நீண்ட
நெடுந்தூரப் பயணம்களைத்த மனிதர்கள்
இவர்களுடன் எல்லாம்
நானும் ஒருவனாய்
பயணம்
செய்திருக்கின்றேன் - இந்த
அந்நிய மண்ணில்
இருக்கைகள் யாவும்
நிரப்பப்பட்டு
துவண்ட நிலையில்
சிலர்
நின்று வந்தாலும் கூட
என்னருகில்
இருக்கும்
இருக்கைமட்டும்
தனித்து வெறித்து
காத்திருக்கும்-என்
நிறத்தின் பெருமை
பேசியவண்ணம்...
ஏனெனில்
இவர்களின்
அகராதியில்
எந்தன்
நிறத்திற்கு-நரகம்
என்று பொருளாம்.
இரா.சுதாசீலன்-நோர்வே
0 comments:
Post a Comment