Slideshow

இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ ‘எம்.சி. ஒரு சமூக விடுதலைப்போராளி’ நூல் விமர்சனம். - நவஜோதி ஜோகரட்னம் லண்டன் -


[தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரும் (பிரான்ஸ்), இலங்கை ஜனநாயக ஒன்றியமும் (லண்டன்), இணைந்து ஏற்பாடு செய்த நூல் விமர்சன நிகழ்வானது லண்டனில் (6-12-2008) மிகச் சிறப்பாக நடைபெற்றது.]

இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ ‘எம்.சி. ஒரு சமூக விடுதலைப்போராளி’ நூல் விமர்சனம்.‘இலங்கையின் சாதி அமைப்புக் குறித்து கறுப்புப்பிரதிகள், பறை ஏனைய சிற்றிலக்கிய சஞ்சிகைகளில் ஆங்காங்கு கட்டுரைகள் வெளியாகி உள்ளன. இலங்கையில் சாதியப் போராட்டத்தைப் பற்றிய விரிவான ஒரு நூலாக ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான 
போராட்டங்களும்’ என்ற இந்த நூல் அமைந்திருக்கிறது என்று’ இந்த விமர்சன அரங்கிற்கு தலைமை வகித்து உரையாற்றிய தமிழக 
மார்க்சிய ஆய்வாளர் தோழர் ச.வேலு பேசுகையில் குறிப்பிட்டார். 

‘இலங்கையின் தேசிய விடுதலை எழுச்சியின்பின் சாதிய ஒடுக்குமுறைகள் இல்லாமல் போய்விட்டன என்ற கருத்துக்களும்இ 
ஆயுதங்களின் நிழலில் சாதிய உணர்வுகள் பதுங்கிக் கிடக்கின்றன என்றும், தேசியப் போராட்டத்தினால் சாதியப் போராட்டத்தின் கூர்மை
மழுங்கடிக்கப்பட்டது என்றும் பல்வேறுபட்ட சர்ச்சைகள் எழும்பியுள்ள நிலையில், அவற்றை மதிப்பிடுவதற்கான ஒரு அவசியமாக 
இந்நூல்; அமைகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் அவர் பேசுகையில் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலணித்துவவாத எதிர்ப்பு என்று எதிர்ப்பு இலக்கியம் நடாத்திய பார்ப்பனியர்கள் 
இந்துத்துவ அரசியலையும்இ சாதிய நீடிப்பையும் வலியுறுத்தி வந்திருப்பதை இந்திய அரசியலில் காண முடிகிறது’ என்பதையும் 
வலியுறுத்திப் பேசினார்.

‘ஐம்பதுகளில் வடபுலத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் மத்தியில் கம்யூனிச சிந்தனையை விதைத்தவர்களில் அமரர் பொன். கந்தையாவின் இடம் தனித்துவம் வாய்ந்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களின் சமூக விடுதலைக்கு மார்க்சிய சிந்தனையே உண்மையான வழிகாட்டி என்பதை அமரர் பொன். கந்தையாவே எங்களில் ஆழப்பதியச் செய்தவராவார். அற்ப ஆயுளில் அவர் மறைந்து போனமை வட புலத்தின் இடதுசாரி கட்சிகளின் வரலாற்றில் மிகப் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறவேண்டும். சமூக ரீதியாக ஆலய வழிபாடு, பாடசாலை அனுமதி, தேனீர்க்கடைகளில் சமத்துவம் போன்ற பல்வேறு அம்சங்களிலும் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மத்தியில் இந்த அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்ற யதார்த்த உண்மையை மார்க்சியமே எங்களுக்கு வெளிப்படுத்தியது’ என்று ஆசிரியர் திரு.கே.தங்கவடிவேல் லண்டனில் நடைபெற்ற ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும், எம்.சி.ஒரு 
சமூக விடுதலைப் போராளி என்ற நூல் வெளியீட்டு விழாவில்’ உரையாற்றும்போது தெரிவித்தார். 

