Slideshow

வரி மங்குகிற நினைவு

தில்லை



பொட்டுப் பொட்டாகத்
தாடைவிளிம்பில் தொங்கிற்று.......
ஆற்றுக்கு அந்தப்பக்கம் நிற்கிற
வாழ்வின் புலம்பல்.


அரசல் புரசலாக
ஊர்க்காதில் விழுந்தும் விழாததுமாக
காற்றின் இறுக்கம் தளர்ந்திருந்தது.
வயல் வெளிக்கு நடுவில் போகும்
தென்னைகள் ஓரமிட்டசாலையில்
தலை கிடந்த அலங்கோலத்தில்
விரல்கள் பதிந்த கன்னநோவில்
நுரையீரல்களும்
விலா எலும்புகளும்
நொறுங்கிய மூச்சடைப்பில்
ஒரு குரல்
நடுங்கி நடுங்கி வீழ்ந்தது.


அவர்கள் உட்கார்திருந்த தரையை இழுத்து
அந்தரத்தில் தொங்கவிட்டார்கள்.
குளத்தையும் ஏரியையும் தூர்த்துக்
குப்பை கொட்டினார்கள்.
குப்பைகள் எரிந்து
கட்டைக்கரியும் புகையுமாக
நெடில் வீசிற்று.


அதனூடு அவர்கள் வாழ்க்கையின் வாடை வீசிற்று.
இன்னும் இன்னும்.........
இரத்தக்குட்டைகளில் மயிர் உறைந்து
எனக்கு நாக்குநுனியில் வந்துவிட்டது
மறுகணம் என் தாகம் அடங்கிச் சாம்பலாயிற்று.


0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More