Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

கீழிறங்கும் கழுகுகள்

சேரன்

வட அமெரிக்கா ஐரோப்பா மற்றும் மேலைநாடுகள் எங்கும் அண்மையில் திரையிடப்பட்டு மில்லியன் கணக்காக வருமானம் பெற்றுவரும் Black hawk Down என்ற மாபெரும் திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்கத் தேசியவாதத்தையும் அமெரிக்க விசுவாசத்தையும் மூலகளமாகவும், மூலவளமாகவும் (கூடவே ஏராளமான பணத்தையும்) இட்டுப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு உலகெங்கும் வினியோகம் செய்யப்பட்ட இந்தப்படம் ஒக்டோபர் 3ம் திகதி 1993இல் சோமாலியாவின் தலைநகரான மொகாடிசுவில் அமெரிக்க சிறப்புப் படையினர் நிகழ்த்திய தாக்குதல் ஒன்றைப் பற்றியது.

வளமையாகவே holywood பெருந்தயாரிப்புக்கள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு இணக்கமாகவும் அமெரிக்க விசுவாசத்தை ஊறவைப்பதாகவும் அமெரிக்காவின் McDonald... Nike கலாசாரத்தை உலகெங்கும் பரப்புவதாகவுமே அமைந்து வருகின்றன. பெருநிதி நிறுவனங்களின் துணையும் அரசியல் பலமும் வல்லாட்சியும் இந்த கலாசார பண்பாட்டு மேலாதிக்கப் பரவலுக்கு ஒரு பிரதான காரணம். எனினும் செப்டெம்பர் 11 நியுயோர்க் வாசிங்டன் தாக்குதல்களுக்குப் பிற்பாடு அமெரிக்க அரசுக்கும் holywood பெரு முதலாளிமாருக்கும் இன்னும் அழமான கலாசார உறவுகள் ஏற்பட்டிருக்கின்றன. தாக்குதல்கள் இடம்பெற்றுச் சில வாரங்களின் பிற்பாடு holywood இன் எல்லா முக்கியமான தயாரிப்பாளர்கள்; நெறியாளர்கள் கதாசிரியர்களை புஸ் வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

அமெரிக்க தேசப்பற்றையும் வீரத்தையும் சித்தாpக்கும் உன்னதமான திரைப்படங்களைத் தயாரிக்கும்படியும் அமெரிக்காவின் கொள்கைகளை விமர்சனம் செய்யாத முறையிலும் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளைப் புண்படுத்தாத முறையிலும் இந்தப்படங்கள் அமைய வேண்டும் என்றும் புஸ் கோரியிருந்தார். இந்தக்கோரிக்கையின் விளைவாக அமெரிக்காவின் கனவு காசு) தொளிற்சாலை வரிசையாகப் படங்களைத் தருகிறது. Black hawk Downkk தொடர்ந்து Collakral Damage . ஏனையவை தொடரும். இதுவரை Military- Industrial-entertaiment Complex என்று வழங்கப்பட்டு வந்த அமெரிக்க விரிவாதிக்கத்துக்கு இப்போது நாம் வழங்கக்கூடிய பொருத்தமான பெயர் Military Industril -Entertaiment Complex என்பதாகும்.

ஓக்டோபர் 3 1993 சோமாலியாவில் என்ன நடந்தது என்பதையும் அச்சம்பவங்களின் பகைப்புலத்தையும் தெரிந்து கொள்வது Black hawk Down திரைப்படத்தின் அரசியலைப் புரிந்துகொள்ள மேலும் வழிசெய்யும். ஒக்டோபர் 3, 1993 அன்று சோமாலியாவின் தலைநகரில் தமக்குள் மோதிக் கொண்டிருந்த ஆயுதக்குழுக்களுள் ஒன்றின் தலைவர் முகமது ஹபரா அய்டீட் என்பவரை அல்லது அக்குழுவின் வேறு தலைவர்களைப் பிடிப்பதற்கென 160 அமெரிக்க சிறப்புப் படையினர் மொகடிசுவில் தரையிறங்க முற்பட்டனர். அவர்களுடைய முயற்சி முழுத் தோல்வியில் முடிந்தது. பதினெட்டு அமெரிக்கப் படையினர் கொல்லப் பட்டனர். எழுபத்தைந்து பேர் காயமடைந்தனர். ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். அமெரிக்க ராணுவத்தின் புகழ்பெற்ற Black hawk ஹெலிகொப்ரர்கள் நொருங்கி வீழ்ந்தன. 500-1000 வரையான சோமாலியப் பொதுமக்கள் அன்றிரவு தாக்குதலின் போது உயிரிழந்தனர்.

அமெரிக்கப் படையினரின் உடல்களை சோமாலிய மக்கள் தெருவில் இழுத்துச் சென்றதை கனடாவின் Toronto Star நாளேட்டின் நிருபர் போல் வற்ஸன் எடுத்த படத்துக்கு புளட்வர் விருது வழங்கப்பட்டது. சோமாலிய மக்களின் கோபததுக்கு என்ன காரணம்? பொதுவாகவே எந்த மக்களுக்கும் வெளிநாட்டுச் சக்திகளால் ஆளப்படுவது ஒவ்வாதது ஆகும். சோமாலியா மக்கள் மட்டும் இது விதி விலக்காக முடியுமா? எனினும் ஒக்டோபர் 3 அன்று நடந்தேறிய சம்பவங்களுக்கு குறிப்பான காரனங்களும் உள்ளன.

