான் கருதுகிறேன். இதற்கான பல்வேறு காரணங்கள் உங்களுக்கும் தெரியும். சமகால யதார்த்தத்தின் அடியே கிழக்கை வடக்குடன் இணைத்துப் பார்ப்பது சாத்தியமானதாகத் தெரியவில்லை. கிழக்கைப் பற்றி தனியாக யோசிக்க வேண்டியுள்ளது. இன்று இந்த விடயத்தில் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்திலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவர பணியாற்றுவோரும் ஆக்கபூர்வமான எதிர்காலத்தை எப்படி உருவாக்கலாம் என்பதில் அக்கறை கொண்டோரும் தவிர்க்கவியலாமல் கிழக்குப் பிராந்திய விவகாரத்தில் அதிக கவனக் குவிப்பை செய்ய வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தை - இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, சமமான வாய்ப்பு, சமத்துவ உரிமைகள், உத்தரவாதப்படுத்தப்படும் பிராந்தியமாக கட்டியெழுப்புவதன் மூலம் இலங்கை மக்க­ளுக்கும் சர்வதேசத்துக்கும் நம்பிக்கைய­ளிக்கக் கூடிய பூமியாக, தேசிய இனப்பிரச்­சினைத் தீர்வுக்கு சாத்தியமான பதிலை வழங்கக் கூடிய பிராந்தியமாக கொள்ள முடியும். இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. அரசுக்கே இதில் அதிக பொறுப்புள்ளது. இதில் பிரதானமானது பொதுமக்களின் பாதுகாப்பையும் அவர்களின் வாழ்வுhpமையையும், காப்பதும் அதிகாரப் பகிர்வை அர்த்தபூர்வமாக உறுதிப்படுத்துவதுடன் கிழக்கில் அரசியல் நோக்கத்துடன் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துவதுமாகும். தமி;ழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் இதில் அதிக பொறுப்புள்ளதுடன் சிவில் சமூகம் அதிகம் பங்களிக்க வேண்டியுள்ளது. கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலைமை என்ன? எதிர்காலத்தில் கிழக்கில் அமைதியையும் சமூக சமத்துவத்தையும் உருவாக்குவதற்கு செய்ய வேண்டியுள்ள பணிகள் என்ன என்பது குறித்து பேசப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டும். இது முக்கியமானது என வலியுறுத்த விரும்புகிறேன். இலங்கையின் சமூக அரசியல் வரலாறானது மனிதா;களிடையேயும் அங்கு வாழ்கின்ற சமூகங்களிடையேயும் மோசமான கசப்புணர்வுகளையும் முரண்பாடுகளையும் வளர்த்துவிட்டுள்ளது. இலங்கைக்குள் நிலவுகின்ற இந்த இன, மத, மொழி வேறுபாடுகள் நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களிலும் ஏதோவொரு வகையில் அகமாகவும் புறமாகவும் தொழிற்பட்டே வருகிறது. அதிகாரப்போட்டியும் இன மேலாதிக்கமும் வளப்பங்கீடு தொடர்பான அதிருப்திகளும் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. இலங்கை சமூக அரசியலின் பிரதிபலிப்பான இனங்களுக்கிடையேயான கசப்புகளும் முரண்பாடுகளும் கிழக்கில் உள்ளன. கிழக்கு மாகாண மக்கள் நீண்ட காலமாய் தமது அடிப்படை உரிமைகளை இழந்து நிற்கின்றனர். 25 வருடத்திற்கு மேலான தொடர்ச்சியான போரின் கொடூரம் கிழக்கை பாரிய அளவில் பாதித்துள்ளது. கிழக்கு தனிப்பிராந்தியமானதன் பின்னும், அங்கு மாகாண நிர்வாகம் ஏற்பட்டதன் பின்னும் மனித உரிமைகள் மீறப்படுகின்­றன, துப்பாக்கிகளின் அதிகாரமும் கொலைகளும் தொடர்கின்றன, அதே­வேளை ஆயுதவழி நின்றோர் ஜனநாயக வழியில் பயணிப்பதற்கான முயற்சிகளும் செயற்பாடுகளும் அழுத்தங்களும் உள்ளன. கிழக்கு மக்களின் இன்றைய நிலை ஜனநாயகம், மனித உரிமைகளுடன் கூடிய வாழ் உரிமையுடன் தொடர்புபட்ட விடயமாகவுள்ளதுடன் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையுடன் நேரடியாக தொடர்புபட்டும் உள்ளது. கிழக்குப் பிராந்தியத்தை நாம் தனித்த அரசியல், நிர்வாக புவியியல் பிரதேசமாகக் கொள்கிறோம் என்றால், அங்கு வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் உணர்வுக­ளுக்கு மதிப்பளித்தாக வேண்டியுள்ளது. அம்மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்­படுவதுடன் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்படுவதும் வேண்டும். உண்மையில் அன்றிலிருந்து (1987 இலங்கை இந்திய ஒப்பந்தம்) வடக்கு கிழக்கு பிரிக்கப்படல் வேண்டும் என்பதே மாறி மாறி பதவிக்கு வந்த அரசுத் தலைமைகளின் விருப்பமாக இருந்துள்ளது. தமிழ் தேசிய வாதத்துக்குள் நிலவிவருகின்ற யாழ் மேலாதிக்கம் காரணமாகவும் விடுதலைப் புலிகளுக்குள் நிகழ்ந்த பாரிய உடைவின் காரணமாகவும் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினை காரணமாகவும் கிழக்கு தனிப்பிராந்திய­மாகிவிட்டதே உண்மை. தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் வலியுறுத்துகின்ற வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட தமிழ் ஈழத்திற்குள் அல்லது ஏனைய தமிழ் அரசியல் தலைமைகள் வலியுறுத்துகின்ற சமஸ்டி பிராந்தியத்துக்குள் கிழக்கு முஸ்லிம்கள் தாம் உள்ளடக்கப்படுவதற்கான எதிர்ப்பினை 1990க்குப் பின் மிகத் தீவிரமாக வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். வடக்கு கிழக்கின் அதிகாரம் விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்படுவதானது முஸ்லிம் மக்களை மோசமாக ஒடுக்குவதற்கும் இனச் சுத்திக­ரிப்பு செய்வதற்கும் வாய்ப்பான சூழலை வழங்கும் என முஸ்லிம்கள் நம்பினர். கடந்த காலத்தில் முஸ்லிம்கள் தொடார்பில் விடுதலைப்புலிகள் நடந்துகொண்ட முறையானது இந்த நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்பிற்கும் எதிர்ப்பிக்கும் வலுவான ஆதாரங்களாக உள்ளன. இந்த நிலையின் காரணமாக கிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனைத்தும் கிழக்கு மாகாணத்தின் தென்கிழக்குப் பிரதேசத்தை