Slideshow

சிதைதல்

நிவேதா

நெஞ்சுக்குள் நெருடும் என்னமோவொன்று சமயங்களில் நீ உடைத்தெறிய முயலும் நெடும் மௌனங்களினூடு தகர்ந்து போவது என் முள்ளென்புகளும்தான நெருக்கமான உரையாடல்கள் அதன்பின்னரான விடைபெறுதல்கள் உணர்வுகளை அசுரபசியுடன் பிடுங்கித் தின்னும் இந்தக் காதலுடன் தொலைபேசி கைநழுவ கால்களினிடையே முகம்புதைத்து விம்மி விம்மியழும் பொழுதுக்கள் இனிமேலும் வேண்டாமெனக்கு.. எதுவும் பேசிக்கொள்ளாத கணங்களின் வலி தெறிக்கும் குரலில் நினைப்பதனைத்தையும் சொல்லிவிட முடிந்திடுமாயின் சிதைதல் சிலகாலங்களுக்கேனும் தள்ளிப்போகக்கூடும் காத்திருத்தல்களில் வந்துமுடியும் கனவுகளின் கனத்த முடிச்சுகளுடன் தன் வழி ஏகுதலும் பிரியம் கூற விழைதலும் பழம் பஞ்சாங்கங்களாய்க் கசக்க வெறும் வார்த்தைகள் உன்னில் சலனங்களை ஏற்படுத்தக் கூடுமோவென்ற சந்தேகங்களோடு முன்புபோல் எதுவும் ஆறுதலளிப்பதாயில்லை விழிநீரை வீணாக்குவது மட்டுமே அழுகையாகின் அழத்தோன்றினால் அழுவதில் ஒன்றுமேயில்லைதான் நீயற்ற வெறுமைகளின் இறுக்கந்தளர்த்த வழியற்று இரத்தங் கசியக் கசியப் பாடலுறுவதே எனக்கான அழுகையாகிப் போனமை நீயறிவாயா எனதன்பே.

1 comments:

நீயற்ற வெறுமைகளின்
இறுக்கந்தளர்த்த வழியற்று....
அழகான வரிகள்....

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More