Slideshow

கறுப்பு நிறமும் எதிர் காலமும்!

கல்பனா


ஈழத் தமிழ் சமூகத்தில் சித்தாந்த ரிதியாக மேலாதிக்கம் செய்யும் பிரிவாகவும் ஒட்டு மொத்த ஈழத் தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பாகவும் இன்று யாழ் சைவ வேளாள ஆணாதிக்க சுரண்டும் வர்க்கப் பிரிவு திகழ்கிறது. இந்தப் பிரிவினரின் சமூகப் பார்வைகளும் சமூக விழுமியங்களுமே ஒட்டு மொத்த ஈழத் தமிழ் சமூகத்தினதும் சமூக விழுமியங்களாக்கப்­பட்டுள்ளன. இந்தத் தரப்பினால் ஒடுக்கப்படும், அதனால் நேரடியாக நசுக்கப்பட்டு வரும் விளிம்பு நிலைப் பிரிவின­ரும் கூட குறிப்பாக-அடக்கப்பட்ட சாதிப் பிரிவினர், பெண்கள், யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்கப்பிரிவின் சித்தாந்தத்திற்குப் பலியாகி அதற்கூடாகவே உலகைப் பார்க்க பழகிவிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆதிக்கப் பிற்போக்குப் பிரிவினால் எது சமூகத்திற்கு ஏற்புடையதாகக் காட்டப்படுகிறதோ அதைத் தகர்ப்பதும், அப்பிரிவினால் எவையெல்லாம் ஒதுக்கப்படுகி­ன்றனவோ அவற்றையெல்லாம் உயர்த்திப்பிடிப்­பதன் மூலம் அச்சமூகத்தை எதிர்ப்பதும், சவால் விடுவதும் எமது நடவடிக்கைகளில் ஒன்றாகிறது. இதை நாம் எமது எதிர்க் கலாச்சார நடடவடிக்கையாக அடையாளங் காணலாம்.

யாழ் சைவ வேளாளஆணாதிக்க சமூகம் தனது மதம் சார்ந்த மூடக் கொள்கைகளின் அடிப்படையில் நல்ல சகுனம், அபசகுனம், மங்களம் அமங்களம், சுபம், அசுபம், தீட்டு, துடக்கு, விலக்கு போன்ற பல பிற்போக்குத்தனமான கருத்தாக்கங்க­ளையும் சமூகத்தில் ஆழப் பரப்பி விட்டுள்ளது. இவற்றில் நிறங்களும் அடங்கும். யாழ்சைவ வேளாள ஆணாதிக்கப் பிரிவு மஞ்சள் நிறத்தை மிகவும் விரும்புகிறது. அதை மங்கள நிறமாக போற்றுகிறது. இதை நாம் கூட்டணியின் கொடியிலும் சிறிலங்கா தேசியக் கொடியில் தமிழரைக் குறிக்கும் நிறமாக மஞ்சள் நிறம் காணப்படுவதிலிருந்தும் கண்டு கொள்ள முடியும். அது மாத்திர­மின்றி, பொதுவாக பல்கலைக்கழகங்களின் மேலங்கிகள் கறுப்பு நிறத்தில் இருக்க யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேலங்கி மாத்திரம் மஞ்சள் நிறத்திலிருப்பதிலிருந்தும் யாழ்-சைவ வேளாள ஆணாதிக்க சமூகம் ”மங்களகரமான” நிறத்திற்கு கொடுக்கும் அழுத்தத்தை நாம் கண்டு கொள்ள முடியும். மஞ்சள் போன்ற பிரகாசமான நிறங்களையே இப் பிற்போக்கு ஆணாதிக்கப்பிhpவு விரும்புகிறது. அதே நேரம் மங்கிய இருண்ட நிறங்களை அபச குனம் எனக் கூறி ஒதிக்கி விடுகிறது. கறுப்பு நிறம், யாழ்-சைவ-வேளாள- ஆணாதிக்க-சுரண்டும் வர்க்கப் பிரிவால் புறக்கணிக்கப்பட்ட நிறமாகும்.

