Slideshow

சிலுவைப் பயணமும் புனித யுத்தமும்: ஊடகங்களின் சித்து விளையாட்டு

நிலா
வரலாறு மெல்ல எட்டிப்பார்க்கின்றது. வரலாற்றில் முன்பொருமுறை ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்த சிலுவை யுத்தம் பற்றி மீண்டும் செய்திகள் இலேசாக ஆங்காங்கே கசியத் தொடங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவர்களே இதனை ஆரம்பித்தும் வைத்துள்ளார். அவர் சிலுசை யுத்தம் பற்றி நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் சிலுவை யுத்தம் பற்றிய அறிவிப்பு சிலுவை யுத்தத்தின் அடையாள குறியீடாகவே காணப்படுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதிகளால் போராளிகளால் அடிக்கடி முன்வைப்படும் புனித யுத்தத்திற்கு மாற்றீடாகவே தங்களின் அடாவடித்தனங்களிற்கு நியாயம் கற்பிக்கவுமே தற்போது சிலுவைப் பயணம் பற்றிய கருத்துக்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் இவ்வளவு காலமும் தங்களால் மூடிமறைக்கப்பட்டிருந்த மதவெறியையும் இவர்கள் வெளிச்சம் போட்டு வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு துணை போவதில் வழமை போன்றே ஊடகங்களும் துதிபாடத் தொடங்கிவிட்டன.
நியுயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய செய்திகளை அறியத்தருவதில் அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளின் ஊடகங்கள் குறிப்பாக மேற்கைரோப்பிய நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களும், செய்திகளை வெளிக் கொணர்வதில் அவற்றின் ”கருத்தியல்” நிலைப்பாடும் பெருமளவிற்கு ஒருபக்க சார்பானதாகவே அமைந்திருந்தன. இவ்வாறான நிலைமை முன்பும் பல்வேறு சமயங்களில் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக ஈராக்-ஈரான் யுத்தத்திலும் பின்பு ஈராக் மீதான யுத்தத்தின் போதும் இவ் ஊடகங்களில் மிக கேவலமான விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தன. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம், பயங்காரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற தலைப்பில் அணிதிரண்டிருக்கும் இவ் ஊடகங்கள் வௌயிடும் செய்திகள் தமது நலன் சார்ந்தும் அரேபிய மக்கள் அனைவரையும் பயங்ரவாதத்தின் வாரிசுகளாக காட்டவும் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.
அமெரிக்காவில் இடம்பெற்ற தாக்குதலையிட்டு மகிழ்ச்சி தெரிவித்து வீதியில் இறங்கி ஆரவாரம் செய்த பாலஸ்தீன மக்கள் பற்றிய தொலைக்காட்சி செய்திகள் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சீ.என்.என்இல் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒரு முறை காட்டப்பட்டது. ஏனைய மேற்கைரோப்பிய மற்றும் வேறு பல தொலைக்காட்சி நிறுவனங்களாலும் இச்செய்தி உடனுக்குடன் பரப்பப்பட்டது. ஊடகங்களின் இவ்வாறான செயல்பாடு பல கேள்விகளை எம்முன் தோற்றுவிக்கின்றது.இச்செய்தி உண்மைதானா (நடுநிலை செய்திஸ்தாபனங்கள் வெளியிட்ட செய்தியில் இவை முன்பு ஈராக் மீதான யுத்தச் சம்பவங்களின் தொடர்ச்சி என கூறப்பட்டது.)
2. நடந்த சம்பவங்களின் முழுமையான விபரமும் அம்மக்களிற்கு தெரிவிக்கப்பட்­டிருந்ததா? அல்லது அரைகுறை செய்திகள் அதாவது விமான விபத்தில் முக்கிய கட்டடங்கள் தகர்ப்பு என்றோ அல்லது இஸ்லாமிய தீவிரவாதிகளால் விமானம் மூலம் (பயணிகள் விமானம் அல்ல) வர்த்தக ஸ்தாபனம் அழிக்கப்பட்டது மட்டுமே தெரிந்திருந்ததா?.
3. அப்படியே பாலஸ்தீன மக்கள் நடத்திநர;தாலும் அதற்கான அகபுற சூழ்நிலைகளை விளங்கிக் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட அனைவரினதும் மனம் பாதிக்கும்படியும் செய்திகளை வெளியிடலாமா?