அதேவருடம் யூலை மாதம் 12ம் தேதி அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் அவையும் பரா அய்டீட்டின் மீது தாக்குதல் தொடுத்திருந்தனர். அய்டீடின் குலக் குழுமமான ”Trib habr Gidr ” மக்களின் ஒன்று கூடல் ஒன்றின் போது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியிருந்தன. இக்குலக் குழுவின் முதியோர் எழுத்தாளர்கள் கவிஞர்கள் புத்திசீவிகள் எனப் பலவகையானோர் ஒன்று திரண்டிருந்த கூட்டத்தின்மீது அமெரிக்கப் படையினரின் Cobra ரக ஹெலிகொப்ரர்கள் பதினாறு வுழற ஏவுகணைகளையும் 2000 சிறு பீரங்கிக் குண்டுகளையும் ஏவின என்று Washington post நாளேடு தெரிவித்திருந்தது. ஏவுகணைத் தாக்குதலுக்கு முன்பாக கூட்டம் நடைபெற்ற மாடியின் படிக்கட்டுகளை ஹெலிகொப்ரர்கள் தாக்கி அழித்திருந்தமையால் எவருமே தப்ப முடியவில்லை. நூற்றுக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட இக்கூட்டம் அமெரிக்கா முன்மொழிந்திருந்த சமாதானத் திட்டத்தை பரிசீலனை செய்வதற்கெனவே கூடியது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

சோமாலியாவின் பிரச்சினைகளுக்கும் அனர்த்தங்களுக்கும் மூலகாரணங்களில் ஒருவரான சர்வாதிகாரி Siad Barre யின் கொடுங்கோலாட்சியைத் தொடர்ந்து ஆதரித்து வந்தது அமெரிக்கா. ஆண்டுக்கு 50மில்லியன் டொலர்கள் வரை Siad BarrefF ஆயுத உதவியை அமெரிக்கா வழங்கி வந்தது. இதற்கு ஐக்கிய நாடுகள் அவையின் அப்போதைய செயலாளர் நாயகம் புட்ரஸ் புட்ரஸ் காலியும் ஆதரவாக இருந்தார்.






சோமாலியாவின் பொருளாதாரச் சிக்கல்களுக்கு வேறு காரணமும் இருந்தது. 80களில் சர்வதேச நாணய நிதியம் (IMF) சோமாலியாவில் அமுல்படுத்த நிர்ப்பந்தித்த கொள்கைகள் நாட்டின் வறிய மக்களையே பெரிதும் பாதித்தது. போதாதற்கு வரட்சியும் சேர்ந்துகொ



ண்டது. கிராமப் புறங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் படித்தோர் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்தனர். ஏராளமான குழந்தைகள் பட்டினியால் இறந்தன. ஒரு காலைச் சாப்பாட்டை விட ஒரு மெஷின் துப்பாக்கியை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது. பத்து வயது குழந்தைகள் எ.கே.-47 துப்பாக்கிகளுடன் தெருவில் நடை பயில்வது சாதாரணமான விடயமாகி போய்விட்டது.

ஓக்டோபர் 3, 1993 அன்று பிடிபட்ட அமெரிக்க படையினருக்கு நடந்த அவலத்தை மட்டுமே சித்தரிக்கிற Black hawk Down திரைப்படம் அதன் நெறியாளர் சொல்வது போல அரசியல் அற்ற படம் அல்ல. அந்தப் படத்தில் வரும் ஒரு அமெரிக்கப் படையாள் சொல்வதை இங்கு குறிப்பிடலாம்:

முதலாவது குண்டு உன்னுடைய தலைப்பக்கமாக ஊடுருவிக்கொண்டு போன அந்தக் கணமே அரசியல் அதுமாதிரியான எல்லா...... வரும் வெளியே பறந்துவிடும்.இந்தப் படத்தின் அரசியலும் இதுதான் குறுகிய காலக் கண்ணேட்டத்தில் கொடுங்­ கோ­லரையும் கொலையாளிகளையும் நண்பர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் ஏற்று ஆதரித்து வருகிற அமெரிக்கக் கொள்கை ஜனநாயகத்திற்கும் மனித விழுமியங்களுக்கும் உதவாது. சிறு ஆயுதங்கள் கண்ணிவெடிகள் துப்பாக்கிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வது என்பவற்றைத் தடைசெய்வதையும் கட்டுப்படுத்துவதையும் அமெரிக்காவின் துப்பாக்கி விற்பனையாளர்கள் சங்கம் அவர்க­ளுடைய பலமான பெருநிதி நிறுவ­னங்­களும் அனுமதிக்கப் போவதில்லை.

