தில்லை
14-12-2008
உண்ணும் முலைகளையும்
இன்னும் பல நூறு யோனிகளையும்
எனது உடம்பில் ஆணியில் கொழுவினர்
கண்களில் வாழ்வு வழிந்தோட
என் தேச பெண்கள்
மூக்கை பொத்தி
மூன்று தல முறை
தாண்டு கடலில் மூச்சு வாங்கினர்;
இரத்தம் காய்ந்த உடைகளையும்
உடலையும் அலசிக் கழுவினர்
எல்லாவயதினருமாக
எல்லையிடப்பட்ட பணிமனையில்
கணவர்களின் பெயர் சொல்லி
வௌ¢ளையுடை வாங்கினர்
இன்று பகலும் இன்னும்
முப்பத்தி மூன்று ஆயிரம் பெண்கள்
முலைகளையும் யோனிகளையும்
என்னில் கொழுவிர்
எங்கு போகிறீர்கள் என்றேன்
எல்லைக் கிராம தடுப்பு முகாமில்
வௌ¢ளையுடை வாங்க என்றனர்.
0 comments:
Post a Comment