Slideshow

பெரியார் உரை ஒலி வடிவத்தில்


பெரியாரின் பேருரைகள் இங்கு ஒலிவடிவில் தொகுத்திருக்கிறோம். மிகவும் சுவாரஸ்யம் வாய்ந்ததும், எளிமை மிகுந்ததும், சிந்திக்கச் செய்வதும், சமூகக் கொடுமைகளின் மீதான ஆத்திரத்தை ஏற்படுத்துவதுமான இந்த உரைகள் அவரின் குரலில் கேட்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்களும் கேளுங்கள்.

"...சமுதாயத் தொண்டு செய்றவனுக்கு கடவுள் பக்தி இருக்கக்கூடாது, மதபக்தி இருக்கக்கூடாது, மற்றும் தேச பக்தி இருக்கக்கூடாது, மொழி பக்தி இருக்கக்கூடாது. சமுதாய பக்தி ஒன்னுதான் இருக்கனும். அவனால தான் சமுதாயத் தொண்டு செய்யமுடியும்.எந்தப்பய கடவுளையோ மதத்தையோ, சாத்திரத்தையோ மொழியையோ வச்சுகிட்டு சமுதாய தொண்டு செய்யனுமுன்னு நினைக்கிறானோ அவன் சோத்தையும் பீயையும் கரைச்சு குடிக்கிறதா தான் அர்த்தம்..."

காரைக்குடி உரை-2 இல் 5வது நிமிடத்தில் இது வருகிறது. அதிலேயே

"...நம் கடவுள் - சாதி காப்பாற்றும் கடவுள்; நம் மதம் - சாதி காப்பாற்றும் மதம்; நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்; நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி.இதை உயர்ந்த மொழி என்கின்றனர். என்ன வெங்காய மொழி? இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் தமிழ் மொழி - சாதியை ஒழிக்க என்ன செய்தது? மொழி மீது என்ன இருக்கின்றது? ஏதோ மொழி மீது நம்முடைய பற்று; விவரம் தெரியாமல் சிலருக்குப் பற்று..."


"...கடவுள் இல்லை...கடவுள் இல்லை... கடவுள் இல்லவே இல்லை... கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்புனவன் அயோக்கியன்! கடவுளை கும்பிடுறவன் காட்டுமிராண்டிப்பயல்! இதை நம்புகிறவன் மடையன்! இதனால் பலன் அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன்..."

(காரைக்குடி உரை-2 இல் 15வது நிமிடத்தில் இது வருகிறது.)


இதைச்சொல்லும் துணிச்சல் நம் பெரியார் ஒருவருக்குத் தான் இருந்தது. அவருக்குப் முன்னும் ஏன் பின்னும் கூட அந்தத்துணிச்சல் வேறு யாருக்கும் வரவில்லை. நம்மீது சுமத்தப்பட்டிருக்கிற ஆதிக்க சித்தாந்தங்களில் மதத்தின் பாத்திரத்தை பெரியார் பல இடங்களில் தோலுரித்துக் காட்டுகிறார்.

இந்தத் ஒலித் தொகுப்பில் இன்னமும் இணைக்கப்படும்...


0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More