நேர்காணல்:அ.தேவதாசன்
தோழர் தேவதாசன் 1956ல் வேலணைக் கிராமத்தின் தலித் குறிச்சியொன்றில் பிறந்தவர். கிராமத்து நாடகக் கலைஞனான தேவதாசன் ஓவியம், பாடல் போன்ற துறைகளிலும் தடம் பதித்தவர். 1983ல் அய்ரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த தேவதாசன் முதலில் ‘தமிழீழ விடுதலைப் பேரவை’யிலும் பின்னர் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’யிலும் இணைந்திருந்தவர். தொண்ணூறுகளின் மத்தியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து விலகிக்கொண்டார். புகலிடத்தில் சினிமா, நாடகம், இலக்கியச் சந்திப்புகள் எனத் தொடர்ந்து செயற்பட்ட தேவதாசன் ‘புன்னகை’ என்றாரு சிற்றிதழையும் வெளியிட்டார். இன்று தலித் விடுதலை அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் தேவதாசன் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யின் தலைவராகவும் இலங்கையில் எழுபது வருட போராட்ட வரலாற்றைக்கொண்ட தலித் விடுதலை இயக்கமாகிய ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யின் வெளிநாட்டுத் தொடர்பாளராகவும் செயற்படுகிறார். எதிர்வரும் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் சுயேடச்சைக் குழுவாக ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ போட்டியிடுவது குறித்தும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அரசியல் இயங்குதிசை குறித்தும் தோழர் தேவதாசனிடம் உரையாடினேன். இந்த உரையாடல் 23 மார்ச் பாரிஸில் பதிவு செய்யப்பட்டது.-ஷோபாசக்தி
ஆயுதம் தாங்கிய தமிழ் விடுதலை இயக்கங்கள் தலையெடுத்ததற்குப் பின்னாக ஈழத்து அரசியலில் சனநாய மறுப்பு எனபது சர்வ சாதாரணமாகிப் போனது. ஆயுதம் தாங்கிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களைத் தவிர வேறெந்த அமைப்புகளும் அங்கே இயங்க முடியாத நிலையிருந்தது. சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் அப்போதைய புலிகளின் தளபதி கிட்டுவால் தடைசெய்யப்பட்டது. தோழர் எம்.சி.சுப்பிரமணியத்தின் வீட்டின் ஒருபகுதியில் இயங்கிக்கொண்டிருந்த மகாசபையின் அலுவலகம் புலிகளால் கொள்ளையிடப்பட்டு மகாசபையின் பெறுமதிமிக்க ஆவணங்கள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டன. மூளையற்ற துப்பாக்கிகளின் முன்பு அந்தச் சாதியொழிப்பு இயக்கம் மவுனமாக்கப்பட்டது.
அதன்பின்பு ஈழத்தில் சுதந்திரமான கருத்துப் பரிமாறல்களை மட்டுமல்ல சுதந்திர வாசிப்பைக் கூடப் புலிகள் கட்டுப்படுத்தத் தொடங்கினார்கள். கடந்த முப்பது வருடங்களில் உலகளாவியரீதியில் மார்க்ஸியத்திலும் தலித் அரசியலிலும் நிகழ்ந்த மாற்றங்களை புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் எங்களைப் போன்றவர்கள் பயில்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டையொட்டித் தமிழகத்தில் புதிய அலையாய் எழுந்த தலித் அரசியல் முன்னெடுப்புகளிலிருந்து நாங்கள் உத்வேகத்தைப் பெற்றோம். இதற்கெல்லாம் ஈழத்தில் வாய்ப்பிருக்கவில்லை. அங்கே அன்றாடம் உயிர் வாழ்வதற்கான போராட்டம்தான் அவர்களிற்கான அரசியலாயிருந்தது.
