Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

Showing posts with label சரவணன். Show all posts
Showing posts with label சரவணன். Show all posts

இலங்கையில் அருந்ததியர் நிலை - என்.சரவணன்

சரிநிகரில்18 வருடங்களுக்கு முன்னர் அருந்ததியன் என்கிற பெயரில் தொடராக எழுதி வந்த குறிப்பை மாந்திருக்க மாட்டீர்கள். அருந்ததியர் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால். சென்ற முறை இலங்கை பயணம் பல கூட்டங்கள், சந்திப்புகள், செயற்பாடுகளால் மீண்டும் அவை புத்துயிர்ப்பு பெற்றுள்ளன. இம்முறை ஒரு மாநாட்டுக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
லண்டன் இலக்கிய சந்திப்பில் எடுத்த தலைப்பை முழுமையாக பேச நேரம் போதவில்லை. 20 நிமிடங்களில் என்னத்தை சொல்ல...? ஆனால் அந்த சந்தர்ப்பத்தை எடுத்துக்கொள்வது தான் எங்களுக்குள்ள வழி
Video streaming by Ustream

தலித் பெண்ணியம்: எல்லோருக்கும் "ஒன்று" என்பது சுத்த அபத்தம்! - ரூத் மனோரமா

நேர்காணல் - என்.சரவணன்

சர்வதேச மனித உரிமைகள் சாசனம் 50 வருடங்களாக உலக மனித உரிமைகளைப் பேணி வருகிறதாம். இந்தியா அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று 50 வருடங்களையும் அடைந்து விட்டதாம். ஒவ்வொரு மணித்தியாலமும் இரண்டு தலித்துகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தினமும் 3 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தினந்தோறும் 2 தலித்துகள் கொல்லப்படுகின்றனர். ஒவ்வொரு தினமும் இரண்டு தலித் வீடுகள் அழிக்கப்படுகின்றன.

தலித்தியப் போராட்டமானது இன்றைய சூழலில் தவிர்க்க இயலாததும், காட்டமானதுமாக பரிணமித்துவிட்டிருக்கிற நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் செயற்பட்டுவரும் பல்வேறு தலித் இயக்கங்களும் ஒன்று சேர்ந்து 1998 10-11 ஆகிய தினங்களில் கூடி தலித் மக்களின் மனித உரிமைகளுக்கான தேசிய செயற்திட்டம் ஒன்றை வரைந்தன. அதனை சென்ற வருடம் (ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் 50வது வருட பூர்த்தி தினமான) டிசம்பர் 10 அன்று தொடக்கம் (அம்பேத்கார் பிறந்த தினமான) 14 ஏப்ரல் 1999 வரையான காலத்திற்குள் உலக அளவில் தலித் மக்களின் பிரச்சினைகளின் பால் கவனத்தை ஈர்ப்பதற்கும், தலித் மக்களின் அவலங்களையும் உரிமைகளையும் பற்றி பிரசாரப்படுத்தும் காலமாகப் பிரகடனப்படுத்தி செயற்பட்டனர். தலித் விஞ்ஞாபனம், தலித்களின் உரிமைகளும் மனித உரிமைகளே எனக்கூறும் தலித் மனித உரிமைகள் சாசனம், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், கையெழுத்து சேகாpப்பு, இந்திய அரச தரப்பினருக்கு விதந்துரைக்கவென கோரிக்கைகள் என பல்வேறு ஆவனங்களை உள்ளடக்கிய ஒரு கோவையையும் விநியோகித்து வருகின்றனர். ஐநாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையில் ”மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களாகக் கருதி” தலித் மக்களின் பிரச்சினைகளை ஐ.நாவில் பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படியும், இப்பிரச்சினைகளுக்கென விசேட ஐ.நா அறிக்கையாளர் (Special Rapporteur ) ஒருவரை நியமிக்கும்படியும் கோரியுள்ளனர். இப்பிரச்சாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வந்து ஒரு கூட்டத்தையும் ஒழுங்கு செய்திருந்தனர். இலங்கையில் இனத்துவ கற்கைக்கான சர்வதேச நிலையத்தினர் இதனை ஒழுங்கு செய்திருந்த போதும் இது ஒரு சில ”புத்திசீவிகள்” மட்டுமே கலந்து கொண்ட நிகழ்ச்சியாக குறுகிப்போனது வேறுவிடயம்.

தலித் மக்களின் பிரச்சினைகளையும் அப்போராட்டங்களை ஒன்றிணைக்கும் பணியாகவும், மேற்கொள்ளப்படுகின்ற இந்த முயற்சியில் சகலரையும் இணைக்கும் வகையில் வெப் தளம் ஒன்றும் இவ்வமைப்பினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் தலித் மக்கள் பற்றிய பல்வேறு விபரங்கள், ஆய்வுகள், விவாதங்கள், செய்திகள், கட்டுரைகள் என்பன உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், இதிலிருந்து இன்னும் பல தலித், மற்றும் மனித உரிமைகள் பற்றிய வெப் தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை வந்திருந்த இவ்வியக்கத்தின் கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் தலித் அமைப்பைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளரான திருமதி. ரூத் மனோரமாவுடனான நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது. இந்திய தேசிய அளவில் முதன் நிலை தலித் செயற்பாட்டாளராக அறியப்பட்டவர் இவர். வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும், மாற்று நோபல் விருது உட்பட பல விருதுகள் இவரது தலித்திய செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.

தலித் பெண்ணிய செயற்பாட்டாளரான இவர் பெண்கள் மீதான அனைத்து ஓரங்கட்டல்களையும் கண்காணிப்பதற்கான இரண்டாவது தென்னாசிய பெண்கள் மாநாடு கடந்த மே மாதம் இலங்கையில் நடந்தபோது அவர் தலைமை வகிக்கும் ”பெண்களின் குரல்” (Women's veice) இயக்கத்தின் சார்பில் அதில் கலந்துகொண்டிருந்தார். அப்போது பெறப்பட்டது இந்த நேர்காணல். இது சரிநிகரில் வெளிவந்தது.



தலித் அரசியலின் சமகால வடிவத்தைப் பற்றி கூறுங்களேன்.

முன்னர் போலல்லாது இன்று பல்வேறு அரசியல் தலைமைகள் தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து செயலளவில் இல்லையென்றாலும் பேசத் தள்ளப்பட் டுள்ளனர். ஏலவே இருக்கின்ற கூலி விவசாயிகளின் இயக்கங்கள், தொழிற்சங்க இயக்கங்கள் ஏன் சில இடங்களில் மாக்சிய இயக்கங்களையும் விட பலமாக வந்து கொண்டிருக்கிறது தலித் இயக்கம். இதற்கான காரணம் தலித் அரசியலானது வெறுமனே சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான இயக்கமாக செயற்படவில்லை. விதிவிலக்கானவற்றைத் தவிர பெருமளவில் சகல அடக்குமுறைகளையும் எதிர்த்துத்தான் தலித் அரசியல் நிறுவப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தலித் பெண்ணியம் பற்றி பேச நிர்ப்பந்தித்த காரணிகள் என்ன?

தலித்துகளில் அலைவாசிப்பேரான பெண்களின் பிரச்சினைகள் குறித்த விசேட கவனம் கொள்ளப்பட்டு வருவது கடந்த பத்தாண்டு காலமாகத் தான். இதற்கு காரணம் சமூகத்தில் விளிம்பில் இருக்கும், இறுதியாக ஓரங்கட்டப்பட்டவர்கள் என கருதப்படும் தலித்துகளிலும் ஆண் தலித் துகளால் பெண் தலித்துகளை ஒடுக்கப் படுவதை விசேடமாக கருத்திற் கொண்டே தலித் பெண்ணியம் குறித்த கருத்தாக்கம் வளரத் தொடங்கியது. சகல அதிகாரத்துவ நிலைகளின் மீதும் போர் தொடுக்கின்ற தருணத்தில் ஆண் அதிகாரம் மட்டும் தப்பி, தமது அதிகாரத்தின் மீதான கவனத்தை திசை திருப்பி விடுகிறது என்றே சொல்வேன்.

பெண்கள் மீதான ஆணாதிக்க அதிகாரம் என்பது வர்க்க, சாதிய, இனத்துவ அரசியல்களைக் கடந்தது. ஒரு புறம் வர்க்க, சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து போராடுகிற ஆண்கள் சக தலித் பெண்ணின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். தலித் பெண்களைப் பொறுத்தளவில் ஆணாதிக்கம், சாதியம் பொருளாதார, கலாசாரம் என சகல வழிகளிலும் ஒடுக்கப்படுகின்றனர்.

தலித் பெண்கள், ஒரே நேரத்தில் அம்பேத்கார் பொது எதிரியாக சுட்டிக் காட்டிய பார்ப்பனியம் மற்றும் முதலாளித் துவம் என்பவற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பெண்ணியப் போராட்டம் சாதிய ஒடுக்குமுறையை மறுதலித்து வந்திருக்கிறது என்று கருதுகிறீர்களா?

ஒரு புறம் பெண்கள் என்பதற்காகவே பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவரும் அதே நேரம் இன்னொரு புறம் தலித் பெண்ணாக இருப்பதால் விசேடமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அப்பிரச்சி னைகளை எதிர்த்துப் பேச முடிவதில்லை. மிஞ்சிப் பேசினால் என்னோடு படுத்தவள் தானே என்று பேச்சை அடக்கும் நிலை உள்ளது. இன்று படுத்தால் தான் நாளை வேலை என்கின்ற நிலை பல கிராமங்களில் இன்று நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில் உயிரியல் ரீதியில் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்றும் பெண்கள் எல்லோரும் பெண்கள் தான் என்றும் பேசுவதெல்லாம் சுத்த அபத்தம். பெண்கள் அமைப்புகளில் கூட நிலவுகின்ற சாதிய ஓரங்கட்டல்களை இங்கு காணலாம்.

தலித் விடுதலைக்கு தலித் பெண்ணின் விடுதலை இன்றியமையாதது என்றா கூறுகிறீர்கள்?

ஆம், எப்படி இன்று இந்திய உபகண்டத்தில் தலித் விடுதலையில்லாமல் புரட்சிகர சமூக மாற்றம் சாத்தியமில்லையோ அதுபோல பெண் விடுதலை பெறாத தலித் விடுதலையும் சாத்தியமில்லை. இந்த வகையில்தான் தலித் விடுதலைக்கு பெண்களின் விடுதலை முன்நிபந்தனை யாகின்றது. அது போல தலித் விடுதலையை உள்ளடக்காத பெண் விடுதலையும் சாத்தியமில்லை எனும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். தலித் அரசியல் பற்றிப் பேசுகின்ற சில நட்பு சக்திகள் கூட தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இணைவினை முக்கி யப்படுத்தி செயற்படுகின்ற சந்தர்ப்பங்களில் பெண்களையோ, தலித் பெண்களையோ ஒரு சக்தியாக கருதி அதில் இணைக்காமல் இருப்பது துரதிருஸ்டவசமானது.

தலித் பெண்கள் தனியாக நிறுவனமயப்படுதல் அவசியம் என்கிறீர்களா?

இன்றைய நிலையில் தலித் பெண்களை தலைமையாகக் கொண்ட ஒரு அமைப்பு உருவாவது அவசியம். இன்றைய ஆதிக்க அமைப்புமுறையினால் ஓரங்கட்டப்பட் டவர்களும் இவர்கள் என்பதால் இவர்க ளால் தான் இதனை மாற்றவும் முடியும். எனவே அப்படிப்பட்ட தலைமை தாங்கு தலுக்கு தலித் பெண்களை தயார்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். அது சுலபமான விடயமல்ல. அதற்கு சில விலைகளைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இதற்கு எந்த வித சமரசங்களும் செய்துகொள்ளத் தேவையில்லை.

உயர் சாதியினர், உயர் வர்க்கத்தினர் என்போர் எப்படிப்பட்ட ஆணாதிக்க அடக்குமுறையை பிரயோகித்து வருகி ன்றனரோ அதுபோலவே தலித் பெண்கள் மீது தலித் ஆண்கள் பிரயோகித்து வரும் அடக்குமுறை கிஞ்சித்தும் குறைவில்லாத வகையில் நடைமுறையிலிருந்து வருகி ன்றன. எனவே தான் தலித் பெண்கள் தனி யாக அணி திரள வேண்டிய, தனியாக தலைமை வகிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். பெண்களின் பேரம் பேசும் அற்றலைப் பலப்படுத்தவும் இது தான் வழி. அப்படி இருக்கும்பட்சத்தில் தான் பெண்களின் கோரிக்கைகளை வென்றெ டுக்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்தே நாங்கள் தலித் மக்கள் பற்றிய விபரங்களை சேகரிக்கத் தொடங்கினோம். அது ஏறத்தாழ 1987 ஆக இருக்கும். அதிலிருந்து 1995 ஆகும் போது நாங்கள் தலித் மக்களின் தேசிய சம்மேளனம் (National Federation of Dalits) என்ற அமைப்பை ஆரம்பித்து அதன் கீழ் இந்தியா தழுவிய தலித் இயக்கங்களை மையப்படுத்தி வருகிறோம்.

கடந்த ஆறு மாதங்களாக தேசிய அளவில் பல பாசறைகளை நடத்தி இருக்கிறோம். அதன் மூலம் தேசிய செயற் திட்டம் ஒன்றையும் வரைந்துள்ளோம். தலித் பெண்களின் விஞ்ஞாபனம் ஒன்றையும் வரைந்துள்ளோம். முதலில் 5 வருடத் திட்டம் ஒன்றைத் தொடக்கியுள்ளோம். இயக்கத்தில் பெண்களை தலைமைத் துவப்படுத்துவது. ஏனைய இயக்கங் களுடன் ஒன்று சேர்ந்து வேலை செய்வது எந்த அடிப்படையில் என்பன போன்ற வற்றில் அக்கறை செலுத்தி வருகிறோம்.

இன்று தலித் மக்களின் பிரச்சினைகளில் கர்நாடகம் தமிழ்நாடு போன்ற மாநிலங் களிலும் நிலப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பஞ்சமி நில மீட்பு விடயத்தை தலித் இயக் கங்கள் முன்னெடுத்து வருகின்றன. இதில் முகம் கொடுக்கின்ற முக்கிய பிரச்சினை என்னவென்றால் பல தலித் இயக்கங்கள் சாதிவாரியாக பிரிந்து செயற்படுகின்ற போக்கும் இல்லாமல் இல்லை. பறையர், பள்ளர், சக்கிலியர் என சாதிவாரியாக பிரிந்து காணப்படுகின்றனர்.

பெண்களின் பிரச்சினைகளை தலித் பிரச்சினையோடு சேர்த்து விசேட கவனத்துக்குள்ளாக்கியது போல தலித் பிரச்சினையுடன் வர்க்கப் பிரச்சினையை எவ்வாறு ஒன்றிணைத்து செயற்பட்டுகிறீர்கள்?