மையப்படுத்தி முஸ்லிம் பெரும்பான்மை மாகாண அதிகாரத்தைக் கோரி வந்துள்ளன. சிங்களத் தேசியவாதம் தமிழ் தேசியவாதத்தை உற்பத்திவித்தது போன்று, 1990க்குப் பின் கிழக்கில் தமிழ் தேசியவாதம் முஸ்லிம் தேசியவாத கருத்து நிலையை ஏற்படுத்தி இருந்தது இங்கு கவனிக்கத்தக்கது. தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் சிங்கள தமிழ் இன விவகாரம் மட்டுமன்றி, முஸ்லிம் இன விவகாரமும் உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரம் கிழக்குப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை முதன்மையானதும் பிரதானமானதுமாகும் - கிழக்கு மாகாணம் தனித்து இயங்கத் தொடங்கியதன் பின், முஸ்லிம்கள் தங்களுக்கான தனி மாகாண அதிகாரம் தொடர்பான நிலைப்பாட்டின் குரலை அதிகம் வலியுறுத்தவில்லை என்பது இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டிய அம்ச­மாகும். கிழக்கில் தமிழ் மேலாதிக்கமோ, அல்லது முஸ்லிம் மேலாதிக்கமோ துரதிருஸ்டவசமாக ஏற்படின், இரு இனங்களின் நிலைப்பாட்டிலும் மாற்றமான கோரிக்கைகள் எழும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. கிழக்கு மாகாணத்தில் நிலைமைகளில் மாற்றங்க­ளைக் கொணர்வதற்கு ஏலவே நாம் கூறியதுபோல் அரசாங்கம் தொடக்கம் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்­புகள் ஆற்றவேண்டிய பணிகள் அதிகம் உள்ளன. இதிலுள்ள பல்வேறு பணிகளின் வலியுறுத்தல்கள் கிழக்கு மாகாணத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கும் பொருந்தக் கூடியதே.
அரசாங்கத்துக்கு முன்னுள்ள முக்கிய பணிகள்
முதலில் இலங்கை அரசானது பௌத்த பேரினவாத சிந்தனையிலிருந்து தன்னை விலக்கி, பல்லினங்களின் அரசாக மீள் உருவாக்கம் கொள்தல் அவசிய­மானதாகும். அரசின் நிர்வாக அரசியல் கட்டமைப்புகள் பல்லினங்களின் நலனை பிரதானப்படுத்தியே செயற்படுத்தப்படல் வேண்டும். மகிந்த ராஜபக்ஷவின் அரசானது இதுவரையில்லாத, முன்மாதிரியே காட்ட முடியாத பௌத்த சிங்கள மேலாதிக்க உணர்வை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றது. அண்மையில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, 'இலங்கை சிங்களவருக்குச் சொந்தம்” என கருத்து வெளியிட்டதும் அதனை ஆமோதிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவை சகா சம்பிக்க ரணவாக்க, 'இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் வந்தேறு குடிகள் என்றும் இராணுவத்தளபதி கூறிய கருத்து சரியா­னது என்றும் சிறுபான்மை மக்களை பிரதிநி­தித்­துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தேசத் துரோகிகள்” எனவும் வர்ணித்தது மிகவும் கண்டிக்­கத்­தக்கது. இக்கூற்றுகள் மிக வெளிப்படையாகவே அரசின் கொள்கை நிலைப்பாட்டை ஏதோவொரு வகையில் பிரதிபலிப்பதுதான். ஏனெனில் இதுவரை இவர்கள் இருவாpன் கருத்தையும் மறுத்துரைக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எவ்வித கருத்தையும் கூறாமல் இருப்பது அரசுத்தலைவரின் பொறுப்பற்ற, இனவாத சார்பு நிலைப்பட்ட தன்மையைக் காட்டுகின்றது. கடந்த காலத்தைப்போன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் சனத்தொகையில் பெரும்பான்மையைக் குறைக்க சிங்களக் குடியேற்றங்களை கிழக்கில் திட்டமிட்டு நடாத்தியது போன்று, மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கும் தெளிவான சிங்களக் குடியேற்றத்திற்கான நிகழ்ச்சி நிரல் உள்ளது. இதற்கான திட்டமி­டல்கள் ஆரம்ப செயற்பாடுகள் கிழக்கில் தொடங்கப்பட்டுள்ளன. இப்ப­டியான குடியேற்­றங்கள் செய்யப்படுவதை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். அரசாங்கம், கிழக்குப் பிராந்தியத்­துக்கான அதிகாரப்பகிர்வை பூரணமாக நிறைவேற்ற வேண்டும். 13வது திருத்தத்­தின் அடிப்படையில்தான் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. நடைமுறை அனுபவத்தில் 13வது திருத்தம் பெருமளவு போதாமைகளையும் குறைபாடுகளையும் கொண்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு காரணமான ஆழமான குறைபாடுகளை அகற்றுவதற்கான வலுவான உள்ளடக்­கத்தை இத்திருத்தம் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் காண்கிறோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்­கிடையி­லான அதிகாரப் பகிர்வு என்பது 13வது திருத்தத்திற்கு மேலாக செய்யப்பட வேண்டியதொன்று. நாட்டின் ஏனைய 07 மாகாணங்களின் பிரச்சினையை விட, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரச்சினை வேறுபட்டதும், இதற்குத் தீர்வாக ஆழமானதும் உறுதியானதுமான அரசியல் சமத்துவத் தீர்வை வேண்டி நிற்பதுமாகும். தற்போதைய கிழக்கின் அரசியல் தலைமைகளும் கூட, மாகாணசபையை செயற்படுத்துவதில் மத்திய அரசின் தலையீட்டை அனைத்து விடயங்களிலும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஒரு கையால் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ள இந்த ஏற்பாடு, மறுகையால் அவ்வதிகாரங்களை மத்திய அரசு கையகப்படுத்தி கட்டுப்படுத்துகிறது. 