மே பதினெட்டுக்குப் பிறகு புலிகளின் ஆதிக்கம் தகர்ந்த சூழலில் மீண்டும் மகாசபை இயங்க முற்பட்டது. கடந்த நவம்பர் மாதம் மகாசபை மீண்டும் புதிதாகச் சீரமைக்கப்பட்டு அமைப்பு வடிவமாக்கப்பட்டது. மகாசபையின் உறுப்பினர்கள் தங்களது முன்னைய போராட்ட அனுபவங்கள் என்ற பலத்துடனும் யுத்தத்தால் சிதைக்கப்பட்ட அரசியல் கலாசாரத்தின் சுமையுடனும்தான் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள்.
சனநாயகம் வேண்டும் என வாயளவில் பேசிக்கொண்டிருந்தால் போதாது. சனநாயகச் செயற்பாடுகளில் பங்கெடுத்து சனநாயத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு. இன்றிருக்கும் சமூக அமைப்பில் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க சனநாயகரீதியிலான தேர்தலைவிட வேறெந்த வடிவமும் லாயக்கற்றவை என்று கருதுகிறோம். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மைச் சொல்லிக்கொள்ளும் பெரும் கட்சிகள் தலித்துகளிற்கு உரிய பிரதிநிதித்துவத்தை தங்களது வேட்பாளர்கள் தெரிவில் வழங்குவதேயில்லை. ஒரு இராசலிங்கம், ஒரு சிவநேசன், இப்போது ஒரு இராஜேந்திரம் என்றளவிலேயே அவர்கள் தலித் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள். இன்று யாழ் மாவட்ட சனத்தொகையில் தலித்துகள் 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரேயொரு தலித் வேட்பாளரையே நிறுத்தியிருக்கிறது.
எனவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்ச்சைக் குழுவாகப் போட்டியிட சிறுபானமைத் தமிழர் மகாசபை முடிவெடுத்தது. இங்கே சில ஆதிக்க சாதி அரசியல் விமர்சகர்கள் ‘ஏற்கனவே அறுபத்தைந்து கட்சியிருக்கிறது நீங்கள் எதற்குப் புதிதாகக் கட்சி தொடங்குகிறீர்கள்?’ எனக் கேட்கிறார்கள். அறுபத்தைந்து கட்சியிருந்தாலும் அறுபத்தைந்துக்கும் அவர்களே தலைவர்களாகயிருக்கிறார்கள். அறுபத்தாறாவது கட்சியாவது தலித்துகளின் தலைமையில் இருக்கட்டும். தலித் மக்களின் நலனை முதன்மைப்படுத்திச் செயற்படட்டும்.
நாங்கள் தேர்தல் செலவுகளுக்கே திண்டாடி விழி பிதுங்கி நிற்கிறோம். இந்த இலட்சணத்தில் எங்களிற்கு ராஜபக்ச பணம் வழங்குகிறார் எனப் பரப்பப்படும் வதந்திக்கு ஒரு துயரமான புன்னகை மட்டுமே எனது பதிலாயிருக்கும். நாங்கள் தேர்தல் செலவுகளிற்கு வெளிநாடுகளில் வாழும் தலித் மக்களிலேயே தங்கி நிற்கிறோம். தலித் அரசியல் மீது அக்கறைகொண்ட தலித் அல்லாதவர்கள் சிலரும் உதவினார்கள்.
எங்களது வேட்பாளர்கள் தொழிலதிபர்களோ நிலப்பிரபுக்களோ கிடையாது. எங்களது பன்னிரெண்டு வேட்பாளர்களிடம் ஒருவரிடம் மட்டுமே கணனி வசதி உள்ளது. எங்களது கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் கட்சி மட்டுமல்ல ஏழைகளின் கட்சியும்தான்.