இன்னமும் பல இடதுசாரி அணிகள் தொழிற்சங்கங்கள் என்பன பெண்கள் பிரச் சினையைக் கூட தனித்த ஒரு பிரச்சினையாக அடையாளம் காணாத சூழ்நிலையில் தலித் மக்களின் பிரச்சினை பற்றிய விடயத்திலும் அது போன்ற நிலை காணப்படுகிறது தான். இன்றும் வர்க்கப் பிரச்சினையின் கீழ் மாக்சீய இயக்கங்களில் அணிதிரண்டிருக்கின்ற அடிமட்ட அங்கத்தவர்களில் பெரும்பான் மையோர் தலித்துகள் தானே. தலித்துகள் அனைவரும் வர்க்கச் சுரண்டலுக்கு அதிகமாக இலக்காபவர்கள் தானே. நாங்கள் கூறுவது அந்த சுரண்டலை விட விசேட மான சுரண்டல்களுக்கு தலித்துகள் பலியாக்கப்படுகிறார்கள் என்பதும், தலித்துகளிலும் தலித் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுவருகிறார்கள் என்பதையும் தான். பெண்கள் பிரச்சினையையும் பொருளாதாரப் பிரச்சினையாக இனங் கண்டு வந்ததைப்போல தலித் பிரச்சினையும் வர்க்கப் பிரச்சினையோடு மட்டும் குறுக்கிப் பார்க்கும் போக்கிலிருந்து இன்னமும் பல சக்திகள் விடுபடவில்லை. தற்போது சில மாற்றங்கள் தென்பட்டு வருகின்றன. என்றாலும் தலித் பெண்கள் தங்களின் பிரச்சினையை தனித்து அடையாளம் காண்பதைப்போல தலித் ஆண்கள் தலித் பெண்களின் பிரச்சினைகளை உணர்ந் ததில்லை. அப்படி எதிர்பார்க்கவும் முடியா திருக்கிறது. அங்கு தான் தலித் பெண்ணி யத்தின் தனித்துவம் தங்கியிருக்கிறது.

தலித் பெண்கள் எவ்வாறு தங்களின் முன்னெடுப்புகளை விரிவுபடுத்தி வருகின்றனர்?

தலித் மக்களின் போராட்டமும் இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வெறுமனே தீண்டாமைக்கு எதிராக மட்டும் நிற்கவில்லை. அது போல அம்பேத்கார் சிலையை உடைத்து விட்டார்கள் என்ப தற்காக மட்டும் போராடப் புறப்படு வதில்லை. இன்று தலித் மக்கள் தலித் அரசி யலின் கீழ் நிறுவனமயப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதைத்தான் இன்றைய ஆரோக்கியமான விளைவாகக் காண வேண்டும். இனி நம்பிக்கையுடன் முன்செல்லலாம்.

தலித்துகள் அடிமட்டத்தில் உள்ள, வர்க்கச் சுரண்டலுக்கு அதிகமாக இரையாகின்றவர்கள். பெருமளவான தலித்துகள் விசாயிகள். கூலி விவசாயிகள். முன்னர் நிலம் இருந்தது இப்போது நிலம் இல்லை. நிலம் இருப்பவர்களுக்கோ பயிர்ச்செய்கைக்கு மூலதனம் இல்லை. இவர்கள் வங்கிக் கடனும் பெற முடியாத நிலை. தலித்துகள் தங்களின் நிலங்களை மீளப் பெறுவதற்கான போராட்டங்கள் எழுந்து வருகின்றன. காலனித்துவ காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் - இதனை விற்பது என தீர்மானிக்கும் பட்சத்தில் அது இன்னொரு தலித்துக்கு தான் விற்கப்பட வேண்டு மென்பது சட்டம். ஆனால் நிலச்சுவாந் தர்கள் பலர் இவர்களிடமிருந்து கபடத் தனமாக அந்நிலங்களைப் பறித்து பினாமி பெயர்களில் வைத்துக் கொண்டிருக் கின்றனர். தற்போது அந்த பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்.

இன்று நாடு முழுவதும் தலித் மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். இன்று அவர்களின் செயலில், சிந்திப்பில் மாற்றம் காணத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் அண்மையில் மரத்வாடா பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்காரின் பெயரை வைக்குமாறு அங்குள்ள தலித்துகள் கோரினார்கள். போராடினார்கள். அதன் போது மக்களை அடித்து துன்புறுத்தி, சொத்துக்களை நாசமாக்கி, துப்பாக்கிச் சூடு பிரயோகித்து அடக்கினார்கள். ஆனால் அதற்காக அது போன்ற போராட்டங்கள் நின்று விடவில்லை. நின்றுவிடப்போவ துமில்லை. ஒரு புறம் தீணடாமைக் கொடுமை, இன்னொருபுறம் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி, சுகாதாரப் பிரச்சினைகள், அரசின் எந்தவித நிர்வாகமும் இவர்களைச் சேராத நிலை இப்படிப்பட்ட நிலையில் தலித் மக்கள் சூனியத்துக்குள் வாழ்ந்து வருகிறார்கள். பீகாரில் சமீபத்தில் 22 தலித்துகளை ஒரே ராத்திரியில் வெட்டிக்கொன்றனர். இன்று பீகாரில் தலித் மக்களின் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத் துள்ளது. பிகாரின் நிலைமை தவிர்க்க முடியாத ஆயுதப் போராட்டத்துக்கு தலித்துக் களைத் தள்ளிவிட்டுள்ளது. தலித் பெண்கள் பலர் இரகசிய தலித் அரசியல் இயக்கங்களில் இணைந்து துப்பாக்கிகளை கையிலெடுத்துள்ளனர்.

அரசியல் சக்திகளை நிர்ப்பந்தப்படுத்துகின்ற பலத்தைக் கொண்டிருக்கிறீர்களா? பேரம் பேசும் ஆற்றலை பொருட்படுத்தும் நிலை எப்படி இருக்கிறது?

இன்றைய தலித் விஞ்ஞாபனம் இனி வரும் தேர்தல்களில் தேசிய அளவில் கட்சிகளிடம் முன்வைக்கப்படப்போகும் கோரிக்கையாக அமையப்போகிறது. தலித் மக்களை நிறுவனமயப்படுத்தி வருகின்ற இந்த நிலையில் இப்படிப்பட்ட அழுத்தங்கள் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் இவற்றின் விளைவுகளை உடனடியாக எதிர்பாhக்க முடியாது.

தலித் பெண்களின் கோரிக்கைகள் இப்படிப்பட்ட பாராளுமன்ற அரசியலில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன?

முன்னர் குறிப்பிட்ட தலித் தேசிய விஞ்ஞாபனத்தில் தலித் பெண்கள் குறித்த கோரிக்கைகளும் அடங்குகின்றன. இனி பேச்சுவார்த்தைகளுக்கு களம் அமைக்க வேண்டியேற்படப் போகிறது. தேர்தல் அரசியலில் 25 கோடி தலித் மக்களின் வாக்குகளானது அவர்களின் கோரிக் கைகளை கருத்திற் கொள்ளச் செய்யப் போகிறது. ஆனால் இதனை பெரிதாக எதிர்பார்க்கத் தேவையில்லை. எமது இலக்கில் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைக்கிறோம் அவ்வளவு தான்.

தேர்தலில் சிறுபான்மை மக்கள் சொந்தத் தலைமைகளை நிராகரித்துள்ளனர் - என்.சரவணன்



6வது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான 5வது ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளின் படி மகிந்த ராஜபக்ஷ வென்றுள்ளார். தெர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வழங்கும் செய்தி என்பதன் சாராம்ச விளக்கமே இது.


யாழ் மாவட்டத்தில் 26.66 சதவீத மக்களே வாக்களித்துள்ளனர். அதிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 3,65 வீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அளிக்கப்பட்ட வாக்குகளில் 64 சதவீதம் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் ஒரு தெரகுதியில் அதாவது ஊர்காவற்துறை தொகுதியில் மாத்திரமே மகிந்த வென்றுள்ளார் அதுவும் 635 வாக்குகள் மட்டுமே மேலதிகமாக பெற்றுள்ளார்.


வன்னி மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் சரத் பொன்சேகா வெற்றி பெற்றுள்ளார். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் மகிந்த படு தோல்வியடைந்துள்ளார் சரத் பொன்சேகா 69 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். திருகோணமலையில் சேருவில தொகுதியைத் தவிர மூதூர் திருகோணமலை தொகுதிகளில் மகிந்த தொல்வியடைந்துள்ளார். அம்பாறையிலும், அம்பாறை தொகுதியைத் தவிர எனைய 3 தொகுதிகளிலும் மகிந்த தோற்கடிக்கப்பட்டுள்ளார்.


சரத் பொன்சேகா வெற்றி பெற்ற இன்னொரு மாவட்டம் மத்திய மாகாணத்திலுள்ள மலையகத் தமிழர்கள் அதிகமாக வாழும் நவரெலிய மாவட்டமாகும். அங்கும் சரத் பொன்சேகா வெற்றிபெற்றுள்ளார். கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் அனைத்திலும் மகிந்த தொல்வியடைந்துள்ளார். 15 தொகுதிகளில் 6 தொகுதிகளில் சரத் பொன்சேகா வென்றுள்ளார்.



தேர்தலுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணிப்புகளின் படி தமிழர்களின் வாக்குகள் திசை தெரியாதபடி சிதைந்துள்ளதாக கணிப்புகள் வெளியிடப்பட்ட போதும், இன்றைய தேர்தல் முடிவுகளானது வேறும் பல செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறது.


அரசுடன் இணைந்த அனைத்து தமிழ் கட்சிகளும் இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அரசுடன் உள்ள முக்கிய தமிழ் கட்சிகளான, வடக்கில் ஈ.பி.டி.பி, புளொட், மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் கட்சி, கிழக்கில் டி.எம்.வி.பி என்பன மகிந்தவுக்கு ஆதரவாக எத்தனை பிரச்சாரம் செய்த போதும் அவர்களின் கருத்தை மக்கள் ஏற்காது தமது சொந்த முடிவினையே எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. தமிழ் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவின் கூட்டில் இருந்தது ஒரு பொருட்டல்ல. அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே வெளிப்பாடு ஏற்பட்டிருக்கும் என்று கருதத் தோன்றுகிறது.



சரத்பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய அளிக்கப்பட்ட வாக்குகளில்லை. மகிந்தவை தோல்வியடையச் செய்வதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளே என்று கூறலாம். கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
கொழும்பில் சரத் பொன்சேகா வென்ற தொகுதிகளில் கிடைத்த வெற்றியில் மனோ கணேசனுக்கு பங்குண்டு என்றும் கூறலாம்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் 14 வீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. குறைந்தளவு வாக்குகள் பதிவான மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டமே. மக்கள் தேர்தலில் ஆர்வமில்லையென்பதை இவை நிருபித்துள்ளன. வவுனியா மாவட்டத்தில் 43 வீத வாக்குகளும், மன்னாரில் 34 வீத வாக்குளுமே பதிவாகியுள்ளன. ஆக மொத்தத்தலில் வடக்கில் அனைத்து 5 மாவட்டங்களிலும் 50 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இதற்கு மக்களின் இடப்பெயர்வு ஒரு காரணமாக இருந்த போதும், அது முழுமையான காரணமாக இருக்க முடியாது என்று தெரிகிறது. ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பின் வடக்கில் முழு பிரதேசங்களிலும் தேர்தல் இடம்பெற்றுள்ளன. முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் இறுதி நேரத்தில் அவசர அவசமாக குடியேற்றப்படுவதற்கு தேர்தல் ஒரு முக்கிய காரணமாகவே இருந்தது.


ஆக மொத்தத்தில் இம்முறை தேர்தலானது, இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களில் பெரும்பாலானோர் தெட்டத்தெளிவாக தென்னிலங்கை "தேசிய" அரசியல் நீரோட்டத்தில் இருந்து பிரிந்து நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது.


குறிப்பாக தமிழ், மலையக மக்கள் தமது அரசியல் தலைமைகளுக்கு ஆப்பு வைக்கவும் எம்மால் முடியுமென்று நிரூபித்திருக்கிறார்கள். மக்களின் அரசியல் அபிலாசைகளை அத்தலைமைகள் பிரதிபலிக்கவில்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.



மகிந்த அரசு வெளிப்படையாகவே ஒட்டுமொத்த அதிகாரத்தையும், அரச வளங்களையும் துஸ்பிரயோகம் செய்து தமது மோசமான அராஜகத்தையும், அட்டுழியங்களையும் செய்தே இந்த வெற்றியை பெற்றனர் என்பது கண்கூடு.


ஊழல், மனித உரிமை உரிமை மீறல், கருத்துச் சுதந்திரப் பறிப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் இடது சாரிப் போராட்டங்களை மோசமாக அரச இயந்திரத்தைக் கொண்டு தொடர்ச்சியாக நசுக்கி வந்தமை என மகிந்த அரசுக்கு எதிரான அலை மிகுந்திருந்தது.


போர் வெற்றி மாத்திரமே தென்னிலங்கையில் மகிந்தவின் ஒரே ஒரு துருப்புச் சீட்டாக இருந்தது. அந்த வெற்றி மயக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள் அந்த வெற்றியை பயன்படுத்த வேண்டுமென மகிந்த அரசாங்கம் திட்டமிட்டது. அதற்கான தேர்தல் தான் இப்போது நடந்து முடிந்தது. அதே வெற்றியை சம அளவில் பங்கு போடக்கூடியவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தியபோதும் இறுதியில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்திருக்கிறதென்றால் அதற்கான முக்கிய காரணங்கள் அரசின் அதிகார துஸ்பிரயோகமும், போர் வெற்றி மயக்கத்திலிருந்து தென்னிலங்கை மக்கள் இன்னமும் மீளவில்லை என்பதுமே.




வெகு விரைவில் நடத்தப்படவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகையாகவும் இந்தத் தேர்தலை அரசாங்கம் கருதியிருந்தது. அப்படி நாடிபிடித்தறிவதற்கு இந்தத் தேர்தல் போதுமானதா என்பது கேள்விக்குறியே. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழவிருக்கும் தேர்தல் கூட்டணிகள் மற்றும் மக்கள் மீது ஏற்படுத்தப்படும் நம்பிக்கைகளே அதன் முடிவைத் தீர்மானிக்கும். போர் வெற்றி எவ்வளவு காலம் அரசாங்கத்துக்கு கை கொடுக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.


தேர்தல் முடிவுகளை முழுமையாக பார்வையிட


Election Results

என்.சரவணனின் தீபம் பேட்டி

தீபம் தொலைக்காட்சிக்கு என்.சரவணன் வழங்கிய செவ்வி.

பகுதி 1



பகுதி 2



பகுதி 3



பகுதி 4



பகுதி 5

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் ! - என்.சரவணன்


அந்தந்த காலத்துக்குரிய பொது அபிலாசைகளைக் கண்டறியாத, கண்டபின் அதனை நிறைவு செய்யாத ஒரு தலைமைதனது லட்சியத்தில் வெற்றிகொண்ட ஒரு தலைமையாக இருக்கமுடியாது.ஆனால் இந்த "பொது" என்கிற விடயமானது கூர்ந்து நோக்க வேண்டிய ஒன்று. .பெரும்பான்மை அபிலாசைகளை நிறைவேற்றுதல். என்பது ஜனநாயகப் பண்பின் பிரகாரம் சரியானதாகவே பட்டாலும், அடிப்படை தர்மத்தை (ethics) நிறைவு செய்வதாகத்தான் அது இருக்குமென்றில்லை. சில பலமான கருத்துக்கள், நியாயமானதாகவும் சிறுபான்மையானதாகவும் கூட இருக்கமுடியும். எளிமையாக சொல்லப்போனால், நாம் இன்று நம்பி ஏற்றுக்கொண்டுள்ள அத்தனையும் உண்மையாகவும் நியாயமாகவும் தான் இருக்குமென்பதில்லை. அது அப்போதைய நேரத்தின் இன்பமூட்டுபவையாகவும், சுயகளிப்பூட்டுபவையாகவும் இருக்கும். மாறாக நாம் மறுக்கின்ற பல விடயங்கள் நமக்கு கசப்பானவையாகவும் உண்மையாகவும் இருக்க முடியும்.


