Slideshow

தேசிய வாதம்: '' நவீன காவல் தெய்வம்

ஜானெஸ் மார்க்ஸியத்தின் மகத்தான வரலாற்றுத் தோல்வியை தேசியவாதம் தொடர்பான அதன் கோட்பாடு பிரதித்துவப்படுத்துகின்றது. இந்த தோல்வியில் இன்னும் பல அம்சங்களும் இருக்ககூடும் இவற்றில் சில அதிகமாக விவாதிக்கப்பட்டும் இருக்கின்றன. ஏகாதிபத்தியம், அரசு, குறைந்துவரும் இலாப வீதமும் மக்கள் வறுமையில் முழ்குவதும் என்பன தொடர்பாக மார்க்ஸியத்தின் பற்றாக்குறைகள் பழைய போர்க்களங்கள் தான். இருப்பினும் இவற்றில் எதுவுமே கோட்பாட்டுளவிலும் சரி, அல்லது அரசியல் நடைமுறையிலும் சரி தேசிய வாதப் பிரச்சனையைப் போல் முக்கியமானதாகவோ, அடிப்படையானதாகவோ இருக்கவில்லை. மேலைய சிந்தனையில் ஏனைய மரபுகள்கூட தேசியவாத தொடர்பாக அதிகம் சிறப்பாக எதையும் செய்து விடவில்லையென்பதும் உண்மைதான். இங்கு மார்க்ஸியத்ப் போலவே கருத்துமுதல்வாதமும் ஜெர்மன் வரலாற்று முதல்­வாதமும், தாராண்மைவாதமும், சமூக - டார்வின்வாதமும், நவீன சமூகவியலும் கூட இவற்றையே செய்கின்றன. இது மார்க்ஸிவாதிகளுக்குச் சிறு ஆறுதளலிக்கலாம். ஆனால், மார்க்ஸியவாதிகள் தமது கருத்துக்களுக்கு விஞ்ஞான பூர்வமாக உரிமை பாராட்டுவதனாலும், அவற்றின் அரசியலன் முக்கியத்துவம் அவர்களின் போட்டியா­ளர்களது கருத்துகளைவிட மிகவும் அதிகம் என்றவகையில் நவீன வரலாற்றில் மையமானதும், தப்பக்க முடியாததுமாக ஒரு சமூக நிகழ்வுப் போக்கு தொடர்பாக அவர்கள் ஏனையோரைவிட அதிகம் செய்திருக்க வேண்டும் என ஒருவர் எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாததாகிறது. இந்த தோல்வி தவிர்க்க முடியாததாக இருந்தது என்பதே எனது ஆய்வாகும். அது தவிர்க்க முடியாததுதான் என்பததை இப்போது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. சாராம்சத்தில் பொருள்முதல்வாத அர்த்தத்தில் இதனை இன்னும்சிறப்பாக புரிந்து கொள்ளமுடியும். ஒரு சிந்தனை குறை என்ற வகையில் வரலாற்றுப் பொருள்முதல்வாதமானது, இந்தப் பிரச்சினையில் தான் சிக்கல் கொண்டிருந்த நீடித்ததும், அழிவுகரமானதுமான முட்டுக் கட்டையிருந்து மிக சிறப்பான முறையில் தப்பித்தும் கொள்ள அதனால் முடியும். ஆயினும், இவ்வாறு செய்வதற்கு அது அநேகமாக ”மார்க்ஸியத்தை விலையாகப் கொடுக்க வேண்டியிருக்கும். இந்த கடுஞ் சோதனையிலிருந்து பொருள்முதல்வாதமானது வடுக்களோ, மாற்றங்களோ அன்றி தப்பித்து செல்லமுடியாது என்பதே ஒரு வெளிப்­படையான காரணங்களாகும். வரலாற்றில் மார்க்ஸிசத்தில் யதார்த்த பூர்வமான இடம், அதன் சில பற்றாக்குறைகள் (Limitations) மற்றும் நவீன வரலாற்று வளர்ச்சியுடன் அதனை கண்மூடித்தனமாக பிணைந்து விட்ட சில பிரக்ஞை பூர்வமாக வேர்கள் போன்றவற்றினூடாகவே இந்த தவறுக்கு இட்டு சென்ற காரணத்தை நாம் கண்டு கொள்ளமுடியும் என்பதே அந்த காரணமாகும். மார்க்ஸியத்தை வெறுமனே பாராட்டி கொண்டிராமல், இதனை வரலாற்றின் ஒரு பகுதியாக என்பது அர்த்தமாகும். இந்த அர்த்தத்தில் கோட்பாட்டினதும், நடைமுறை­யினதும் புனிதபந்தம் என்பதற்கு எந்த தொடர்பு கிடையாது. விஞ்ஞானத்தின் போர்வையில் கருத்துமுதல்வாத தத்துவத்தில் இருந்து (இறுதியாக மதத்தில் இருந்து) மார்க்ஸியம் எடுத்து கொண்ட தெய்வம் போன்ற தோற்றப்பாட்டை என்றென்றைக்குமாக இழப்பதே இதன் பொருளாகும். தேசியவாதத்தின் மீததான மார்க்ஸியத் ”தோல்விகள்” எமக்கு தத்துவ ரிதியிலான, கருத்தாக்கம் சார்ந்தவைகளாகவே முதலில் தோன்றுகின்றன. மார்க்ஸ் முதல் கிரெம்சி வரையிலான மகாத்தான நாமங்கள் இவ்விஷியத்திற்கு போதியளவு கவனம் செலுத்தவில்லை. அவ்விஷயத்தைக் கையாளும்போது அதனை நேரடியாக முகம்கொடுப்பதற்குப் பதிலாக, இதனைத் அவ்வப்போது அல்லது பட்டும்படாமலும் கையாண்டனர். இந்த பிரச்சனையை மிகவும் நேரடியாகவே கையாள வேண்டியிருந்தது. ஜார் பேரசினதும், ஒஸ்டிரியா - ஹங்கேரிய பேரசினதும் சமூக ஜனநாயகவாதிகள் கூட தமக்குள் விரிவான இணக்கத்தை எட்ட முடியவில்லை. 1914ம் ஆண்டு; அதிர்ச்சிமிக்க சம்பவத்திற்கு பின்னர் மார்க்ஸியவாதிகள் இந்த விவாதத்துக்கு இதே அளவு தீவிரத்துடன் திரும்பவும் விருப்பார்வத்தை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. 1925 ஆண்டுக்கு பின்னர் அவர்கள் அதை விரும்பிய போதிலும் கூட இப்பிரச்சனை தொடர்பான லெனினது நிலைப்பாடுகள் எனக்கருதப்பட்டவை மிதான ”வழிபாடு” உருவாகிவிட்ட நிலையில் அதைச் செய்வது அரசியல் ரிதியாகவும், உளவியல் ரிதியாகவும் மிகவும் சிக்கலானதாக ஆகிவிட்டிருக்கிருதது.