‘எஸ்.ரி.என்.நாகரத்தினம், கே டானியல் போன்றோர் சாதிய ஒழிப்புப் போராட்டத்தில் ஆற்றிய பங்கினை மறைத்து அல்லது திரிபுபடுத்தி 
வரலாறு எழுதப்படுவது நேர்மையான செயல் அல்ல என்று கூறிய கே. தங்கவடிவேல் மாவிட்டபுரத்தில் இடம்பெற்ற ஆலய 
நுழைவுப்போராட்டத்தில் தனது நேரடி அனுபவத்தினை விபரித்தார். அரசநிர்வாகம், பொலிஸ், சாதிவெறியர்கள் ஆகியோருக்கெதிராக 
ஒடுக்கப்பட்ட மக்கள் எத்தகைய வீரம்செறிந்த போராட்டத்தை நடாத்தினார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிவதற்கு 
வாய்ப்பில்லாமல் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய போராட்டங்கள் பற்றிய கட்சி சாராத யதார்த்த உண்மைகளை 
உண்மையாகவே பிரதிபலிக்கின்ற வரலாற்று நூல்கள் எழுதப்படவேண்டும்’ என்றும் ஆசிரியர் கே.தங்கவடிவேல் வலியுறுத்தினார்.

‘பேராசிரியர்.சி.சிவசேகரம், பேராசிரியர்.சி.தில்லைநாதன் ஆகிய இருவரும் வழங்கிய முன்னுரைகள் மிகவும் காத்திரமானவை. இந்நூல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்க்சியவாதிகளின் சாதியஎதிர்ப்புப் போராட்டங்கள் மிக உன்னதமானவை என்பது இந்த நூல் மூலம் நிறுவப்பட்டுள்ளது. 

இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ ‘எம்.சி. ஒரு சமூக விடுதலைப்போராளி’ நூல் விமர்சனம்.
‘இலங்கையில் சாதியம் என்பது பற்றி ஆங்காங்கே கட்டுரைகளும், ஆய்வுகளும் வெளிவந்தபோதும் போராட்டங்களை முழுமையாக 
எடுத்துக்கூறும் நூலாக இது இருக்கின்றது. முதற் பதிப்பின்போது கிடைத்த சாதகபாதகமான விமர்சனங்களை உள்வாங்கி 2வது பதிப்பில் வெளிவந்ததாகக் கூறப்பட்டுள்ளது எனினும் மார்க்சிய கட்சி சார்ந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் ஏனைய கட்சிக்காரரும், மார்க்சிய கொள்கைளைப் பின்பற்றாதவர்களும் இந்நூலில் புறந்தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்நூலின் உண்மை வரலாற்றை ஏற்றுக்கொள்ளுகின்ற அதே சமயம் வரலாற்று நூலின் நேர்மை கருதி சில கருத்துக்களை முன்வைக்கலாம். முதன் முதலில் மிஷனறிப்பாடசாலையில் கல்வி கற்று பிற்காலத்தில் அம்மக்களின் விமோசனத்திற்காக செயற்பட்டதாக யோவல்போல், எஸ்.ஆர்.ஜேக்கப், ஏ.பி.ராஜேந்திரா ஆகியோரைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் அதே சமயம் சூரன், எம்.சி.சுப்ரமணியம்,அ.முருகேசு ஆகியோரும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று மாதவி சிவலீலன் தனது விமர்சன உரையில்தெரிவித்தார்.மற்றும் சூரனால் கட்டப்பட்ட 
“தேவரையாளிசைவ வித்தியாசாலை”க்கூடாக கல்வி கற்று உத்தியோகம் பெற்றவர்கள் தாழ்த்தப்பட்ட தங்களுடைய சமூகத்திலிருந்து தம்மை வேறுபடுத்த முற்பட்டவர்கள் என இந்நூல் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் இப்பாடசாலை கட்டப்படாமல் ஏனைய பாடசாலைகளில் இவர்கள் கல்வி கற்பதற்கு போராடியிருக்கலாம் என்ற கருத்தும் இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கூற்றுக்கள் விவாதத்துக்குரியவை. ஏனெனில் அச்சமூகம் மேல்நிலை அடைவதற்கு அப்பாடசாலை பெரிதும் உதவியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு சமூகம் கல்வி பொருளாதாரம் பண்பாடு என்பவற்றில் மேல்நிலையாக்கம் பெற்றால் ஈடேற்றம் பெறலாம் என்பதில் உண்மை இருக்கின்றது. இந்நூலில ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கல்வியால் மேல்நிலையடைந்தோர், ரஷ்ய மார்க்சியவாதிகள் ஆகிய 
மூன்று பிரிவினரும் புறந்தள்ளப்பட்டு தாக்கப்படுகின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கல்வியால் மேல்நிலை அடைகின்றவர்களை ஏற்றுக் கொள்ளாமல் குற்றம் சுமத்துகின்ற இவர்கள் எப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக போராட முடியும்? தமிரசுக் கட்சியை தாக்க முற்படுகின்ற போது மாவிட்டபுர வழக்கில் எம்.பி.கதிரவேற்பிள்ளை ஒடுக்கப்பட்டவர்களுக்காக வாதாடியமை கபடம் என்கின்றனர். பன்றித்தளர்ச்சி அம்மன் கோயில் விவகாரத்தில் எம்பி.நவரத்தினம் நடுநிலையாளராகத் தன்னைக் காட்டிக் கொண்டார் என்கின்றனர். அத்துடன் தமிழரசுக் கட்சியினருக்கு சேவகம் செய்ய தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் இருந்து கல்வியின் மூலம் மேலே வந்தவர்கள் என ஒட்டுமொத்தமாக தமிழரசுக் கட்சியினரை குறை கூறுகின்றனர். ஆனால் கந்தசாமி கோயில், வண்ணை சிவன்கோயில், பெருமாள்கோயில் ஆகியவற்றுக்குள் பிரவேசம் செய்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான முதன்முதல் ஆலயப் பிரவேசத்தினை தமிழரசுக் 
கட்சியினரேசெய்துள்ளனர். தேனீர்க்கடைப் பிரவேசமும் இவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னரே ஏனைய 
ஆலயங்களுக்கான பிரவேசங்கள் தேனீர்க்கடைப் பிரதேசங்களும் நடைபெற்றன. 1956 ம் ஆண்டு ‘உயர் சாதியினருக்கு வேண்டுகோள்’ 
என்ற தலைப்பில் தமிழரசுக்கட்சியைச்சார்ந்த ஐ.நல்லையா, ஆ.கணபதிநாதன் ஆகியோர் தங்கள் உரிமைகளுக்கான கோரிக்ககைகளை முன் வைத்துள்ளார்கள். தீண்டாமைச் சட்டமும் இக்கட்சியினராலேயே முன் வைக்கப்பட்டுள்ளது. இவை யாவும் இந்நூலில் நேர்மையான முறையில் முக்கியத்துவம் பெறவில்லை. இதேசமயம் தங்கள் கொள்கைகளை பின்பற்றாதவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு செய்த சேவையையும் இருட்டடிப்புச் செய்துள்ளனர். எனவே ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மேல் நிலையில் வந்தவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. தங்களது கொள்கைகளைப் பின்பற்றாதவர்களை எதிரிகளாகப் பார்த்தனர். இவர்கள் எப்படி நேர்மையான அரசியலை நேர்மையான வரலாற்றை எழுத முடியும்? தங்களது கட்சி நடத்தியது வரலாறு என்போர் மற்றையோர் நடத்திய சாதியப் போராட்டங்களில் கோளாறு பார்க்கின்றனர். இதே சமயம் நாடகக் கலைஞர்கள் மேடை நாடகங்களின் போது தீண்டாமை சம்பந்தமாக பாடல்களை மேடைகளில் பாடி வந்துள்ளார்கள். இவை சாதியத்துக்கு எதிரான போராட்டங்களாகவே இருந்துள்ளன. குறிப்பாக பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளை தான் மேடைகளில் பாடிய பாடல்களை ‘சந்திப்பாட்டு’ என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். இத்தகைய தகவல்கள்கூட இந்நூலில் விடுபட்டுள்ளது. எனவே வரலாறுகள் உண்மையாக இருக்க வேண்டும்’ என்று மாதவி சிவலீலன் தனது விமர்சன உரையில் மேலும் குறிப்பிட்டார். . 