இந்த இடத்தில் மீண்டும் பொது என்கிற விடயத்துக்கு வருவோம். பெரும்போக்காக (mainstream) இருக்கிற அனைத்தும் நிச்சயம் உண்மையாகவும், சரியாகவும்தான் இருக்கும் என்றில்லை. மாறாக சிறுபான்மை கருத்துக்களாக இருப்பதால் அது பிழையாகத்தான் இருக்குமென்றில்லை.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது என்பதை நாம் அனைவரும் உணர்வோம்.ஒரு இனத்தின் சமூக கட்டமைப்பானது, வரலாற்று ரீதியில் பல மரபுகளையும், அந்த மரபோடிணைந்த பல்வேறு புனைவுக் கூறுகளையும், மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மாயைகள், புனைவுகள், திரிபுகள் என்பன கலாசார பண்பாட்டு படிமங்கள் மீது குந்திக்கொண்டு தான் இருக்கும். இது நமது தமிழ் மரபில் மட்டுமல்ல உலகின் பல இனங்களின் மரபிலும் காணக்கிடைக்கின்ற கூறுகள்.சமூக உருவாக்கமானது, பல கட்டங்களைத் தாண்டி சமூகமாற்றங்களை கால வளர்ச்சிக்கமைய எதிர்கொள்கிற பொழுது, இவற்றில் இருக்கின்ற பல்வேறு பிழையான கூறுகளைக்களைவதில் தான் அந்த சமூகத்தின் ஆரோக்கியமான, புரட்சிகர சமூக மாற்றத்தின் வெற்றி தங்கியிருக்கிறது.நாட்டில் நமது போராட்டமானது ஒரு தேசிய போராட்டம் என்கிற ரீதியில், தேசிய உணர்வையும், அதன் கூறுகளையும் பாதுகாப்பதிலேயே நமது தேசியவாதத்தை தக்கவைக்கலாம் என்கிற வாதத்தின் விளைவாக புரையோடிப்போயுள்ள பல பிழையான மரபுகளைத் தோளில் சுமந்தபடி நமது சமூகம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை உளச்சுத்தியுடன் ஒப்புக்கொள்வோம்.

நம்மை வழிநடத்தும் உண்மைகள் பல நமக்குக் கசப்பானவை, நம்மால் ஜீரணிக்க முடியாதவை, நம்மை மகிழ்வூட்டடாதவை. மாறாக நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பல பிழையான ஐதீகங்கள், மற்றும் புனைவுகள் நமக்கு களிப்பூட்டுபவையாக உள்ளன.கசப்பான உண்மைகளை விட்டுத் தப்பியோடுபவர்களாகவும், களிப்பூட்டும் பிழையான ஆதிக்க மரபுக்கூறுகளை தொடர்பவர்களாகவும் நாம் உள்ளோம். இதனை பண்பாட்டின் பேரால், கலாசாராத் தின் பேரால், தேசியத்தின் பேரால் நாம் தொடர்ந்து வருகிறோம் என்பதே யதார்த்தம்இந்த யதார்த்தத்தை உணராதவரை, இதன் மீது எமது தேடலை செய்யாதவரை, இதில் தேவையான மாற்றங்களை கொணடுவராதவரை, நமது உள்ளார்ந்த வளர்ச்சியில் மாற்றம் காணப் போவதில்தில்லை நாம். அது போல நமது அடுத்த சந்தியினரின் ஆரோக்கியமான வெற்றியையும் இது பாதிக்கச்செய்யும். இது நமது ஆரோக்கியமான சமூகமாற்றத்தில் வெற்றியையும் இறுதியில் ஒட்டுமொத்த பாதிப்பை ஏற்படுத்தும்.

(டென்மார்க்கிலிருந்து வெளிவரும் "இனி" இதழில் வெளிவந்த பத்தி)

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்...


டென்மார்க்கிலிருந்து வெளிவரும் இனி சஞ்சிகையில் 2006இல் வெளிவந்த இதழில் வெளிவந்த செவ்வியை நன்றியுடன் மறுபிரசுரிக்கின்றோம்.
என்.சரவணன்

90களின் ஆரம்பத்தில் விடிவு சஞ்சிகையின் ஆசிரியர் குழவில் இணைந்து தனது எழுத்துப் பணிகளை ஆரம்பித்த சரவணன் 1992 தொடக்கம் 8 வருடங்களாக சரிநிகர் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிவிட்டு தற்போது சுதந்திரப் பத்திரிகையாளராகவும், ஆய்வாளராகவும், விமர்சகராகவும் இருந்து வருகிறார். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களில் அதிகளவு படைப்புகளை தமிழிலும் சிங்களத்திலும் செய்து வந்த இவர் நடைமுறைச் செயற்பாட்டாளரும் கூட. தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் இவர் நோர்வேயிலிருந்து வெளிவந்த பறை என்கின்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். இவரது ஒரு சில நூல்களில், பெண்களின் அரசியலும் அரசியலில் பெண்களும் என்கிற நூல், இலங்கையின் பெண்களின் அரசியல் வரலாறு குறித்து தமிழில் பேசப்படுகின்ற ஒரே வரிவான நூலாக உள்ளது. இலங்கையில் ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டம் பாசிசத்தை நோக்கி எவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த கருத்தாக்கங்களில் சமீப காலமாக அதிகளவு தேடல்களை செய்துவருபவர்.
புகலிடம் பற்றிய சிந்தனைப் போக்கின் இன்றைய வடிவத்தை எவ்வாறு விளக்குவீர்கள்?

தமிழ்த் தேசப் பிரச்சினை முனைப்பு பெற்று தமிழர்கள் இங்கு உயிர்வாழ்வுக்கு உத்தரவாதமில்லாமல் ஆக்கப்பட்டதன் பின்னரும், தமது அடிப்படை உரிமைகளை சொந்த நாட்டில் அனுபவிக்க முடியாமல் ஏற்பட்டதன் காரணமாகவும், 80களில் தமிழர்களின் புலப்பெயர்வு அதிகரித்தது. அதன் இன்றைய நிலை வடக்கு கிழக்கின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்று புலம்பெயர்ந்துள்ளனர். இன்று தேசியம் பற்றிய பல்வேறு சிந்தனைகளின் போது உலகில் புகலிடம் என்பது தனித்து பார்க்கப்படவேண்டிய கருத்தாக்கமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. உலகில் உள்நாட்டு நெருக்கடி மிகுந்த நாடுகளிலிருந்தெல்லாம் இவ்வாறு புலம் பெயர்ந்தவர்களில் எத்தனை பேர் திரும்பி தமது தாயகங்களுக்கு திருப்பிப் போகப் போகிறார்கள் என்கிற கேள்வியும் மிகவும் அழுத்தமாக இன்று எழுப்பப்படுகின்றன. பிரச்சினை தீரும் பட்சத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களில் 5 வீதமாவது திரும்பி வருவார்களா என்கிற கேள்வி பலமாகவே இருக்கிறது. இந்த பின்னணியை வைத்துத் தான் புலம்பெயர்ந்தவர்களின் அரசியல் எதிர்காலம், அவர்களின் தனித்துவமான தேவைகள், பண்பாட்டு மாற்றங்கள், தேசத்துடனான உறவுகள் எல்லாமே பார்க்கப்பட வேண்டும். எனவே தான் புகலிட இலக்கியங்கள், புகலிட அரசியல், புகலிட சிந்தனைப் போக்குகள் என்றெல்லாம் நவவடிவம் பெறும் தமிழியப் போக்கை காண்கிறோம்.


இவற்றின் விளைவுகளை எவ்வாறு இலக்கியத்தில் காண்கிறீர்கள்?


ஏலவே இலக்கியத்துறை சார்ந்திருந்தவர்களின் படைப்புகள் போக அங்கு போனதன் பின்னர் இலக்கியப் படைப்புருவாக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் பலர். ஆரம்பத்தில் இந்த இலக்கியங்கள் அவர்களது தாயக நினைவுகளை அடியொற்றியதான படைப்புகளாக வந்துகொண்டிருந்தன. ஆனால் அதன் இன்றைய பரிமாணம் தாயக நினைவுகளுக்கு அப்பால் சென்று இன்றைய புகலிட வாழ்வு குறித்த அனுபவங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்துகின்ற படைப்புகளையே அதிகளவு காணக்கூடிய¬தாக இருக்கின்றன. இன்று புகலிடத்தில் அடுத்த தலைமுறை தோன்றி விட்டது. தம்மை இலங்கையர் என்றும் கூறமுடியாத, தாம் நோர்வேயில் பிறந்திருந்தால் தம்மை நோர்வேஜியர்கள் என்றும் கூற முடியாத, Nortamils, Dantamils னுயவெயஅடைள என தம்மை அடையாளப்படுத்துகிற நிலை வளர்ந்து வருகிறது. முழுமையாக அவர்கள் நோர்வேஜியர்களாகவும், டனிஷர்களாகவும் அடையாளப்படுத்துவதற்கு இன்னும் சில சந்ததிகள் கடக்கவேண்டியிருக்கும்.

அவர்களின் பெற்றோரின் தாயகத்தை அறியாத, அது குறித்த பிரக்ஞைக்கு அப்பாற்பட்டு, புகலிடத்தையே தமது தாயகமாக்கிவிட்ட தலைமுறை அது. இவர்களிடமிருந்து தமிழில் இலக்கியங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் கற்ற அந்தந்த நாட்டு மொழிகளில் இலக்கிய ஈடுபாடுகளை காட்டுகின்ற போக்கு வளரத்தொடங்கியுள்ளது. தமிழிலிருந்தும் அந்தந்த மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்கின்ற முயற்சிகளும் கூட நடப்பதை அறிகிறோம். உலக புகலிட இலக்கியம் என்பது ஒரு சர்வதேச அளவில் கருத்திற்கொள்கின்ற இலக்கியமாக ஆகிவிட்டது. ஐந்திணை பற்றிய கருத்தாக்கங்களை விரித்து ஆறாந்திணையாக தகவல் தொழில்நுட்ப வெட்டவெளி எனப்படும் சைபர் ஸ்பேசை குறிப்பிடுகிறோம். ஏழாந்திணையாக இன்று புகலிடத்தை குறிக்கின்ற கருத்தாக்கங்¬களும் முன்மொழியப்படுகின்றன என்பதை கருத்திற் கொள்ளவேண்டும்.

மொத்தத்தில் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமிழில் புலத்து இலக்கியத்தின் ஆயுள் கேள்விக்குரியது.

புகலிடத்தில் அரசியல் செயற்பாடுகள் பற்றி..?

புகலிடத்தில் தமிழர்களின் அரசியல் செயற்பாடு இன்னமும் தமிழ்தேசிய அரசியலுக்கு அப்பால் எட்டவில்லை. விதிவிலக்காக அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்த நாட்டு அரசியலுடன் இணைத்துக் கொண்டுள்ளனர் என்பது பொய்யில்லை. ஆனால் அது மீண்டும் தமிழ்த்தேசிய அரசியலைத் தாண்டி செல்லவில்லை என்பதே யதார்த்தம். இனி இதுவே தமது நாடாக ஆகிவிட்ட நிலையில் இந்த நாட்டவர்களுடனும், நாட்டு நலன்களுடனும், அதன் அரசியலுடனும், இணைவாக்கம் செய்துகொள்வது அவசியமானது. வெளிநாட்டவர்கள் சம்பந்தமாக இந்த நாட்டவர்கள் கொண்டுள்ள பொதுவான குற்றச்சாட்டுக்களில் ஒன்று, அவர்களின் சமூக இணைவாக்க பிரக்ஞையின் போதாமை பற்றியது.

அடுத்தது மாற்று அரசியல் கருத்துடையவர்கள் திட்டமிட்ட ரீதியில் நலமடிக்கப்பட்டமை பற்றியது. இன்று மாற்று அரசியல் கருத்துடையவர்கள், அல்லது விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றாதவர்கள், அவர்களுக்கு நிதி வழங்காதவர்கள் அவர்கள் தமிழ்த்தேச ஆதரவாளர்களாக இருந்தாலும்சரி அனைவருமே எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மிக எளிமையாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இவர்கள் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டும், அந்நியப்படுத்தப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும் சில சந்தர்ப்பங்களில் எதிரியின் முகாமுக்கே தள்ளப்பட்டுவருவது ஆரோக்கியமான ஒன்றல்ல.

இன்று புகலிடத்தில் மாற்று அரசியல் செயற்பாடுகள் நிறுவனமயமாக இல்லை.
யுத்தநிறுத்த ஒப்பந்தம், பின் "ஏகப்பிரதிநிதித்துவ" அரசியல், அதனைத் தொடர்ந்து அனைத்து ஊடகங்களும், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் என அனைத்துமே தமிழ்த்தேசியத்தின் பெயரால் உண்மைகள் இருட்டடிப்பு செய்வது சர்வசாதாரண ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இதில் சிறிது ஒதுங்கிநின்று கிடைத்த சந்தர்ப்பத்தில் உண்மைபேசினால் ஓரங்கட்டப்பட்டுவிடுவோமோ, தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சி அதில் சரணடைந்தோர் பலர், சமரசம் செய்து கொண்டோர் பலர். தம்மை ஊமைகளாக ஆக்கிக்கொண்டோர் பலர். பலரதும் அரசியல் முகமூடிகள் கிழிந்தன. எப்போதும் பலமானவர்கள் பக்கம் இருப்பது லாபம் என்றுணர்ந்து தமது நேர்மை அரசியலை துறந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம்.

நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான விடுதலையை இது பெற்றுத்தரப் போவதில்லை. பல்வேறுபட்ட மாற்றுக் கருத்துக்களும், ஜனநாயக குரல்களுமே கடந்த காலங்¬களில் தேச விடுதலைப் போராட்டத்தில் பாசிசப் போக்கை கணிசமான அளவு மட்டுப்படுத்தியது. இனி வரும் அத்தனை ஜனநாயக விரோதப்போக்குகளுக்கு வழங்கும் ஆசீர்வாதமும், அங்கீகாரமுமே இந்த "ஏகபிரதிநிதி" சித்தாந்தம். ஆரம்பத்திலேயே இதனை நாங்கள் எச்சரித்திருந்தோம். அனைத்து ஜனநாயக விரோத போக்குகளும் தேசியத்தின் பேரால் விதிவிலக்கு கோரும் நிலை மாற்றப்படவேண்டும். இந்த நிலை தளத்தில் மட்டுமல்ல புலத்திலும் தான்.


பாசிசம் பற்றிய எச்சரிக்கைகளை ஏற்படுத்தும் பல கட்டுரைகளை எழுதிவந்திருக்கிறீர்கள், இதன் அண்மைய வடிவம் பற்றிய உங்கள் புரிதல் என்ன?

வீரவிதான இயக்கம் 1995ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்ட போது அது வெறும் இயக்கமாகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அது எத்தனை பெரிய அபாயகரமான இயக்கம் என்பதை அதன் வியூகங்களும் திட்டங்களும், வேலைமுறைகளும் நிரூபித்துக்கொண்டு வந்தபோதுகூட பலரும் அதனை அசட்டைச் செய்தார்கள். ஒரு காலத்தில் சிங்களத் தேசியவாதம் என்கிற பதப் பிரயோகத்தைப் பாவித்தோம், அதன் பின் குறுந்தேசியவாதம் என்கிற பதப்பிரயோகத்தை பாவித்தோம், அதன் பின் இனவாதம், அதன் பின் பேரினவாதம் என்றெல்லாம் பதங்களை பாவித்தோம், இந்த பதங்களுக்குப் பின்னால் அர்த்தங்களும், அந்தந்தக் கட்ட பாசிசத்தின் வளர்ச்சிக் கட்டங்களையும் சேர்த்தே உணர்த்தியது. ஆனால் இன்று அது முழு அளவிலான செயற்பாட்டுக்கு தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ள பாசிச இயக்கம், முழு சிங்கள மக்களையும் ஓரணிக்குள் திரட்டியுள்ள, திரட்டி வருகின்ற சிங்கள மக்களை பாசிசமயப்படுத்துவதில் மிகவும், நுணுக்கமாக செயற்பட்டு வருகின்ற இயக்கம்.