இவர்கள்தான் ஜோர்ஜ் புஸ்சுக்கும் அவரு­டைய குடியரசுக் கட்சிக்கும் மிக அதிக அள­வில் பணம் வழங்குபவர்கள். இவர்களுடைய பலம் நீடிக்கும் வரை உலகளாவிய எந்த சமாதான உடன்படிக்கைக்கும் அமெரிக்க அரசு ஒத்து வராது. மாறாக எங்களுக்குக் கிடைப்­பது என்னவென்றால் அமெரிக்க தேசியத்தையும் அமெரிக்க விசுவாசத்தையும் கொண்டாடுகிற holywood திரைப்படங்கள். அவற்றைப் பார்த்து அப்படியே பிரதிபண்­னுகிற Bolywood மற்றும் தமிழ் திரைப்படங்கள்.

நூல் விமர்சனம்

மூன்றாவது மனிதன்
மூன்றாவது மனிதன் 14வது இதழ் வெளிவந்திருக்கிறது. இலங்கையிலிருந்து இப்போதைக்கு நம்பிக்கை தரக்கூடிய சஞ்சிகையாக இருப்பது இது. சரிநிகர் போன்ற பத்திரிகைகளும் நின்று போன நிலையில் தீவிர எழுத்தாளர்கள், இலக்கியத் தரப்பினருக்கு கைகொடுத்திருப்பதும், ஆறுதல் தந்திருப்பதும் ”மூன்றாவது மனிதன்” என்றால் அது மிகையில்லை. மூன்றாவது மனிதன் பதிப்பகமாக பிறப்பெடுத்த நாளிலிருந்து இதுவரை நல்ல அரிய படைப்புகளை நூலாக கொண்டுவந்தபடி இருப்பது இலங்கை தமிழ்ச் சூழலில் ஒரு ஆரோக்கியமான நிலை.
Editor, 37/05, Vouxuall Lane, Colombo-02, Sri Lanka 3man@sltnet.lk
உயிர்நிழல்
"உயிர்நிழல்" ஐரோப்பாவில் பல சஞ்சிகைகளும் நின்று போன நிலையில் நம்பிக்கை தரக்கூடிய சஞ்சிகையாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகையாகும். 20வது இதழ் அண்மையில் வெளிவந்தது. வழமைபோல மிகுந்த விவாதங்களை ஏற்படுத்துகின்ற கட்டுரைகளை உள்ளடக்கியிருக்கிறது. இணையத்தளத்திலும் உயிர்நிழல் கட்டுரைகள் இப்போது கிடைக்கின்றன. ஈழத்திலிருந்தும், தமிழகத்திலிருந்தும், புகலிடத்திலிருந்தும் பல எழுத்தாளர்களின் எழுத்துக்களை இது வரை வெளிக்கொணர்ந்திருக்கிறது உயிர் நிழல். புகலிட சூழலில் இருந்து வெளிவரும் சஞ்சிகையாக பலராலும் அறியப்பட்டிருக்கும் உயிர்நிழல் அதன் தொடர்ச்சியை பேணிக்கொண்டிருப்பது ஒரு ஆறுதல்.
EXIL, 27 Rue Jean Moulin, 92400 Courbevoie, France EXILFR@aol.com பால்வினைத் தொழிலாளர்
வருடாந்தம் நடத்தப்படும் புலம்பெயர்ந்த தமிழ்ப் பெண்களின் சந்திப்பு இம்முறை யேர்மன் கார்ல்ஸ்ட்ரூவாவில் நடைபெற்றிருக்கிறது. இம்முறை சந்திப்பில் 7வது பெண்கள் சந்திப்பு மலர் வெளியிடப்பட்டிருக்கிறது. வழமைக்கு மாறாக ”பால்வினைத் தொழிலாளர்கள் பற்றிய சிறப்பிதழாக வெளிக் கொணர்ந்திருப்பது சிறப்பு. மிகுந்த தரமான அட்டைப்பட வடிவமைப்பும், உள் வடிவமைப்பையும் கொண்ட இவ் இதழ் இது வரை வெளிவந்த மலர்களிலிருந்து மாறுபட்டதாகும். இம்முறை இதனை பெண்கள் சந்திப்பு மலர் குழுவில் அங்கம் வகிக்கும் பிரான்ஸிலிருந்து வெளிவரும் ”உயிர் நிழல்” ஆசிரியர் லக்ஸ்மியும், நோர்வேயிலிருந்து வெளிவரும் ”சக்தி” இதழின் ஆசிரியர் தயாநிதியும் தொகுத்திருக்கிறார்கள்.
Tamil Women's Forum C/o, SALZ, Waliblingerstr. 59, 70372 Stuttgart, Germany
அசை
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின் வெளிவந்திருக்கும் ”அசை” எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அதிக காத்திரமான கட்டுரைகளை தாங்கி வெளிவந்திருக்கிறது. இலங்கையில் சிலர் ”ஒரு வருடத்துக்குப் போதும்” என்று கூறியதையும் கேட்கக்கூடியதாக இருந்தது. அசையின் வருகை வரண்டு போயுள்ள தமிழ் புலமைத்துவ உரையாடலுக்கு ஒரு நம்பிக்கை என்று சொன்னால் அது மிகையாகாது. பல சிரமங்களோடு வெளிக்கொரணப்பட்டிருக்கும் அசை அதன் தொடர்ச்சியை பலரும் எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை. 150 பக்கங்களைக் கொண்ட ”அசை” வருடத்திற்கு இரு முறை வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் அது காலாண்டு இதழா மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக அறியக்கிடைகிறது.
Ashok Yogan Assaie, 45 Rue Davy, 75017 Paris, FRANCE Assaie@hotmail.com