இவர்களது தயக்கங்களுக்கு ”தேசியப் பிரச்சனை” தொடர்பாக ஸ்டாலின் கட்டுரையே (1912) முடிவுகட்டப்பட்டது. இத்தோடு இணைந்த பிறகு விரிவாக உடன் நிகழ்வாக மாபெரும் சர்வாதிகாரி ஸ்டாலினால் எழுதப்பட்ட இதே நுhல் புதிய மகத்தான புனித கோட்பாட்டாக மாற்றப்பட்டது. 1914 இற்கு முந்திய முடிவு­றாத மாபெரும் விவாதத்தின் மிகவும் மிதமான மிச்ச சொச்சங்களுடன் ஒன்றாக அமைந்த இந்த கட்டுரையானது எந்த விதமான முக்கியத்துவமும் அற்றதாகும். புதிய நிலைமைகளில் இது, லெனின் புகழுடன் ஸ்டாலினின் பெயரையும் சேர்த்து கொள்ள வழிவகுத்து. இதனால்தான் இன்றுவரையில் இது எல்லாவிதமான கட்சி மா;க்ஸி­வாதிகளினாலும் எங்கும் கிளிப்பிள்ளைபோல ஒப்பிக்கப்படுகிறது. ஒழுங்கு மையப்பெற்ற மார்க்ஸிமானது அரை நுhற்றாண்டுக்கு மேலாக இந்த மிகவும் அச்சுறுத்தலைத் தரும் அபாயகரமான வரலாற்று விரோதியைக் கையாள்வதில் இந்த அரைகுறையான கருவி மீது நம்பிக்கை வைத்திருந்தது. இந்த வரலாற்று வரோதியின் பலமானது ஸ்டாலின் கிராடின் திருப்புமுனை வரையில் மார்க்ஸியத்தை அறவே ஒழித்து கட்டும் நியாத்துக்குத் தன்னை வரித்துக் கொண்டது.
கருத்துக்களின் வரலாற்றில் இதுவோர் துயரம்தந்த அத்தியாமாகும் ஆனால், இது தன்னளவில் எதையும் விளக்கவில்லை. அவ்வாறு அது விளக்கிக் கூறுவதாக ஒருவர் நினைத்தால், மார்க்ஸியம் ஒன்று திரட்டியுள்ள பெருமளவிலான புரட்சிகர அறிவாற்றல் வகையினங்களில் எங்கோவோர் இடத்தில் தேசியவாதம் தொடர்பான கோட்பாடும் நிச்சியமாக இருக்க வேண்டும் என்று கூறுவதான ஒரு மருட்சி தொடர்ந்து இருந்து வரும். நாம் ரோசா லுக்சம்பர்க், ஒட்டோ பாவர் ஆகியோரைவிட அறிவாற்றலில் விஞ்சிய­வர்கள் அல்ல. சோசலிசத்திற்கு தேசியவாதம் ஏற்படுத்தக்கூடிய நெருக்கடியானது, பாய்ச்சல் கூடியதுமான பண்புகள் குறித்து நாம் இவர்களைவிட மிகவும் கடுமையான பிரக்ஞை உடையவர்களுமல்ல. ஆகவே நாம் விடா முயற்சியுடன் தேடலில் ஈடுபட்டால், இக்­கோட்பாடு மார்க்ஸின் எழுத்துக்கள் இடையே ஆழ்கடலில் அகழ்ந்தெடுத்த முத்தாய் நிச்சயம் தோன்றும், மார்க்சும், எங்கெல்சும் தமக்கிடையே எழுதிக் கொண்ட கடிதங்களிலும், குறிப்புக்­களிலும் கூட அவை ஆங்காங்கே சிதறிக் கிடைக்ககூடும். வேறு வார்த்தையில் சொன்னால், ”இத்தோல்வி” அடிப்படையிலேயே கருத்தாக்­கம் சார்ந்தது, அகநிலையானதொன்று என்று ஒருவர் நம்பினால் இந்த மருட்சியானது பழைய நிகழ்வுகளை திருப்பிபார்த்தால், அது கைகொ­டுத்­துதவும் என்பதாக அமைந்து விடுகிறது. இந்த செயற்பாடானது மார்க்சியவாதிகளின் வழிபடும் பிரிவினருக்கு அதிக கவர்ச்சி திரட்­டுவதாக அமைந்து விடுகிறது. (பொதுவாகவே மேலெழுந்தவாரியாக பார்க்கப்பட்ட) பின்வரும் நூலின் பகுதிகளை மனதிற்கொண்டால் ”அவர்”... . ”இதனைத்தான்” மனதிற் கொண்­டுள்­ளார். லெனின் - ஸ்டாலின் அல்லது மார்க்ஸ் - ஏங்கல்ஸ் இந்த ஆழமான பார்வை­யானது ரோசா லக்சம்பேர்க்கின் அவதானிப்­புகளால் நிறைவுசெய்யபட வேண்டியவை. இவ்வாறு இவற்றை உணரத்தலைப்படுவர். எமது முன்னோடிகளை நாம் உண்­மையிலேயே போற்றுவதானால், அது எம்மிடம் இந்த சடங்குகளின் பயனற்ற தன்மையை இனங்கண்டு கொள்ளுமாறு கோருகிறது. அவர்களது ”தோல்வி” யானது வெறுமனே கருத்­தாக்கம் சார்ந்தாகவே அல்லது அக நிலையானதாகவோ இருக்கவில்லை. எந்த விதமான ஆழமான கோசங்களினாலும் இதை ஈடுசெய்ய முடியாது. தேசியவாதம் தொடர்பான ஒரு நீடித்திருக்கக் கூடிய கோட்பாட்டை அவர்களால் ஒன்றாக வகுக்க முடியாவிட்டால் வேறு யாராலும் அதை வகுக்க முடியாது, வகுக்கவும் இல்லை என்பதுதான் உண்மை­யாகும். அத்தகைய ஒரு கோட்பாட்டிற்கு அவசியமான சில விஷயங்களை வரலாற்று ரிதியான வளர்ச்சி அவ்வேளையில் தோற்றுவித்திருக்கவில்லை. இதுபோன்ற 1914ம் ஆண்டுக்குப் பிந்திய மேலும் இரண்டு தலைமுறைகளில் துயரமிகு காலவரையை அது கனிந்திருக்காது. ஒரு மிகவும் விரிவான அர்த்தத்தில் இந்த உண்மையானது மார்க்சியத்திற்கு இயல்பாகவே ஆபத்தானதாக இருந்த போதிலும், இது வரலாற்றுப் பொருள்முதல்வாததிற்கு அற்ப அளவில் கூட அவமதிப்பாக அமையாது. தத்துவார்த்த தவறுகள் தன்பங்கிற்கு எம்மை உண்மையான வரலாற்றை நோக்கி திருப்பவும் செல்லுமாறு செய்கின்றன. இந்த கடந்தகால தலைமுறைனருக்கு நவீன தேசியவாதத்தின் புதிரானது தன்னை அறிமுகம் செய்து கொண்ட பொருள்வகை நிலைமை­களுக்கு இந்த தலைமையானது எம்மை திருப்புகின்றது. ”ஞானக்கண்ணைக்” கொண்டிராத நிலையை அவர்களது மிகவும் கடுமையான குறைபாடுகளுடனேயே (under very Limitations ) அதனை முகம் கொடுக்க வேண்டியிருந்தது. உலக வரலாற்றின் நவீன முதலாளித்துவ வளர்ச்சியின் விரிச்சமான, மிகவும் மையமான அம்சமாக தேசியவாதம் விளங்குகின்றது. ஏனைய சிந்தனை முறைமைகளைப் போலவே (Specialize system) காலத்துக்குக்காலம் வரம்பிடபட்ட நிலையில் மார்க்சியமானது இந்த வளர்ச்சியோ அல்லது அதைத் தொடர்ந்து முதலாளித்துவ வரலாறு எடுக்கப் போகும் ஒட்டுமொத்தமான வடிவத்தையோ முன்னரே அறிந்து கொள்ளும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை. தேசியவாதத்தைப் பொறுத்தளவில் உள்ள சிக்கலென்னவென்றால் , இந்த பிரச்சனையை அணுகுவதற்கு இதேவிதமான முறையியலும் ஆற்றல் தேவைப்படுகிறது என்பதுதான்.