தேசியவாதத்துக்கு பல முகங்கள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் அது இனத்தேசிய சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கின்ற பண்புகளை உருவகப்படுத்திக் கொண்டுள்ள சித்தாந்தமாக இருந்தாலும், வேறு சந்தர்ப்பங்களில் அது சோசலிச முகமூடிகளையும் கூட அணிந்து வரும். ஹிட்லரின் பாசிச சித்தாந்தம் கூட தேசிய சோசலிசம் பற்றிய கருத்தாக்கத்துடன் தான் தன்னை அடையாளப்படுத்தியதுஅதற்கூடாகவே தன்னளவில் அது வளர்த்துக்கொண்டது. இன்று சிறிலங்காவில்; சிங்கள பாசிசத்துக்கு வடிவம் கொடுக்கும் சம்பிக்க ரணவக்கவின் சித்தாந்த¬மும் கூட தேசிய சோசலிசம் தான் என்பதை கவனியுங்கள். ஆரம்பத்தில் ஜே.வி.பி.யுடன் இணைந்து பணியாற்றிய சம்பிக்க ரணவக்க அதிலிருந்து விலகி ஜனத்தா மித்துரோ எனும் இயக்கத்தை ஆரம்பித்து இலங்கைக்கான சோசலிச பொருளாதார கட்டமைப்பு குறித்த ஆய்வுகளையும், கருத்துருவாக்கங்களையும் செய்து இயங்கிக்கொண்டிருந்த போது அதன் ஒரு கட்டத்தில் சோசலிச கோசம் சரிவராது என்கிற கருத்தையும், சோசலிசத்தை தேசிய சித்தாந்தத்தோடு இணைத்து புதுவகை சிங்கள பௌத்த சித்தாந்த மற்றும் அமைப்புத் துறைக்கான வேலைகளை தொடங்கினார். அதன் வடிவம் தான் 1995இல் சிங்கள வீரவிதானவின் தோற்றம். மிகவும் நுணுக்கமாக இயங்கி அது வரை சிங்கள பௌத்தம் பேசிய இயக்கங்களை தம்மோடு சுவீகரித்தும், சிலவற்றை நாசூக்காக இயங்கவிடாமல் பண்ணியும், ஒட்டுமொத்த சிங்கள பௌத்த அமைப்புகளையும் ஒரே இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பௌத்த மகா சங்கத்தினரை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சமூகத்தில் கருத்துருவாக்கங்களை பலப்படுத்தும் நிறுவனங்களான தொடர்பூடகங்கள் அiனைத்திலும் ஊடுருவியது. திவய்ன போன்றவற்றை தமது கைக்குள் போட்டுக் கொண்டது லங்காதீப, சண்டே டைம்ஸ் போன்றவற்றை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது, ஏனைய இலத்திரனியல் சாதனங்களுக்குள் சிங்கள தேசிய உணர்வு கொண்டவர்களை அடையாளம் கண்டு தமது வலைக்குள் சிக்க வைத்தது.

அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவி அதன் அதிகார மற்றும் நிறைவேற்று அங்கங்களுக்குள் சென்று அரசியல் முடிவுகளை எடுக்க வைத்தது. அவ்வாறு எடுக்க வைப்பதற்கு வெளியில் இருந்து அழுத்தங்களை பிரயோகிக்க பெருமளவான முன்னணி அமைப்புகளை உருவாக்கியது. ஒரு அரசை கொண்டுள்ள சிறிலங்கா கூட இணையத்தளம் உருவாக்காத காலத்தில் 96ஆம் ஆண்டே தமக்கான இணையத் தளத்தை வீரவிதான தோற்றுவித்தது. சிங்கள வர்த்தகர் சங்கத்தை ஆரம்பித்து குறுகிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிளைகளை நாடளாவ ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகள், வேலை வாய்ப்பு அணி, என பல அமைப்புகளை உருவாக்கியது.

அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என சமூகத்தில் உள்ள பிரமுகர் வட்டார சகாக்களை குறுகிய காலத்தில் சுவீகரித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தில் சமகாலத்தில் பெரிய அதிகாரிகள் பலரையும் இணைத்துக் கொண்டது. தப்பியோடிய இராணுவத்தினரை உள்வாங்கி இரகசிய பயிற்சி முகாம்களை நடத்தி வருவது பற்றிய செய்திகளை ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள்.

ஜாதிக ஹெல உறுமய என்பது இந்த பாசிச அமைப்புகளின் ஒரு முன்னணி அமைப்பாக இயங்குகிற ஒரு கட்சி மட்டும் தான்.

ஜே.வி.பி. இன்று சிஹல உறுமயவின் நிகழ்ச்சி நிரலை கைப்பற்றிக்கொண்டுள்ளது. ஆனாலும் ஜே.வி.பியின் மூலோபாயம் அதுவல்ல. அது அரசியல் சந்தர்ப்பவாத தந்திரோபாயம் மட்டும்தான். ஆனால் இதற்கான சித்தாந்த பலத்தை தயாரித்தளிப்பதும், அதனை விரவவிடுவதும் அதற்குப் பின்னாலுள்ள பலமான சிங்களப் பேரினவாத அணிகள் தான்.

முன்னரெல்லாம் பல பெயர்களைக் கொண்ட பேரினவாத அமைப்புகள் நிறையவே இருந்தன. அவற்றுக்கு பொதுவான சித்தாந்த வடிவம் இருக்கவில்லை. பொதுவான அமைப்பு வடிவம் இருக்கவில்லை. பொதுவான அரசியல் வடிவம் இருக்கவில்லை. ஆனால் இன்று அப்படியல்ல சிங்கள சிவில் சமூகத்தில் ஆழமாக வேர்விடுகின்ற அளவுக்கு அனைத்தையும் மையப்படுத்துகின்ற பலமான சித்தாந்த வடிவம் அதற்கு உண்டு. உறுதியான அமைப்பு வடிவம் உருவாக்கியாகிவிட்டது. அது போல அரசியல் வடிவமும் அதற்கு ஏற்படுத்தியாகிவிட்டது. இனி அது இராணுவ வடிவம் பெறவேண்டியதும், அரசை கைப்பற்றுகின்ற வேலையும் தான் பாக்கி என்று கூறி வந்தோம். அதற்கு இராணுவ வடிவம் இருப்பதை இராணுவ பயிற்சிகள் பற்றிய செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. சாதாரண தமிழ் சிவிலியன்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பல செய்திகளை நிரூபித்தன. தென்னிலங்கையில் பிரதான அரசியல் அமுக்கக் குழுவாக இந்த சக்திகள் இன்று ஆகிவிட்டிருக்கின்றன.

இதில் இடதுசாரி இயக்கங்களின் பங்கு..?

வரலாற்றில் இதற்கு முன்னரும் பல பேரினவாத இயக்கங்கள் இருந்திருக்கின்றன அல்லவா?

இப்பின்னணியில் பாசிசத்தின் இராணுவ மயத்தன்மையை மேலும் விளக்குவீர்களா?

உங்களுக்குத் தெரியும் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்ட செய்தி, சிங்கள வீரவிதான ஹெருவன எனும் பத்திரிகையொன்றை கடந்த மூன்று வருடங்களாக வெளியிட்டுக் கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள், இதனைத் தவிர அவர்கள் ஒரு செய்தி ஏடு நியுஸ்லெட்டர் ஒன்றை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் வெளியான வொய்ஸ் ஒப் த நேசன் எனும் பெயர் கொண்ட இந்த செய்தி ஏட்டின் கடைசி பக்கத்தில் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி கூறப்படுகிறது. -கொழும்பில் இருந்து கொண்டு கொஞ்சம் கூட அச்சமின்றி புலிக்கு வால்பிடித்துக் கொண்டு இருந்த புள்ளிமாடு இனந்தெரியாத நபரால் புதைகுழிக்கு அனுப்பப்பட்டதானது, நமது தேசத்தை பாதுகாக்க சிங்கள இனத்தைப் பாதுகாக்க தற்போது இருக்கின்ற சக்திகளுக்கு அப்பாலும் ஒரு அமைப்பு இருப்பதை உணர்த்தியதானது நம்மெல்லோருக்கும் தைரியமளிக்கின்றது.- என்று இருந்தது. அந்தச் செய்தியில் இவ்வாறானவர்களுக்கு என்ன நேரும் என்கின்ற எச்சரிக்கையும், அவ்வாறான இயக்கமொன்று இருப்பதை பற்றிய சிங்கள மக்களுக்கு தைரியத்தையும் அளிக்கும் செய்தியாகவே அது இருந்தது. இதை விட முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் அதே பக்கத்தில் 7 கோசங்கள் இருந்தன. அந்த கோசத்தில் இறுதியானது என்ன தெரியுமா, நாட்டையே யுத்தத் தாயாரிப்புக்கு உட்படுத்துவோம், புலி எதிர்ப்பு தேசிய முன்னணியை கட்டியெழுப்புவோம் என்பது தான் அந்த கோசம். உங்களுக்குத் தெரியுமா குமார் பொன்னம்பலத்தின் கொலைக்கு உரிமை கோரிய இயக்கமும் இது தான். National front against tigers இதனை நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். இந்த விடயம் எங்கும் கவனிக்கப்பட்டதாக இது வரை நான் அறியவில்லை.

அவர்களின் கொலைபட்டியல் அடுத்தது யார் என்கிற கேள்வி பல புத்திசீவிகள், அரசியலாளர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்தன. அந்த பட்டியல் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

சமீபத்தில் லக்பிம பத்திரிகையில் சம்பிக்கவின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியில் ஒரு கேள்வி. இந்த குறுகிய காலத்தில் நீங்கள் கண்டடைந்த வெற்றிகள் என்ன? அதற்கு சம்பிக்கவின் பதில் இப்படி இருந்தது. இது வரைகாலம் செக்கியுலரிசம் பற்றி பேசிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சி இன்று ரணில் தலைமையில் மகாசங்கத்தினரை சந்தித்து பன்சில் எடுக்கிறார். இது வரைகாலம் மார்க்சியம், பேசிக்கொண்டி¬ருந்த ஜே.வி.பி. தங்கள் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் பிரதியை மகாசங்கத்தினருக்கு கொடுத்து ஆசி பெற்று "அடபிரி" செய்கின்றனர். இது யார் கண்ட வெற்றி என்பதை நீங்கள் தீர்மானியுங்கள் என பதிலளிக்கிறார் சம்பிக்க.

இந்தப் புள்ளி தான் நாங்கள் அவதானிக்க வேண்டிய முக்கிய புள்ளி. இன்று ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டத்தையும் கட்டுப்படுத்தும் வலிமையை பாசிசம் பெற்றுவிட்டது. ஆயுதப் புரட்சி பற்றி பேசிக் கொண்டிருந்த ஜே.வி.பி.யை சிங்களத் தேசியம் பற்றி பேசவும், அதற்கு எதிராக போகாமலும் பண்ணியிருக்கிறது. குறைந்தபட்சம் சமவாய்ப்புச் சட்டத்தைக் கூட பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போனது எவரது வெற்றி? தமிழர்களின் உரிமைகளுக்கே வேட்டு வைக்க இருந்த தீர்வுப்பொதியைக் கூட பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் செய்தது யாரது வெற்றி. சிறிமா அம்மையாரை பதவி விலக்கி சிங்கள வீரவிதானவுக்கு நெருக்கமான ரத்னசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக போட்டு மகாசங்கத்தினரை அணுக வைத்தது யாரது வெற்றி. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லாக்காசாக்கியது யாரது வெற்றி, ரணிலின் ஆட்சி கவிழ்ப்பு, சந்திரிகாவுக்கு எதிரான சதி, மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியமர்த்தல், ஆட்சியை நிழலில் இருந்து வழிநடத்துதல் என சகல வெற்றிகளையும் அது தொடர்ந்துகொண்டே இருக்கி¬றது. இந்த நிலைமைகளை விளங்கிக்¬கொள்ளவும், அதற்கேற்ப தங்களை தயார்படுத்தவும் தமிழ்த் தேசம் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டம் இது.

இன்று முழு சிவில் சமூகத்தையும், அரச கட்டமைப்பையும், பாசிசம் தான் வழிநடத்துகிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இதற்குப் பின்னால் முதலாளித்¬துவ நலன்கள், பல்வேறு சக்திகளின் நலன்கள் கலந்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அவற்றின் அறுவடை அனைத்தும் பாசிசம் சுவீகரித்துக் கொள்கிறது. சிஹல உறுமய இன்று ஒட்ட இருந்த சுவரொட்டியை நேற்றே ஜே.வி.பி.யினர் ஒட்டிவிடுகின்றனர். சிங்கள வீரவிதானவுக்கு வேலை மிச்சம். ஜே.வி.பி. மட்டுமல்ல சிங்கள கட்சிகள் அனைத்தினதும் இன்றைய நடவடிக்கையின் அறுவடையை பாசிசம் தனக்குரிதாக்கி விடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். 30களில் மேற்கில் சோசலிசத்தை பாசிசம் வெற்றிகண்ட வரலாற்றனுபவத்தை இன்னமும் இலங்கை இடதுசாரிகள் உணரவில்லை, என்றே நான் கூறுவேன். இனி பாசிசத்துடனான கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்ளாமல் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் சக்திகளும் இருப்பு கொள்ள முடியாது. பேரினவாதம் நிறுவனமயப்படுதல் என்பது எந்தவொரு இடைஞ்சலும் இல்லாமல் இலங்கையில் நிகழ்கிறது.

பாராளுமன்ற அரசியல் வாதத்தைப்பொருத்தவரை பேரினவாதத்தை திருப்திபடுத்துகின்ற சக்திகளே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றமுடியும், அதனை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கிற நிலை இன்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த போக்கில் அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டுமென்றால் ஒரு அதிசயம் தான் நிகழவேண்டும்.

பேரினவாத முலாம் பூசப்பட்ட பௌத்த மதமும், அதில் நிலையூன்றச்செயய்ப்பட்டுள்ள அரச அதிகார கட்டமைப்பு மேலும் கல்வி, மற்றும் சிவில் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் என அனைத்¬தும் பேரினவாதமயப்படுத்தப்பட்டிருக்கிறது. புறநிலையாக இவற்றுக்கு எதிராக இடதுசாரி இயக்கங்கள் சில ஜனநாயக நிறுவனங்களுமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் அது அவ்வளவு பெரிய வெற்றியை எய்த முடியவில்லை.

மேலும் முற்போக்கான புத்திஜீவித்துவ சக்திகள், புலமையாளர்கள் என்போர் பல சமயங்களில் அரசியல் மாற்றங்கள் நிகழும் என்று நம்பி பூர்ஷ்வா சக்திகளை சார்ந்தும் அச்சக்திகளை பலப்படுத்தியும் வந்துள்ளனர். இந்தத்தவறை காலப்போக்கில் சிலர் திருத்திக்கொண்ட போதும் கணிசமானோர் அதனை திருத்திக்கொள்வதை தமது மானப் பிரச்சினையாகக் கொண்டதும் உண்டு. இதன் விளைவு அவர்கள் எதிரியின் கைக் கூலிகளாகவும், பகடைக்காய்களாகவும், ஆகி ஈற்றில் அவர்களின் உரிய இடத்தை முழுவதும் இழந்ததும் நமது நாட்டில் நடந்தது. பிரான்சில் பிரெஞ்சுப் புரட்சி காலங்களில் பூர்ஷ்வா வர்க்கம் முற்போக்கனாதாக காட்டிக்கொண்டதும், அது அறிவாளிகளையும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற உபயோகித்ததையும், அது அதிகாரத்தை கைப்பற்றிய பின்பும் தொடர்ந்தது போல இங்கும் நிகழ்ந்தது. 1956இல், 1970இல் 1994இல் இதுபோன்ற நிகழ்வுகள் இலங்கையில் நிகழ்ந்தன.