வீரயடி

எல்லாமே முடிந்து அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள்... தியாகு செய்ய வேண்டிய கடமைகள் முடிந்தவுடன் அவனை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீடுவந்திருந்தான் பிரபு. தாய், மரணித்த செய்தி தியாகுவிற்கு சொல்லப்பட்டதும் லண்டனிலிருந்து உடனே பயணித்துவிட்டான் அவன். நான்கு வருடங்களுக்கு முன்பு தன் தந்தையின் மரணத்திற்கு கூட அவனால் செல்ல முடியவில்லை. அப்போது அவனுக்கு பயணிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இப்போது தாயின் மரணத்திற்காவது தான் சென்று தன் கடமைகளைச் செய்யவேண்டும் என்று துடித்ததினால் புறப்பட்டுவந்து இறதிக் கடமைகளை முடித்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்திருந்தான். மயானத்திலிருந்து அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள்..? ஊரிலுள்ளவர்கள்-உறவினர், நண்பர்கள்... எல்லோரும் வந்து தியாகுவின் வீட்டில் நின்றிருந்த மாமரங்களின் நிழல்களின் கீழ் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொள்கின்றார்கள். அவர்களுக்கு சுடச்சுட கோப்பி, பால்த்தேனீர், சிகரெட், சுருட்டு, பீடி, வெற்றிலைப்பாக்கு போன்றவை கொடுக்கப்படுகின்றன. இரவுச்சாப்பாடுகள் உறவினர் சிலரால் கொண்டுவரப்படுகின்றன. பெரிய வீடு. வீட்டோடு சேர்ந்த விசாலமான முன்பிளெட். எல்லாத் திசைகளிலும் பளீரென்ற மின்சார ஒளி. தியாகு நான் சாகிறதுக்கிடையில பெரிய வீடு ஒன்று கட்டிவிட்டுத்தான் சாவேன்” என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. அப்பிடிப்பார்க்கும்போது அப்பாவின் ஆசை நிறைவேற்றப்பட்டிருக்கின்றதென்று தியாகு எண்ணிக்கொண்டான். வருடங்களுக்குப் பின்பு பார்க்கும் முகங்கள். எல்லாம் தியாகுவிற்கு பரிட்சயமான முகங்களாகவே தெரிந்தன. சிலரைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான். பலர் தங்களைத் தாங்களாகவே வந்து அறிமுகம் செய்து கொண்ட பின்பே அவனால் ஊகிக்க முடிந்தது. ஒன்று இரண்டு வருடங்களா? பதினேழு வருடங்களுக்குப் பின்பு அல்லவா அவனால் பிறந்த மண்ணை மிதிக்க முடிந்தது. மரண வீட்டுக்கு வந்த பலபேர், தியாகுவைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே வந்தவர்கள். அவர்கள் எல்லாம் அவனைச் சந்தித்து விடைபெற்றபோது தியாகு மிகவும் வருந்தினான். அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு ஜெர்மனிய பழமொழி நினைவுக்கு வந்தது. ”பகிர்ந்து கொள்ளப்படும் இன்பம் இரட்டிப்பாகின்றது., பகிர்ந்துகொள்ளப்படும் துன்பம் பாதி குறைகின்றது.” இதில் அவன் எதை எடுத்துக்கொள்வது? ஊரவர், உறவுகளைக் கண்ட இன்பத்தையா? அல்லது தாயை இழந்து நிற்கும் துன்பத்தையா? நிலை தடுமாறி நின்று கொண்டு, தன்னிடம் வந்து விடைபெற்றுச் செல்பவர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிக்கொண்டிருந்தான். விநாயகபுரத்து பிரதானவீதியில் முதலாவது வீடு. பெரிய வளவு. தென்னை மரங்களும், மாமரங்களும் நிறைந்த விசாலமான வளவு. இருபது வருடங்களுக்கு முன்பு, இளம்பிள்ளைத் தென்னைகளாக இருந்தவையெல்லாம், நெடிந்துயர்ந்து குலைகாட்டி அழகாகக் காட்சியளித்தன. தியாகு ஆசையோடு அக்கரைப்பற்று சந்தையில் வாங்கிக்கொண்டு வந்து நட்ட ஒட்டுமாமரங்கள், கறுத்தகொழும்பானும், பிலாட்டும் நன்றாக கிளைவிட்டு, பரந்து கிடந்தன. மெயின் றோட்டுக்கு எதிரேயிருந்த சின்னத்தோட்டம், அங்கே இருந்த பங்களா, ஒன்றுமே இப்போது அங்கே இல்லை. தியாகுவின் அப்பாவின் கடை. கடைக்குமுன் வீதியோரம் நின்றிருந்த வீரமரம் எதுவுமே இப்போது இல்லை. தியாகுவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தபொழுது. கையில் கோப்பிக் கிண்ணத்துடன் வந்தான் பிரபு. பிரபு, தியாகுவின் பள்ளித்தோழன். அவ்வப்போது ஊரைப்பற்றி தியாகுவிற்கு கடிதம் எழுதுபவன். ”என்ன தியாகு உனக்கு எல்லாம் ஆச்சரியமாக இருக்கின்றதா? எல்லாம் மாறிப் போச்சுடா. காலம் காலமாக நாம் வாழ்ந்த மண் இப்போது கோலம்மாறி போச்சி. சோத்துப்பாட்டுக்கே பெரிய பாடாக இருக்கு. புழைப்பு நடத்த சனங்களுக்கு ஒரு வழியுமில்ல.”