முன்னைய போராட்ட வழிகளின் போதாமையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். குறிப்பாக சாதியத்தின் மூலவேரான இந்துமதத்தை மகாசபையோ, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமோ தங்களது முதன்மை எதிரியாக அடையாளப்படுத்தவில்லை. இந்துமத எதிர்ப்பு, கலாசார புரட்சி இவை இரண்டையும் முன்னிறுத்தி நாம் நமது இளைஞர்களைத் திரட்டவேண்டியுள்ளது. இன்னொரு பக்கம் பிற்போக்குத் தமிழ்த் தேசிய மாயையிலிருந்தும் அவர்களை விடுவிக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் தலித் பெண்ணிய அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. தலித்துகளிற்கான தொழிற்சங்கங்களை அமைக்க வேண்டியிருக்கிறது. இவை எல்லாவற்றையுமே முப்பது வருடங்களாக அரசியல் கலாசாரமும் சனநாயமும் மறுக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்திற்குள்தான் நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இன்னொருபுறம் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்குள் சமூகம் அழுந்திக்கொண்டிருக்கிறது. எனினும் நமது கடும் உழைப்பும் தலித் மக்களின் பரம்பரை முதுசொமான போர்க்குணாம்சமும் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை மறுபடியும் வீரியமான அமைப்பாகக் கட்டியெழுப்பும் என்றே நம்புகிறேன்.
இங்கே அய்ரோப்பாவில் நாங்கள் முதலிலே தலித் என்று சொன்னபோது அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆனால் இப்போது என்னவானது. தலித் என்ற வார்த்தை சர்வ சாதாரணமாகப் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ஆனால் அதற்காக நாம் இடைவிடாது போராட வேண்டியிருந்தது. இதே போலத்தான் இலங்கையிலும் அந்தச் சொல் ஏற்றுக்கொள்ளப்படும். இப்போதே ஒருபகுதியினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். மூத்த தலித் போராளியும் படைப்பாளியுமான தோழர் டொமினிக் ஜீவா போன்றவர்கள் தங்களைத் தலித் படைப்பாளிகளாகவே அடையாளப்படுத்துகிறார்கள். தலித் என்ற அடையாளம் தாழ்த்தப்பட்ட சாதியினரை உட்பிரிவுகளைக் கடந்து ஒன்றிணைக்கும் அடையாளம் என்ற புரிதலும் அந்த அடையாளம் பல்வேறு நிலப் பகுதிகளிலும் சிதறிக்கிடக்கும் தாழ்த்தப்பட்டவர்களை ஒன்றிணைக்கும் அடையாளமும் என்ற புரிதல் வரும்போது அனைத்து தலித் மக்களாலும் அந்த அடையாளம் முன்னிறுத்தப்படும்.
விடுதலை செய்து அவர்களின் மறுவாழ்விற்கான வழிகளை அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அரசின் இனவாத நடவடிக்கைகள் இல்லாதிருப்பின் புலிகளும் இல்லை என்ற வரலாற்று உண்மையை அரசு விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும்.
நீங்கள் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தேர்தல் அறிக்கையைப் படித்துப் பார்க்கும்போது இப்போதும் வடபுலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதைத் தெரிந்துகொள்ளலாம். விவசாயக் கூலிவேலைகளிற்குச் செல்பவர்களிற்கு இப்போதும் பல கிராமங்களில் சிரட்டையில் தேநீரும் பனையோலையில் உணவும் வழங்கப்படுகிறது. அதை ஏற்று வாங்கிச் சாப்பிடுமளவிற்கு தலித்துகளின் மனநிலையும் உள்ளது எனில் இதுதானா கடந்த முப்பது வருடங்களாகத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்கள் நடத்திய சாதியொழிப்பும் சமூகப் புரட்சியும்?
ஆலய நுழைவு அனுமதி மறுப்பு, தேநீர்க் கடைகளில் சமத்துவமின்மை, பொதுக் கிணறுகளில் நீரெடுப்பதற்குத் தடை எனப் பல வகைகளில் யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் தலித்துகளிற்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதை நான் பாரிஸில் உட்கார்ந்திருந்து யதார்த்தம் புரியாமல் பேசுகிறேன் என்று நீங்கள் ‘சிம்பிளாக’ எடுத்துவிடக் கூடாது. இந்தப் பிரச்சினைகளை இலங்கையிலிருக்கும் மகாசபை தான் முன்வைத்திருக்கிறது.