ஆனால் 2005இல் பேரினவாத சக்திகள் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்ற போதிய பலமுள்ளதாக இருநதது. மார்க்சிய தோல் போர்த்திய பேரினவாதிகள் இலகுவாக அதிகாரத்தை கைப்பற்றினர்.

இன்றைய யதார்த்த நிலையொன்று உள்ளது. அது தான். ஊடகச் சந்தையில், ஊடக முதலாளிகளின் மூலதனம் பாதுகாக்கப்படவேண்டுமென்றால், அந்த மூலதனம் லாபத்தை ஈட்டவேண்டுமென்றால் தேசியத்தை உயர்த்திப்பிடித்தல் என்பது தவிர்க்கமுடியாததாகிறது. இது ஒரு சந்தைக்கான தந்திரோபாயமாக (Marketing stretegy) ஆகிவிட்டிருக்கிறது. சிங்களத் தேசியத்தை உயர்த்திப்பிடிக்காத எந்தவொரு ஊடகமும் வர்த்தக ரீதியில் வெற்றியடைய முடியாத நிலை தோன்றியிருப்பது போலவே, தமிழ்த் தேசியத்தை உயர்த்திப் பிடிக்காத எந்த ஒரு ஊடகமும் வியாபார அளவில் வெற்றியடைய முடியாத நிலை தோன்றியிருப்பது தான் யதார்த்தம். இந்த இடத்தில் இருந்து உங்கள் பார்வைகளை விசாலப்படுத்துங்கள் மேலும் பல உண்மை நிலைகளை அறிந்து கொள்வீர்கள்.
ஆக, முழு நாடும் பாசிசத்தின் நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டு செல்லப்படுவதாகக் கூறுகிறீர்கள்..?

இனிவரப்போகும் காலம் அபாயகரமானது என்றா எச்சரிக்கிறீர்கள்..?

இதில் ஊடகங்களின் பாத்திரம் பற்றி...?

தற்போதைய அரசியல் தீர்வு முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்புகள் பற்றி..?

அடிப்படையில் நோர்வே அமெரிக்காவின் பொம்மையாகவே பாலஸ்தீன தீர்வு முயற்சியிலும் தன்னை ஆக்கிக் கொண்டிருந்தது. சமீபகாலமாக உலகில் தேசியப் பிரச்சினைகளின் மீதான தீர்வுகளுக்கு அமெரிக்கா நேரடியாக தலையிடாமல் நோர்வே மூலம் தமது நலன்களை நிறைவேற்றி வருவதை பார்க்கலாம். அடக்கப்படும் தேசங்களுக்கு தீர்வு தருவதைப் பார்க்க அடக்கப்படும் மக்களின் போராட்டங்களை சரணடையச் செய்கின்ற முயற்சியையே நோர்வே மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மேலும் உலகின் சமாதான தேவதையாக நோர்வே நோக்கப்படும் அதே நேரம் நோர்வே தனது நாட்டுக்குள் ஏனைய தேசங்களை எப்படி அடக்கிவைத்திருக்கிறது என்பதற்கு வரலாறு உண்டு. அங்குள்ள சாமிர் எனும் இனத்தவர்களின் தனியான பண்பாடு, மொழி, கலாசாரம் என்பனவற்றை சிதைத்தும், அவர்களின் இன அடையாளத்தை பேணவிடாமல் நுணுக்கமாக இயங்கியும் வந்திருக்கிறது. நோர்வேயின் வடக்குப் பகுதியில் இந்த இனத்தவர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை நோர்வேயின் பிரதான வருமானமான எண்ணெய் வளங்களை அனுபவிக்கலாம். இப்படிப்பட்ட நோர்வேயின் தலையீட்டை சந்தேகத்தோடு நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. மேலும் அடிப்படையில் தமிழ் மக்களின் எதிரிகளாகிவிட்டிருக்கிற அமெரிக்கா, இந்தியா போன்ற சண்டியர்களிடம் தான் இலங்கை பிரச்சினை தொடர்பாக யோசனைகளை நோர்வே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ளுங்கள். ஒரு புறம் குர்திஸ்தான் மக்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதாக வேடம்போட்டுக் கொண்டு. மறுபுறம் குர்திஸ்தான் மக்களின் போராட்டத்தை அடக்க துருக்கி அரசாங்கத்திற்கு ஆயுத தளபாடங்களை விற்பனை செய்து வருகிறது நோர்வே. நோர்வேயின் நடவடிக்கைகள் குறித்து பேரினவாதிகள் சந்தேகிப்பதற்கும் தமிழ் மக்கள் சந்தேகிப்பதற்கும் இடையில் அடிப்படை வித்தியாசம் உண்டு என்பதையும் கவனியுங்கள்.
மாற்று அரசியலின் தேவை பற்றி..

தமிழ்த்தேசிய விடுதலையுடன் நமது தேவை நின்றுவிடவில்லை. இன்றைய முதன்மைத் தேவை என்கிற பேரில் ஏனைய சமூக அடக்குமுறைகள், ஏற்றத் தாழ்வுகள் என்பவற்றுக்கெதிரான போராட்டம் மறுக்கப்பட்டு வருவதை கண்மூடித்தனமாக தமிழ்தேசம் எதிர்கொண்டபடி இருக்கிறது. வர்க்கப் பிரச்சினை, சாதியம், பிரதேசவாதம், பால்வாதம், என்கிற விடுதலையின் தேவை இல்லாமல் போய்விடவில்லை. மேற்பூச்சுக்காக இன்று இவற்றையும் உள்ளடக்கியது தான் இன்றைய தேசப்போராட்டம் என்று கூறப்பட்டாலும் கூட, ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்குரிய எந்த நம்பிக்கையையும் இன்னும் கிஞ்சித்தும் காணவில்லை.

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது. அதற்கப்பாற்பட்ட போராட்டத்தின் தேவை இன்னமும் உள்ளது.

-நேர்காணல்- தாஸ்

சிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளல் - 2


என்.சரவணன்

இந்த கட்டுரைத் தொடர் விரைவில் வெளிவரவிருக்கும் சிங்கள சாதியமைப்பு குறித்த நூலில் உள்ளடக்கப்படுவதற்கான கட்டுரைகளாகும். ஏற்கெனவே சிங்கள சாதியமைப்பு குறித்த வெவ்வேறு தலைப்பிலான கட்டுரைகள் சரிநிகர், இனி, ஆதவன், மற்றும் 'பறை” யிலும் வெளிவந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சி இங்கு தொடர்ந்து பதிவாகிறது.


இந்திய சாதியமைப்பை மூல வடிவமாகக்கொண்ட தமிழ் சாதியமைப்பின் அடிப்படை தன்மையான சாதியப்படிநிலையானது சிங்கள சாதியமைப்பு படிநிலைக்கு ஒப்பானதல்ல.


குறிப்பாக இந்திய மூல சாதியமைப்பில் எந்தவொரு சாதிக்கும் இன்னொரு சாதி நிகரில்லை. ஆனால் சிங்கள சாதியமைப்பானது தனக்கான சாதிய படிநிலைமைப்பைக்கொண்டிருக்கிற போதும் அது தெட்டத்தெளிவான படிநிலை வரையறையைக்கொண்டதாக இல்லை என்பதை வாசகர்கள் அறிவத முக்கியம். மேலும் அது நெகிழ்வானது. எனவேதான் சென்ற இதழில் கூறியது போல முந்தி பிறந்து பிந்தியும் வாழும் தமிழ் சாதியமைப்பு என்றும் பிந்தி பிறந்து முந்தி இறக்கும் சிங்கள சாதியமைப்பு என்றும் குறிப்பிட்டிருந்தேன். இந்த நெகிழ்ச்சி அதன் படிநிலையில் மட்டுமல்ல, தீண்டாமையிலும் தான்.


மேலும் காலனித்துவம் தமிழ் சாதியமைப்பில் ஏற்படுத்திய மாற்றத்தை விட அதிகளவில் சிங்கள சாதியமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கெனவே இருந்த சில சாதித் தொழில்கள் காலனித்துவத்தோடு மாறியிருக்கின்றன. உதாரணத்திற்கு தொழில் ரிதியில் பாரம்பரிய படைவீரர்களாக துராவ சாதியினர் இருந்திருந்த போதும் அவர்கள் காலனித்துவத்திற்குப்பின் கள் இறக்குபவர்களாக கொள்ளப்படுகின்றனர். ஆனால் அவர்கள் தமிழ்ச் சமூகத்தில் இருக்கக்கூடிய கள் இறக்கும் நளவர்களுக்கு ஒப்பாக அழைக்கப்படுகின்றபோதும், அவர்கள் -தமிழ்ச்சமூகத்தில் நளவர்களின் இடமான - பஞ்சமர்களின் ஸ்தானத்தில் அவர்கள் இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.


பின் காலனித்துவத்திற்குப் பின்னர் சாதிமைப்பு முறையிலும், அதன் செயல்வடிவத்திலும், அதன் வர்க்க கட்டமைப்பிலும், அதன் இடையீட்டு செயற்பாடுகளிலும், நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தின. பெரும்பாலான சாதிகள் வழக்கொழிந்து போயின. சில சாதிகளைத் தவிர பல பெயரிழந்து போயின. சாதித் தொழில்கள் மாற்றங்களுக்கு உள்ளாயின. சில சாதியினர் மட்டும் ஒன்றாக அணிதிரண்டன.

போர்த்துக்கேயர் 1505இல் இலங்கையை கைப்பற்றிய பின்னர் ஒல்லாந்தர் வரை இலங்கையின் கரையோரங்களை மட்டுமே கைப்பற்றி ஆண்டு வந்தனர். ஆங்கிலேயர்களே 1818இல் கண்டியைக் கைப்பற்றியதன் மூலம் முழு இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.



இலங்கையின் கரையோரப்பகுதிகளை கரையோரத்தை அண்டி வாழ்ந்த கராவ சாதியினர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோருக்கூடாக மதமாற்றத்துக்கு பலியான முதல் சமூகத்தவர்களானார்கள்.
வடக்கு-கிழக்கு மற்றும் சிங்கள கரையோரப் பகுதிகளையும் சாந்த கராவஃகரையார் சாதியனர் கிறிஸ்தவர்களாகவே இருப்பார்கள் என்கிற ஐதீகம் சாதாரணர்களிடம் இருப்பதை கண்டிருப்பீர்கள்.


இந்த மத அடையாளமே கராவ சாதியினரை சாதியப்படிநிலையில் மேலும் ஒரு நிலைக்கு கீழே தள்ளியது.

சிங்கள சாதியமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்திய மூன்று வரலாற்றுத் திருப்புமுனைகளை சாதியம் குறித்த ஆய்வாளர்கள் சுட்டுவது வழக்கம்.

1. காலனித்துவம்,

2. கண்டி ராஜ்ஜியம் 1818இல் கைப்பற்றப்படல்

3. திறந்த பொருளாதாரக்கொள்கை.

சாதிகளும் தொழில்களும்


சிங்கள சாதியமைப்பினை இரு பெரும் பிரிவினைக்குள் உள்ளடக்கி பார்ப்பது எளிமையாக இருக்கும். கண்டி சிங்களவர்கள் (மலைநாட்டுச் சிங்களவர்) மத்தியில் நிலவும் சாதியமைப்பு மற்றும் கரையோரச்சிங்களவர்கள் (தெற்குச் சிங்களவர்) மத்தியில் இருக்கின்ற சாதியினர்.

கண்டியச் சிங்கள சாதியினர்


1. அஹிங்குந்தய (நாடோடிகள்)

2. பட்டஹல (கும்பள்) - குயவர்

3. பத்கம - பாரம்பரிய விவசாயிகள் (பிரித்தானிய ஆட்சியின் போது இவர்கள் பள்ளக்குத் தூக்கிகளாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.)

4. பெராவ - பறையடிப்பவர்

5. கொவிகம - பாரம்பரிய விவசாயிகள் பண்ணையாளர்கள்.

6. ஹாலி - நெசவாளர்கள்

7. ஹன்னலி - தையற்காரர்

8. ஹூனு - சுன்னக்கல் செய்பவர்கள்.

9. கின்னரய - பாய் பின்னுபவர்கள். 'தாழ்ததப்பட்டோர்”;.

10. நவந்தன்ன - பொற்கொல்லர். - (பல கிளைச்சாதிகளைக்கொண்டது)

11. பமுனு - கூலி விவசாயிகள்

12. பன்ன - புல்வெட்டுவோர்,

13. பனிக்கி - முடி திருத்துவோர்

14. பட்டி - கால்நடைவளர்ப்போர்

15. பொரவக்கார - மரம்தரிப்போர்

16. ரதல - நிலப்பிரபுக்கள். (குறிப்பாக கண்டி ராச்சிய காலத்தில்)

17. ராஜக்க, ஹேன - சலவைத்தொழிலாளர்கள்.

18. ரோடியோ - 'தாழ்ததப்பட்டோர்”;.

19. வக்கும்புர - வெல்லம் தயாரிப்பாளர்



கரையோரச் சாதியினர்


1. அஹிங்குந்தய - நாடோடிகள்

2. பட்டஹல (கும்பள்) - குயவர்

3. பெராவ - பறையடிப்பவர்

4. கட்டர - விவசாயிகள்

5. தெமல கட்டர - தமிழ் 'தாழ்த்தப்பட்டோர்”;.

6. துராவ - பாரம்பரிய படைவீரர் - காலனித்துவத்திற்குப் பின் கள் இறக்குவோர்.

7. ஹன்னலி - தையற்காரர்

8. ஹின்ன - சலாகம சாதியனருக்கான சலவைத்தொழிலாளர்

9. கராவ - பாரம்பரிய மீனவர்கள்.

10. நவந்தன்ன - பொற்கொல்லர். - (பல கிளைச்சாதிகளைக்கொண்டது)

11. பமுனு - கூலி விவசாயிகள்

12. பனிக்கி - முடி திருத்துவோர்

13. பொரவக்கார - மரம்தரிப்போர்

14. ராஜக்க, ஹேன - சலவைத்தொழிலாளர்கள்.

15. ரோடியோ - 'தாழ்ததப்பட்டோர்”;.

16. சலாகம - பாரம்பரிய படைவீரர், கருவா பட்டை உரிப்போர்.

17. வக்கும்புர - வெல்லம் தயாரிப்பாளர்



வட கிழக்கு தமிழ் சாதியமைப்பில் உள்ள சாதிகளுக்கு இணையாக
கருதப்படும் சிங்கள சாதிகள்


வெள்ளாளர் - கொவிகம

கரையார் - கராவ

பறையர் - பெராவ

நளவர் - துராவ

பள்ளர் - பத்கம

சாலியர் - சலாகம

துரும்பர் - ஹீன

சிவியார் - பத்கம

அம்பட்டர் - பனிக்கி

சிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளல்......