பிரபு சொல்லிக்கொண்டே, தன் கையிலிருந்த கோப்பிக் கிண்ணத்தை தியாகுவிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட தியாகு, ” பிறகு ஏண்டா இப்படி..” என்று கேட்பதற்கு முதலே, பிரபு பதில் சொல்ல முந்திக் கொண்டான்.”எல்லாம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கஸ்டமான நிலைதான் காரணம். சொந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ முடியாதநிலை. வயிற்றுப்பசிக்கு அன்றாடம் தொழில் பார்த்தவர்கள் கூட, அரைவயிறு கஞ்சிக்கே வழியின்றி அவதிப்படுகின்றார்கள். கடற்தொழில் செய்வது கூட கஸ்டம். ஆற்றில் மீன்பிடிப்பதற்கு கட்டுப்பாடு. வேளாண்மை, பயிர்ச்செய்கை எல்லாம் செய்கை பண்ண முடியாத நிலை. ஒரு கடை கண்ணிவைத்து வியாபாரம் பண்ணத்தடை. இப்படி எல்லாமே முடக்கிவைக்கப்பட்டிருக்கும் போது, ஊரில் பசியும், பஞ்சமும் தலைவிரித்ததாடாமல் என்ன செய்யும். ஏதோ உனக்கு நல்ல காலம். உன் தலையெழுத்து நல்லாயிருந்ததால் ஊரைவிட்டுப்போயிட்டாய். நாங்கள் பட்ட, படுகின்ற கஸ்டங்கள் உனக்குத் தெரியாது. ””ச்சே! ச்சே!! அப்படிச் சொல்லாதே பிரபு. தாய், தந்தையையும் தாய் மண்ணையும் விட்டுப் பிரிந்து போய் அந்நிய மண்ணில் அகதிகளாக வாழ்கின்ற கொடுமையை நான் அனுபவித்தவன். இந்த மண்ணின் வாசத்தையும் புழுதி மணத்தையும், செக்கச் செவேலென்று செம்பருத்தி பூத்திருக்கும் என் வீட்டு முற்றத்தையும் இழந்த குற்ற உணர்வு எனக்கு உண்டு. ஏதோ ஒரு வேகத்தில் தாய் மண்ணைப் பிரிந்து போனது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த பிரிவு தந்த துன்பம், துயரம் இருக்கே.. அது மிகக் கொடியது. அதை நான் இந்த பதினேழு வருடங்களாக அனுபவிக்கின்றேன். தாய் நாட்டின் சேதிகள் நாற்தோறும் கேட்டு, கண்கள் குளமாகி நெஞ்சம் தடுமாறி, எப்போ எமக்கு விடியல் வரும் என்று ஏங்கி விம்மி வெதும்பி தூக்கமின்றி துடிதுடித்த இரவுகள் ஏராளம்..””தம்பி.. தியாகு.. இங்க வாராசா.. உன்னைப் பார்க்க சோட்டையா இருக்கு.. எவ்வளவு காலம் மனே உன்னைப் பாத்து..” நான் குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்தேன். தங்கமணி மாமி... வீட்டினுள்ளே நின்று கூப்பிட்டுக் கொண்டிருந்தா. பிரபுவை கூட்டிக்கொண்டு உள்ளே வந்தேன், தங்கமணி மாமியின் அருகில் சென்றதும். அவர் கட்டிப்பிடித்து ஓவென்று ஒப்பாரி வைச்சுட்டா. சற்று நேரத்திற்குப் பின் அது அடங்கியதும்.. அந்த மகராசி இருக்கும் வரைக்கும் அடிக்கடி இந்த வீட்டுக்கு வந்துபோவேன். இனி ஆரு இருக்கா.” தங்கமணி மாமி மூக்கைச் சிந்தி அம்மாவின் பாசத்தை, பிரிவை சொல்லச்சொல்ல, இவ்வளவு நேரமும் என்னுள் அடக்கி வைக்கப்பட்டிருந்த துக்கம் தொண்டைவரை வந்து, 'ஓவென்று நானும் அழுதுவிட்டேன். ”அழுராசா.. நல்லா அழுதிடு.. வாய்விட்டு அழுதிடு... உங்கம்மா உன்னை ஏழு வயசுவரைக்கும் இடுப்பிலே தூக்கிச் சுமந்தவள். வயல் என்றும், வரப்பென்றும் ஆண்வேலையும், பொண்வேலையும் செய்து, உன்ர அப்பனுக்கு துணையா இருந்தவள். நான் இங்க வரும்போதெல்லாம் 'தம்பி கடுதாசி போட்டிருக்கான் மச்சாள். காசி அனுப்பியிருக்கிறான் மச்சாள்' எண்டு சொல்லி சுடச்சுட குடிக்க தேத்தண்ணி தந்து, வாயிலபோட வெத்தில பாக்கும் தந்து அனுப்பும் அந்த சீவன் போயிட்டாளே... இனி நானெல்லாம் எதுக்கு கிடந்து கஸ்டப்படணும்.. என்ர ஆசை மச்சாள் என்னையும் கூட்டிக்கோடீ..” என்று அம்மாவின் மேல் தான் வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்திய