13வது திருத்தத்திலுள்ள 3வது நிரல் (Concurrent list) மறு எழுத்தாக்கம் செய்யப்படுவது அவசியமானதாகும். இலங்கை, இந்தியா தவிர உலகின் வேறு எந்த நாட்டிலும் இப்படியானதொரு 3வது நிரல் இல்லையென அரசியலமைப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அரசால் கூட்டப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவி­னால் முன் வைக்கப்பட்ட, வெறுமனே 2 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஏமாற்றத்தை தரும் ஒரு ஆவணமாகவே உள்ளது. இன்னுமொரு உதாரணமும் இங்கு முக்கியமானது. வடக்கு கிழக்கு மாகாணங்­கள் உட்பட இலங்கை முழுவதிலும் தமிழும் அரச கரும மொழி என்பது இன்னமும் அமுலுக்கு வரவில்லை, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில்கூட, மொழிகள் தொடர்பான அரசியலமைப்பின் 4வது அத்தியாயத்தை முழுமையாக அமுல்படுத்த பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அரசாங்கம் முன்வரவேண்டுமென கேட்கப்பட்டது மிகவும் துரதிருஷ்ட வசமானது. அரசியலமைப்பில் உள்ள தமிழ் மொழியும் அரச கருமமொழி என்பதை அமுல்படுத்த ஏன் இந்த தயக்கம்? பாராளு­மன்றத்தில் ஏன் இதற்கு தீர்மானம் நிறைவேற்­றப்படல் வேண்டும்? கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்­களிலும் பொலிஸ் நிலையங்களில் இன்றும் சிங்களமே கருமமொழியாகவுள்ளது. அதேபோல் திருக்கோணமலை, அம்பாறை மாவட்டங்களின் செயலகங்களில் (கச்சேரி) இன்றும் சிங்களமே கரும மொழியாக­வுள்ளது. அதிகாரப் பரவலாக்கத்தின் முக்கிய குறைபாடுகள் தீர்க்கப்படல் வேண்டும். கிழக்கு மாகாணசபை சுயாதீனமாக செயற்படுவதற்கான அதிகாரங்கள் நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்படுவது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசியல் பேச்சுவார்த்தை மார்க்கத்தில் கண்டடையலாம் என்பதில் நம்பிக்கையை வளர்ப்பதுடன் அதிகாரப் பகிர்ந்தளிப்பில் முன்மாதிரியான பிராந்தியமாகவும் முன்னிலைப்படுத்த முடியும் என்பது கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். கிழக்கு மாகாணத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் மக்களின் ஜனநாயக, வாழ்வுரிமைகளை பாதுகாப்பதற்கும் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு ஆயுதப்பிரயோகம், அதன் ஆதிக்கம் நிறுத்தப்படல் வேண்டும். கிழக்கு மக்களின் பிரச்சினையில் முக்கிய அக முரண்பாடாக உள்ள தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான முரண்பாடுகள் எப்படி மாற்றம் கொள்கிறது, எவ்வகையான வடிவங்களை எடுக்கிறது, அதன் விளைவுகள், இன்றைய போக்குகள் குறித்து நாம் விரிவாகவே பார்க்க வேண்டும். அதற்கான கால அவகாசம் இப்போது இல்லை. சுருக்கமாக இந்த இடத்தில் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அம்சமாக, கிழக்கில் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டிற்கு வழி ஏற்படுத்தும் காரணியாக வளப்பிரச்சினை உள்ளது. குறிப்பாக நிலம் (விவசாய, குடியிருப்பு, வர்த்தக நிலையங்கள்) தொடர்பான போட்டியே பிரதான காரணமாக விளங்கி வருகிறது. அத்துடன் கல்வி, பொதுத்து­றைகள், அரச தொழில் வாய்ப்புகளில் உள்ள பங்கீடு. இந்த முரண்பாட்டு நிலையை, அங்குள்ள ஆயுதக்குழுக்களும், தழிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை விரும்பாத சக்திகளும் காலத்திற்கு காலம் பயன்படுத்தி வருகிறது. கிழக்கு மாகாணத்தை முன்னிலைப்­படுத்தி தமிழ் முஸ்லிம் மக்களுடைய வாழ்வில் சமத்துவமும் ஐக்கியமும் பஸ்பர உறவையும் மீளக்கட்டியெழுப்புவதற்கான பணியை முன்மாதிரியாகக்கொண்டு செயற்படவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். யதார்த்தத்தில் கிழக்கு மாகாணம் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கான அரசியல் தீர்வையும் சமூக இனபண்பாட்டுபொருளாதார உறவுகளை கட்டியெழுப்புவதற்கான மிகச் சிறந்த பரிட்சார்த்த களமாகும். இந்தப் பணியைச் செய்வதில் அரசாங்கத்தினாலோ அங்குள்ள பெரும்பாலான அரசியல் தலைமைகளி­னாலோ முடியாமல் போய்விட்டுள்ளது. இதனை சாத்தியப்படுத்துவதற்கு நமக்கு புதிய சிந்தனை செயற்திட்டங்கள் அவசியமாகியுள்ளது. முடிவாக இலங்கையில் இனங்களுக்­கிடையே ஒருங்கிணைந்த வாழ்வையும் பல்லின சமூகங்களுக்கும் பொருத்தமான அதிகாரங்களை வழங்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி தனித்துவங்கள் ஏற்கவைக்கப்படுவது நம் அனைவருக்கும் முன்னுள்ள சவாலாகும். இவைகள் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல பெரும் மானிடப் பிரச்சினையு­மாகும். அறம் சார்ந்த துயரங்களுமாகும்.

பாலியலின் அரசியல் பொருளாதாரம்

கல்பனா அறிமுகம்: நமது சமகால பெண் விடுதலை இயக்கங்களில் நிலவுகின்ற பாலியல் வகை மாதிரிப் பாத்திரங்கள் பாலியல் வன்முறை, தொல்லைகள், நிறுவனமயமாக்கப்பட்ட தாய்மை, வீட்டு வேலைமுறையிலும் உழைப்புச் சந்தையிலும் பெண்களின் நிலை இன்னும் பல விடயங்கள் குறித்தும் அக்கறையோடு அலசுகின்ற ஏராளமான எழுத்துக்களைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சனைகள் பலவும் ஒரு வரலாற்றுக் கட்டத்திற்குள் வைத்து ஆராயப்பட்டிருக்கிறது. பெண்ணிய ஆய்வுகள் இத்தகைய பிரச்சனைகளை நோக்கும் முறையையே மாற்றியமைத்திருக்கிறது. இந்தக் கட்டுரை தற்போது நடைமுறையில் உள்ள பாலியல் வழக்கங்கள், அவற்றின் சமூகப் புலம் குறித்து அலசி ஆராய்ந்து விளக்கிறது. கார்ல்மார்க்சின் மதிப்பு விதி குறித்த கோட்பாட்டை ஒத்தமுறையில் ஓரினச் சேர்க்கை மற்றும் ஆண்-பெண் சேர்க்கை பால் உறவுகள் ஆராயப்படுகிறது. ஆண்-பெண் சேர்க்கை உறவுகள் பெண்களின் பாலியல் இன்ப நுகர்வு நிறைவெய்வதைப் பொருட்படுத்தாது, ஆண்களின் இன்ப நுகர்ச்சியை திருப்தி செய்யும் வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு கட்டுரை வருகின்றது. இதற்கு மாறாக, ஓரினச் சேர்க்கையாளரின் பாலுறவு இயக்கங்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் இருவருக்குமே