என். சரவணன்

இலங்கையில் முரண்பாடுகளின் நிரல்படுத்தலின் போது தமிழ்த் தேசப்போராட்­டமானது முதன்மை பெற்றதன் பின் ஏனைய சமூக முரண்பாடுகள் அதன் பின்னர் நிரற்படுத்தலின் போது பின்னுக்குத் தள்ளப்படவும் செய்தன.

எனவே பெருங்கதையாடலாக தமிழ்த்தேசப் போராட்டத்தோடு மையப்பட்ட கருத்தாடல்கள் அமைந்தன. அவ்வாறு நிரல் ஓழுங்கில் பின்னுக்குத்தள்ளப்பட்டவற்றுள் வர்க்க மற்றும் பெண்களின் பிரச்சி­னைகள், சாதியப் பிரச்சினைகள் என்பனவும் முக்கியமாக அடங்குகின்றன. இந்த நிலையில் சாதியம் குறித்த போதிய ஆய்வுகள், விவாதங்கள் தமிழ்ச் சூழலில் அருகி வருவதையும் இனங்காணலாம்.

சிங்கள சிவில் சமூக கட்டமைப்பில் தமிழ்ச் சமூகம் அளவுக்கு இறுக்கமான சாதிய கட்ட­மைப்பு மோசமாக இல்லாவிட்டாலும் அங்கு பல்வேறு ஆய்வுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக தேர்தற் காலங்களில் சிங்களச் சூழலில் சாதியம் தலைதூக்குவதைப் பற்றி பல்வேறு கட்டுரைகள் வெளிவரும். தேர்தல் ஆரவாரங்களின் போது அது அதிகமாக தலைகாட்டத் தொடங்கும்.

சிங்கள சாதிய கட்டமைப்பு குறித்த ஆய்வுகள் 15ஆம் நூற்றாண்­டிலேயே காணக்கிடைக்கின்ற போதும் இந்த 20ஆம் நூற்றாண்டில் அதுவும் குறிப்பாக 1971இல் ஏற்பட்ட ஜே.வி.பி. கிளர்ச்சியைத் தொடர்ந்து சாதியம் குறித்த ஆய்வுகள் பல கோணங்களில் பல ஆய்வுகளாக வெளிவரத் தொடங்கின. 71 கிளர்ச்சிக்கு காரணமான அம்சங்களில் சாதிய பிரச்சினை முக்கியமான பாத்திரமாற்றியது என்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 71 கிளர்ச்சியின் பின் அது பற்றிய புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்ட அரச தரப்­பினர் கைது செய்யப்பட்டவர்கள், மற்றும் கொல்லப்பட்ட இளைஞர்களிடமிருந்து சாதியவாரியாக தரவுகளை திரட்டியதும் அதன் காரணமாகத் தான். இந்தத் தரவுகள் பின்னர் பல ஆய்வுக­ளுக்கு மூல ஆதாரங்களாக அமைந்தன.

71 கிளர்ச்சியில் ஜே.வி.பி.யின் படைத் துறையின் ஸ்தாபகரும், முக்கிய தலைவர்க­ளில் ஒருவரும் இன்று வெளிவந்து கொண்டிருக்கும் மாற்றுப் பத்திரிகைகளில் ஒன்றான ”ராவய”வின் ஆசிரியருமான விக்டர் ஐவன் சிங்கள சாதிய கட்டமைப்பு குறித்து இலங்கையில் பல ஆய்வுகளைச் செய்திருப்பவர். அது மட்டுமன்றி இலங்கையின் அரசியலில் எந்த பிரதான நிகழ்வுகளிலும் அதில் உள்ள சாதியத்தின் பங்களிப்பைப் பற்றி தேடித்துருவுபவர்.

இலங்கையில் நிலவுகின்ற சாதிய அமைப்பு முறையானது சிக்கல் வாய்ந்தது. வடக்கு கிழக்குச் சூழலில் நிலவுகின்ற சாதியம், இந்திய வம்சாவழியினர் மத்தியில் நிலவி வரும் சாதியம், மற்றும் சிங்கள சமூகத்தினர் மத்தியில் நிலவுகின்ற சாதியம் ஆகிய மூன்றுவித தமக்கே உரிய கட்டமைப்­பினை கொண்டிருக்கிறது. இவற்றுக்கிடையே உறவுகளும், முரண்பாடுகளும் உண்டு. இவற்றுக்கென்று தனியான பண்புகள் வடிவங்கள் உண்டு. சாதியப் படிநிலை ஒழுங்கிலும் கூட ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு.

சாதியம் என்பது பிறப்பால் தீர்மானிக்­கப்­படுவது, அகமணமுறை, சாதிய ரிதியி­லான தொழிற்பிரிவினை, அதிகாரப்­படிநிலையமப்பு, அடையாளப்படுத்தலுக்­கான காரணி ஏன் சில சாதிகளுக்கான தீண்டாமை போன்றன கூட சிங்கள சாதியமைப்பில் காணலாம்.

ஆனால் இந்திய சாதிய கட்டமைப்பு மற்றும் வடகிழக்குக்குள் நிலவுகின்ற சாதிய கட்டமைப்புக்குள் நிலவுகின்ற அதிகாரப் படிநிலை ஒழுங்கு (நிரலொழுங்கு) போல சிங்கள சாதிய கட்டமைப்பில் இல்லை. இங்கு அது மிகவும் சிக்கல் வாய்ந்தது, தவிரவும் சில சாதி­களுக்கு சமமான வேறு சாதிக­ளையும் இதில் காண முடியும்.

பௌத்த சித்தாந்தத்தைப் பொறுத்தளவில் அடிப்படையில் அது சாதியத்துக்கு எதிரான ஒன்று. புத்தரின் போதனைகள் பல சாதிய எதிர்ப்புகளைக் கொண்டவை. ”வசல சூத்திரய” எனும் புத்தரின் போதனையானது சாதியத்தைக் கடுமையாக சாடும் ஒன்று. இலங்கை அரசர்க­ளுக்கும் இந்திய அரசர்க­ளுக்­குமி­டையில் ஏற்பட்ட உறவுகள், ஆக்­கிர­மிப்­­புகள், என்பனவற்றுக்­கூடாகவே இந்திய சாதியம் சிங்கள சமூகத்த­வரிடமும் மெல்ல மெல்ல நிறுவப்பட்டதாக பல்வேறு ஆய்வா­ளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். சிங்கள சமூகத்தில் இச்சாதிய கட்டமைப்புக்கு தோதான படிமங்கள் அதன் கட்டமைப்பில் பிறக்கவில்லை. ஆனால் இந்த சாதிய கட்ட­மைப்பை நிலைநிறுத்துவதை அன்றைய அரசர்­களும் நிலப்பிரபுத்துவ சக்
திகளும் சாதகமாகக் கருதினர். (இலங்கைக்கு இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலா­ளர்களை இறக்குமதி செய்த போது ஆங்கி­லே­யரும் தமது நிர்வாகத்தை செவ்வனே நடாத்த அங்கிருந்த சாதிய கட்டமைப்பை அப்படியே தக்க வைப்பது தமது ஆட்சியதி­கா­ரத்­துக்கு சாதகமானது என கருதியிருந்­ததும் இந்த வகையில் தான்) ஏனெனில் ஏலவே உள்ள அதன் படிநிலை கட்டமைப்­பானது தமது நிர்வாகத்துக்கு சாதகமானது என கருதினர். இலங்கையில் பின் வந்த பல பௌத்த துறவிகள் சாதியத்தையும் சிங்கள பௌத்த கட்டமைப்போடு இணைத்து இலக்­கியங்கள், மற்றும் ஓழுக்கக் கோவைகளை அமைத்துக் கொண்டனர். இவை தான் பின்னர் சாதிய கட்டமைப்புக்கு நிறுவன வடிவம் கொடுப்­பதில் பங்காற்றின. கண்டிய ராச்சிய காலகட்­டத்தின் கீழ் அமைந்த நிலப்பிரபுத்துவ கட்டமைப்பின் கீழ் தான் சிங்கள சாதியம் வலுப்பெற்றதாக ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெண்களுக்கு எதிராகவும், அடிமட்ட தொழில்களைப் புரிந்த விளிம்புநிலையி­னருக்கு எதிராகவும் சாதிய ஒழுக்கக் கோவைகளை ”பௌத்த முலாம் பூசி” அளித்ததில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராக கருதப்படும் அநகாரிக்க தர்மபாலவின் பாத்திரம் முக்கியமானது.

நாவலர் சைவ சித்தாந்த ஒழுக்கக் கோவையை நிறுவுகின்ற பணியைச் செய்­கின்ற போது பெண்கள் குறித்தும், ஒடுக்கப்­பட்ட சாதியினருக்கு எதிராகவும் மோசமான ஒழுக்க விதிகளுக்கு ஒப்பானவற்றை அநகாரிக்க தர்மபாலவின் ஒழுக்கக்கோவை­யிலும் காணலாம். (இது குறித்து பின்னர் தனியாக பார்க்கலாம்.)

மலைநாட்டுச் சிங்கள சாதிய கட்ட­மைப்பை விட கரையோரச் சிங்கள சாதியக் கட்டமைப்பு நெகிழ்ச்சியானது. ஏனெனில் காலனித்துவ ஆக்கிரமிப்பின் கீழ் கத்தோ­லிக்க மதத்தின் செல்வாக்கு இதில் குறிப்பான மாற்றங்களை ஏற்படுத்தின. என்றாலும் சாதியத்தின் பண்பை அப்படியே குலைக்­காமல் அதன் வடிவத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. காலனித்துவ சக்திகளின் முதல் ஆக்கிரமிப்பாகிய கரையோரங்களில் இருந்து வந்த கராவ (தமிழில் கரையார் சாதியையொத்த மீனவத் தொழிலைச் சார்ந்தோர்) சாதியானது கத்தோலிக்க மதச் செல்வாக்கின் பின் ”கத்தோலிக்க கராவ”, ”பௌத்த கராவ” என்கிற பிரிவுகளாக தம்மை அடையாளப்­படுத்­துகின்ற போக்கெல்லாம் இருக்கின்றன. சிங்கள சமூகத்தில் பிரதான இடத்தையும், பெரும்பாலானவர்களாகவும், ஆதிக்க சாதியாகவும் உள்ள கொவிகம (விவசாய நிலப்பிரபுத்துவத்தைச் சார்ந்த-தமிழ்ச் சூழலில் வெள்ளாளர் சாதிக்கு ஒப்பானவ­ர்கள்) சாதி மற்றும் கராவ சாதி போன்றவற்­றுக்கு தனியான அமைப்புகளும், அச்சாதிகளுக்கான கொடிகளும் கூட இருந்திருக்கின்றன. (பார்க்க படம்)

இலங்கையில் சிங்கள சாதியத்தைப் பற்றிக் குறிப்பிடும் மிகவும் பழமைவாய்நத மானுடவியல் நூலான ”ஜனவங்சய”வில் 26 சாதிகள் குறிப்பிடப்படுகிறது.(பார்க்க அட்டவணை) மத்தியகால இலங்கையில் இருந்ததாகச் சொல்லப்படும் சாதிகள் 17ஐ ஜே.டி.லெனரோல் குறிப்பிடுகிறார்.

1. நவந்தன்ன - கலைஞர்கள்

2. கராவ - வேட்டையாடல் மீன்பிடி

3. துராவ - கள் இறக்குவோர்

4. ரதா - உயர்சாதியினருக்கு உடைதுவைப்போர்

5. ஹன்னாலி - நெசவு செய்வோர்

6. படஹெல - மட்பாண்டங்கள் செய்வோர்

7. அம்பெட்ட - முடிதிரத்துவோர்

8. ஹாலி - நெசவு, ஐரோப்பியர் காலத்தில் கருவா தொழில்

9. ஹக்குறு - கருப்பட்டி உற்பத்தி

10. ஹணு - சுண்ணாம்பு

11. பண்ண - புல் வெட்டுவோர்

12 பெரவா - தாளவாத்தியம் இசைப்போர்

13 பது - பள்ளக்கு தூக்குவோர்

14. கஹல - கொலைத் தண்டனை நிறைவேற்றுவோர், சுத்திகரிப்போர்

15. ஒலி, பலி - சிரட்டை எரிப்பு, ”குறைந்த” சாதியினரின் உடை துவைப்பு

16. ஹின்ன - மாவு சளிப்போர்

17. கின்னர - பாய் பின்னுவோர்

பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர எழுதிய ”இலங்கை மக்கள்” எனும் நூலில் 43 சாதிகளின் பட்டியலைக் குறிப்பிடுகிறார்.

1. அஹிகுந்தித்த 2. எம்பெட்ட 3. ஒலி 4. கராவ

5. காப்பிரி 6. கஹல 7. ஹாட் 8. கெத்தர

9. கொய்கம 10. ஜா 11. துரய் 12. துராவ

13. நவந்தன்ன 14 நெக்கத்தி 15.பது 16. பன்ன

17. பனிக்கி 18. பட்டி 19. பரவறு 20. பொரோகார

21. பத்கம 22. படஹெல 23. பண்டார 24. பெரவா

25. பெத்தே 26. பாரத்த 27. மரக்கல 28. மிகோ

29. முக்கரு 30. யுரேசியானு 31. ரதா 32. ரொடி

33. லன்சி 34. லோகரு 35. வக்கி 36. வன்னி

37. வக்கும்புர 38. சலாகம 39. ஹக்குரு 40. ஹலாகம

41. ஹின்ன 42. ஹ}ன்னா 43. ஹ}ளவாலி

ரொபர்ட் நொக்ஸ் 12 சாதிகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

1. ஹந்துரு 2. ஆச்சாரி-விஸ்வ 3. துருவே எத்தோ 4. பனிக்கியோ

5. கும்பல்லு 6. ரதவ் 7. ஹங்கரவமு 8. பதுவோ

9. ரெதிவியன்னோ 10. கிலியோ 11. கின்னரு 12. ரொடியோ

எவ்வாறிருந்த போதும் சாதிகளின் அளவு மேலும் கீழும் இருந்தாலும் சகலர் முன் வைத்ததிலும் வித்தியாசம் இல்லை. பல சிறிய சாதிகள் வழக்கொழிந்து போய்விட்டன. (”சாதியம், வர்க்கம், மற்றும் மாறிவரும் இலங்கைச் சமூகம்” எனும் காலிங்க டியுடர் சில்வா வின் கருத்தின்படி இவ்வாறு வழக்கொழிந்துபோன சாதியத்தின் எச்சமானது இப்போது 14 இல் தான் இருக்கிறது என்கிறார். அட்டவணையைப் பார்க்க) அவை ஏனைய சாதியினரோடு காலப்போக்கில் கலந்து விட்டன. சிங்கள சாதியமைப்பில் இறுக்கமான சாதிய படிநிலையொழுங்கு இல்லாததும் சில சம அந்தஸ்தான சாதிகள் இருந்ததும் இதற்கான காரணமாக இருக்கலாம்.


என்றாலும் இன்றும் எஞ்சியிருக்கிற வர்க்க நிலையில் பலம்வாய்ந்த ஆதிக்க சாதிகள் பல இன்றும் இலங்கையின் வர்க்க, அரசியல், நிலைகளில் தமது அதிகாரத்துவத்­தைத் தக்க வைத்திருக்கின்றன. இலங்கையின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்திகளாக நிலப்பிரபுத்துவ பின்னணியைக் கொண்ட, அதேவேளை இன்று பெரும்பாலும் தரகுமுதலாளித்துவ சக்திகளாக தங்களை நிறுவியிருக்கிற கொவிகம மற்றும் கராவ ஆகிய சாதியினர் தான் அதிகாரத்துவ நிலையில் முக்கியத்துவ இடத்தை வகிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று கீழ் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் அகமணமுறை உடைந்து கலப்பை நோக்கிச் செல்வது அதிகரிப்பதனூடாக அடித்தட்டு மக்களிடையே சாதியம் ஓரளவு தகர்ந்து வந்தாலும் மத்தியதரவர்க்க மற்றும் உயர் மத்தியதரவர்க்க மேட்டுக்குடியினரிடம் இந்த அகமணமுறை பேணப்பட்டே வருகிறது. சொத்து வேறு சாதியினருக்கு பிரிந்து செல்லாமலிருக்கவும் அது ஓரிடைத்தைநோக்கி (தம்மை) மையப்படுத்­துவதற்காகவும், இந்த சாதிய அகமணை முறை இறுக்கமாக இந்த வர்க்கத்தினடையே பேணப்படுகிறதெனலாம்.

இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்க­ளும் அடித்தட்டு மக்களிடையே சாதிய கலப்புகளை ஏற்படுத்திவிட்டாலும், மறுபுறம் ஆதிக்க சாதிகள் கேந்திர தளங்களில் தம்மை நிறுவனப்படுத்தவும் செய்திருக்­கின்றன. அதனை இலங்கையில் சகல சாதிய கட்டமைப்புக்குள்ளும் பார்க்கலாம்.

வர்க்க மற்றும் ஏனைய சமூக அந்­தஸ்த்து சார்ந்த விடயங்களில் ஒன்றி­லிருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் ஓரளவு இருக்கின்ற போதும் சாதியமானது பிறப்பால் தீர்மானிக்­கப்படுவது என்பது முக்கிய பண்பாகும்.

இலங்கையின் அரசியலில் அன்று இலங்கை தேசிய காங்கிரஸ் தொடக்கம் அதன் பின் வந்த சகல அரசியல் கட்சிகள், அரசியல் நிலைமைகள் அனைத்திலும் சாதியத்தின் செல்வாக்கு இருந்ததை பலர் அறியார். தோற்றப்பாடாக எட்டப்பட்ட நிகழ்வுகள் இந்த உண்மைகளை துலங்க வைக்க வாய்ப்பளிக்கவில்லை. இது தமிழரசியலிலும் சரி சிங்கள அரசிய­லிலும் சாரிபொருந்தும். அதே வேளை இவ்வாறு சாதியம் செல்வாக்கு அந்தந்த சாதிய (சிங்கள, தமிழ்) கட்டமைப்புகளுக்குள் தான் இயங்கின என்றில்லை.
இனங்களுக்கிடையி­லான உறவுகள் முரண்­பாடுகள் என்பனவற்றைத் தீர்மானிப்பதிலும் இந்த சாதியம் பரஸ்பரம் தலையீடு செய்தி­ருக்கிறது. இவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்­ளப்பட வேண்டும். உதிரிகளாக ஆங்காங்கு இவ்வா­றானவற்றுக்கு தகவல்க­ளாக பல ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகின்ற போதும் இந்த நோக்கில் அவ்வகை ஆய்வுகள் முறையாக செய்யப்பட்­டதில்லை. அதுவும் முக்கியமாக இலங்கையில் தற்போது நிலவும் தமிழ்த் தேசப்போராட்­டத்தைத் தீர்மானிப்பதில் இவற்றின் பாத்திரம் கண்டறிவது இன்றைய நிலையில் அவசியமானதும் கூட.

போரின் கருவியாக பாலியல் வல்லுறவு!


என்.சரவணன்
போரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு சமூகவியலாளர்கள் மீள, மீள சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

அந்தவகையில் பெண்கள் விளிம்புநிலை சக்தியினர் தான். போரின் போது பாதிக்கப்படுபவர்களில், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்கள் என்போர் அதிக கரிசனைக்கும், கவனத்துக்கும் உள்ளாவது இந்த அடிப்படையில் தான். இதனை நிறுவுவதற்கு சுனாமி கூட நமக்கோர் நல்லதொரு உதாரணம்.

பஞ்சம், பட்டினிச்சாவு, நோய், இயற்கை அனர்த்தம், போர் என அத்தனைக்கும் இது பொருந்தும்.



போரின் போது பெண்கள் இன்னும் பிரேத்தியேகமான முறையில் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுவதும் இடம்பெற்றுத்தான் வருகின்றன. நமது சங்க இலங்கியங்கள் கூட இதனை பதிவு செய்திருக்கின்றன.

ஸ்ரீ லங்காவில்

இன்றைய நிலையில் சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பில், தமிழ் மக்கள் குறித்தும் இலங்கை வரலாறு குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தியல்­களை மாற்றியமைக்காமல் எதையும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்­டது.

இந்தப் பேரினவாதக் கட்டமை­ப்பை வளர்த்தெடுக்க எந்த ஆதிக்க அரசியல் சக்திகள் காரணமாக இருந்தனவோ இன்று அதே சக்தியானது, தானே, விரும்பி­னாலும் கூட தான் வளர்த்துவிட்டுள்ள கட்டமைப்­பானது அப்படிப்பட்ட ஒரு தீர்வுக்கு இடமளிக்கப் போவதில்லை என்பதையும், அது ஆதிக்க சக்திகளின் இருப்புக்கே உலை வைத்துவிடும் என்பதும் அம்பலப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமாதான முயற்சி..., பேச்சுவார்த்தை..., போர் நிறுத்தம்..., தீர்வு... என்பவற்றை எதிர்க்க சிவில் சமூகமே தயாராக்கப்பட்டு வருவதை தென்னிலங்­கையின் அண்மைய நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இந்த நிலையில் அரசு விரும்பியோ விரும்பாமலோ தனது இருப்புக்காக போர்க் கெடுபிடி நிலையை பேணி வருகிறது. அதற்காக எவ்வளவு பெரிய இழப்புகளுக்கும் முகம் கொடுக்க சிவில் சமூகம் பழக்கப்பட்டு - பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. தென்னிலங்கையில் தொழிலாளர்க­ளின் வேலை நிறுத்தம், பொருள் விலையு­யர்வு, தீர்வைகளின் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் என்பவ­ற்றைக் கூட போரின் பேரால் நியாயப்­படுத்துவதை எதிர்த்து பெரிய எதிர்ப்பு ”நடவடிக்கைகள்” எதுவும் இல்லை.

அரசாங்கங்களின் இருப்புக்கான அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒன்றாகவே போர்ச்சூழல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. போரின் போது படையினரின் உளப்பலத்தை பாதுகாப்பதும், உற்சாகத்தை பேணச் செய்தலும் அரசின் கடமையாகிறது. படையினரின் உயிரிழப்புகள், இராணுவத்தினாரின் உயிரிழப்­புகள், பொருளிழப்புகள், முகாம் இழப்­புகள் எனபனவற்றால் படையிலிருந்து வெளியேறு­வோரின் தொகை அதிகரித்து வந்த அதே நேரம் படைக்கு புதிதாக சேருவோரின் தொகை குறைந்துக் கொண்டே வருகிறது. தென்னிலங்­கையில் சிங்கள இளைஞர்கள் பலர் தமது வீடுகளில் பெற்றோரை மிரட்டு­கின்ற வார்த்தைப் பிரயோகமாக ”படையில் போய் சேர்ந்து விடுவேன்” என்பது சர்வசாதாரணமாக ஆனது.

இந்த நிலையில் இருக்கின்ற படையி­னரை தொடர்ந்து தக்க வைக்கவும், புதிதாக படைக்குச் சேருவதை ஊக்குவிக்கவும் பல வழிமுறைகளை அரசு கையா­ள்கிறது. படையில் இணைவோ­ருக்­கான சம்பள, சலுகைகள் அதிகரிப்பு அவற்றில் முக்கியமா­னவை. இது போன்ற வழிமுறைகளில் ஒன்றே படையினரின் போர்க்கால குற்றங்களை பொருட்­படுத்தாமை என்பது.

அந்த போர்க்கால குற்றங்களில் பாரிய ஒன்றாக தமிழ்ப் பெண்களின் மீதான பாலியல் வல்லுறவு நிகழ்கிறது. இது வெளிப்படையாக பாலியல் இச்சை சார்ந்ததாக காட்டப்பட்டாலும் அதற்கும் அப்பாலான பொருண்­மைகள் உள்ளன.

இதற்கான உள்ளார்ந்த அனுமதியும், ஆசீர்வாதமும் படைத் தரப்பில் வழங்கப்பட்­டுவருவதை சம்பவங்கள் பல நிரூபித்துள்ளன. வெளியில் செய்தி கசியாமல் எதனையும் செய்யலாம் என்கின்ற நிலைப்பாடு இராணுவ வட்டாரத்தில் இருக்கிறது.

1994இல் பதவிக்கு வந்த பொ.ஐ.மு. அரசாங்கம் அதே ஆண்டு இறுதியிலிருந்து நடத்திய பேச்சு வார்த்தைகள் 1995 ஏப்ரலில் முறிவடைந்தது. 1995 ஒக்டோபரில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்­கையின் மூலம் யாழ் குடா நாட்டைக் கைப்ப­ற்றிய அரசாங்கம் அது தொடக்கம் யாழ் குடா நாட்டை ஒரு மூடுண்ட பிரதேச­மாகவே ஆக்கி வந்தது. வெளியுல­கத்துக்கு அங்கு இராணுவத்தைக் கொண்டு சிவில் நிர்வாகத்தை நடாத்தி வருவதாகவும் பிரச்சாரப்ப­டுத்தியும் வந்தது.

போரினால் அரசு சந்தித்து வந்த தொடர் தோல்விகளினால் படை­யினரின் உளநிலை வீழ்ச்சி கண்டிருந்தது. இதேவேளை மூடு­ண்ட பிரதேசமாக இருந்த யாழ் குடா நாட்டில் பல நூற்றுக்கணக்­கானோர் காணாமல் போனோர்­கள். அடிக்கடி ஆங்காங்கு சடலங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. காணாமல் போவோரின் தொகை அதிகரித்துக்கொண்டே சென்றது.

இப்படிப்பட்ட நிலையில் தான் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் படையினரின் கட்டுப்­பாட்டுப் பிரதேசங்களில் படையின­ராலேயே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொணர்வது எவருக்கும் அவ்வ­ளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை. அரச பயங்கரவாதம் சட்டபூர்வமான முறையில் அவசரகால சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றினூ­டாகவும், ஊடகத் தணிக்கை போன்றவற்றினூ­டாகவும் மேற்கொள்ளப்பட்டது. அச்சட்டங்கள் மக்களின் மீதான இராணுவ அட்டுழியங்க­ளுக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் வல்லுறவுகளுக்குமான அனுமதிப்பத்திர­மாகவே அமைந்தது.

1971 ஏப்ரல் கிளர்ச்சியின் மூலம் ஜே.வி.பி.யை அடக்குவதாக கூறிக்கொண்டு சிங்கள இராணுவம் தனது சொந்தத் தேசத்து சிங்கள யுவதிகளையே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். மனம்பேரி எனும் ஜே.வி.பி. இளம் பெண்ணின் கதை மட்டுமே மேற்பூச்சுக்­காக வழக்கு நடாத்தி சம்பந்தப்பட்ட படையின­ருக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஜே.வி.பி.யை அடக்கவென சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் உதவி கோரப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவமும் இந்த காலத்­தில் பாலியல் வல்லுறவினை மேற்­கொண்டது தொடர்பாக பதிவுகள் பெரிதாக வரவில்லை. ஆனால் அன்றைய ஜே.வி.பி.க்கு தலைமை தாங்கிய பலர் இன்றும் அந்தக் கொடு­ர­ங்­களை நினைவு கூர்ந்த வண்ணமுள்ளனர்.

அதே இந்திய இராணுவத்தை 1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பெண்கள் மாலையிட்டு, திலகமிட்டு வரவேற்றபோது நாளை இவர்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் கொன்றொழிக்கப்போகிறார்கள் என்றோ தமது பெண் பிள்ளைகளை பாலியல் வன்முறைக்­குள்­ளாக்கப் போகிறார்கள் என்பதையோ அறிந்திராதிருந்தனர்.

இந்திய இராணுவ நுழைந்ததுமே இதனை தொடங்கி விட்டனர். 1987இல் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலத்திலேயே அதிக­மான பாலியல் வல்லுறவுச் சம்ப­வங்கள் பதிவாகியுள்ளன. இராணுவ நடவடிக்கையின் அங்கமாகவே இது மேற்கொள்ளப்பட்டதென பல நூல்­க­ளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்திய இராணுவம் யாழ் பல்கலைக் கழகத்தினுள் புகுந்து தமிழ் மாணவிகளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி அவர்களின் பாலுறுப்புகளை சிதைத்து பின் கொன்று புதைத்திருந்தனர். பின் அச்சடலங்கள் அப்புதைகுழிகள் தோண்டியெடுக்கப்பட்டன.

உளவியலாளர் தயா சோமசுந்தரத்தின் Scarred Minds எனும் நூலில் இது பற்றிய பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

மூன்று இந்திய இராணுவத்திர் துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு புரிய முற்பட்டபோது அவர்களை நோக்கி -என்னை இப்படி செய்யாதீங்கோ! என்னை சுட்டுக்கொல்லுங்கோ- என கதறியழுத சம்பவமும். திருநெல்வேலியில் ஒரு பெண் ஓடிப்போய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்தமை போன்ற சம்பவங்க­ளையும் அந்நூலில் பதிவாக்கியிருக்கிறார்.

இது தவிர 1968இல் வியட்நாமில் அமெரிக்காவுக்கு ஒரு மை லாய் கிராமம் போல, 1989இல் இந்திய இராணுவத்துக்கு ஒரு வல்வை படுகொலையை குறிப்பிடுவது வழக்கம். 1989 ஓகஸ்ட் 2, 3, 4 ஆம் திகதிகளில் வல்வெட்டித்­துறையையும், அதனை அண்டிய ஊர்களுக்கும் ஊரடங்குச்சட்டம் பிறப்பித்து ஆயிரக்கணக்­கான வீடுகள் கடைகளை உடைத்தும் எரித்தும்

சேதத்துக்கு உள்ளாக்கிய­துடன், பெண்கள், வயோதிபர், சிறுவர்கள் என 63 பேரை வெட்டியும், சுட்டும் தாக்கியும் படுகொலை செய்ததுடன், 15 திருமணமான பெண்களையும், 50க்கும் மேற்பட்ட இளம் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர்.

உலகம் முழுவதும் இது தான்....