தேசியவாதம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகள் இவ்வளவு அறிமுகமாக கூறப்பட்ட­வையாகும். மேற்கொண்டு செல்வதற்கு முன்பாக, இந்த விடயம் தொடர்பாக சிந்திக்கும் மிகப்பெருபாலான மார்க்சியவாதிகளும் (பிறரும் கூட) எவ்வாறு இரண்டக நிலையில் ஊசலாடுகிறார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ய்வோம். ஒரு புறத்தில் தேசியவாதமானது ஒரு நல்ல விஷயமாக, நவீன வரலாற்றில் அரசியல் ரிதியிலும் தார்மீக ரிதியிலும் நேர்மறை சக்தியாக தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. அது அந்நிய ஒடுக்குமுறையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்குப் போராடுகின்ற, பலவீனமான, வளர்ச்சி குன்றிய நாடுகளின் சித்தமாக இருந்து வந்திருக்கின்றது. இந்த பொருளில் பார்த்தால், ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமொpக்கச் சுதந்திரப் போர்கள் நடைபெற்ற காலம் முதல் இந்தோ-சீனத்தின் சமீபகாலப் போராட்டம் வரையில் இந்த அர்த்தத்தில் ஓர் முற்போக்கான அம்சமாகவே தோன்றுகிறது. மறுபுறத்தில் இந்த பதப் பிரயோகமானது இத்தாலியப் பாஸிஸத்தின் வரலாற்றுக்கும் 1930ம் ஆண்டுகளின் போதான ஜப்பானிய இராணுவவாத அரசுக்கும் ஜெனரல் ஏ.கோல், ஜெனரல் அமீன், ஈரான் மன்னர் ஷா ஆகியோரின் பதவிகளுக்கும் ஆளுமைக­ளுக்கும் சற்றேனும் குறையாத குணாம்சத்தில் பொருந்துகிறது.
முரண்பாடுகளுக்குள் பிழைப்பு நடத்தும் ஒரு உபாயமாக அல்லாமல், உண்மையிலே பயனுள்ளதாக அமையவேண்டுமானால்-, தேசியவாதம் தொடர்பாக ஒரு கோடபாட்டின் இலக்கானது இந்த இரண்டக நிலையில் இரண்டு முறைகளை தழுவியாக அமைய வேண்டும். இந்த நிகழ்வு போக்கின் நேர்மறை (+ve) எதிர்மறை (-ve) என்ற பக்கங்கள் இரண்டுக்கும் மேலாக எழுந்து இந்த நிகழ்வுப் போக்கை முழுமையாக பார்ப்பதாக இது அமைய வேண்டும். இந்தவிதமாக மாத்திரமே, நாம் இதன் மீது சுமத்தப்பட்டிருக்கும் பெரிதும் தார்மிகமயப்பட்ட பார்வையிருந்துக் கொண்டு எழுந்த, இதில் ஒரு வித உணர்வுடன்கூடிய ஒரு வரலாற்றுப் பூர்வமான பார்வையை பெறலாம் என நாம் எதிர்பார்க்க முடியும். (கடந்த காலத்தில், விஞ்ஞானபூர்வமான என்ற பதமானது சித்தாந்த ரிதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதால், இந்த பார்வையை நான் ”விஞ்ஞானபூர்வமானது” என்று கூறமாட்டேன், ஆகக்குறைந்தது இதனை ஒரு நல்ல பார்வையெனக் கூறுவேன்.) இதனைச் செய்வதற்கு இதன் முரண்பாடுகளிலும் அர்த்தம் காணக்கூடியதாக ஒரு வகையான விளங்கப்பட்ட சட்டத்தினுள் (Explanatory Framework ) இந்த நிகழ்வுப் போக்கை வைப்பது அவசியமானதாகிறது.
இந்த சட்டகம் எது என்ற கேள்வி எழுகிறது. இங்கு மெய்யான பயணத்தை தரவல்ல ஒரேயொரு துணையாதார சட்டகம் (Framework of reference) இருக்குமாயின் அது உலக வரலாறு முழுமையுமேயாகும் என்பது எனது நம்பிக்கையாகும். அத்தகையதொரு மாபெரும் சிக்கலான பிரச்சனையை குறித்து எமக்கு தேவைப்படும் தெளிவான தோற்றத்தை கொடுப்பதற்கு பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி (ஆகக் குறைந்தது) முதலான வரலாற்று வளர்ச்சிகளின் பொதுவான போக்கு மாத்திரமே உதவ முடியும். ஒவ்வொரு நாடாக எடுத்துக் கொண்டு அனுகத் தொடங்குவது என்ற விதத்தில் செயற்படும் இந்த பிரச்சனை தொடர்பான பெரும்பாலான அனுகுமுறைகள் தாக்கமுள்ளவையாக அமையவில்லை. தேசியவாதம் என்ற சொல்லின் சித்தாந்தமே, எமக்கு, மனித சமுகமானது சாராம்சத்தில் வேறுபட்ட, தனித்துவமான பலநுhறு தேசங்களைப் கொண்டது எனவும், இவை ஒவ்வொன்றும் தமக்கென சொந்தமான தபால் முத்திரைக­ளையும், தேசிய ஆன்மாவையும் கொண்டிருக்­கிறது. (அல்லது கொண்டிருக்க வேண்டும்) என்று பரிந்துரைப்புகள் மூலம், எமது அனுகு­முறையை இந்த வழியிலேயே தூண்டுகிறது, என்பது உண்மைதான். தோப்பின் இரகசியத்தை தனிமரங்களாக கோருவாதாகவும் இதனைப் கூறலாம். அதிர்ஷ்டவசமாக, பொதுப்புத்தியில் காணப்படும் வழமையாகவே சிதைந்த அரை - உண்மையே இதுவாகும்.