இன்னும் ஏராளமான தலித் குடும்பங்கள் கோயில் காணிகளில் குத்தகைக்குக் குடியிருந்து வருகிறார்கள். குடியிருப்பவர்களிற்கே நிலம் சொந்தம் எனக் குரல் கொடுக்க அங்கே ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ கிடையாது. புலிகளின் ஆட்சிக்காலத்தில் அவர்கள் நினைத்திருந்தால் அந்த நிலங்களைக் கோயிலிடமிருந்து கைப்பற்றிக் குடியிருக்கும் தலித்துகளிற்கே வழங்கியிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.
EPDP, EPRLF ஆகிய இரு கட்சிகளிற்கும் தலித் மக்களிடம் ஓரளவு செல்வாக்குள்ளது. அந்தக் கட்சிகளில் கணிசமான தலித் இளைஞர்கள் இணைந்திருக்கிறார்கள். இந்த வளங்களை வைத்து அந்தக் கட்சிகள் சாதியொழிப்பு வேலைத்திட்டங்களை முன்வைத்தால் அந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அவர்களோடு சேர்ந்து செயற்பட நாங்கள் தயங்கமாட்டோம்.
நன்றி - ஷோபாசக்தி
தோழர் தேவதாசன் 1956ல் வேலணைக் கிராமத்தின் தலித் குறிச்சியொன்றில் பிறந்தவர். கிராமத்து நாடகக் கலைஞனான தேவதாசன் ஓவியம், பாடல் போன்ற துறைகளிலும் தடம் பதித்தவர். 1983ல் அய்ரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த தேவதாசன் முதலில் ‘தமிழீழ விடுதலைப் பேரவை’யிலும் பின்னர் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’யிலும் இணைந்திருந்தவர். தொண்ணூறுகளின் மத்தியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து விலகிக்கொண்டார். புகலிடத்தில் சினிமா, நாடகம், இலக்கியச் சந்திப்புகள் எனத் தொடர்ந்து செயற்பட்ட தேவதாசன் ‘புன்னகை’ என்றாரு சிற்றிதழையும் வெளியிட்டார். இன்று தலித் விடுதலை அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் தேவதாசன் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யின் தலைவராகவும் இலங்கையில் எழுபது வருட போராட்ட வரலாற்றைக்கொண்ட தலித் விடுதலை இயக்கமாகிய ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யின் வெளிநாட்டுத் தொடர்பாளராகவும் செயற்படுகிறார். எதிர்வரும் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் சுயேடச்சைக் குழுவாக ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ போட்டியிடுவது குறித்தும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அரசியல் இயங்குதிசை குறித்தும் தோழர் தேவதாசனிடம் உரையாடினேன். இந்த உரையாடல் 23 மார்ச் பாரிஸில் பதிவு செய்யப்பட்டது.-ஷோபாசக்தி
- ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யின் தேர்தல் அறிக்கை மிக எளிமையாக எழுதப்பட்ட ஒரு விண்ணப்பம் போலவே இருக்கிறது. இன்றைய தலித் அரசியலின் இயங்குதிசையையும் சமூகநீதிக் கோரிக்கைகளையும் மகாசபை புரிந்து கொண்டதற்கான தடயங்கள் அறிக்கையில் இல்லையே?
‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யும் ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யும் அரசியல் வழிமுறைகளில் வேறுவேறானவை என்பதை நீங்கள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். சாதி ஒழிப்புத்தான் இரு அமைப்புகளின் பொது இலக்கு எனினும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அரசியல் அம்பேத்கரியலிலும் பெரியாரியலிலும் வேர்கொண்டது. இந்துமத அழிப்பும், சமூகநீதியும், கலாசார புரட்சியும் அதன் முதன்மைப் போராட்ட இலக்குகள். ஆனால் சிறுபான்மைத் தமிழர் மகாசபை மரபு மார்க்ஸியத்தில் தனது வேரைக் கொண்டுள்ளது. சாதியொழிப்புக்கு மரபு மார்க்ஸியத்தால் வழங்கப்பட்ட தீர்வுகளை மகாசபை கடந்து இன்றைய தலித் அரசியலை நோக்கி வராததற்கான நிலையை இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக நிகழ்ந்த யுத்தமும் யுத்தம் சார்ந்த அரசியலையும் வைத்தே நாம் புரிந்துகொள்ள முடியும்.