நிறைவு தருவதாக இருப்பது தெரிய வருகிறது. ஆதிக்கம், அதிகாரம், ஏற்றத் தாழ்வுகள் அற்ற ஒரு பாலியல் அமைப்பைக் கட்டமைக்க வேண்டுமென்றால் நிலவுகின்ற ஆண்-பெண் சேர்க்கை உறவுகளின் கட்டமைப்புகளிலிருந்து விலகி புணர்ச்சியை பாலியல் நடவடிக்கையின் மையமாக வரையறுக்காத ஒரு பாலியல் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும், கட்டமைக்கப்பட வேண்டும். இன்னும் சொல்லப் போனால் Ann Kodrs (1971) “The myth of the viginal orgasm” மற்றும் Shese hires the hires report (1976) குறித்த தவறிய நம்பிக்கை என்ற புத்தகமும் அறிக்கையும் பெண்பாலுறவு பற்றிய முக்கிய இரண்டு ஆய்வேடுகளாய் நாம் கருத்தில் கொள்ளலாம். ஏனெனில் இவ்விரண்டுமே பெண்பாலுறவு என்ற ஒன்றை அரசியலோடு பின்னிப் பிணைத்த மனித உயிரியல் தொடர்பான ஒரு கூட்டுக் கலவையாக பாவிக்கின்றன. சொந்த ”அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்” நிலையில் இருந்து முன்னேறி ஆண்கள் எப்படி பாலுறவு என்ற அமைப்பை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். குறிப்பாக சொல்லப் போனால் ஷெய்ட் பல உதாரணங்கள் மூலம் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் பாலுறவு முறையில் ஆணுடைய திருப்தியே மேலானதாக கருதப்படுகிறது என்பதை ஹெய்ட் தன்னுடைய அறிக்கையில் விளக்குகிறார். பாலுறவு முறைகளே சமுதாயத்தில் உருவாக்கப்படும் கட்சியமைப்புகள் என்று கூறும் ஹெய்ட்டினுடைய தெளிவான பார்வையே அவருடைய ஆய்விற்கு ஒரு இன்றியமையாத சிறப்பை வழங்குகிறது. அவருடைய புத்தக தரவானது நன்முறையிலான பாலியல் செயற்பாடுகளை தெளிவாக விவாதிப்பதோடு திருமணம் ஆக்கப்படாத பாலுறவு முறையே அமைவதையே நோக்கமாக கொண்டு பிரயோகித்த போல ஆண்வழி சார்ந்த சமூகத்தின் பாதிப்போடு கூடிய நாம் பாலுறவு முறையே விரும்புவதற்கு முறையான ஒரு பாலுறவு தொடர்பான மேலும் ஒரு ஆய்வை வழங்குவதும் மறைக்கப்படும். அல்லது வெளியில் பேசப்படாத சில பாலியல் நுனுக்கங்களை வெளியே கொண்டு வருவதும் என்னுடைய நோக்கமாகும். என்னுடய இந்த முறையை இருபாலுறவின் 'சரிசம இன்பம்” என்று கருதப்படும் ஒன்றைப்பற்றி நன்றாக ஆராய்வதன் மூலம் இருபாலினரிடையே இருக்கும் சமத்துவமற்ற தன்மையை திரைவிலக்கி காட்ட விரும்புகிறேன். சல்லாபமுறை ஆண்-பெண் உறவை மட்டுமே பிரத்தியகப்படுத்தி சாட்டுப் போக்கையும் ஆண்-பெண் சேர்க்கையில் பெண் அடையும் இன்பம் இரண்டாம் தரமாக கருதப்படும் நிலையையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்ற கோட்பாடாக பரப்பி பழக்கப்படுத்தி வந்திருக்கிறது. அதாவது ஆண்-பெண் சேர்க்கைதான் பாலுறவு முறை என்பது போலவும் அதில் மிகுதியான அன்பு இன்பம் தயக்கப்­படுவதாலும் அதுவும் ஈடுபாட்டின் இருபாலருக்குமே சமபங்கு திருப்தி கிடைப்பதாகவும் சல்லாபக் கோட்பாட்டின் படி நம்பப்படுகிறது. எனினும் இப்படிப்பட்ட பிரகடனங்கள் இருந்தாலும் உண்மையில் ஆண்-பெண் உறவென்பது சமத்துவமற்ற ஆற்றலுடன் கூடிய உறவாகவும் ஆண்களுக்கு மட்டுமே பாலுறவில் பெருமளவு இன்பம் வழங்கக் கூடிய முறையாகவும் திகழ்கிற அரங்கத்தை ஒத்ததாக இருக்கிறது. உறவு பிணைப்பின் மூலம் ஆண்களுக்கு மட்டுமே பெருமளவு பாலின்ப பங்கை ஒதுக்கின்ற சூழலோடு பாலுறவில் பெண்கள் பொருளாதார ரிதியில் ஆண்களை சார்ந்த நிலையின் தாக்கம், ஆண்களின் வன்முறை, காழ்புணர்ச்சியோடு ஓரினச்சேர்க்கையா­ளரை பழிவாங்கும் சமூகப் போக்கு, இப்படிப் பழிவாங்குவதன் மூலம் சமமற்ற அண்-பெண் சேர்க்கை முறையை சமூகம் பாதுகாத்து வளர்க்கும் விதம் என்ன விற்றை எல்லாம் வியக்க இருக்கிறேன். இந்த சூழ்நிலையில் பின்னணியில் ஓரினச் சேர்க்கை பற்றியும் பார்க்கலாம். அவ்வுறவு முறைகளைப் பற்றி ஆராயலாம். ஓரின சேர்க்கை உறவு முறையின் படி இப்பாலுறவு முறையில் ஈடுபடும் அடுத்தவரை தங்களுடைய சக சமுதாய உறுப்பினராகவே பார்க்கும் மனோபாவத்­தோடு பாலுறவு இன்பம் சம அளவில் நுகரப்படுவதாக தெரிகிறது. இதுவே இக் கட்டுரையின் மையக் கருத்தாகும். இருப்பினும் இத்தகைய ஓரின உறவு பழக்கத்தை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்­தும் நோக்கத்தில் அப்படிப்பட்ட உறவில் ஈடுபடுவோர் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூலமாக ஒடுக்கப்படுகிறார்கள். எனவே தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் சுதந்திரத்தைப் பரப்பும் இயக்கத்தின் இன்றியமையாமையையும் இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு எல்லா பெண்களுக்குமே (ஓரின அல்லது ”நேரான” உறவுப்பழக்கமுள்ள­வராக இருந்தாலும்) தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை தெரிவாக்க விரும்புகின்றேன். இறுதியாக பாலுறவு முறை சீர்திருத்தப்பட்டு ஒரு புதிய உறவு முறை மலர வழிவகுக்கும். சமூக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை முன்மொழிய இருக்கின்றேன். இந்தக் கட்டுரை எப்படி ஆண் சார்ந்த சமூக உறவுமுறையை உருவாக்கியிருக்ககூடும் என்ற கேள்வியைப் பற்றி ஆராய்ந்து எடுக்கும் நோக்கம் அல்ல. இந்த ஆண் ஆதிக்க உறவுமுறைக்கு வழிவகுத்திடும் கருத்துக்களை நம்மால் யூகிக்கத்தான் முடியும். பெண்களை ஒடுக்கும் சூழலின் போக்கை குறித்தும் சமத்துவமற்ற நிலை என்பது ஆண்களின் அதிகார மிரட்டலா அல்லது பெண்களின் பொருளாதாரப் பலவீனத்தாலா என்பவற்றைக் குறித்தெல்லாம் அடிக்கடி பெண்ணிய வாதிகளுக்கு இடையே விவாதங்கள் நடந்து வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஆய்வுகள் பாலியல் இயல்பையும் பெண்ணிய