எமது அக்கறைக்குரிய அர்த்தத்தில் கூறினால், இல்லை தோப்புதான் தனி மரங்களை விளக்குகிறது என்பதே சரியானது ஆகும். தரையமைப்புகள், மண், காலநிலை போன்ற புவியியலில் சில பொதுவான நிலைமைகள் தான் எந்த மரங்களை, எவ்வளவு அடர்த்தியாக, எவ்வளவு தூரத்திற்கு வளர்க்க வேண்டும் என்பன நிர்ணயித்தது. வேறுவார்­த்தையில் கூறுவதானால், பிரஞ்சு புரட்சி, கைத்தொழில் புரட்சி என்பவற்றிற்கு, இன்றைக்கு இடையிருந்த உலக அரசியல் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட சில அம்சங்கள் தான் ”தேசியவாதத்தையை” அதன் மிகவும் பொதுவான அர்த்தத்தில் நிர்ணயித்திருக்கிறது. நாம் இன்னும் இச்சகாப்தத்தில் தான் வாழுகின்றோம். ஆயினும், பிரச்சினையுடன் போராடிய முன்னைய கோட்பாட்டாளர்களை விட இந்த சகாப்தத்தில் நீண்ட காலம் வாழ்ந்துள்ளோம் என்ற மிதமான அனுகூலத்தை நாம் கொண்டிருக்கின்றோம். தற்போதைய எமது அனுகூல நிலமையில், இப்போக்கினதும் அதன் துனைவிளைவுகளினதும் சில ஒட்டுமொத்­தமான குணவியல்புகளைத் தெளிவாக உணர்ந்து கொள்வதில் அவர்களைவிட ஒரளவு மேலான நிலையில் நாம் இருக்கக் கூடும். எம்மால் கூட இதனைச் செய்யமுடியவிட்டால், அது எமக்கு அதிகமாக எதையும் கூறப்போவது கிடையாது.
அடுத்தாற்போல், தேசியவாதம் பற்றி எமக்கு சில கருத்துகளைத் தருகின்ற பொதுவான வரலாற்று வளர்ச்சியின் அம்சங்கள் யாவை என்பது பற்றி நாம் ஆராய வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் இவ்விடயம் சம்பந்தமான புராணத்துள் சுருக்கமாக ஆழ்ந்து பார்ப்பது உதவியாக அமையக்கூடும். அரசியல், மற்றும் சமூக விஞ்ஞான மாணவர்கள் பயன்படுத்துவதற்காக ”குஸ்தாப் புளோபெர்டின்” பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகளின் அகராதியில்... ஒரு பிரதியை ஒருவர் தயாரித்தாரானால், ”தேசியவாதம்” என்ற பதப்பிரயோகம் பின்வருமாறு விளக்கப்படும் என நினைக்கின்றோம். தேசியவாதம் : இப்பதத்தின் சமகால அர்த்தத்திற்கு பெரிதும் ஒத்திருக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டதை நாம் 1790 காலங்களிலேயே (அபே பெருவலஈ, 1798) காணக்கூடியதாக இருப்பினும்கூட, இப்பதமானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்பு மிகவும் அhpதாகவே பயன்படுத்தப்பட்டது. அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில இருந்து தேசியம் பாரம்பரியம் மரபுகள் மற்றும் பேச்சு போன்ற காரணிகளுக்கு அளிக்கப்பட்ட புதிய, உயர்நிலைப்படுட முக்கியத்தைக் குறிக்கிறது. அனைத்து சமூகங்களுக்குப் பொதுவாகத் காணப்படும் ஒரு வளர்ச்சி கட்டம் என்ற வகையில், தேசியவாதம் பற்றிய கருத்தாக்­கத்தை, பொருள்முதல்வாதம், கருத்துமுதல்­வாதம் ஆகிய இரண்டு கருத்துபரம்பலை ஏற்று கொள்கின்றன். சமுதாயம் இந்தகட்டத்தின் ஊடாக கட்டாயமாக செல்ல வேண்டும் என்பதை இந்தப் பிற்காலத் கோட்பாடுகள் ஏற்றுக்கொள்கின்றன. (உதா. எப். எங்கெல்ஸ், எல். வொன் ராங்கி, வி.இ.லெனின், எப்.மெயினிக் போன்றோரின் வாசங்களைப் பார்க்கவும்) சம்மந்தப்பட்ட சமூக ஒருவாக்­கங்களுக்குள் உள்ளார்ந்து செயற்படும் குறிப்பான சக்திகள் அல்லது உந்தல்கள் இந்தக் கட்டத்தின் காரணிகளாக கூறப்படுவதையும் இந்தக் கோட்பாடுகள் ஏற்றுக்கொள்கின்றன. எனவே, தேசியவாதமானது உள்ளார்ந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு அவசியமாக இருக்கிறது. மார்க்சியவாதிகள் இது தேசியச் சந்தைப் பொருளாதாரம் மற்றும் நிலைத்திருக்க கூடிய தேசிய முதலாளி வர்க்கம் ஆகியவற்றின் தோற்றத்துடன் இணைக்கப்­படுகின்றது. கருத்துமுதல்வாதிகள் இது, வரலாற்று வளர்ச்சியில் நிச்சயம் தன்னை வெளிப்படுத்தியாக வேண்டிய சமுதாயத்தில் உள்ளார்ந்துள்ள ஆன்மாவுடன் பொதுவான ஆளுமையுடன் இணைக்கப்படுகின்றது. இரண்டு கண்ணோட்டங்களுமே, சமூக பரிணாமத்தின் இந்தக்கட்டமானது, அடுத்துவர இருக்கும் இன்னும் திருப்திகரமான நிலைமைகளைக் கொண்ட ”சர்வதேசியம்” என்பதற்கான அவசியமான முன்நிபந்த­னையாகக் கருதுகின்றன. (பொருள்முதல்­வாதத்தைப் பொறுத்தவரையில் பாட்டாளிவர்க்க அல்லது சோசலிச சர்வதேசியம், கருத்துமுதல்­வாதத்தைப் பொறுத்தவரையில் உலக ஆன்மாவின் உயர்ந்த ஒத்திசைவு.) ஒர் ஆரோக்கியமான தேசியவாத்தை முன்னரே வளர்த்துக் கொண்டுள்ள சமூதாயங்களினாலும் மட்டுமே இந்த நிலைமை அடையமுடியும். மிதமான நியமான தேசியவாதமானது இந்த அர்த்தத்தில் போற்றப்படும் அதேவேளை இந்த வரலாற்று வரம்புகளை விஞசுகின்ற மிதமற்ற, அல்லது மிகையான தேசியவாதமானது