போது என் மனம் கனத்தக்கொண்டது. ஒரு நிமிட நேர நிசப்தம் நிலவியது. ”தியாகு! நான் புறப்படுறன் ஆறு மணிக்கு மேல சென்ரிப் பொயிண்டைத் தாண்டிப்போக விடமாட்டாங்கள் அவங்கள். பிரயாணத்தால் வந்த உடல் களைப்பு அத்தோடு மனக்களைப்பு என்று சோர்ந்து போயிட்டாய். படுத்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள். நான் காலையில வந்திடுறன்” என்று என் காதோரம் சொன்னான் பிரபு. நான் அவனை வழியனுப்பிவிட்டு ஹோலுக்குள் வந்தபோது மருமகள் மலர்விழி சொன்னாள் ”மாமா உங்களுக்கு சாமி அறைக்குள் கடுக்கை போட்டிருக்கு. சாப்பிட்டுட்டு தூங்கிடுங்க” என்று. ”இல்ல.. எனக்கு ஒண்ணும் வேண்டாம். சரி நான் பாத்திக்கிறன்.” என்று அவளை அனுப்பி விட்டு சாமி அறைக்குள் நுழைந்தேன். அப்பாவின் நிழற்படம் சாமிபடங்களுடன் சேர்ந்திருந்தது. அதற்கு சந்தணமாலை, அணிவிக்கப்பட்டிருந்தது. மண்டியிட்டு வணங்கிவிட்டு படுக்கையில் சாய்ந்தேன். தூக்கம் வரவில்லை. நெஞ்சு நிறை துக்கம் இருந்தது. அப்பாவின் கம்பீரமான உருவம், அகன்ற நெற்றி, அள்ளிப்பூசிய விபூதி, கபடமில்லாத சிரிப்பு, அத்தனையும் என் கண்முன் நிழலாட, அம்மாவின் ஆவி சுற்றிச்சுற்றி வந்து என்னை தழுவிக்கொள்வதைப் போல் ஒரு பிரமை. எந்தவித பிரக்ஞையுமில்லாமல் கண்களை மூடிக்கொண்டேன்... அப்பாவும் அம்மாவும் அன்பாக வாழ்ந்தவர்கள். நான் அறிந்தவகையில் அவர்கள் ஒரு போதும் ஒரு பிரச்சினையும் பட்டதில்லை. மனத்தாங்கல் கூட ஏற்பட்டதில்லை. ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு அன்பாக வாழ்க்கை நடத்தினார்கள். ஒருவரைவிட்டு ஒருவர் ஒரு நாள் கூட பிரிந்திருந்ததில்லை. அவ்வளவு அந்நியோன்யம் அவர்களுக்கிடையே இருந்தது. வயல் விதைப்பு, அறுவடை, சூடுமிதிப்பு என்று எல்லா வேலைகளிலும் அம்மா, அப்பாவுடன் இணைந்தே இருந்தா.விநாயகபுரத்து வீரயடிக்கடை என்றால் பக்கத்து ஊர்க்காரர்களுக்கும் தெரியும். அதிகாலை நான்கு மணிக்கே அம்மா எழுந்து கடைவாசல் பெருக்கிவிட்டு கைகால் அலம்பி சாமி கும்பிட்டுவிட்டுவந்து பொயிலருக்கு கரிபோட்டு தண்ணியை சூடாக்கி விட்டு அப்பாவை எழுப்பிவிடுவா. ”இஞ்சாருங்கோ! எழும்பயில்லையே.. இக்கணம் பால்க்காரக் கந்தண்ணர் வந்து கூப்பிடப்போறார்... எழும்பயில்லயே...””ம்ம்..ம்.. நான் முழிச்சிட்டுத்தான் படுத்திருக்கிறன்.” என்று அப்பா எழுந்து கொள்வார்.”நீயென்ன நேரத்தோட எழும்பிட்டியாக்கும்” அப்பா கேட்பார்.”