‘எம்.சி.சுப்பிரமணியம் ஒரு சமூக விடுதலைப்போராளி’ என்ற நூல் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வரலாறாகக் காணப்படுகிறது என்று கூறிய 
மாதவி சிவலீலன் அவர் பற்றிய ஒரு மேன்மையான மதிப்பினை இந்நூல் வெளிக்காட்டுகின்றது என்றார். இந்நூலில் அவர் பற்றிய 
பலரது கட்டுரைகள் மூலம் இதுவரை காலமும் அவர் குறித்து செவி வழியாக கேட்கப்பட்டு வந்த தவறான கருத்துக்கள் இந்நூலில் 
தெளிவுபடுத்தப்பட்டுள்ளன, அந்த வகையில் எஸ் திருச்செல்வம் மற்றும் பலரது கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவையாகும் என்று மாதவி சிவலீலன் தனது விமர்சனஉரையில் மேலும் தெரிவித்தார். ;

‘இலங்கையின் இன முரண்பாடுகள்பற்றி நூற்றுக்கணக்கில் ஆய்வுகளும், நூல்களும் வௌ;வேறு தளங்களில்; வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் வட புலத்தில் சாதியமைப்புக் குறித்தும்இ அவற்றின் போராட்டங்கள் குறித்தும் முறையான ஆய்வுகள் எதுவும் இல்லை என்பது துரதிஷ்டவசமானது என்று விமர்சகர் மு. நித்தியானந்தன் தனது விமர்சன உரையின்போது தெரிவித்தார். இன்று சர்வதேச இலக்கியத்தில் தலித் இலக்கியம் ஒரு தனித் துறையாக அங்கீகரிக்கப்பட்டு வளர்ச்சி பெறும் நிலையில் தலித் என்ற பதத்தை தீண்டத்தகாததாக கருதுகின்ற மனோபாவம் இலங்கையின் வைதீக அரசியல்வாதிகள் மத்தியில் இடம் பெற்றிருப்பது விநோதமானதாகும். தலித்தியம் குறித்த எள்ளலோடும், அவதூறு செய்யும் நோக்கிலும் இந்த நூலில் கருத்துகள் வெளியாகியிருப்பது சமகால அரசியல் சிந்தனையோடு தொடர்பில்லாத பழமைவாதப் போக்கினையே இது தெரிவிக்கிறது’ என்றும் அவர் தெரிவித்தார். சண்முகதாசனுக்கு எதிரான ஒரு கட்சி நிலைசார்ந்த வரலாறாக மட்டுமே இலங்கையின் வடபுலத்துச் சாதியப் போராட்டம் விவரிக்கப்படுவது உண்மையல்ல என்றும் காலாகாலமாக வௌ;வேறு கட்டங்களிலும், வெவ்வேறு தளங்களிலும் மக்களின் எதிர்ப்புணர்வு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது 
என்றும் அவர் தெரிவித்தார். வர்க்க ரீதியில் சாதியப் பிரச்சனையை அணுகியதாக பிரச்சாரம் செய்யப்பட்டபோது தலித்மக்கள் எத்தனை 
விதமானோர் என்ற கணக்கெடுப்போஇ வடபுலத்தின் சமூக நிலைமை பற்றிய வர்க்க ஆய்வோ ஒருபோதும் மேற்கொள்ளப்பட்டது 
இல்லை என்பது அந்தக் காலத்திலேயே சீனச்சார்பு கம்யுனிஸ்ட் கட்சிமீது வைக்கப்பட்ட முக்கியமான குற்றமாகும். எனவேதான் ஆலய நுழைவுஇ தேநீர்க்கடை பிரவேசம் என்பவற்றிற்குப்பின்னால் அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்வது என்பது தெரியாத நிலையில் 
போராட்டம் என்பது மட்டுமல்ல அரசியல் கட்சிகள் மட்டுமே நிலைபெறுவதற்கான மார்க்கமின்றி சிதைந்துபோனமையே உண்மையான வரலாறாகும். கடந்த 40 ஆண்டுகளில் இந்தப் போராட்டப் பாதையில் மேலதிகமாக ஒரு அடிகூட எடுத்து வைக்கப்படவில்லை என்பது கட்சியின் வெறுமையை மட்டுமே காட்டுகிறது என்றும்’ மு.நித்தியானந்தன் மேலும் பேசுகையில் தெரிவித்தார். 