ஆரோக்கியமற்றதாகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகின்றது. (”இனவெறி (Chauvinism) பற்றிய மேலுள்ள குறிப்பை பார்க்க) உலாகவிய ரிதியில் நிலவும் மரபார்ந்த நம்பிக்கைகள் நாட்டுப் புறவியலின் இந்த பகுதியில் சாரம்சம் யாதெனில், தேசியவாதம் என்பது உள்ளார்ந்த ரிதியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகத்தின் தேவை , ஏற்ற வளர்ச்சிக் கட்டம், மரபார்ந்த அல்லது நிலபிரபுத்துவ சமூகத்­திற்கும், தேசிய காரணிகபல் குறைந்தளவு முக்கியத்துவம் பெறும் (அல்லது மனித வரலாற்றின் சிக்கல் குறைந்த) எதிர்காலத்திற்கும் இடையில் எப்பவும் ஒரு இடத்தில் அமைந்திருக்கிறது என்பதாகும். ஒரு வளர்ச்சியிக் கட்டமாக இருக்கும் இது, சிலவேளைகளில் தவறுகப் போய்விடலாம் அல்லது வெறிபிடித்து ஒடலாம் என்பது வருத்ததக்கதே. இதுவோர் புதிராகும். ஒரு வளரும் பருவம் எவ்வாறு ஒரு கொடிய நோய்யாக மாறமுடியுமா? நிபுணர்கள் இதைப்பற்றி எதைக் கூறினாலும் தேசியவாதத்தின் குணாம்சமான இரட்டையான உள்ளார்ந்த பண்பு குறித்து அவர்கள் உடன்படுகின்றனர். சம்பந்தப்பட்ட சமுதாயத்தின் அக தேவைகள் சிலவற்றிடனும் சில தனிநவர்களுடனும் உளவியல் தேவைக­ளுடனும் கூட அது தொடர்புடையதாகின்றது. மக்களினங்களுக்கும் நபர்களுக்கும் ஒரு முக்கியமான பண்டத்தை, ”அடையாளத்தை வழங்குகின்றது. இவற்றுடன் பிணைந்தாக தனித்துவமான, இலகுவில் இனங்காணத்தக்க தன்னிலை (Subjectivity) ஒன்று இங்கு இருக்கின்றது. தேசியவாதம் பற்றிநாம் பேசும் போதெல்லாம் ”உணர்வுகள்”, ”உந்தல்கள்”, உத்தேசஅபிலாஷைகள்”, ”உரியதாக” இருக்கும் வேணாவாக்கள் போன்ற இன்னோரன்ன­வற்றால் ஈர்க்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இந்த உளவியலானது தேசியவாத தொடர்பான ஒரு முக்கிய உண்மையைன்பது வெளிப்படையானது. தேசியவாதம் தொடர்பான உலகலாவிய அளவிலா மரபார்ந்த நம்பிக்கையானது முற்றிலும் தவறானதல்லை. அவ்வாறு தவறானதாக இருப்பின் அது ஒர் ஐதிகமாக செயல்ப்படமுடியாது. மறுபுறத்தில் அது உண்மையாக இருக்குமானால், அதாவது இந்த இடத்தில் எமது அக்கறைக்குரியபொருளில் உண்மையாக இருக்குமானால், அப்போதுப்கூட இது செயல்பட முடியாததாகவேயிருக்கும். தேசியவாதமானது ஒரு சித்தாந்தமாக இருக்கிறது. இதன் அர்த்தம்யாதெனில், ”தேசியவாதத்தின்” பிடியில் இன்னமும் இருக்கும் ஒரு சமூக உலகின் பொதுவாக ஏற்று கொள்ளப்படத்தக்க ”தவறான பிரக்ஞையாக” இது இருக்கிறது என்பதுதான். வரலாற்று வளர்ச்சியில் அந்த வடிவங்களாககாமைந்து ஈடுசெய்யும் ஒரே பொறிமுறையையே, அந்த யாதார்த்ததுடன் வாழ ஒரு வழிமுறையையே நாம் ”தேசியவாதம்” என பெயரிடுகின்றோம். இந்த வடிவங்கள் உண்மையிலேயே எவ்வாறு அமைந்திருந்தாலும், அதை நோக்கி முக்கிய தடங்கலாக தருவதயாக இதுகருதப்படலாம்.
அத்தகைய தலையாய தடமாக இருப்பது, வளர்ச்சிபற்றிய கருத்தாக்கம் அல்லது சமூக பொருளாதார வளர்ச்சி என்பவற்றிற்கும் தேசியவாதத்திற்கும் இடையில் பொதுபுத்தி பரிந்துரைக்கும் சக்திவாய்ந்த பிணைப்பாகும். தேசியவாதத்தின் தனித்துவமான நவீனமான யதார்த்தமானது (தேசிய இனம் (Nationalism) தேசிய அரசுகள் மற்றும் இவற்றின் முன்னோருக்கும் மாறாக) இதனுடன் எப்ப­டியோ தொடர்புட்டே இருக்கிறது. ஏனெனில், சுமார் 1800ம் ஆண்டு முதல் மாற்றம் பொதுவாக துhpதமடையும் பின்புலத்துள் மாத்திரமே, இந்த புதிய அர்த்தத்தில் ”வளர்ச்சியின்” பின்புலத்துள் மாத்திரமே, தேசியத்துவமான (Nationhood) இந்த முழுமையான சூட்சுபமான அர்த்தத்தைப் பெற்றது. ஆயினும், முழுமையான அர்த்­தமானது வளர்ச்சியின் யதார்த்தத்தியிருந்து அப்படியே பெறப்படுகின்றது எனபது உண்மையல்ல. இந்த உணர்வுள்ள தருணத்தில் (Sensitive Juncture) உண்மையானது பயனுள்ள சித்தாந்தமாக மாறுகறது. புதிய வளர்ச்சி நிலமையில் இருந்து இயல்பாக எழும், குறிப்பிட்ட சமூக - அரசியல் வடிவத்திற்க்கு கட்டாயமாக அவசியபடுவதாக தேசிய - வாதம் (National - Ism) அமைகிறது என்பது சரியானதல்ல (அப்படித்தான் இருக்கவேண்டும் என மனிதகுலம் விரும்புவதற்கு எப்போது மிகப்பல காரணங்கள் இருந்தபோதிலும் கூட) இது இயற்கையல்ல. மரபார்ந்த நம்பிக்­கையானது இவ்வாறுதான் கூறுகிறது என்பது உண்மைதான். இதற்கு இயற்கையான அந்தஸ்த்தை அளித்து, ”ஆரோக்கியமானதாக” வகைப்படுத்தி, கிராமிய மடமைக்கும் நவீன தொழிமயத்திற்கும் (அல்லது வேறெதற்கும்) இடையேயுள்ள நாம் சிரமப்பட்டு நடக்க வேண்டிய பாதையாக, எல்லா சமூகங்­களுக்கும் உரிய ஒருவித இளம்பருவமாக காட்டுகிறது.