வாதிகளையும் பற்றி நன்கு விளங்கிக் கொள்ள உதவுகிற அதேவேளையும் தற்கால சமூக யதார்த்த நிலையை மையமாகக் கொண்ட ஒரு அலசல் தேவைப்படுகிறது. இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமே அப்படிப்பட்ட தற்கால பாலியல் நடைமுறை மற்றும் அதனுடைய சமுதாய பின்னணி போன்றவற்றைக் குறித்து விவாதிப்பதுதான். எப்படி ஆணை மையப்படுத்துகிற ஈரினச் சேர்க்கை ஆணுக்கு எந்த முக்கியத்துவம் கொடுக்கிறது அதை சமுதாயம் எந்த அளவிற்கு பின்பற்றுகிறது என்பதை எல்லாம் வெறுப்புதன் தோன்றுகிறது. இந்நிலைமையின் அடிப்படையை அலசுவது இக்கட்டுரைக்கு அப்பாற்பட்டதாகும். ஈரின உறவு முறைகள்:- Shere hite (1976) சியர் ஹெய்ட்டின் அறிக்கையில் பெண் பாலுறவு குறித்த தேசிய அளவிலான கருத்தாய்வின்படி கணக்கில் எடுக்கப்பட்ட பெண்களில் 82 சத வீதத்தினர் தாம் சுய இன்பம் அனுபவிப்பதாகவும் அவர்களே 95 சதவீதம் பாலுறவு பரவச நிலையை சுலபமாக அடிக்கடி அனுபவிக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்கள். இன்னும் சொல்லப் போனால் ஹெய்ட்டின் கண்டுபிடிப்பின்படி பாலுறவு பரவச நிலையையும் சுய இன்பத்தையும் ஒன்றாகவே பெண்கள் கருதுகிறார்கள். சுய இன்பத்தின் பொழுது பெண்கள் பரவச நிலையை அடைகிறார்கள் என்ற உண்மை பெண்கள் பாலுறவில் உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்­தாதவர்கள் என்றும் பெண்கள் பரவச நிலையை ஆற்றல் அற்றவர்கள் என்றும் நம்பப்படும் தவறான வாதத்தை இருக்கிறது. இந்த நம்பிக்கை கூற்றோடும், யூகத்தோடும் தொடங்கி மேலும் ஹெய்ட் இருபால் உறவுமுறை கூறுகளான ( Fore play Peneteration ) செயல்பாடுகள் பெண்களுக்கு எதிராகவே இருந்து வருகின்றது என்று விளக்குகிறார். ஹெய்ட்டின் அய்வின்படி 30 சாவீதப் பெண்கள் மட்டும் தான் பாலுறவு பரவச நிலையை ஆண், பெண் புணர்ச்சியின் பொழுது அடைவதாக கூறியுள்ளார்கள். அத்தோடு அப்பரவச நிலை என்பது வழக்கமாக பெரும்பாலும் பெண்ணின் கணக்கின் முயற்சிகளின் மகளிர்சத்தை தூண்ட எடுத்துக் கொள்ளப்படும் பெண்ணின் கணக்கிட்ட ஒரு துல்லியமான முயற்சியின் விளைவாகத்தான் பெண்கள் பரவச நிலை எட்ட முடிகிறது. அதிலும் குறிப்பாக இந்த தூண்டல் ஆணினுடைய பொது உறுப்பால் தூண்டப்படுவதால் மட்டுமே வழக்கமாக அடைய முடிகிறது. புணர்ச்சியின் போது ஆண் பிறப்பு உறுப்பு உள்ளே செலுத்தப்படுவதால் மட்டுமே மறைமுகமாக ஏற்படுத்தப்படும் தூண்டல் பெண்களுக்கு பரவச நிலையை உண்டாக்குவதற்கு போதுமானதாக இல்லை. (ர்வைந 1976 - 168) அதே சமயம் புணர்ச்சி ஆண்களின் பால் இன்பத்தை நல்ல முறையில் அணுகுகிறது. புணர்ச்சியின் போது ஆண் உறுப்பு பெண் மர்ம உறுப்பு சுவர்களின் உராயச் செய்வதன் மூலம் சுய இன்பத்தின் போது பெறப்படும் தூண்டல் உறுதி செய்யப்படுகிறது. எனவே வழக்கமாக ஆண்கள் புணர்ச்சியின் போது பரவச நிலையை அடைவார்கள். இது ஆண்களின் உடல் சார்ந்த உயிரியல் அமைப்பிற்கு உகந்ததாய் இருக்கிறது. இப்படி செய்வதால் எல்லா ஆண்களும் எப்பொழுதும் புணர்ச்சியின் பொழுது பரவச நிலையை அடைகிறார்கள் என்று பொருளாகாது. எடுத்துக் காட்டாக ஆண்கள் தம்முடைய விரைப்புத் தன்மையை புணர்ச்சியின் போது இழக்கலாம். இருந்தாலும் ஆண்களிடையே இந்த பாலுறவில் செயலாற்றும் திறனில் ஏற்படும் கோளாறும் சமுதாயத்தில் அதிகரிக்கப்பட்டு நிறுவனமாக்கப்பட்டுள்ள காலம் காலமாய் பின்பற்றப்பட்டு வருகின்ற பாலியல் முறையின் ஏற்றத் தாழ்வான நிலையால் ஏற்படுவதில்லை. அண்களுடைய பாலியல் பிரச்சனைகள் பேசிய (ஆண்மைத் தன்மையின் மேல் மலட்டுத் தன்மை, போதை மருந்து பழக்கம், மது அருந்தும் பழக்கம், பெருஞ்சோர்வு, தளர்வு நிலை) பூதாகமான பிரச்சனைகளின் விளைவாக தோன்றுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. (hite- 1981-402) மற்ற பல்வேறு வகையான பாலுறவு வெளிப்பாடுகளை விட ஆண், பெண் புணர்ச்சி வடிவம் செலுத்துகிற ஆதிக்க நிலையும் புணர்தல் ஒன்றுதான் பாலுறவு இன்பத்தின் அடிப்படை இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையும் பெண்களை ஒடுக்குகிற கோட்பாட்டையும் பாலியல் அல்லது சமுக உறவு முறைகளையும் தான் கொண்டு இருக்கிறது. ஈரினச் சேர்க்கை உறவு முறை வகுக்கப்பட்ட விதத்தின் படி ஆண்கள் விந்து வெளியேற்றலுக்கான வழியை வரையறையைச் செய்யப்பட்ட பாலுறவு முறைகளால் ஆண்கள் பாலுறுவு பரவச நிலையை பெருமளவு அடைகிறார்கள். ஆனால் அதே சமயம் மகளிர் கந்து தூண்டல் என்ற ஒன்று வெறும் பாலுறவு சல்லாப நிளையாட்டாகவே கருதப்படுகிறது. அதாவது வெறும் சாதாரண நேரம் கடத்தும் இன்ப விளையாட்டாகவே கருதப்படுகிறது. 'சல்லாப கோரிக்கை விளையாட்டு” என்ற இந்த வார்த்தையே (Fore play) பாலுறவில் அது அவ்வளவாக முக்கியம் இல்லை. உண்மையில் ஆணுறுப்பின் ஊடுதலை சுலபமாக்குவதற்காக நடத்தப்படும் ஒரு முன்கூட்டிய விளையாட்டு என்றுதான் குறிக்கிறது. இந்த இன்ப கேளிக்கை விளையாட்டைக் குறிக்கும் இந்த விளக்கம் மகளிர் கந்து தூண்டப்படும் விதத்தை மற்றும் அதன் முக்கியத்துவத்தையே பாதிக்கிறது. உதாரணமாக ஷெய்ட் கூறுவது போல புணருதல் ஒன்றுதான் பாலுறவில் முக்கிய செயலாக கருதப்படுவதில் ஆண்கள் பொதுவாக தங்கள் விறைப்புத் தன்மையை பாதுகாத்துக் கொள்ளவே பெரிதும் பதட்டமடைகிறார்கள். எனவே அவர்கள் புனர்வதற்கு முன்பாக நடக்க வேண்டிய மற்ற நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள எத்தனிக்கிறார்கள். அச்செயல்களுக்காக சிறிதளவு கால அளவை செலவிடுகிறார்கள். ஆய்விற்காக