மேற்கூறிய கேள்விகள் மட்டுமின்றி சரியான விசாரணை முடிவுகள் வருவதற்கு முன்பே இவ் ஊடகங்கள் தாமே விசாரணை நடாத்தி முடிந்து தீர்ப்பும் கூறிவிட்டன. இதன் மூலம் தொடரும் விசாரணை ஆராய்வுகளை தமது நோக்கிலேயே தொடரக்கூடியதாக மறைமுகமான ஒரு அலுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இச் சம்பவங்களைப் பற்றி நோர்வேஜிய தொலைக்காட்சி சேவையொன்று வெளியிட்ட செய்தியில் (செப்டம்பர் 12ஆமட் திகதி) பாலஸ்தீன மக்கள் இருதயமற்றவர்கள் அவர்களின் ஜெருசலேம் நிருபர்கள் என கூறியிருந்தார். (hjerte lose menesker ) ஆனால் தமது சொந்த நாட்டிலே அகதிகளாகி இஸ்ரேலிய சியோனிசவாதிகளால் இம்மக்களின் இருதயம் இரும்மு கரம் கொண்டு அடக்கப்பட்டது பற்றியோ அல்லது அம்மக்களின் சொந்தப் பிரதேசத்தில் அத்துமீறி குடியேறி மாடடாளிகைகள் கட்டி உல்லாச வாழ்வு வாழும் இஸ்ரேலிய குடியேற்றவாதிகளின் செயல்களால் அம்மக்களின் இருதயம் தீயிட்டு கொழுத்தப்பட்டு வருடங்­கள் பல கடந்துவிட்டது பற்றியோ இவ் ஊடககங்கள் பெரிதாக அலட்டிக்கொள்­ளவில்லை. பொதுவில் தமது அடிப்­படை நலன்களிற்கு பாதிப்பு வரும் போது இவ் ஊடக­கங்களில் சுயநலமே தலைநிமிர்ந்து நிற்கின்றது. இதுவே கடந்த கால வரலாறு.
நோர்வேஜிய ஊடகங்­க­­ளைப் பொறுத்தவரை இவ்விடயத்தில் நன்றிக்டன் செலுத்தவதில் ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே இவர்களும் முன்னணி வகிக்கிறார்கள் அதாவது அமொரிக்கா என்ற ஒரு நாடு இராணுவ பலத்துடன் இருந்தால் தாங்களும் இறுதிவரை பாதுகாப்பாக இருக்கலாம் என்பதாகும். ஆனால் இதில் சிறிளவும் உண்மையில்லை. பொரளாதார சமத்துவமும் பங்கீடும் சரியான முறையில் பகிரப்­படாதவரை உலகின் எந்த தேசிய இனமும் நிரந்தர பாதுகாப்புடன் இருக்க முடியாது. இதை ஏனோ பெரும்பாலான ஊடகங்கள் புரிந்துகொள்வதில் அடக்கப்படும் ஒடுக்கப்படும் மக்கள் சார்பாக சில அனுதாபங்களை தெரிவிப்பதன் மூலம் அம்மக்களின் சார்புநிலை கொண்டவர்க­ளாக தங்களைக் காட்டிக் கொள்ள முனையும் இவ் ஊடகங்கள் உண்மையில் தமது எஜமான விசுவாசத்திற்கு சேவகம் செய்ய எப்போதும் தயாராகவே இருக்­கின்றனர். இதற்கு ஒரு நல்ல உதாரணம் நோர்வேஜிய தேசிய தொலைக்காட்சி நிறுவனமான NRK வில் ஈரானியத் திரைப்படமான”smakenavkirsebar”என்ற திரைப்படம்செப்டம்பர் 14ஆம் திகதி காண்பிக்கப்படும் என நீண்ட நாட்களிற்கு முன்பே தெரியப்படுத்தியிருந்தனர்.