தேசியவாதமானது குறிப்பான அக இயக்கங்கள், நபர்கள் மற்றும் ஆளணிகள்(Personnael) ஆகியவற்றுடன் இணைககப்பட்டுள்ளது என்பது உண்மையே. இவர்கள்எந்தவிதத்தில்நடந்து கொஸள்கிறார்கள். மிகவும் ஒத்த உணர்வுகளை கொண்டுள்ளார்கள். எனவே இது, 1850களின் இத்தலி”ய தேசியவாதமும் 1970களில் குர்திஸ், இல்லது எரித்திரிய தேசியவாதமும் இந்தவிதமான குறிப்பான அக பொறிமுறைகளால் உருவாக்­கப்­பட்டது, ஆதாரமாக கொண்டிருந்தது என்றவிதத்தில் கூறத்தூண்டுகிறது. அவை அந்த மக்களது உள்ளுர் தனித்தன்மைகளை பொpதும் ஒத்தவகையில் வெளிப்படுத்துகிறது. அந்த மக்களது ஆன்மாவுக்கு (அல்லது குறைந்தபட்சம் அவர்களது முதலாளிகளுக்கு) தேவைப்படுகிறது என்ற உத்தேசத்தில். ஆயினும் எந்தவிதமான தேசியவாதமும் உண்மையிலேயே இவை போன்ற உள்ளக இயக்கங்களின் உற்பவிப்பு என்பது உண்­மையல்ல. உவர்ந்தும் புரிந்தும் செயல்படக்­கூடிய நாட்டுக்கு நாடு வேறுபடும் மருட்சியின் கருமையம் இதுவாகும். இதையே தேசியவாதச் சித்தாந்தம் எம்மீது திணிக்க விழைகிறது. உண்மையில் வெல்ஸ் தேசியவாதமானது, வெல்ஸ் மக்களின் தனித்துவங்கள், அவர்தம் வரலாறு, அவர்தம் குறிப்பிடத்தக்க ஒடுக்கு­முறை வடிவங்கள் போன்ற இன்னோரன்­னவற்றுடன்அதிக சம்பந்தமுள்ள. ஆனால், வெல்ஷ் தேசியவாதம் - அந்த இனப்பொதுப் பண்பு, நாம் ஆர்வம் கொண்டுள்ள பதத்தில் பதிவாக்கப்பட்டுள்ள சர்வவியாபகமானத் தேவை - அவலஷ் மக்களுடன் சம்பந்தமில்­லாதது. அது வெல்ஷின் உண்மையல்ல. குறிப்பிட்ட ஒரு காலத்தில் வெல்ஷ் தேசமும் மக்களும் இந்தபாணியில் வரலாற்றுப் போக்கிற்குள் தள்ளிவிடப்படுகின்றனர் என்ற பொதுவான வளர்ந்தோங்கும் வரலாற்றின் ஒர் உண்மையாகும். அதன் பின்னர் அவர்கள் பின்பற்றுவதற்கு நிர்பந்திக்கப்பட்ட ”வாதமானது” உண்மையில் வெளியில் இருந்து அவர்கள் மீது திணிக்கப்பட்டதாகும் என்ற போதிலும், இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழைமையான தேசிய ஆளணிகள், மரபுவழிபண்புகள் , உணர்வுகள் போன்ற இன்னோரன்னவை உள்ளிருந்தே மலர வேண்டும் என்பது இன்றியமையாது. தேசியவாங்கள் அனைத்துமே சமூக, தனிப்பட்ட பொறியமைவுகளின் வழமையாகப் பயன்படுத்தப்படும் நுடப முறைகளின் குவியல்பு மூலமாகவே செயல்படுகின்றன, அவற்றில் பல ஆகவும் அகநிலைப் பண்புடையவை. ஆனால்இந்த நிகழ்வின் ஏதுக்கள் மரபின் மலர்ச்சிக்குள் இல்லை. இந்த மார்க்கம் குருதி எழுச்சியூட்டும் மக்கள் மரபில் இருக்கின்றன. தேசியவாதத்தின் அகநிலைத் தன்மையானது அது பற்றிய ஒரு முக்கியமான ஸ்துhலவமான அம்சமாகும். ஆனால் அதுவே தோற்றங்கள் பற்றிய பிரச்சனையை முன்வைக்­கிறது என்பதும் உண்மையாகும். மெய்யான தோற்றப்பாடுகள் வெறெங்கோ உள்ளன. அவை மக்கள் மத்தியலும் அமைந்­திருக்கவில்லை. ஏதாவது ஒரு வகை முழுமைத் தன்மை அல்லது தனித்துவத்துவத்­திற்கான தனிநபரின் அடக்கப்பட்ட உணர்வி­லும் இல்லை, ஆனால், உலக அரசியல் பொருளா­தாரத்தின் இயந்திரத்தில் உள்ளது. ஆயினும், அத்தகைய பொருளாதார வளர்ச்சியின் போக்கில் அல்ல - தொழில் மயமாக்கம் மற்றும் நகரமயமாக்கத்தின் திவிர்க்க முடியாத உடன் நிகழ்வாக அல்ல. அவை அப்போக்கின் கூடுதல் திட்டவட்ட­மான அம்சங்களுடன் இணைத்திருக்கின்றன. இந்தத் தனிச்சிறப்புள்ள குணவியல்புகளை வகைப்படுத்துவதற்கு மிகச் சிறந்த மார்க்கம், பதினெட்டாம் நூற்றாண்டு தொடக்கம் வரலாற்றின் சமதையற்ற வளர்ச்சியை அவை பிரதிபலிக்கின்றன என்று கூறுவதேயாகும். இந்த சமதையின்மை ஒரு பொருளாதய உண்மையாகும். என்ற ஒருவர் வாதிட முடியும். இந்தக் கூற்று, திருப்தி தருகின்ற, முரண் நகைக்கு அண்மித்ததான முடிவை எட்ட எம்மை அனுமதிக்கிறது. வரலாற்று இயல்பு நிகழ்வின் ஆகவும் வெளிப்படையானதான அகநிலையும் கருத்தியலும், கடந்த இரண்டு நூற்றாண்டுகளது வரலாற்றின் ஆகவும் குரூரமான மோசமான பொருளாதார பக்கத்தினுடைய ஒரு துணை காரணி என்பதுதான் உண்மையாகும். சமைதையான வளர்ச்சியினவாய் மூலமாகவே எதிரானது. கைத்தொழில் புரட்சிக் காலந்தொட்டு மனித சமுதாயம்கண்டு வரநேர்ந்த எல்லா மெய்யான ”வளர்ச்சியும்” சமதையற்றதுதான் என்பதால் இந்த எதிர்ச்சொல் வாய்மூலமமானது, உண்மையானது அல்ல. எவ்வாறாயினும் சமைதையான வளர்ச்சிபற்றிய கருத்தமைப்பும் அபியாயும், நாம் அதில் இருந்தே ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்துக்குட்படும் வகையில் வலிமையானது. அது, மேலைய அல்லது நுரோப்பாவை மையமாகக் கொண்ட உலகக் கணணோட்டத்தின் - உலகக் கருத்தமைப்பின், வாழ்க்கைத் தத்துவத்தின் - உயிர் நாடியாக நெருக்கமானதாகய் இருக்கிறது - இது நாம் வரலாறு பற்றியும், எனவே (வேறு விஷயங்­களுடன்) தேசியவாதம் பற்றியும் நாம் நினைக்கின்ற விதத்தை இன்னமும் ஆகக் கூடிய, உதாரணமாக, முன்னர் குறிப்பிடப்பட்ட இதிகாசம்மானது சமூக