நோர்வேயிலிருந்து வெளியாகும் பறை என்ற சஞ்சிகையின் ஆசிரியர் ந.சரவணன் பேசும்போது ‘மறு பதிப்புக்கள் வெளியிடும்போது 
மிகுந்த அவதானத்தோடு செயல்படுவது அவசியமென்றும். இலங்கையில் தேசிய இனப் பிரச்சினைக்கு ரோகணவிஜயவீர எழுதிய
நூலானது ஜே.வி.பியின் மத்திய குழுவுடன் ஒப்புதல் எதுவும் இல்லாத நிலையில் முன்னர் வெளிவந்ததாயினும் இன்று அதன் மீள் பதிப்பு ஜே.வி.பி.யின் கொள்கைப்பிரகடனம் போல வெளியிடப்பட்டுள்ளது. மறுபதிப்புக்கள் மனம்போன போக்கில் திருத்தப்பட்டும், திரிக்கப்பட்டும் வெளிவருவது யதார்த்த நிலையை மழுங்கடிக்கவே உதவும். ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ என்ற இந்த நூலுக்கு தான் எழுதிய விமர்சனங்கள் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளப்படாமல் தனிப்பட்ட காழ்ப்புணர்வாக என்மீது புதிய பூமியினால் எழுதப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களாகவே அவை முடிந்தன. தங்களது கட்சியின் இன்றைய வறட்சியையும், வெறுமையையும் மூடுநோக்கிலேயே பழைய சாதனைகளில் குளிர்காய முற்படுகின்றது’ என்று சரவணன் தனது விமர்சன உரையில் தெரிவித்தார்.

பிரான்ஸ் தலித் மேம்பாட்டு முன்னணித் தலைவர் அ.தேவதாசன் பேசும்N;பாது ‘இன்று 30 வருடத் Nசிய விடுதலைப் போராட்டத்தின்பின் தலித்துகளது விடுதலையில் ஏதாவது மாற்றம் கிடைத்திருக்கிறதா? என்று யோசித்தால் சிறிதும் இல்லையென்றுதான் கூறவேண்டும். எப்போது தமிழ் தேசியம் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டதோ அப்போதே தலித் விடுதலை என்பது சீரழியத் தொடங்கிவிட்டது. புலம்பெயர் நாடுகளில் சாதியம் இல்லை என்ற கருத்தை பலர் முன்வைக்கின்றனர். ஆனால் நாம் புலம் பெயரும்போது சுமந்து வந்த பாரங்களில் மிகக் கனமான பாரம் சாதியப் பாரம் மட்டுமே. நமது தேவையைப் பொறுத்து நமது மொழியைக் கூட தூக்கி எறிந்துவிட்டு கனடாவில் ஆங்கிலத்தையும்இ ஐரோப்பாவில் பிரெஞ்சு மொழியையும்இ ஜேர்மன் மொழியையும் அணைத்துக்கொண்டவர்கள் ஒரு சாதியை மட்டும் தூக்கிப் போட மனம் வருவதில்;லை’என்று தனது உரையில் குறிப்பிட்டார். 

navajothybaylon@hotmail.co.uk

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More