ஆயுதம் தாங்கிய தமிழ் விடுதலை இயக்கங்கள் தலையெடுத்ததற்குப் பின்னாக ஈழத்து அரசியலில் சனநாய மறுப்பு எனபது சர்வ சாதாரணமாகிப் போனது. ஆயுதம் தாங்கிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களைத் தவிர வேறெந்த அமைப்புகளும் அங்கே இயங்க முடியாத நிலையிருந்தது. சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் அப்போதைய புலிகளின் தளபதி கிட்டுவால் தடைசெய்யப்பட்டது. தோழர் எம்.சி.சுப்பிரமணியத்தின் வீட்டின் ஒருபகுதியில் இயங்கிக்கொண்டிருந்த மகாசபையின் அலுவலகம் புலிகளால் கொள்ளையிடப்பட்டு மகாசபையின் பெறுமதிமிக்க ஆவணங்கள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டன. மூளையற்ற துப்பாக்கிகளின் முன்பு அந்தச் சாதியொழிப்பு இயக்கம் மவுனமாக்கப்பட்டது.
அதன்பின்பு ஈழத்தில் சுதந்திரமான கருத்துப் பரிமாறல்களை மட்டுமல்ல சுதந்திர வாசிப்பைக் கூடப் புலிகள் கட்டுப்படுத்தத் தொடங்கினார்கள். கடந்த முப்பது வருடங்களில் உலகளாவியரீதியில் மார்க்ஸியத்திலும் தலித் அரசியலிலும் நிகழ்ந்த மாற்றங்களை புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் எங்களைப் போன்றவர்கள் பயில்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டையொட்டித் தமிழகத்தில் புதிய அலையாய் எழுந்த தலித் அரசியல் முன்னெடுப்புகளிலிருந்து நாங்கள் உத்வேகத்தைப் பெற்றோம். இதற்கெல்லாம் ஈழத்தில் வாய்ப்பிருக்கவில்லை. அங்கே அன்றாடம் உயிர் வாழ்வதற்கான போராட்டம்தான் அவர்களிற்கான அரசியலாயிருந்தது.
மே பதினெட்டுக்குப் பிறகு புலிகளின் ஆதிக்கம் தகர்ந்த சூழலில் மீண்டும் மகாசபை இயங்க முற்பட்டது. கடந்த நவம்பர் மாதம் மகாசபை மீண்டும் புதிதாகச் சீரமைக்கப்பட்டு அமைப்பு வடிவமாக்கப்பட்டது. மகாசபையின் உறுப்பினர்கள் தங்களது முன்னைய போராட்ட அனுபவங்கள் என்ற பலத்துடனும் யுத்தத்தால் சிதைக்கப்பட்ட அரசியல் கலாசாரத்தின் சுமையுடனும்தான் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள்.
சனநாயகம் வேண்டும் என வாயளவில் பேசிக்கொண்டிருந்தால் போதாது. சனநாயகச் செயற்பாடுகளில் பங்கெடுத்து சனநாயத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு. இன்றிருக்கும் சமூக அமைப்பில் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க சனநாயகரீதியிலான தேர்தலைவிட வேறெந்த வடிவமும் லாயக்கற்றவை என்று கருதுகிறோம். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மைச் சொல்லிக்கொள்ளும் பெரும் கட்சிகள் தலித்துகளிற்கு உரிய பிரதிநிதித்துவத்தை தங்களது வேட்பாளர்கள் தெரிவில் வழங்குவதேயில்லை. ஒரு இராசலிங்கம், ஒரு சிவநேசன், இப்போது ஒரு இராஜேந்திரம் என்றளவிலேயே அவர்கள் தலித் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள். இன்று யாழ் மாவட்ட சனத்தொகையில் தலித்துகள் 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரேயொரு தலித் வேட்பாளரையே நிறுத்தியிருக்கிறது.
எனவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்ச்சைக் குழுவாகப் போட்டியிட சிறுபானமைத் தமிழர் மகாசபை முடிவெடுத்தது. இங்கே சில ஆதிக்க சாதி அரசியல் விமர்சகர்கள் ‘ஏற்கனவே அறுபத்தைந்து கட்சியிருக்கிறது நீங்கள் எதற்குப் புதிதாகக் கட்சி தொடங்குகிறீர்கள்?’ எனக் கேட்கிறார்கள். அறுபத்தைந்து கட்சியிருந்தாலும் அறுபத்தைந்துக்கும் அவர்களே தலைவர்களாகயிருக்கிறார்கள். அறுபத்தாறாவது கட்சியாவது தலித்துகளின் தலைமையில் இருக்கட்டும். தலித் மக்களின் நலனை முதன்மைப்படுத்திச் செயற்படட்டும்.
- EPRLF, EPDP ஆகிய இரு கட்சிகளும் தலித் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்களல்லவா?
- சாதியொழிப்பை பாராளுமன்ற அரசியல் ஊடாகச் செய்துவிடலாம் எனக் கருதுகிறீர்களா?
- தலித் மக்களை அரசியல்ரீதியாக ஒன்றிணைப்பதற்கு சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் நாடாளுமன்ற நுழைவு உதவலாம் எனக் கருதுகிறீர்களா?
- ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யை மகிந்த ராஜபக்சதான் தூண்டிவிட்டு நிதியும் வழங்கித் தேர்தல் களத்தில் இறக்கிவிட்டிருப்பதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளதே?
நாங்கள் தேர்தல் செலவுகளுக்கே திண்டாடி விழி பிதுங்கி நிற்கிறோம். இந்த இலட்சணத்தில் எங்களிற்கு ராஜபக்ச பணம் வழங்குகிறார் எனப் பரப்பப்படும் வதந்திக்கு ஒரு துயரமான புன்னகை மட்டுமே எனது பதிலாயிருக்கும். நாங்கள் தேர்தல் செலவுகளிற்கு வெளிநாடுகளில் வாழும் தலித் மக்களிலேயே தங்கி நிற்கிறோம். தலித் அரசியல் மீது அக்கறைகொண்ட தலித் அல்லாதவர்கள் சிலரும் உதவினார்கள்.
எங்களது வேட்பாளர்கள் தொழிலதிபர்களோ நிலப்பிரபுக்களோ கிடையாது. எங்களது பன்னிரெண்டு வேட்பாளர்களிடம் ஒருவரிடம் மட்டுமே கணனி வசதி உள்ளது. எங்களது கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் கட்சி மட்டுமல்ல ஏழைகளின் கட்சியும்தான்.
- சிறுபான்மைத் தமிழர் மகாசபை தலித்துகளின் உட்பிரிவுகளையும் வேட்பாளர் தேர்வில் கவனத்தில் எடுத்துள்ளதா?
- சிறுபான்மைத் தமிழர் மகாசபை அறுபதுகளில் வீரியமாக இயங்கியது போல மறுபடியும் தீவிரமான சாதியொழிப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கச் சாத்தியங்கள் உள்ளனவா?