நிகழ்வுகளின் ஒர் சமதையான, இயல்பான பரிமாணத்தின் ஏதோவொரு வகையிலான பகுதியாக தேசியவாதம் விளங்குகிறது என்ற பாசாங்கு பண்னும் ஒரு மார்க்கமே என்பதைக்காண முடியும். பொருளாயத நாகரிகமும் சமைதையான, முற்போக்கான வளர்ச்சி, வெகுஜனப் பண்பாடு பற்றிய கருத்து ஐரோப்பிய ஞானோதயத்தின் குணாம்சமாக இருந்தது. அக்காலத்துக்கும் இடத்துக்கும் உரிய மேல் மட்டத்தினருக்கே இயல்பான ஒரு முன்போதலான கண்ணோட்­டத்தை அது பிரதிபலித்தது. உயர்ந்த பண்பாடு உள்ள சகாப்தங்களின் போது தமது மூதாதையர்கள் எவ்வாறு சிந்தித்தார்களே அது போலவே புலானகத்தக்க மூடுதிரையில் ”காட்டுமிராண்டிகளுக்கு” எதிரான நாகாகத்தின் அடிப்படையிலேயே இன்னமும் சிந்தித்­தார்கள். ஆனால் முன்னேற்றம் பற்றிய புதிய உறுதிப்பாடுகள் காட்டுமிராண்டிகளுக்­கான கண்ணோட்டத்தை மேலும் சாதமாக்கின. குறித்த காலம், உதவியுடன் அவர்கள் வென்று சமாளிப்பார்கள் என்பதே அதுவாகும். இந்த விடுவித்தலானது வெளிநோக்கியும் கீழ்நோக்கியும் துரிதமான கலாசாரத் தகவமைப்பின் (கலாசாரத்தைத் தமக்கு ஏற்புடைய விதத்தில் உருமாற்றிய அமைத்துக் கொள்வது என்று பொருள் கொள்ள வேண்டும் - மொழிபெயர்ப்பாளர்), ஒரு போக்காக உணரப்பட்டது. மத்தியல் இருந்து எதிர் நோக்கி இந்தச் சூழவுள்ள பிராந்தியங்களுக்கும், பண்பாடுற்ற வர்க்களில் இருந்து தனியாட்க­ளுக்கும் உழைப்பில் ஈடுபடும் மக்களுக்கு சமூக ரிதியில் கீழ் நோக்கியும் கலாசாரத் தகவ­மைப்பை உருவாக்கும் போக்காக உணரப்பட்டது. இக்கலாசாரத்தின் பரம்பலில் முதாலாளித்­துவம் ஒர் வலிமைமிக்க கருவியாக இருந்தது. தேசிய இனக்காராணியைப் பொறுத்தவரையில் கான்ட் அதைத் தெளிவாகக் கூறினார். மனித குலத்தின் தேசிய பிரிவுகள், அவற்றுக்­குள்ளேயே ஒரு அதி உன்னத விஷயமாக விளங்கின . உதராணமாக, கீழைத்தேசத்தில் போன்று ஒர் சாம்ராஜ்யவகையான, சர்வவி­யாபக கொடுங்கோல் ஆட்சி ஒருவாவதைத் தடுப்பதற்கு அவை உதவின. வருங்காலத்தில் அவை கைநழுவிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்வதாக மத்தியதரவர்க்கமே அமைந்தது. ”போருக்கு ஒத்துவர முடியாத வாணிப உணர்வு, உடனடியாகவே ஒவ்வொரு அரசியலும் முன்னங்கை எடுக்கிறது. ”பணத்தின் வலிமை” (சகல வலிமைகளிலும் ஆகவும் நம்பகமானதென” அவர் நனைத்தார்) விவேகங் காண ஆளும் வர்க்கங்களை நிர்ப்பந்திக்கும் என்று அவர் எழுதினார். அதாவது அவர்கறுடைய மூதாதையர்களது அவாக்களை விட்டொழித்து எவ்வாறாயினும் சமாதானத்தை ஏற்படுத்துவதாகும். (சாசுவதமான சமதானமும், தத்துவார்த்தக் குறிப்பும் 1795).
கான்ட் நம்பியிருந்த கருத்துகள், சக்தி­களில் அடங்கியிருக்கும் மெய்யான நிகழ்­வுகள் முற்றியும் வித்தியாசமானவையாக இருந்­தன என்பதை இப்போது நாம் அறி­வோம். அதுபோன்றே கான்ட் பிரதிநிதித்துவம் செய்த மகத்தான சர்வவியாபகமாக்கும் பாரம்பாpயத்­தாலும், அதனது புதிய மதசார்பற்ற வடிவங்களிலும் கூட இன்னமும் கிறிஸ்த­வமாகவே இருக்கும் பாரம்பரியத்தினாலும் அவை கண்டறியப் பெற்றிருக்க முடியாது. யாதார்த்தத்தில் வாணிப உணர்வும் பணத்தின் வலிமையும் உலகத்தின் அடுத்தடுத்த பகுதி­களை அவை கைப்பற்றியதால் மூதாதைய­ருக்குரிய அவாக்களை புத்தாக்கம் செய்வ­தற்கும். தடைகள் என்ற வகையில் முக்கியத்­துவம் குறைந்த வையாய் வளர்வதற்குப் பதிலாக தேசியப்பிரிவுகள் சமூக ஒழுங்க­மைப்பின் ஒரு புதிய ஆதிக்கக் கோட்பாடாக உயர்த்திப்­பிடிக்கப்படும் வரலாறு மேற்கு நாட்டு தத்துவி­யலாளர்களைத் தோல்விய­டையச் செய்யவிருந்தது.
இந்த தோல்வி நிரந்தரமானதாகவே இருந்திருக்கின்றது. தேசியப் பிரச்சனை மீது மார்க்ஸியம் அடைந்த ”தோல்வியின்” உண்மையான நீண்ட அர்த்தம் இதுவெனலாம். முன்னேற்றத்தின் மெய்யான முரண்பாடுக­ளையும் அதன் அழிவுதரக்கூடிய பக்கத்தை­யும் முன்னுணர்ந்து பார்க்க முடியாததால் இந்தச் சிந்தனை பாரம்பரியமானது. அதன் பின்னர் உண்மைச் சரியான முறையில் உணர்ந்து கொள்ளவும் உறுதியாகவே சாத்தியமில்லாமல் இருப்பதைக் கண்டது. பதிலாக இந்த கரும் புள்ளி எல்லா நவீன பகுத்தறிவு வாதமின்­மையும் செழித்துவளரும் ஊற்றுக்கண்ணாக முரணின்றி மாறியது கரமானதும் நிகராக்க முடியாததுமான இயல்நிகழ்வின் இந்த சிக்கல் தன்மைத்தான் தேசியவாதத்துடனும் அதில் இருந்து உற்பத்த பலவற்றுடனும் (இனவாதம், யூத எதிர்ப்புவா­தம் போன்றவை) இணைந்­துள்ளது. இது காலத்துக் காலம் மீண்டும் மீண்டும் தோன்றி மேலைய பகுத்தறிவு­வாதத்தைச் சீர்கலைத்து முழுமையாகவே இவமதித்தது. இது பகுத்தறிவு வரோத நம்பிக்கையற்ற பல தத்துவ ஞானங்களுக்குக் கதவைத் திறந்து வைத்தது. இந்த அம்சமே உலகத்தின் மீது மேலைய முன்னேற்றத்தின் பீடுநடையை அவ்வளவு நெருக்கமாக எதிர்நிலைப்படுத்தியிருந்து. அவ்வப்போது நன்மைகருதி தகர்த்து எறியவும் அச்சுறுத்தியது.
