Slideshow

இரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லை

- உமா
காற்றைக் கிழித்து வானம் எட்டும் பாடல் வரியோ. .
சிட்டுக் குருவியின் இறகைக் கொண்டு புவியைச் சுற்றுதே
வாழும் வாழ்க்கை எங்களுக்குச் சொந்தம் சொந்தமே . .
இரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லையே.
உயிரை உயிர்க்கும் வேள்வியொன்றை இன்று செய்குவோம் . .
விதியே வெல்லும் என்ற சொல்லைத் தூர வீசுவோம்
கதவும் திறந்து கைககள் நீட்டி வாழ்வை நேசிப்போம்
காற்றைக் கிழித்து வானம் எட்டும் பாடல் வரியோ . .
சிட்டுக் குருவியின் சிறகைக் கொண்டுப் புவியைச் சுற்றுதே
வாழும் வாழ்க்கை எங்களுக்குச் சொந்தம் சொந்தமே . . .
இரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லை.
இசை
பூட்டி பாட்டி காத்த முறைகள் பரணில் துயிலுதே
தூசித்தட்டி பேணும் மரபு அற்பமான
தேகாலில் இடறும் கற்கள் யாவும் துச்சமானதே
வாழ்வின் அர்த்தம் புரியும் வேளை மீள ஜனிப்போம்.
நிஜத்தின் முத்தம் கன்னம் தொட்டு உயிரைத் தரிசிக்கும்
காற்றைக் கிழித்து வானம் எட்டும் பாடல் வரியோ . .
சிட்டுக் குருவியின் இறகைக் கொண்டுப் புவியைச் சுற்றுதே
வாழும் வாழ்க்கை எங்களுக்குச் சொந்தம் சொந்தமே
இரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லை
இசை
விலக்கப்பட்ட கனிகள் யாவும் எட்டிப் பறிப்போம்
சபிக்கப்பட்ட கற்கள் என்று ஒன்றுமில்லையே
கரியும் புகையும் எரித்த மூச்சை மீட்டுக் கொள்வோம்
வியர்வைத் துளியை மதிக்கச் செய்து இருப்பை வெல்லுவோம்
கனவாய்த் தோன்றிய காலம் கையில் நடனமாடுமே
நானும் நீயும், நீயும் நானும் வேறு இல்லையே. .
தீயை எரிக்கும் வலிமை கொண்டோம் புன்னகைசொந்தம்.
காற்றைக் கிழித்து வானம் எட்டும் பாடல் வரியோ . . .
சிட்டுக் குருவியின் இறகைக் கொண்டுப் புவியைச் சுற்றுதே
வாழும் வாழ்க்கை எங்களுக்குச் சொந்தம் சொந்தமே . .
இரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லையே.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More