முன்னைய போராட்ட வழிகளின் போதாமையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். குறிப்பாக சாதியத்தின் மூலவேரான இந்துமதத்தை மகாசபையோ, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமோ தங்களது முதன்மை எதிரியாக அடையாளப்படுத்தவில்லை. இந்துமத எதிர்ப்பு, கலாசார புரட்சி இவை இரண்டையும் முன்னிறுத்தி நாம் நமது இளைஞர்களைத் திரட்டவேண்டியுள்ளது. இன்னொரு பக்கம் பிற்போக்குத் தமிழ்த் தேசிய மாயையிலிருந்தும் அவர்களை விடுவிக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் தலித் பெண்ணிய அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. தலித்துகளிற்கான தொழிற்சங்கங்களை அமைக்க வேண்டியிருக்கிறது. இவை எல்லாவற்றையுமே முப்பது வருடங்களாக அரசியல் கலாசாரமும் சனநாயமும் மறுக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்திற்குள்தான் நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இன்னொருபுறம் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்குள் சமூகம் அழுந்திக்கொண்டிருக்கிறது. எனினும் நமது கடும் உழைப்பும் தலித் மக்களின் பரம்பரை முதுசொமான போர்க்குணாம்சமும் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை மறுபடியும் வீரியமான அமைப்பாகக் கட்டியெழுப்பும் என்றே நம்புகிறேன்.
- இலங்கையைப் பொறுத்தவரை தலித் என்ற சொல்லே அந்நியமானது என்றொரு விமர்சனம் உள்ளதே?
இங்கே அய்ரோப்பாவில் நாங்கள் முதலிலே தலித் என்று சொன்னபோது அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆனால் இப்போது என்னவானது. தலித் என்ற வார்த்தை சர்வ சாதாரணமாகப் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ஆனால் அதற்காக நாம் இடைவிடாது போராட வேண்டியிருந்தது. இதே போலத்தான் இலங்கையிலும் அந்தச் சொல் ஏற்றுக்கொள்ளப்படும். இப்போதே ஒருபகுதியினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். மூத்த தலித் போராளியும் படைப்பாளியுமான தோழர் டொமினிக் ஜீவா போன்றவர்கள் தங்களைத் தலித் படைப்பாளிகளாகவே அடையாளப்படுத்துகிறார்கள். தலித் என்ற அடையாளம் தாழ்த்தப்பட்ட சாதியினரை உட்பிரிவுகளைக் கடந்து ஒன்றிணைக்கும் அடையாளம் என்ற புரிதலும் அந்த அடையாளம் பல்வேறு நிலப் பகுதிகளிலும் சிதறிக்கிடக்கும் தாழ்த்தப்பட்டவர்களை ஒன்றிணைக்கும் அடையாளமும் என்ற புரிதல் வரும்போது அனைத்து தலித் மக்களாலும் அந்த அடையாளம் முன்னிறுத்தப்படும்.
- தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ஒரு தேக்கத்தைச் சந்தித்துள்ளதே?
- கடந்த சனாதிபதித் தேர்தலில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி மகிந்த ராஜபக்சவை ஆதரித்ததே?
- நடந்து முடிந்த இறுதி யுத்த நாட்களில் மட்டும் நாற்பதாயிரம் தமிழ்ப் பொதுமக்களை மகிந்தவின் அரசு கொன்றிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் துல்லியமாகத் தெரிவிக்கின்றன. இன்றுவரை கைதுகளும் கடத்தல்களும் அரசால் செய்யப்படுகின்றன. இவை குறித்தெல்லாம் நீங்கள் பேசுவதில்லையே? நீங்கள் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் விமர்சனங்கள் உள்ளனவே?
- உலகமயமாக்கலின் முழு ஆதரவாளராயும் நாட்டின் பொதுச் சொத்துகளை அந்நிய நிறுவனங்களிற்கு விற்றுத்தள்ளிக்கொண்டிருப்பவருமான மகிந்த ராஜபக்சவை நீங்கள் மேற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்று சொல்வது பொருத்தமாயில்லையே?
- இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக எதை முன்வைக்கிறீர்கள்?
- நாடு கடந்த அரசை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?
- இலங்கை அரசின் சிறைகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான புலிகள் நீதிமன்ற விசாரணைகள் ஏதுமின்றித் தடுத்துவைக்கப்பட்டிருப்பது குறித்து?
