நோர்வே - இலக்கிய சந்திப்பு 2009
இடம்
Kalbakken fritidsenter, Gårdsveien 6, 0952, oslo
26 யூன் 2009
பிற்பகல் 17.30 - 22.00
புலம்பெயர் குறுந்திரைப்பட, திரைப்பட முயற்சிகளின் போக்கு
கே.கே.ராஜா (லண்டன்)-
"தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம்?"
திறந்த கலந்துரையாடல்
-நெறிப்படுத்தல் -நிர்மலா (லண்டன்)-
27 யூன் 2009
காலை 9.00 தொடக்கம் - 20.00 வரை
சிறகு நுனி பதிப்பகத்தின்
மூன்று நூல்கள் அறிமுகம்
ஏவிவிடப்பட்ட கொலையாளி - திசேரா
இது நதியின் நாள் - பெண்ணியா கவிதைகள்
புதிய இலைகளால் ஆதல் - மலரா கவிதைகள்
நிகழ்த்துகை - பெளசர் (லண்டன்)
புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு மதிப்பீடு
-சுசீந்திரன்(ஜேர்மன்), சிவராஜன் (ஜேர்மன்)-
புகலிட சமூக பண்பாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்.
கலை, இலக்கிய, ஊடக, அரசியல், சமூகவியலின், இலத்திரனியல் பரிமாணம்
-ஆத்மா (இலங்கை)-
தலித்திய முன்னணி மதிப்பீடு
-தேவதாஸ் (பிரான்ஸ்)-
புகலிடத்தில் பெண்கள் - அமைப்பாதல், அனுபவங்கள், சிக்கல்கள்/
போரும் பெண்களும்
-ரஞ்சி (சுவிஸ்), உமா (ஜேர்மன்)-
தலைமை - மல்லிகா (ஜேர்மன்)-
புகலிட தமிழ் சமூக இயக்கங்களின் வரலாறு
-உமைபாலன் (நோர்வே)-
தலைமை - சித்தி விநாயகநாதன் (நோர்வே)
காலை 9.00 தொடக்கம் - 20.00 வரை
கிழக்கிலங்கை அரசியல் ஒரு மாற்றா?
-ஸ்டாலின் (பிரான்ஸ்)-
மலையகத்தின் மீதான அரசியல் கவனக்குவிப்பு
-நித்தியானந்தன் (லண்டன்)-
தலித்தியத்தின் இன்றைய சவால்கள்
-என்.சரவணன் (நோர்வே), ஜீவமுரளி (ஜேர்மன்)-
இலங்கைப் பிரச்சினையில் - அரசியல் பொருளாதாரம்
-ராகவன் (லண்டன்)-
தலைமை - இராமமூர்த்தி (லண்டன்)
சிறுபான்மைத் தமிழ்ச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல்.
-கூட்டுக்கட்டுரை-
-கலையரசன் (நெதர்லாந்து),
தலைமை - சரவணன் (நோர்வே)-
அரசியல் சமூக நிலைமைகள்
-ஆத்மா (இலங்கை)-
அடுத்த இலக்கிய சந்திப்பு பிரான்சில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
37வது இலக்கியச் சந்திப்பில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. இலங்கை முழுவதும் தொடரும் மனித உரிமை மீறல்களை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுவதுடன், ஜனநாயகம், மனித உரிமைகள், சிறுபான்மை இன மக்களின் அடிப்படை அரசியல் அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
2. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான முழுமையானஅதிகாரப் பரவலாக்கலை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். இதன் முதற்கட்டமாக ஏலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபைக்குரிய அதிகாரங்களை உடனடியாக கையளிக்கப்படவேண்டும்.
3. இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்கள், மலையக மக்கள் தலித் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவுசெய்யப்படுவதனுடன் அவர்களின் சமூக இருப்புக்கான உத்தரவாதங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
4. அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் கவனத்திற்கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்படுவதுடன், அம்மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதும், அவர்களின் பாதுகாப்பையும், சுதந்திரமான நடமாட்டத்துக்கானதுமான உத்தரவாதத்தையும் வழிவகைகளையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
5. மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கோரிக்கையை நடைமுறைப்படுத்தவேண்டும்.
6. இலங்கையில் கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரத்துடனும் கூடிய உரிமையை பாதுகாப்பதுடன் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடரும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இறுதியாக கவிஞர் முருகையன் அவர்களுக்கான அஞ்சலியுடன்; இலக்கிய சந்திப்பு நிகழ்வுகள் முடிவடைந்தது.
0 comments:
Post a Comment