கணக்கில் எடுக்கப்பட்­டவர்களில் 45 சத வீதத்தினர் மட்டுமே சம்பந்தப்பட்ட மற்றவாpன் செய்கையின் மூலம் காமப்பரவச நிலையை உணர்ந்திருப்பதாகவும் அனால் 95 சத வீதத்தினர் இக்காமப் பரவச நிலையை சுயஇன்பத் தூண்டல் மூலமே அடைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. (hite – 1972-209) மேலும் பெருமளவு எண்ணிக்கையிலான ஆண்கள் சம்பந்தப்பட்ட பெண் கூட்டாளிகளுக்கு எந்தவிதமான மகளிர் கந்து தூண்டல் 'இன்பத்தையும் (Clitorolstrimutation) வழங்கவே இல்லையாம். (1976 - 212) இப்பிரச்­சனையின் அடிப்படையே பிரத்தியேகமாக அண்,பெண் சேர்க்கை மட்டும் தான். பாலுறவு முறை என்று வரையறுக்கப்பட்ட நிலைமைதான் இந்த ஆண் சமூக மூடநம்பிக்கையின் விளைவாக ஆண் காம பரவச நிலைக்கு முழு உத்திரவாதம் கொடுக்கும் ஒரு பாலுறவு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. மகளிர் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் கந்து தூண்டல் ஆண்களின் விருப்பத்திற்கு ஏற்ப எப்போதாவது நடத்தப்படுகின்ற அல்லது எப்போதுமே நடத்தப்படாத செயலாகவும் தான் கருதப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஆண், பெண் பாலுறவு முறைக்கு இருபாலருக்குமே ஒருவருக்கொருவர் 'சம அளவில் முழு இன்பம்” வழங்கக் கூடியது என்ற நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளச் செய்ய சமூக அங்கீகாரம் பெற்ற குடும்ப முறை புணர்ச்சியை உணர்த்திக காட்டுகின்ற வக்கிரமான கலாச்சார சூழலில் போன்றவற்றின் மூலம் பெரும்பாலான மககள் காலம் காலமாக பழக்கப்பட்­டிருக்கிறார்கள். ஆனால் இந்த பாலுறவு சூழ்நிலை தலைகீழாய் மாறுவதாய் கற்பனை செய்தால் அதாவது ஆண்களில் ஒரு சிலருக்கு மட்டுமே எப்போதாவது ஆணுறுப்புத் தூண்டப்பட்டு அதன் மூலம் பரவசநிலை அடைந்ததாகவோ அல்லது இப்பரவச நிலையை ஆண்கள் எட்டாத நிலைமை இருப்பதாகவும் அதேசமயம் பெண்கள் எப்போதுமே மகளிர் கந்து தூண்டப்பட்டு பரவசநிலையை பெரும்பாலும் அல்லது எப்போதும் அடைவதாகவும் இருந்தால், அடையும் பரவச நிலையில் இருக்கும் விகிதாசார ஏற்றத்தாழ்வு அனைவருக்கும் மிகவும் தெளிவாக புலப்படும் அல்லவா? ஆனால் பாலுறவில் அண்களை மேலானதாய் மதித்து பெண்களை இரண்டாம் தர அல்லது முக்கியத்துவமற்ற நிலைக்கு தள்ளுகின்ற போக்கு நம் சமுதாயத்தில் நிலவுவதால் மிகச் சிலர் மட்டுமே தற்போது நடமுறையில் உள்ள பாலுறவு பரவசநிலை ஏற்றத்தாழ்வு குறித்து அதிர்ந்து போகிறார்கள். துரதிஸ்டவசமாக பாலுறவு நனடைமுறையில் இருக்கும் இந்த ஏற்றத் தாழ்வான நிலைமை குறித்த பெரும்பாலான விவாதங்கள் வெறும் விவரித்தல் நிலைமையோடு நின்று விடுகின்றன. இத்தனை விவாதங்கள் பிரச்சனைகளை விபாpத்து பேசும் நிலையை கடந்து போவதில்லை. இந் நிலைமைக்கு காரணமே மாக்ஸின் மூலதன கொள்கைக்கு நிகரான ஒரு பரந்த ஆற்றல் வாய்ந்த பாலுறவு முறையில் சுரண்டல் நிலையை நன்கு விளக்கும் ஒரு கோட்பாட்டு வரையறை உருவாக்கப்படாததுதான். மதிப்பு ரிதியான மாக்ஸின் தொழில் கொள்கை பொருளாதாரச் சுரண்டலை மிகவும் தெளிவான வகையில் விவாதிக்க வழிவகை செய்திருக்கிறது. தொழில் ஆற்றல் என்பது அத்தகைய மதிப்பிற்கு ஏற்ற வாங்கவோ அல்லது விற்றகவோ படுகிறது. அதன் மதப்பு மற்ற விற்பனைப் பொருள்களைப் போலவே அதன் உற்பத்திக்குத் தேவையான வேலை நேரத்தைப் பொறுத்தே நிர்ணயம் செயயப்படுகிறது. ஒரு தொழிலாளியின் சராசரி தின வருமானம் ஈட்டப்படுவதற்கு ஆறுமணி நேரமானால் சராசாயாக அவன் ஆறு மணி நேரம் நிச்சயம் வேலை செய்து ஆகவேண்டும். அவனுடைய உழைப்பத்­திறனை வெளிப்படுத்துவதற்கு ஒரு நாளில் சராசரியாக ஆறு மணி நேரம் உழைக்க வேண்டும். அவனுடைய தொழிலாற்றல் என்ற விற்பனை விளைவாகத்தான் அடைந்து நன்மையை வேறு வகையில் ஈடு கட்டி விடுகிறான். எனவே அவனுடைய வேலை நாளுக்குத் தேவையான நேரம் அறு மணிநேரம் என்று கணக்காகிறது. எனவே வாங்கிய அளவிற்கு கொடுக்கிற சமஅளவு கொள்கையாக (Caeteris parivus) இது ஆகிறது. இந்த யுகத்தை அனுபவமாக கொண்டுதான் நாம் கிரகித்துக் கொண்டு இருந்தோம். ஆனால் ஆனால் இதில் வேலை நாளில் அளவு அல்லது எந்த அளவு வேலை நாள் நீடிக்கப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான வரையறை இல்லை. (1967 : 231) முதலாளித்து சமுகத்தில் தொழிலாளிகளின் உழைப்புத்திறனுக்கு பதிலாக இந்த வேலை நாளின் கால அளவு 'அடைந்து லாபம் அல்லது மதிப்பை ஈடுகட்ட தேவையான” நேரத்திற்கு மேலாக நீடிக்கப்படுகிறது. இதைத்தான் மிகுதியான இலாபத்தை முதலாளிகளுக்கு விளைவிக்கிற, உழைப்பை சுரண்டுகிற போக்காகும் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். மார்க்சின் இந்த மதிப்பு ரிதியான தொழில் கொள்கையைப் போன்று ஒரு கோட்பாட்டை பாலுறவு நடைமுறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வை அலச உதவும் வகையில் உருவாக்க முடியுமா என்று நாம் இப்போழது பார்க்கலாம். உதாரணமாக ஊதியத்திற்கு தக்க வேலை என்று ஏற்படுத்துகின்ற உறவு முறையை வாங்கி வேலைத்திறனை விற்பதால் திணிக்கப்டும் சமத்துவமற்ற சமூக உறவு முறைகள் 'சுதந்திரம் மற்றும் சமத்துவம்” போன்றவற்றில் புதைக்கப்­பட்டிருப்பதை நாம் நன்கு காண முடியும். பாலுறவு பிரச்சனைகளை இந்தக் கோணத்தில் இருந்து நாம் அனுகினால் ஆண்களும் பெண்களும் கூட சுதந்திரமான சமத்துவமான உறவில் நுழைவதாக அளிக்கும்மாயத் தோற்றத்தை நம்மால் உணர முடியும். இருப்பினும் இருபால் கூடலில் கையாளப்படும் முக்கிய முறையே பெண் காம இச்சசைக்கு எதிராக அல்லது அதைப் பொருட்படுத்தாது ஆண் இச்சையத் திருப்திப்படுத்தும் வண்ணமே