ஆனால் அன்று அத்திரைப்படம் காண்பிக்கப்படவில்லை. மாறாக கிரேக்க திரைப்­படமான ”Eviggetenog endag ” என்ற திரைப்­படம் காண்பிக்கப்பட்டது. ஈரானிய திரைப்படமான ”smakenav kirsebar” 1997இல் வெளியாகி பல பரிசில்களைக் குவித்த சிறந்த ஒரு திரைப்படம். 1977இல் Cannes திரைப்­பட விழாவில் தங்கப் பதக்கத்தையும் அதே­யாண்டு யுனெஸ்கோ தங்க விருதையும் பெற்றிருந்தது. படத்தின் இயக்குனர் பிரபல்ய இயக்குனர் Abbas Kairostami.இத்திரைப்படத்தின் உள்ளடக்கம் தற்கொலை மனநிலையுள்ள ஒரு ஈரானிய மனிதன் சுயமாக தற்கொலை செய்து கொள்ள முடியாத சூழலில் அதனை செய்யக்கூடிய ஒரு நபரை தேடி அலைந்து கொண்டிருக்கிறான். தன்னை கொலை செய்பவனிற்கு அதற்கு ஈடாக ஒரு பெருந்தொகை பணத்தையும் தரத் தயாராக இருக்கிறான். தேடித் தேடி அலைந்து கடைசியில் ஒரு ஆப்கானிஸ்தான் நபரை தேடி பிடிக்கிறான். மிகுந்த மத நம்பிக்­கையில் ஒரு வகையில் மதவெறியனென கூறத்தக்க அவ் ஆப்கானிஸ்தான் நபரிடம் தன்னை கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைக்கிறான். ஆனால் படத்தின் இறுதியில் தனது தற்கொலை முயற்சியை அவ் ஆப்கானிஸ்தான் நபரின் வழிகாட்டலினால் தூக்கியெறிந்துவிட்டு தெளிவான மனநிலையுடன் வாழத் தொடங்குகிறான். இத்திரைப்படம் இயக்குனரின் சமாதானம், சுதந்திரம் மாற்று கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை போன்றவறறிற்கு கிடைத்த வெற்றியாகும். உண்மையில் NRK தொலைக்காட்சி நிறுவனம் இஸ்லாம் பற்றியும் அதற்கு எதிரான ஒரு பக்க கருத்துக்கு மாற்று சூழலை ஏற்படுத்த விரும்பியிருந்தால் இதைவிட அருமையான வாய்ப்பும் சூழ்நிலையும் கிட்டியருக்க முடியாது ஆனால் அன்றைய பகல் முழுவதும் அடுத்த நாள் செய்தியிலும் ஜோர்ஜ் புஷ்ஷின் சிலுவைப்பயணம் பற்றியும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் புனித யுத்தம் (ஜிகாத்) பற்றிய செய்திகளையுமே முக்கியத்துவப்படுத்தியிருந்தது.
மேற்கூறப்பட்ட சம்பவத்தில் இருந்து நாம் புரிந்து கொள்வது யாதெனில் ஊடகங்கள் பெரும்பாலும் ஒரு பக்க செய்தியையே முக்கியத்துவப்­படுத்துகின்றன. பல சமயங்­களில் ஊடககங்களினால் வெளியி­டப்­படும் ”செய்தி வடிவங்கள்” அவற்றின் அப்­பட்­டமான நோக்கத்தை புடம்போட்டு காட்டுவதாக அமைந்து விடுகின்றன. உதாரணமான ஒரு செய்தியை பார்ப்போம். முதலில் பயங்கரவாத செயலினால் பாதிக்கப்பட்ட நியுயோர்க் நகர காட்சிகள் இடம்பெறும் அதை தொடர்ந்து அமெரிக்கா ஜனாதிப­தியின் பேச்சு அவரது அறிக்கைகள் வெளியிடப்படும். இதை தொடர்ந்து ஆப்கான் தலிபான்கள் பற்றியும் அவர்களின் கொடுமையான அடக்கு­முறைகள் பற்றி செய்தி இடம்பெறும். இதை தொடர்ந்து ஐரோப்பாவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முயற்சிகள் பற்றிய செய்தி இடம்பெறும்.
தொடாந்து ஆப்கானிஸ்தான் வருமையும் மக்களின் அவலமும் இடம் பெறும் இதைத் தொடர்ந்து நியுயோர்க்கில் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் கண்ணீருடன் வர்ணிக்கப்படும் அதைத் தொடர்ந்து அமெரிக்க அரசும் ஐரோப்பிய யூனியனும் ஆப்கான் மக்களின் பசி பட்டினியை போக்க பெருந்தொகை பணமும் உணவு பொருட்களும் அனுப்பி வைக்கப்­படும் என்ற செய்தியுடன் தொலை­க்­காட்சி நிறுவனமும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் பற்றிய தனது செய்தியை முடித்துக்கொள்ளும்.
மேற்கூறிய செய்தியின் ஒழுங்கு முறைகளை சீர்தூக்கிப் பார்த்தால் இவ் ஊடகங்கள் எவ்வாறு திட்டமிட்டு ஒரு பக்க சார்பான கருத்துக்களை திணித்து வருவ­தையும் ஒரு இனத்திற்கு அல்லது குறித்த ஒரு மதத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வை திட்டமிட்டு நடத்தி வருவதையும் உணர்ந்து கொள்ளலாம்.