”சமதையற்ற வளர்ச்சி” என்ற பொதுவான தலைப்பு எதைக்குறிப்பிடுகிறதோ இதுதான் உலகத்திற்குள் முதலாளித்துவத்தினுடைய வளர்ச்சியின், முன்னுணர முடியாத பகைமை சார்ந்த வளர்ச்சியாகும். குறிக்கோளின் உயரிய முன்னேற்றம் மற்றும் ஒரு பகுதியான சீராக்கம் ஆகியவற்றில் இருந்து வேறுபட்ட விதமாக ஊசலாடுகின்றதும். போராடுகின்றதும் சமனற்­றதும் தர்க்கரிதியற்றதும் தலைகீழானதுமான உண்மையை இது சுட்டிகாட்டுகிறது. நவீன முதலாளித்துவ வளர்ச்சியானது பல மேற்கு ஐரோப்பிய நாடுகளால் ஆரம்பிக்கப்பட்டது. இவை இவ்வாறு செய்வதற்கான ஆற்றலை வரலாற்றின் நீண்டகாலக் கட்டங்களின் போது திரட்டி வைத்திருந்தன. இந்த முன்னேற்றம் நேர்மையாகவே பின்பற்றபப்பட முடியும். அதற்­குப் பொறுப்பான நிறுவன அமைப்­புகளை அச்சுப் பிரதியாகப் பின்பற்ற முடியும் - இவ்விதம் உலகின் கிராமப்புறமான சூழ­வுள்ள பகுதிகள் உரிய காலத்தில் அதன் தலைமைகளை எட்டிப் பிடித்துவிடும் என்பதே சமதையான வளர்ச்சி கருத்தமைப்பாக இருந்தது. இந்தச் சமப்படுத்தல், சூழவுள்ள பகுதிகள் முழுவதிலும் அடிப்படையிலே ஒரினத்தன்மைவாய்ந்த ஞானோதயம் பெற்ற வர்க்கத்தை உருவாக்குவதன் மூலம் முன் செல்லும், சர்வதேச அல்லது ”பெருநகர்” மேல்மட்ட வர்க்கம் இந்தப் பரவலாக்கப் போக்கிற்குப் பொறுப்பாக இருக்கும். ஆனால், அதஆதகைய துரிதமான பரவலாக்கலோ பிரதிபண்ணுதலோ உண்மையிலேயே சாத்தியமாக இருக்கவில்லை. அதுபோலவே இந்த சர்வதேச வர்க்கத்தின் உருவாக்கமும் (தமது சொந்த மக்களுடன் அணி சேருவதற்­குப் பதிலாக பெருநகர் தலைநகருடன் தாமா­கவே அணிசேர்ந்து கொண்ட வெளிநாட்டு ஆடசிக்­குக் கைக்கூலிகளாக விளங்கிய முதலாளித்­துவவாதிகளின் உருவத்தில் அதனைப் பாவனை செய்த வகையினங்கள் இருந்திருக்­கின்றன. (இருக்கின்றன என்ற போதிலும்கூட) சாத்தியமாகவில்லை.
அந்த முன்னணி நாடுகளின் தாக்கம் ஆதிக்கம் செலுத்துதல், முற்றுக்கையிடுதல் போன்றவற்றை வழமையாகவே அனுபவித்­தது. வாணிப உணர்வு, பாரம்பரியமான சுரண்டல், ஏமாற்று வடிவங்களில் இருந்து பொறுப்பேற்க வேண்டியதாக இருந்தது. ஆனால் யாதார்த்தத்தில் அதானால் அதைச் செய்ய முடியவில்லை. இந்த இடைவெளி மகத்தானதாக இருந்தது. புதிய அபிவிருத்திச் சக்திகள் மனித குலத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட தயாள குணம் படைத்த தன்னலமற்ற மேல்மட்டத்தினரின் கையில் இருக்கவில்லை. பதிலாக ஞானோதயம் மற்றும் மரபார்ந்த அரசியல் பொருளாதாரம் ஆகிய கருத்தமைப்புகளை மூடுதிரையாகப் பயன்­படுத்திய ஆங்கிலேய பிரஞசுப் பூர்ஷ்வா வர்க்களின் (மார்க்ஸ்ம் எங்கெல்ஸ்சும் விரும்பி கூறியதைப் போன்று) பொருளைப் பிடித்த சக்திகளின்” கைகளில் இருந்தன. உலகில் மிகச் சிறந்த விருப்பத்துடனும்கூட இவற்றை அவை பெற்றிருக்கவில்லை. முன்னேற்றமா­னது இந்தக் குறிப்பிட்ட இடங்கள், வர்க்கங்கள் நலன்க­ளுடன் ஒரளவுக்காவது தன்னை இனங் காட்டிக்கொள்ள முடியாது போயிற்று. இவ்வாறு ”ஏகாதிபத்தியத்தின்” ஒரு புதிய வகைக்குத் தூபம் போடாமல் இருக்க முடியவில்லை. புற எல்லைப்பகுதிகளில் புதிய தொழில் மய - முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்­தின் மையப்பகுதிகளுக்கு வெளியேறியது பற்றி மக்களை உடனடியாக ஒரளவிற்கு இணங்க செய்வது அவசியமாக இருந்தது. என்பது விதேசிய அல்லது வரோதமானது என்று தம்மால் எளிதில் கிரகித்துக்கொள்ளக்கூடிய வல்லரசுகளால் ஸ்தூலமாகவே ஆதிக்கம் செலுத்தப்படுவதை அதன் சாராம்சத்தில் பொருள்படுத்தியது என்பதை உடனடியாகவே அவர்கள் அறிந்து கொண்டார்கள். த்துவத்தில் இருந்து வேறுபட்ட விதமாக நடைமுறையில் கலாசாரத் தகவமைப்புப் போக்கு வெளித் தலையீடு மற்றும் கட்டுபாட்டின் ”ஒர் கொந்தளிப்பான அலையைப்” (ஏனெட்ஸ்ட் அகல்நகரின் பதப்பிரோயகம் இது) போல் மாறியது. மனித குலத்தின் முன்னோக்கிய பீடு நடையானது மாற்றத்தில் ஆகவும் பிரக்ஞை­யுள்ள மக்கள் எவ்வளவு தூரம்முன்னோக்கப் பார்க்க முடிந்ததோ, அந்த அளவிற்கு முதலாவது ஆங்கில மயமாக்கம் அல்லது பிரஞ்சு மயமாக்கத்தை குறித்து. உலகம் தழுவிய அளவில் பிற்காலத்தில் மேற்கு மயமாக்ககம் அலலது அமெரிக்கமயமாக்கம் என்று கூறப்பட்டதை போன்றதே இதுவாகும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More