அமைந்திருக்கிறது. பாலுறவு என்பதே ஆண், பெண் புணர்ச்சியின் மூலமே வெளிப்படுத்தப்பட்டு வந்திருப்பதால் பெண்களை விட ஆண்களே பெருமளவு காம இன்பத் தூண்டலை பெறுகின்றனர். உண்மையில் ஆண், பெண் பாலுறவு முறையின் படி பெரும்பாலும் அண் காமபரவச நிலையை எட்டியபின் பெண்ணின் பரவச நிலையும் முடிவுக்கு வந்தாக வேண்டும். எனவே ஆண், பெண் உறவு முறை ஒரே அளவு இன்பத்தை இருவரும் நுகரச் செய்யும் தன்மை உடையதாக தோன்றினாலும் உண்மையில இது ஒருவர் இன்பத்தின் அப்பாற்பட்டதேயாகும். ஆண், பெண்ணிடம் இருந்து பெற்ற காமத் தூண்டலை மிகச் சிறிய அளவில் தான் திரும்பத் தருகிறான். இதனால் பெண் பரவச நிலையை அடைவது என்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. பெண்ணின் பாலுறவுச் செயல்கள் யாவுமே ஒரு குறிப்பிட்ட சமூக உறவுமுறையின் பின்னணியில் நிர்ப்பந்திக்கப்பட்ட சில குறிப்பிட்ட சூழ்நிலைகளோடு மட்டுமே இழையோக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனித்துவத்தோடு தானாக நிகளும் வெளிப்பாடு என்ற நிலையில் இருந்து விலகி ஆண், பெண் உறவு முறையானது முன்கூட்டியே சமுதாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவும் மிகவும் வரையறுக்கப்ட்ட கட்டுமானங்களோடு கூடிய ஒரு கட்பாயமாகவும் தான் இருக்கிறது. இப்படிப்பட்ட ஈரினச்சேர்க்கையின் கூறுகளும் நிகழ்த்தப்படும் விதமும் ஆண் ஆதிக்க சமூக உறவு முறையின் பிரதிபலிப்பகளாகவே இருக்கினறன. தேனிவாகப் பார்த்தால் பாலுறவு நடைமுறையில் சமத்துவமின்மை என்பது அடிப்படையில் பெறப்படும் இன்பத்தின் சமத்துவமின்மையோடுதான் தொடர்புடைய­தாய் காணப்படுகிறது. துரதிஷ்டவசமாக காம இன்ப அளவை தனிமனிதர்களுக்கிடையே ஒப்பிட்டு வரையறை செய்வதோ அல்லது ஒவ்வொரு தடவையும் எந்த அளவு ஆத்மதிருப்தியோடு ஒரு தனிமனிதன் காம பரவச நிலையை அடைகிறான் என்பதை அளப்பதோ மிகவும் அரிதான செயலாகும். இருப்பினும் காம பரவச நிலை (விந்து, மற்றும் மதனநீர்) ஒன்றுதான் பாலுறவில் இன்பத்தை நன்கு பார்க்க மற்றும் கணக்கிட முடியும் ஒரே வெளிப்பாடாகும். காமத்தில் இப்பரவசநிலையை இருபாலருமே எட்டமுடியும். மேலும் இப்பரவச நிலைதான் காமத்தில் அடையப்பட வேண்டிய மற்றும் விருப்ப படுகின்ற விளைவாக கருதப்படுகி­றது. இந்தப் பின்னணியில் என்னுடைய ஆதங்கம் என்னவெனில் ஆண், பெண் கூடலில் காமப்பரவசநிலையை அடையும் திறனில் ஆண்கள் மற்றும் பெண்களுக்­கிடையே இருக்கும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு ஆற்றலில் சமத்துவமற்ற உறவு முறையைத்தான் தெளிவாக காட்டுகிறது என்பதுதான், தரம், தன்மை போன்ற அடிப்படைகளில் பெண்கள் அண்களைவிட சிறந்த உயர்ந்த நிலையில் பரவச நிலையில் பரவசநிலை அடைகிறார்கள். இது அவர்கள் அண்களைவிட காலஅளவு விகிதாசாரத்தில் குறைந்து இருப்பதை ஈடுகட்டிவிடுகிறது என்று ஒருவர் விவாதித்தால் அன்றி மற்றப்படி உறுதியாக அண், பெண் கூடல் முறையில் அண்களின் சுரண்டல் மற்றும் அண்கள் பெண்கள் இன்பத்தை புறக்கணித்து அளவில் அதிகமாக பரவச நிலையை அடையும் நிலை போன்றவற்றை குறித்து ஒரு பெரிய முறையீடு பதிவு செய்யும் அளவற்கு இப் பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஈரினச் சேர்க்கை உறவு முறையில் பெண்கள் ஒட்டகப்படுகின்ற கோட்பாட்டை வேறு எந்த கோட்பாட்டை பயன்படுத்தி பெண்களை விட அண்கள் ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகளவு காம இன்ப பரவசநிலையை அடைகிறார்கள் என்ற எதார்த்த நிலையை கருத்தளவில் விலகிக் காட்ட முடியும்? சூழ்நிலையை பாலுறவுச் சுரண்டல் என்று கூறுவதால் மாக்சின் மதிப்புக் கொள்கையை படுக்கையறையில் பயன்படுத்த வேண்டும் என்று பொருளாகாது. மதிப்பு ரிதியான மார்க்சின் தொழில் கொள்கையை வியாபாரத்தை உறவுகளுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். இருந்தாலும் பெண் அடையும் இன்பத்தை புறக்கணித்து அதிக அளவு விகிதாசாரத்தில் அடையும் அண்பரவசநிலை என்ற ஒப்பீடு மிகவும் பயனுள்ளதாகிறது. ஏனெனில் இதன் மூலம் ஆண்களை பால் ஆதிக்க உணர்வு கொண்டவர்கள் என்று பொருட்படுத்தி காட்ட முடியும். ஈரினச் சேர்க்கையின் பெரும்பாலான அமைப்பு முறையினால் ஆண்கள் அடையும் ஆதாயத்தால்தான் இவர்களுக்கு இந்த ஆதிக்க போக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இப்படி அவர்கள் அடயும் ஒரு முக்கியமான இலாபம் அவர்கள் பாலுறவின் போது ஈரினச் சேர்க்கையில் பெருமளவு உடல் தூண்டல் இன்பம் பெண்களை விட அதிக அளவு அடைவதுதான். அதன் விளைவாக முன்பு சொன்னது போலவே ஆண்கள் மட்டுமே பெருமளவு காம பரவச நிலையை பெண்களை விட அடைகிறார்கள். பெண் அடையும் இன்பத்தை புறகணித்து சுரண்டி ஆண் அனுபவிக்கும் இந்த பரவச நிலையை காரணமாக கொண்டு அபூர்வமாக சில பெண்கள் பாலியல் மருத்துவர்களை அணுகியும் இருக்கிறார்கள். (Ress:1978 - 2) அவ்வேளைகளில் அப்பெண்கள் மனரீதியான உளைச்சலையும், எhpச்சலையும் அதன் விளைவால் ஏற்பட்ட உடல் சார்ந்த அறிகுறிகளையும் எடுத்துக் காட்டி திருமணத்தை குறித்த தங்கள் அறிகுறியை தெரிவித்திருக்கிறார்கள். (Bornar-1971 :148 to 152) இங்கே இருண்டு முக்கிய கருத்துக்கள் கவனத்திற்குரியவை முதளில் ஈரினச்சேர்க்கை நடைமுறையில் அண் இன்று திருப்தியை அதிகப்படுத்துவதற்கான வழிவகைகள் கூட இல்லை. ஏனெனில் நடைமுறையில் சமூதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பாலியல் உறவு முறைகள் அண்களின் விருப்பத்­திற்கேற்ப பாலின்பம் அனுபவிக்கும் சுதந்திரத்தைக் கூட