விடுதலை செய்து அவர்களின் மறுவாழ்விற்கான வழிகளை அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அரசின் இனவாத நடவடிக்கைகள் இல்லாதிருப்பின் புலிகளும் இல்லை என்ற வரலாற்று உண்மையை அரசு விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும்.
- வடக்கு - கிழக்கு இணைப்புக் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?
- புலிகளின் ஆட்சிக் காலத்தில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்களே?
நீங்கள் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தேர்தல் அறிக்கையைப் படித்துப் பார்க்கும்போது இப்போதும் வடபுலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதைத் தெரிந்துகொள்ளலாம். விவசாயக் கூலிவேலைகளிற்குச் செல்பவர்களிற்கு இப்போதும் பல கிராமங்களில் சிரட்டையில் தேநீரும் பனையோலையில் உணவும் வழங்கப்படுகிறது. அதை ஏற்று வாங்கிச் சாப்பிடுமளவிற்கு தலித்துகளின் மனநிலையும் உள்ளது எனில் இதுதானா கடந்த முப்பது வருடங்களாகத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்கள் நடத்திய சாதியொழிப்பும் சமூகப் புரட்சியும்?
ஆலய நுழைவு அனுமதி மறுப்பு, தேநீர்க் கடைகளில் சமத்துவமின்மை, பொதுக் கிணறுகளில் நீரெடுப்பதற்குத் தடை எனப் பல வகைகளில் யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் தலித்துகளிற்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதை நான் பாரிஸில் உட்கார்ந்திருந்து யதார்த்தம் புரியாமல் பேசுகிறேன் என்று நீங்கள் ‘சிம்பிளாக’ எடுத்துவிடக் கூடாது. இந்தப் பிரச்சினைகளை இலங்கையிலிருக்கும் மகாசபை தான் முன்வைத்திருக்கிறது.
இன்னும் ஏராளமான தலித் குடும்பங்கள் கோயில் காணிகளில் குத்தகைக்குக் குடியிருந்து வருகிறார்கள். குடியிருப்பவர்களிற்கே நிலம் சொந்தம் எனக் குரல் கொடுக்க அங்கே ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ கிடையாது. புலிகளின் ஆட்சிக்காலத்தில் அவர்கள் நினைத்திருந்தால் அந்த நிலங்களைக் கோயிலிடமிருந்து கைப்பற்றிக் குடியிருக்கும் தலித்துகளிற்கே வழங்கியிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.
- தலித் இலக்கியத்திற்கு ஈழம் முன்னோடி. ஆனால் இன்று ஈழத்திலோ புகலிடத்திலோ தலித் இலக்கியம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவிற்கு எழுதப்படுவதில்லையே?
- தமிழகத்து தலித் அரசியல் கட்சிகள் உங்களிற்கு முன்மாதிரியாக உள்ளனவா?
- இலங்கையில் உங்கள் நட்புச் சக்திகளாக யாரைக் கருதுகிறீர்கள்?
EPDP, EPRLF ஆகிய இரு கட்சிகளிற்கும் தலித் மக்களிடம் ஓரளவு செல்வாக்குள்ளது. அந்தக் கட்சிகளில் கணிசமான தலித் இளைஞர்கள் இணைந்திருக்கிறார்கள். இந்த வளங்களை வைத்து அந்தக் கட்சிகள் சாதியொழிப்பு வேலைத்திட்டங்களை முன்வைத்தால் அந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அவர்களோடு சேர்ந்து செயற்பட நாங்கள் தயங்கமாட்டோம்.
- முதலாவது தலித் மாநாட்டை ஃபிரான்ஸிலும் இரண்டாவது தலித் மாநாட்டை லண்டனிலும் நடத்தினீர்கள். அடுத்த தலித் மாநாடு எங்கே?
நன்றி - ஷோபாசக்தி
0 comments:
Post a Comment