நியுயோர்க் வாஷிங்டன் சம்பவங்களை முன்னிட்டு வரிந்துகட்டிக்கொண்டு புறப்பட்டுள்ள இவ் ஊடகங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் எஜமான விசுவாசம் மட்டுமன்றி பல சமயங்களில் முழுப்­பூசனிக்காயை சோற்றில் மறைப்பதிலும் ஈடுபட்டு வருகின்றன-வந்திருக்கின்றன. இன்றைய தலிபான் அரசக்கும் பின்லாட­னுக்கும் நேரடியான இராணுவ பயிற்சியை அமெரிக்க உளவு ஸ்தாபனமே வழங்கியது. என்பது பற்றியொ முன்னைய சோவியத் யூனியனுக்கு எதிரான போரில் இவ் தலிபான்களும் பின்லாடனும் அமெரிக்க உதவியை பெற்றுக்கொண்டே அப்பாவி ஆப்கான் மக்கள் மீதான ஒடுக்குமுறை­யையும் பெண்கள் மீதான அதிதீவர கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டபோது இவ் ஊடகங்கள் எங்கிருந்தன. ஈரான்-ஈராக் யுத்தத்தில் ஈராக்கை தமது செல்லப்பிள்­ளையாக அங்கீகரித்து வாரி வாரி வழங்கியபோது அவ்வுதவிகளை கொண்டே குர்திஸ்தான் மக்களை கொடுரமாக வேட்­டையாடிய சதாம் உசேனைப் பற்றி ஏன் இவ் ஊடகங்கள் அப்போது வாய்திறக்க­வில்லை. மாறாக சதாம் தமது நலன்களிற்கு எதிராக திரும்பியதும் மனித உரிமைமீறல் ஜனநாயகம் பற்றி கூக்குரலிட்ட இவ் ஊட­கங்களின் போலித்தனத்தை எங்கே போய் கூறுவது இவையெல்லலாவற்றையும் விட மிகவும் வேடிக்கையான செயல் நோபல் சமாதான பரிசிற்கு ஜோர்ஜ் புஷ்ஷின் பெயரும் முன்மொழியப்பட்டது தான்.
கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நோர்வேயின் பிரபல்யமான பத்திரிகையான Aftenposten பத்திரிகையில் பிரபல எழுத்தாளர் Gerts Nygardshaug எழுதிய அமெரிக்காவிற்காக ஒளியெற்றாத நாங்கள்” என்ற புத்தகம் பற்றிய விபரம் வெளிவந்துள்ளது. நியுயோர்க் சம்பவம் இடம்பெற்ற சில நாட்களில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில் சர்வதேச அரங்கில் அமெரிக்கா மீதான வெறுப்பிற்கு காரண­த்தை தேடுகின்றார். CNN தொலைகாட்­சியை தொடாந்து இரு நாட்களாக பார்த்த பின்பே இப்புத்தகத்தை எழுத தோன்றி­யதாக குறிப்பிடும் இவர் பழிக்குப்பழி இரத்தத்திற்கு இரத்தம் என இவ் ஊடகங்கள் எழுப்பும் குரலொழி­யையிட்டு தான் ஆச்சரியப்படவில்லை என கூறுகின்றார். ஏனெனினல் இவ் ஊடகங்கள் எப்போது பிரச்சினைக்குரிய விடயங்களிற்கு சரியான காரணங்களை தேடும் தேடலில் ஈடுபடுவதில்லை என குறிப்பிடுகின்றார். அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் சமாதான பரிசு வழங்குவது பற்றிய முன்மொழிவு, ஒருவகையில் பிரச்சினைக்குரிய காரணங்களை தேடுவதற்கு விருப்பமில்லாத அல்லது அதன் விளைவுகளுக்கு ஈடுகொ­டுக்க முடியாத நிழலயில் ஏற்பட்டுள்ள பயத்தின் காரணமாகவே நோபல் சமாதான பரிசுக்கு புஷ் பெயர் முன்மொழியப்­பட்டுள்ளதாக இவர் குறிப்பிடுகின்றார்.
இன்றைய நவீன உலகின் ஊடகங்களின் தாக்கம் சமூகத்தின் பல்வேறு மட்டங்க­ளிலும் நிலவுகின்றது. தனிமனிதனிற்கும் சரி அல்லத ஒரு சமுதாய இனத்திற்கும் சரி ஊடகங்கள் இன்றியமையாத பங்களிப்பை நல்குகின்றன. பொதுவில் ஒரு உடகம் தனது செய்தி வெளிப்படுத்தலில் பொதுமக்கள் கருத்துருவாக்கத்திற்கு முன்னின்று உழைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சமயங்­களில் ஊடககங்கள் தாமே பொதுமக்கள் கருத்தை உருவாக்கி விடுகின்றன. பின்னைய நிலையோ பெரும்பாலான ஊடகங்களின் சமுதாய பங்களிப்பாக விளங்குகின்றன. இந்நிலை மாறாதவரை சிலுவை பயணங்­களும் புனித யுத்தமும் தொடரும் ஜோர்ஜ் புஷ் மட்டுமல்ல இஸ்ரேலிய பிரதம் ஏரியல் சரோனிற்கும் நோபல் பரிசு கிட்டும் ஊடகங்களும் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மைகளாக ஆடிக்கொண்டே இருக்கும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More