இரவு முழுக்க நான் கண்ணோட கண் மூடவே இல்ல. இவன் தம்பி படுக்கிற அறைக்குள்ள சரியான நுளம்பு. அவன் யன்னலைத் திறந்து போட்டு படுத்திட்டான் நல்லா கடிச்சித் தின்றிருக்குமே.””ஓமெண்ணுறன். பிறகு நான் உரிமட்டை பற்றவைச்சு அதில வேப்பமிலைகளைப் போட்டு புகைச்சு அறை முழுக்க பிடிச்சபிறகுதான் நுளம்புகளும் கலைஞ்சது. தம்பியும் அதுக்குப் பிறகுதான் படுத்தான்.””இரவு காத்தே இல்ல. ஒரு கொத்துக்குழைகூட உசும்பயில்ல. காத்திருந்தா நுளம்பு காலைஞ்சு போயிருக்கும்”எ ன்று சொல்லிக்கொண்டே முகம் கழுவி, சாமி கும்பிட்டு கடைதிறக்கும் அலுவலில் இறங்குவார். வீட்டோட கடையும் அமைந்திருந்ததால், கடையிலிருந்து வரும் சாம்பிராணி புகை வாசமும் ஊதுபத்தி மணமும் நித்தரையில் இருக்கும் எனக்கு இதமாக இருக்கும். இடைக்கிடையே அப்பாவின் பேச்சுக்குரல் கேட்கும்.” வா... வா... குஞ்சித்தம்பி. என்ன விதைச்சுப்போட்டியோ?””அத என்னத்தக் கேக்கிற ராசண்ணே... முதல்ல காப்போத்தல் பால் தாங்கோவன்” ”சரி.. சரி இந்த சுடச்சுடக் குடிராப்பா.. உன்ர விதைப்பாடு எப்படிப் போச்சு...””இண்டைக்கு எண்டிருந்தது. அதுவும் முடியல. அடைமழை புடிச்சு தெண்டால் ஒண்ணும் பண்ண முடீயாது. எப்படியும் பத்துமணிக்கு மேலதான் மெசின் எவரும்” ஏண்டாம்பி. நீ கணபதியண்ணன்ட மெசினுக்குத்தானே காசகட்டினதாச் சொன்னாய். அந்தாள் கண்டபடி நிறையப்பேரிட்ட காசுவாங்கிப் போட்டு இண்டைக்கு நாளைக்கு எண்டு சொல்லுற மனிசனில்லையே... நானும் அவர்ர மெசினத்தான் அஞ்சி வருசமா புடிச்சு வயல்வேலை பாக்கிறன்.” ”ஓமண்ணே அவர் நல்ல மனிசன்தான். என்ர போதாத காலம் நேற்று விதைச்சுக்கொண்டிருந்த மெசின்ர ” அக்சல்” உடைஞ்சு போட்டுதாம். அதை இனி அக்கறைப்பற்றுக்கு கொண்டுபோய் வால்டிங்பண்ணிக்கொண்டு வர நேரமாயிடும். அதுதான் நான் கொஞ்சம் வெள்ளண்ணேயே பூமிக்குள் போனால் வக்கடையள வெட்டிக்கிட்டி ஆயத்தபடுத்திறநேரம் மெசினும் வந்திடும்.”இந்த கிழமைக்குள்ள விதைச்சு முடிச்சிரவேணுமெண்டு வட்டானை சொல்லிப் போட்டார்.” ”ஓம் ஓம் பிறகு முந்தி விதைச்சவன்ர வயலுக்குள்ள முளைகிளம்பினா அவன்ர வயலுக்குள்ளால மெசின்கொண்டுபோக விடமாட்டானுகள். எனக்கு றோட்டோரப் பூமி என்றபடியால் இந்தப் பிரச்சினையே கிடையாது...” என்று சொல்லுவார் அப்பா. அப்பாவுக்கு றோட்டோரப் பூமி என்று சொல்லிக்கொள்வதில் மிகப்பெரிய சந்தோசம் இருந்தது. மெயின்றோட்டைவிட்டு இறங்கிகால் வைப்பது அவர் தனது வயலுக்குள்தான். தான் வாலிப வயதில் காடுவளைந்து வெட்டி, பிறகு நாட்டுக்கட்டை, வேர் பிடுங்கி காணியாக்கிய கதைகளை மிக சுவாரஸ்யமாகச் சொல்லுவார்.

