Slideshow

இழப்பு

கவிதா

எனக்குத் தெரியும்

என் மண்ணில்
வசந்தம் ஒரு நாள்
மலருமென்று!
இழப்புகளையும் ஒரு நாள்
இழப்போம் என்று!
அன்று அழிந்த
வீதயெல்லாம் தோரணங்கள்
கட்டப்படும்...
என் இடிந்த வீட்டை
மாமா புதுப்பித்துத் தருவார்.
பூஞ்செடிகளில் பூக்கள்
புத்துயிர் பெறும்.
என் பழைய சிநேகிதர்கள்
மீண்டும் அறிமுகமாவார்கள்
இருள் மறையும்...
எனக்குத் தெரியும்
இழப்புகளையும்
ஒருநாள் இழப்போம் என்று...
என் அம்மா வருவாள்...
என் மாமா, மாமி
வருவார்கள்...
என் தாத்தா
வருவார்...
என் மச்சான்
வருவான்...
தேசத்திற்காய்
உயிர் நீத்தவர்கள்
என்ற மாவீரர் பட்டியலில்.
என் அப்பாவும் வருவார்....

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More