பொதுவாக போர்க்காலங்களில் பாலியல் வல்லுறவுக்கூடாக ஒரு சமூகத்தை அவமானத்துக்குள்­ளாக்குள்ளாக்கலாம் என்று எதிhpத் தரப்பு நம்புவது வழக்கம். இது ஹிட்லரின் நாசிப் படைகள் தொடக்கம் அண்மைய பொஸ்னிய-சேர்பிய போர் வரை காணமுடியும். பொஸ்னிய இனத்­தின் தூய்மையைக் கெடுக்க வேண்டுமானால் அவ்வினத்தின் பெண்களின் மீது பாலியல் வல்லுறவு கொண்டு இனக்கலப்பு செய்து விட்டால் அது நடக்கும் என சேர்பியர்கள் கருதினார்கள். அதன் விளைவாக பொஸ்னியப் பெண்களை சிறைப்படுத்தி அவர்க­ளுக்கென்று தனியான முகாம்களை அ­மைத்து (Rapd Camps) அவர்களை சேர்பியர்கள் சென்று மாறி மாறி பாலியல் வல்லுறவு­க்குள்ளாக்கி அவர்களை கர்ப்பம் தரிக்கச் செய்து பிள்ளை பெற செய்தனர். அதன்பின்னர் பிறந்த அப்பிள்ளை என்ன இனம் என்று கேலி செய்தனர். நூற்றுக் கணக்கான பெண்களுக்கு இந்த கதி ஏற்பட்டது. இந்த இனக்கலப்புக்கூடாக இனக்கலப்பை செய்துவிட்டதாகவும், அப்பெண்களுக்கு பிறந்தவர்கள் எவரும் இனி பொஸ்னியர்களாக அறிவித்துக் கொள்ள முடியாதென்றும், தான் இனக்கலப்பை செய்துவிட்டதாகவும் அறிவித்துக்கொண்டார்கள். அவ்வினத்தின் தூய்மையைக் கெடுத்து விட்டதாகவும், களங்கப்படுத்தி விட்டதாகவும், புனிதம் கெடச் செய்து விட்டதாகவும் பொஸ்னி­யர்களுக்கு அறிவித்தார்­கள். 1992 அளவில் 20ஆயிரத்துக்­கும் மேற்பட்டபெண்களும், இளம் யுவதிகளும் இதன்போது பாலியல்வல்லுற­வுக்கு உள்ளாக்­கப்பட்டார்கள். பொஸ்னியாவில் நிகழ்ந்தது பெண்களின் மீதான வல்லுறவு அல்ல. ஒட்டுமொத்த மனித்தத்தின் மீதான களங்கம் (“The war on women in Bosnia was truly the rapd of humanity”2)

போர்க்காலங்களில் பெண்களை கைது செய்வது, சித்திரவதைக்கு உள்ளாக்குவது, குறிப்பாக பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குதல் அன்று தொடக்கம் இன்று வரை நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

போர் நடந்த பங்களாதேஸ், கம்போடியா, சைப்பிரஸ், ஹைட்டி, லைபீரியா, சோமாலியா, உகாண்டா போன்ற நாடுகளில் இச்சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

1990இல் 5000க்கும் மேற்பட்ட குவைத் பெண்கள் ஈராக்கிய துருப்புக்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர்.


ருவாண்டாவில் 5 லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளா­னார்கள். அல்ஜீரியாவில் சில கிராமங்களில் புகுந்த ஆயுததாரிகள் ஒட்டுமொத்த கிராமத்து பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்­ளாக்­கினர். சில தரவுகளின் படி அங்கு 1600 இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்திருக்­கின்றனர்.

இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது 1937இல் ஜப்பான் துருப்புக்களால் சீனாவின் நான்கின் எனும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட வேளை அங்குள்ள 20,000க்கும் மேற்பட்ட சீனப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்காக உலகப்போhpன் பின்னர் விசாரணை நடந்தது.

ருவாண்டாவில் போhpல் தப்பிய இளம் அப்பாவிப் பெண்களை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்த ஆயுததாரிகள் பணிக்கப்பட்டனர். இவ்வாறு கர்ப்பம் தாpக்கப்பட்ட பெண்கள் அவர்களது குடும்பங்களிலும், சமூகத்திலும் விரும்பத்தகாதவர்களாக ஆனார்கள். சிலர் தற்கொலையும் செய்து கொண்ட சம்பவங்க­ளும் பதிவானது. இவ்வாறான செயற்பாடுக­ளின் மூலம் அப்பெண்யையும், அப்பெண் சார்ந்த குடும்பத்தையும், அவர்களின் இனக்குழுமத்தின் உளப்பலத்தை குறைப்பதும், இனத்தூய்மை மீதான மாசுபடுத்தலும், அவர்களின் அடையா­ளத்தை உருக்குலைப்­பதும், அவர்களின் கலாச்சார நம்பிக்கைகளை கேலிக்குரியதாக்­குவதும் நோக்கமாக இருந்திருக்கின்றன. இவை எதிரிப்படைத் தலைமைகளால் ஊக்குவிக்கப்பட்டுமிருக்­கின்றன.

இலங்கையில் அனுராதபுரத்தில் படையி­ன­­ரை நம்பியே மிகப் பாரிய அளவிலான பாலியல் தொழில் விடுதிகள் நடத்தப்படுகின்­றன. எல்லைப்புக் கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல பெண்கள், குறிப்பாக கணவரை இழந்தவர்கள் பலர் இதில் ஈடுபடுத்­தப்­பட்டுள்ளனர். இவ்வாறான விடுதிகள் இராணுவ அதிகாரிகள் சிலரது சொந்த விடுதி­களாகவும் உள்ளன. பெண்கள் அமைப்புக்கள் பலவற்றின் அறிக்கைகளில் இந்த விடுதிகள் குறித்து சுட்டிக்காட்டப்­பட்டுள்ளன.

இப்படி யுத்த காலங்களில் எதிரித் தரப்பின் பெண்கள் படை­யினருக்கு விருந்தாக ஆக்கப்படு­வதும் பலருக்­கான பாலியல் போகப்பொரு
ளாக, பாலுறவு இயந்திரமாக ஆக்கப்படுவ­தும் அங்கு மட்டுமல்ல இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் புரிந்த கொடுமையும் இவை தான். அவை நீண்ட காலமாக வெளித் தெரியாமல் இருந்து மிக அண்மையில் தான் பெண்களை பாலியல் அடிமைக­ளாக முகாம்களில் வைத்திருந்த விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. ஜப்பான் அன்று இந்தோ­னேசிய, பிலிப்­பைன்ஸ், மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் பெண்கள் பலரை தடுத்து வைத்து படையினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த சம்பவங்கள் உலகையே உலுக்கி­யது. எதிரி நாட்டுப் படையினர் மீது நடத்தப்­பட்டு வந்த இத்தகைய மனிதநேயமற்ற சம்ப­வங்­களே இலங்கையிலும் நடந்து வருகின்­றன.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் கூட இந்தோ­னேசியாவில் சுகர்னோ அரசாங்கத்­துக்கு எதிரான கிளர்ச்சியின் போது சீன நாட்டைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்­ளாக்­­கப்பட்ட செய்தி இன்று உலகப்புகழ் பெற்றவை.
ஸ்ரீ லங்கா அரசின் யுத்த அணுகுமுறைகள் எதிரி நாட்டுடனான யுத்தமென்பதையும் தமிழ்ப் பெண்கள் தங்கள் நாட்டுப் பெண்களில்லை வேற்று நாட்டுப் பெண்களே என்பதையும் நமக்கெல்லாம் தெளிவு­றுத்தியதும் இதே அரச படை தான். சிங்கள இராணுவத்திற்கான சிங்கள இராணுவ ஆட்சேர்ப்பு, தமிழ் மக்கள் மட்டும் தேடி வேட்டை­யாடப்படல், தமிழர் பகுதிகளின் மீதான குண்டுவீச்சுக்கள், அழிப்புக்கள் என்பவற்றின் வெளிப்­பாடுகள் அத்தனையும் இது சிங்களப் படை தான் என்பதை நிரூபித்தது. எனவே ஸ்ரீ லங்கா அரச படையும் வேற்று நாட்டுப் படையெனும் உணர்­வும், ஆக்கிரமிப்பு இராணுவம், எதிரிப் படை என்கின்ற மனப்பதிவுக்கும் தமிழ் மக்கள் எப்போதோ உள்ளாக்கப்பட்டுவிட்டனர்.

ஸ்ரீ லங்கா படையை அவ்வாறு ”சிங்களப் படை”, ”எதிரிப் படை” யென்று சொல்வதற்கு முழுத் தகுதியையும் படிப்படியாக குறுகிய காலத்தில் அடைந்தது இவ்வாறுதான்.

(சிங்களப் படையென்ற சொல் இனவா­தத்தை வெளிப்படுத்துவ­தாக விமர்சிக்கப்பட்ட காலமொன்று இருந்தது. ஆனால் சிங்களவ­ர்களை மட்டுமே கொண்ட படையாக­வும் எதிரிநாட்டின் மீது யுத்தம் செய்வது போல யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவ­தாலும் இப்பதம் பொறுத்தமானதே)

எனவே இப்படிப்பட்ட சிங்க­ளப் படையினரால் மேற்கொள்ள­ப்பட்டு வருகின்ற பாலியல் வல்லுறவுகள் தமிழ் மக்களின் இனத்துவத்தை அவமான­ப்படுத்த பயன்படுத்­துகின்ற ஒன்றாகவே கொள்ள முடிகிறது.

ஆனால் தற்செயலாக கிருஷா­ந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்கு­ள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்­டதும், கிருஷாந்தியைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரையும் கொன்று புதைத்த சம்பவம் தற்செயலாக அம்பலத்துக்கு வந்ததும் (கிருஷாந்தி குடும்பத்தின் வர்க்கப்பின்னணி காரணமாக அதற்கு தொடர்புசாதனங்கள், பெண்கள் அமைப்புகள், சட்ட உதவிகள் வாய்ப்­பாக அமைந்­ததால்) அது உலக அள­வில் அரசை அம்பலத்துக்கு கொண்டு வந்தது.

தவிர்க்க இயலாமல் சிங்கள அரசு, தாம் போர்க் குற்றங்க­ளுக்கு எதிராக எப்போதும் உறுதியாக இருப்பதாக பிரச்சாரப்படுத்துவதற்­காக கிருஷாந்தி வழக்குக்கு அரசினால் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்­டது. அதன்படி 20 மாதங்களாக நடந்த கிருஷாந்தி வழக்கின் தீர்ப்பாக 6 பொலிஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை சாதகமாக்கியபடி அரசு இன்றும், பாதிக்கப்படும் பெண்கள் மீதான தனது காpசனையை பிரச்சாரப்படுத்தி வருகி­றது. இந்த பிரச்சாரங்களின் முன்னால் ஏனைய சம்பவங்கள் அனைத்தையும் மூடி மறைத்து வருகிறது. ஏனைய சம்பவங்களில் பாதிக்கப்­பட்டவர்­கள் சமூக அளவிலும் அந்தஸ்து­டைய­­வர்­கள் அல்லர்.

இன்று வெளிக் கொணரப்ப­டுகின்ற சம்பவங்கள் அனைத்துமே பாதிக்கப்­பட்ட பெண் செத்தால் மாத்திரம் தான் சாத்தியமாகிறது. பெண்கள் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த பெண்ணியவாதியான ஷாமினி பெர்ணாண்டோ இது குறித்து அப்போது கருத்துதெரிவிக்கையில் ”ஒரு பெண் படையினரால் தனக்கு ஏற்பட்ட அவலத்தை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டு­மெனில் நிச்சயம் சாகத்தான் வேண்டுமா,” என வினவுகிறார். உண்மையில் இன்று வழக்கு தொடரப்­பட்டிருக்கும் சொற்ப சம்பவங்களைத் தேடிப்பார்த்தால் அவை பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டவர் குறித்தானதாகத் தான் இருக்கின்றது. கிருஷாந்தி, ராஜினி, கோணேஸ்வரி போன்றன நல்ல உதாரணங்கள்.

இதே வேளை இது வரை சிங்களப் படையினரால் மேற் கொள்ளப்பட்டு வந்திருக்­கிற பாலியல் வல்லறவு சம்பவங்கள் அனைத்­திலும் பெண்கள் அதிக சித்திரவதைக்குள்­ளாக்­கப்பட்­டுள்ளனர்.

ஈழப்போராட்ட வரலாற்றில் அதிகளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது சந்திரிகா என்கிற பெண்ணொருவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் (1994-2005) என்பது பதிவாகியிருக்கிறது. சர்வவல்லமை பொருந்திய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும், முப்படைகளின் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் சந்திரிகா தான் இருந்தார் என்பது இங்கு கவனிக்கவேண்டிய ஒனறு.

1996 இல் மாத்திரம் 150 தமிழ் பெண்கள் படையினரின் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்­பட்டதாக சீனப்பத்திரிகையொன்று அறிக்கை வெளியிட்டது. (South China morning Post, 11 January 1997)

97 ஒக்டோபர் 16 அன்று அம்பாறையில் பொலிஸாரும் படையி­னரும் தங்கநாயகி எனும் பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு கொண்டு விட்டு அப்பெண்ணின் பெண்குறியை வெட்டி சின்னாபின்னப்படுத்தி விட்டே சென்றனர். அதே போல 97 மே 17 அம்பாறையில் கோணேஸ்வhp பாலியல் வல்லு­றவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கோணேஸ்வ­ரியின் பெண்குறியில் கிரனைட் வைத்து சிதறச்செய்தனர். பெரும்பாலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் பின் இறுதியில் கொலை புரிந்து வந்திரு­க்கின்றனர். இதன் மூலம் சகல சாட்சிகளையும் இல்லாது போய்­விடுமென்றே சிங்களப் படையினர் நம்புகின்றனர்.

இதை விட இது வரை காலம் போhpன் போது கைது செய்யப்­பட்ட பெண் புலிகள் பலரை பாலி­யல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்­டமை குறித்த சம்பவங்கள் 94க்கு முன்னர் அதிகளவு தகவல் கிடைத்திருந்தன. ஆனால் உயிர்விடும் தறுவாயில் பிடிக்கப்­பட்ட பெண் போராளிகளை நிர்வாணப்­படுத்தி பாலுறுப்­புகளில் போத்தல்­களாலும், கம்பிகளாலும் சேதப்படுத்­தியதை நிரூபிக்கின்ற புகைப்படங்­கள் எமக்கு கிடைத்த போது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் முடிந்ததும் மரணமுற்ற பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்­தப்பட்டதை தொலைக்காட்சி செய்திக­ளிலும் காட்டப்பட்டது. அவை பற்றிய புகைப்படங்களும் கிடைத்திருக்கின்றன.

இதன் மூலம் எதிர்பார்க்கப்ப­டுவது என்ன? குறிப்பிட்ட சமூக­த்தை அவமானப்படுத்தி விட்டதன் வெற்றிக் களிப்பையல்லவா? ஏற்கெனவே சமூகத்தில் ஒருவர் தனக்கு வேண்­டாத இன்னொரு­வரை அவமான­ப்படுத்த வேண்டு­மென்றால் அவ­ருக்கு கிட்டிய பெண்ணை வல்லுற­வு­க்குள்ளாக்கு­வேன் என்று (வழக்கிலுள்ள துஷனம்) கூறி­னாலே மற்றவர் ஆத்திரப்­படுவார் அல்லவா? அப்படிப்பட்ட வெளிப்பாடொ­ன்றே இந்த நிர்வாணக் காட்சிப்ப­டுத்தலும்.

”தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடமி­ருந்து மீட்டெடுப்பதற்காக நடத்தப்படும்” சமாதான யுத்தத்தின் மறு பக்கம் எவ்வளவு கோரமானது என்பதைக் காட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இந்த சம்பவங்கள் போதுமானது. அரசாங்கத்­தின் சர்வதேச பிரச்­சாரங்கள் சமீப காலமாக தோல்வியடைவதற்கு ஒரு காரணம் போர்க்கால கொடுமை­களின் அத்தனை விபரிதங்களும் எல்லைத்தாண்டி போகுமளவுக்கு அதிகாரித்திருப்பதே.

அரசு இவ்வாறான இம்சை­களின் வாயிலாக தமிழ் மக்களை பணிய வைத்து அரசு தரும் தீர்வி­னை ஏற்கச் செய்கின்ற நடவடிக்­கையாக, போரின் கருவி­யாக, வதையின் கருவியாக, பாலியல் வல்லுறவு தொடர்ச்சியாக பாவிக்கப்­பட்டு வருகிறது. அரச பயங்கரவாதத்தின் உச்ச வடிவம் இது தான். இது இனிமேல் தொட­ராது என்பதற்கான உறுதியை எவரும் தந்துவிடமாட்டார்கள்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More