தண்ணிபாய்ச்சும் போதோ அல்லது உரம் எறியும் போதோ அப்பாவுக்குத் துணையாக நான் போவதுண்டு. அம்மா மத்தியானம் சோறு சமைச்சி பனையோலைப் பெட்டியில் சுடச்சுடப்போட்டு இறுக்கிக்கொண்டு கீரிமீன்கருவாட்டோடு உருளைக்கிழங்கும் போட்டு குளம்பு வைச்சி மரவள்ளிக் கிழங்கும் தக்காளியும் போட்டு சொதி வைத்தெடுத்து, தபால் பஸ்சில் வந்து இறங்குவா. அம்மாவை கண்டதும் உரம் அள்ளிக்கொடுத்துக்கொண்டிருந்தாலும், அதை அப்பிடியே வரம்பில் வைத்துவிட்டு ஓடிக்சென்று சோற்றுப்பெட்டியை தூக்கிக்கொண்டு வந்து, வயலின் நடுவில் நின்ற வேப்பமரநிழலில் வைத்துவிட்டு, அப்பிடியே வயலின் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் கைகால் கழுவி வந்து அம்மா பரிமாற அப்பாவுடன் அமர்ந்து சாப்பிடும் போது ஏற்படும் சந்தோசம் இருக்கே.. அதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. மகா அற்புதமான அனுபவங்கள்... அதிகாலை வேளையில் அப்பாவின் கடையில் ஒரே சத்தமும் சந்தடியுமாக இருக்கும். ஆனேகமான ட்ராக்டர்கள், வண்டில்கள் எல்லாம் அவரின் கடையில் வந்து நின்று அப்பம் இடியப்பம் சாப்பிட்டு, பால், தேத்தண்ணி குடித்து, பீடி, சுருட்டு, வெத்திலை பாக்கு வாங்கி வயல்கட்டுக்கு போய்க்கொண்டே இருப்பார்கள்.விடிந்தவுடன் வேறு ஒரு சுறுசுறுப்பு வீரயடிக்கடையில் உருவாகும். அக்கரைப்பற்றிலிருந்து முஸ்லிம் மீன் வியாபாரிகளெல்லாம் சைக்கிளில் பெட்டிக்கட்டிக் கொண்டும், கார்களைவாடகைக்கு அமர்த்திக்கொண்டும் வந்து சேர்ந்து விடுவார்கள். கோரைக்களப்பு ஆற்றில் பிடிக்கும் இறால், மீன், நண்டு என்றால் ஏகப்பட்ட கிராக்கி. எல்லாம் மொத்தமாக வாங்கிக்கொண்டு போவது இந்த வியாபாhpகளின் வழக்கம். இனி வீட்டுத் தோட்டம் செய்பவர்கள் கொண்டுவரும் காய்கறிகள், வெடிக்காரத் தம்பியர் சுட்டுக்கொண்டுவரும் மான் இறைச்சி அல்லது மரை இறைச்சி, குறவர் வாடியிலிருந்து வரும் காட்டுப்பன்றி, உடும்பு போன்ற இறைச்சி வகை, இனி கோமாரித்தேன், கஞ்சிகுடிச்சாறு, கருவாடு என்று பொருட்கள் வந்து சங்கமமாகும் இடம்தான் அப்பாவின் வீரயடிக்கடை. காலையில் அம்மா கடையைப் பொறுப்பேற்றவுடன் அப்பா தனது கொமிசன் வியாபாரத்தில் இறங்கிவிடுவார். ஊரிலுள்ள குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு முற்பணம் கொடுத்து வைத்திருப்பார். அவர்களிடம் இருந்து வாங்கி அப்படியே முஸ்லிம் வியாபாரிகளுக்கு கைமாறிவிடுவார். அனைத்து வியாபாரிகளும் ராசண்ணன் என்று அவரில் மரியாதையும், மதிப்பும் வைத்திருந்தார்கள்... அவ்வளவு பிரபல்யமான அந்த வீரயடிக்கடை, நான் இன்று காலையில் வந்து இறங்கிய போது இருந்தஇடம், அடையாளம் எதுவுமே தெரியவில்லை. வீரமரமும் இல்லை. அங்கு கடையுமில்லை...போரின் அனர்த்தத்தினால், அவர்கள் எரித்துச் சாம்பலாக்கிவிட்டார்களாம். அந்த அதிர்ச்சி தாங்காமல் தான் அப்பா படுக்கையில் விழுந்து, பின்பு உயிரை விட்டவர். இப்போது என் அம்மா...அப்பாவின் மூச்சு இருக்கும் வரைக்கும், அம்மா உறுதியாக இருந்தா. அவருக்குப் பிறகு அவ மிகவும் உடைஞ்சுபோய் இன்று எல்லோரையும் விட்டுச் சென்று அப்பாவுடன் சேர்ந்துகொண்டார். இப்போது நான் அவர்கள் இருவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். என்னைச் சுற்றுச் சுற்றி வந்த அம்மாவின் ஆவியுடன், இப்போது அப்பாவும் சேர்ந்துகொண்டார். இருவரும் என் முகவாயை பிடித்து, தொட்டுக் கொஞ்சுவது போல் ஒரு பிரமை எனக்கு...”மாமா! மாமா! எழும்புங்கோ.. எழும்பி வாயலம்பிட்டு கோப்பி குடியுங்கோ” என்று மருமகள் மலர்விழி எழுப்பும் சத்தம் கேட்டுத்தான் கண்விழித்துக்கொண்டேன். அத்தோடு அம்மாவின் எட்டாஞ்சடங்கு முடிந்தவுடன் நான் லண்டன் திரும்பியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பது தான் என் நெஞ்சை நெருடுகிறது.... கோவிலூர் செல்வராஜன்-

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More