ஊக்குவிப்பதில்லை. ஆண்கள் ஒரு சீரான கால அளவில் அல்லது அடிக்கடி வாய் நுகர் இன்பம் (Fellotio) தாங்கள் பெறுவதில்லை. அதிலும் குறிப்பாக பரவசநிலையை அடையும் வகையில் தங்களுக்கு அந்த இன்பம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி தெரிவிப்பதாக ஹெய்ட் கண்டறிந்தார் (1981 : 538) இதிலிருந்து ஆண்கள் வேறுபட்ட பாலின்ப வழிகளின் மூலம் இன்பம் நுகர்ந்து திருப்தி அடைகிறார்கள் என்று நன்றாக புலப்படுகிறது. மேலும் பல்வேறு அல்லது வேறுபட்ட வழிகளில் காம பரவச நிலையை அடைய பாலின்ப செயலை மாற்றுவதற்கே ஆண்கள் அடிப்படையில் விரும்புகிறார்கள். ஆண்கள் மட்டும் ஆண் குறியை மையமாக வைத்து பல்வேறு வழிகளில் உடலுறவு இன்பத்தை நுகரலாம்! ஆனால் பெண் இன்ப நெகிழ்வு அல்லது தூண்டலுக்கு பாதகமான ஆண் உடலின்ப தூண்டலை முக்கியத்துவ படுத்துகிற பாலுறவு நடைமுறைகளின் வெளிப்பாடாக உடலுறவில் பெண்ணின் இன்பத்தை இரண்டாந்தரப்படுத்தலாம் அல்லது புறக்கணிக்கலாம் என்பதைத்தான் அண்களின் உடலுறவு முறையை பெண்களுக்கு இன்பமளிக்கும் வகையில் மாற்ற விரும்பாத பிடிவாதமான விருப்பமின்மை உணர்த்துகிறது. இது தான் ஆண், பெண் பாலுறவு அமைப்பிலிருந்து ஆண்கள் அடையும் இலாபமாகும். இரண்டாவதாக காமப்பரவச நிலையும், பாலுறவில் முழு திருப்தி நிலையும் ஒன்றென்று நான் கூறவரவில்லை. ஐயமின்றி முழுமையான பாலுறவு திருப்திய­டைய மற்ற பல்வேறு கூறுகளும் பங்கு வகிக்கின்றன. இருப்பினும் பெண்கள் மிகச்சிறிய அளவில் எப்போதாவது பாலுறவு பரவசத்தை அடைகின்ற நிலைமை அவர்களது பாலுறவு அனுபவம் போதுமான அளவு மகிழ்ச்சி தருவதாய் இல்லை என்பதையும் உணர்த்துகிறது. எனவே அதிகளவு புழக்கத்திலுள்ள ஆண், பெண் கூடலில் பெண்களுக்கும், அண்களுக்கும் அடைய வேண்டிய இலக்குகள் வெவ்வேறாய் இருக்கின்றன. இருவரும் ஒரே நேரத்தில் திருப்தியை அடைந்துவிடுவதில்லை. அண்களுக்கு தங்கள் பாலின்ப வெளிப்பாட்டை அதிகப்படுத்த வேணடுமென்ற அங்கலாய்பு இருக்கலாம்! அனால் பெண்களோடு அவர்களை ஒப்பிடுகையில் அண்கள் பெருமளவில் பாலின்ப திருப்தி அடையத்தான் செய்கிறார்கள். ஆண்கள் உயிரியல் அல்லது அண் விந்து வெளியேற்றல் தேவை என்ற யதார்த்த நிலை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப உடல் இன்ப தூண்டல் வழங்கும் விதத்தில் தான் பாலுறவு என்ற ஒன்றே வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அனால் பெண்களில் பெண்களின் பாலின்பத்தை பொறுத்தவரையில் (Female Sexuality ) அது கட்டுப்படுத்தப்படுகின்ற ஒன்றாகலாம். ஆண் பாலின்பத்திற்கு சுகம் சேர்க்கும் ஒர் இரண்டாந்தரம் போலதான் வரையறை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அத்தோடு கூட அதிக அளவிலான ஆண் பரவசநிலை சமூகத்தில் பெருமளவு பரவியிருக்கும் ஆணை பிரத்தியகப்படுத்தும் போக்கின் பிரதிபலிப்பே அகும். உடலுறவு நடைமுறையில் இருக்கும் பாலின்ப செயல் பங்கீடு பெண்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை பொறுத்தவரையில் தொழில் நிறுவனங்களில் பால் ரிதியான வேலை பங்கீட்டு முறையோடு ஒத்ததுதான் இவ்விரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை. இரண்டுமே ஆணின் பாலுறவு அல்லது பொருளாதார நிலைமையில் எவ்வளவு குறை இருந்தாலும் அல்லது அதிருப்திக­ரமான நிலையிலிருந்தாலும் பெண்களில் வாழ்நிலை அதைவிட கீழாக தாழ்ந்துதான் இருக்க வேண்டும் என்பதை உறதி செய்கின்றன. இத்தோடு கட்டுரையின் இப்பிரிவின் இறுதியான மற்றொரு முக்கிய கருத்தைக் காணலாம். ஆண்கள் பெருமளவில் காமப்பரவச நிலையை எட்டுவதற்கு காரணமே அண்கள் ஈரினச் சேர்க்கையில் ஆண்சார்ந்த பாலுறவு முறையில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படும் நிலைதான். இக்கருத்தை நிரூபிக்க ஆதாரம் இருப்து போல் தெரிகிறது. ஹய்ட்டின் ஆண் பாலுறவு ஆய்வில் ஆண்கள் தாங்கள் அடிக்கடி புணர்ச்சியில் இடுபட வேண்டும் என்ற சமூக கட்டாயத்தை உணர்ந்ததாக கூறினர். எனினும் புணர்ச்சி பாலுறவில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாலுறவில் ஆண்களின் முக்கிய செயலாக அடையாளம் காணப்படுகிறது. உடலுறவில் புணர்ச்­சியே விருப்பமாக நிகழ்த்தக்கூடியதொன்றாக வைத்துக் கொள்ளும் படி ஹய்ட் தெரிவித்த யோசனை ஆய்விற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்களில் பலரை திடுக்கிட வைத்ததாம். எனினும் ஆய்விற்கு எடுக்கப்பட்ட மிகப் பெரும்பான்மையானோர் ஈரினச் சேர்க்கையில் புணர்ச்சியை விலக்கி வைப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று உணர்ந்து இந்த யோசனையைப் புறக்கணித்து விட்டார். (hite– 1981 : 461 to 468). மேலும் வரையறுக்கப்பட்ட சமூக சட்டங்களால் தம்முடைய வாழ்க்கை பெரிதும் கட்டுப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் பெரும்பாலான ஆண்கள் பாலுறவில் ஆண், பெண் பங்கு குறித்து பேசக்கூடிய பெண்ணிய சிந்தனையாளர்களின் பெண்ணிய இணக்கத்தையும் அங்கீகரிக்க மறுத்தனர். அர்த்தமற்ற வகையில் அவர்கள் இவற்றை தங்களுக்கு பாதகமாக பாலுறவில் சமத்துவ நிலையை அடைய எத்தனிக்கும் பெண்ணின் முயற்சியை பெரிதும் வெகுண்டு கண்டித்தனர். (hite : 303 to 328). இதிலிருந்து ஈரினச்சேர்க்கையில் அண்களின் இந்தச் சார்பு நிலை புழக்கத்தில் உள்ள ஈரினச் சேர்க்கை உறவு அமைப்பு முறையை பாதுகாத்துக் கொள்வதால் அவர்கள் இலாபம் அடைகிறார்கள் என்பதால்தான் தெரிகிறது. அடுத்த இதழில் தொடரும்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More