ஆனால் அதன் மனு நிறம் கறுப்பு நிறம் எதிர்ப்பின் நிறமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய அளவில் எதிர்ப்பியக்கங்கள் கறுப்பு நிறத்தை நிலவும் சமுக அமைப்புக்கு சவால் விடும் (Challenge) அச்சமூக அமைப்பை எதிர்க்கும் நிறமாக கறுப்பு நிறத்தை உபயோகிக்கின்றனர். அதே போல் பெண்கள் இயக்கங்களும் நிலவும் சமூகத்தின் ஆணாதிக்க கலாச்சார முறைமைக்கு சவால்விடும் எதிர்க் கலாச்சார நிறமாக கறுப்பு நிறத்தை பிரயோகிக்கின்றனர். (குறிப்பாக உலகளாவிய அளவில் காணப்படும் women in black பிரிவினர்)

இதை விட சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்­பட்ட இருளில் வாழும் மக்களது அடக்கு முறைத்தன்மையின் குறியீடாக கறுப்பு நிறமுள்ளது. பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கறுப்பு நிற உடையாலேயே அடையா­ளப்­படுத்தப்படுகின்றனர். அடக்கப்பட்ட சாதிப் பிரிவுகளினதும்- உழைக்கும் மக்களதும் தோலின் நிறம் கறுப்பென்பதே அடக்கும் பிரிவின் மதிப்பீடு. பிராந்திய ரிதியாக எடுத்துக் கொண்டாலும் வட இந்திய பிராமணிய ஆதிக்கப் பிரிவின் தோலின் நிறமான வெள்ளை நிறம் உயர்வான­தாகக் கருதப்பட, அப்பிரிவால் ஒதுக்கப்படும் பிரிவினர் கறுப்புத் தோலையுடையவர்களே. உலகளாவிய ரிதியில் பார்த்தால் வெள்ளை உயர்வானதாகவும் கறுப்பு அருவருப்புக்குரியதாகவும் வெள்ளை நிறவெறியினரால் சித்திரிக்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற வெறி ஆதிக்கப்பிரிவே உலகின் கறுப்பு நிறமான ஆசிய ஆப்பிரிக்க மக்களை பாரபட்சம் காட்டியும் நசுக்கியும் வருகின்றனர்.

எனவே தேசத்தின் அடக்கியொடுக்கப்­பட்ட விளிம்பு நிலைப் பிரிவின் நிறமாக கறப்பு நிறம் உள்ளது. ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களே ஈழத் தமிழ் தேசத்தை உண்மையில் பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்களாகவும் இருப்பதால் அவர்களது குறியீட்டு நிறமான கறுப்பு நிறமே ஈழத் தமிழ் தேசத்தின் குறியீட்டு நிறமாகும்.

உலகலாவிய ரிதியில் உடல் நிறம் குறித்த ஐதீகமும் வெறுப்பும் ஒரு படிநிலை வரிசை கொண்ட மேலாதிக்க கருத்தமைப்பை கொண்டிருப்பதைக் காணலாம்.

இதற்கொரு உதாரணமாக, மேற்கு ஐரோப்பிய வெள்ளையர்கள் கிழக்கு ஐரோப்பியர்களின் நிறத்தை நோக்கும் விதம், இவ்விரு சாராரும் மத்தியகிழக்கு மற்றும் கிழக்காசியர்களை (மஞ்சல் நிறத்தவர்களாக) புறக்கணிப்பதும், கிழக்காசியர்கள், மத்திய கிழக்காசியர்கள் அனைவருமாக தெற்காசி­யர்களை பிரவுன், கருப்பு நிறத்தவர்கள் என்றும் அழைப்பார்கள். ஆக இறுதியாக நம் தெற்காசியர்கள் ஆப்பிரிக்கர்களை கருப்பு, கருவல் என நகைப்பார்கள்.

ஆக நிறங்களில் அடித்தட்டு அடக்கப்­படும் நிறத்தவர்களாக இதில் வேடிக்கை என்னவென்றால் கருப்பு இனத்தவர்களே இருக்கிறார்கள். இடையில் உள்ள அனைத்து நிறத்தவரும் மெலே உள்ளவர்கள் தம்மை பாரபட்சமாக பார்க்கிறார்கள் என்று கூறிக் கொண்டே அவர்களுக்கு கீழே உள்ள­வர்களை அசிங்கமாக பார்ப்பார்கள். இது நமது சாதிய முறையில் காணப்படுகின்ற அதே பாரபட்ச படிநிலையை ஒத்ததாக இருக்கும்.

நம்மிடையே இருக்கின்ற மேலாதிக்க கருத்தாக்கங்களின் பாதிப்பு இனம், மதம், நிறம், பால், சாதி, ஊர், வர்க்கம் என அனைத்து வேறுபாடுகளிலும் காணக்கூடியதாகவே இருக்கிறது.

அடக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களே புரட்சியின் கருப்பு நட்சத்திரமாகும்.
ஆக ஒன்றை அடக்கிக்கொண்டு இன்னொன்றுக்கு விடுதலை வேண்டிநிற்பதில் என்ன தார்மீகம் நமக்குண்டு என்கிற வினாவை நம்மை நொக்கி எழுப்புவது அவசியம்.

அதுவே நமது விடுதலை கோரிக்கைக்கான முன்நிபந்தனையான தகுதியும் கூட.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More